Wednesday 11 January 2012

இருவர் ஒருவராக...... வாய்கள் சொல்லாமலே....


முதற் சந்திப்பில்
நாலு விழிகளின் மோதலில்
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
சரளி வரிசைகள்

இருமனங்கள்

இரட்டச்சுரங்களாய்
ஒருமனதாய் இணைய
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
ஜண்டை வரிசைகள்

ஊடலும் கூடலும்
மாறி மாறி வர
இதயத்து ஏக்கங்களை

வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
தாட்டு வரிசைகள்


கிங்ஸ்ரனில் உணவகத்தில்

மெழுகு திரியொளியில்
இருவரையும் அலங்கரித்தன
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்த
அலங்கார வரிசைகள்


Chessington adventure parkஇல்

ரோலர் கோஸ்டரில்
பயத்தில் வந்த நெருக்கத்தில்
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன

இனிய கீதம்

வெஸ்ற் எண்ட் தியேட்டரில்

பல வர்ண விளக்கொளியில்
கட்டி அணைக்கையில்
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
நின்னுக் கோரி வர்ணம்

என் தனி அறையில்
அந்த இரவில்
இருவர் ஒருவராக
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன

தோடியில் தில்லான

யாருக்கும் சொல்லாமல்

இருந்த உறவை
உலகறிய  அரங்கேற்றுவோம்
மணவறையில்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...