Saturday 27 August 2011

தன் குடும்பத்தின் மோசடியை ஒத்துக் கொள்ளும் மொக்கையன் ராகுல் காந்தி

Cartoon courtesy: Sathish Acharya
லோக்பால் சட்ட மூலம் தொடர்பாக வாய் திறக்காமல் இருந்த ராகுல் காந்தி இப்போது வாய் திறந்துள்ளார். பொதுவாக ராகுல் காந்தியை அவரது ஆலோசகர்கள் வாய் திறக்க அனுமதிப்பதில்லை. அவர் வாய் திறந்தால் அவரது மொக்கைத்தனம் வெளிப்பட்டுவிடும் என்பதால் இந்த ஏற்பாடு. ராகுல் காந்தி பத்திரிகைகளுக்கு வழங்கிய பல பேட்டிகளில் அவரது மொக்கைத் தனத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தியில் அரசியல் திறமை அவரை எங்கும் இட்டுச் செல்லாது என்றார் காந்தி குடும்பத்தைப்பற்றி புத்தகம் எழுதும் ஆர்த்தி ராமச்சந்திரன். அருண் சர்மா என்பவர் ராகுல் இதுவரை எந்த ஒரு பிரச்சனியிலும் தனது திறமையைக் காட்டவில்லை என்கிறார். காந்தி குடும்பத்தைப் பற்றி ஆய்வு செய்யும் ரஷீட் கிட்வாய் என்பவர் ராகுல் காந்தி தனது பெயருடன் ஏதாவது சாதனைகளை இணைக்க வேண்டும் என்கிறார். ராகுல் இதுவரை எதையும் கிழிக்கவில்லை என்பதை அவர் இப்படிச் சொல்கிறார்.

லோக்பால் சட்ட மூலம் தொடர்பாக இந்தியப் பாராளமன்றில் வாய் திறந்த
 ராகுல்:
  • மலிந்துள்ள ஊழலை முற்றிலும் அகற்றுவதற்கு எளிதான தீர்வு என்று எதுவுமில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவான லோக்பால் மசோதா என்பது மட்டுமே ஒரு கருவி. இந்த விவகாரத்துக்கு மேலும் பல முயற்சிகள் தேவை. 

இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதை ராகுல் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மொக்கையன் ராகுல் இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து இன்றுவரை ராகுலின் குடும்பத்தினரே பெரும்பாலும் ஆண்டு வந்துள்ளனர். அவரது குடும்பத்தினரே இந்த ஊழலை மலிய விட்டுள்ளனர் என்பதை பாவம் ராகுல் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவரது குடும்பத்திற்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள். உள்ளன. அவரது பெயரிலும் அவரது குடும்பத்தின் பெயரிலும் எந்தனை கோடானு கோடி பணம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்பதை ராகுல் அறிவார். லோக்பால் மசோதாவில் பிரதம மந்திரி உள்ளடக்கப்பட்டால் பெரிதும் பாதிக்கப்படுபவர் அடுத்த இந்தியாவின் பிரதம மந்திரியாகக் கருதப்படும் ராகுல் காந்தியே.

ராகுல் குடும்ப ஊழலை இக்காணொளி விளக்குகிறது:


மொக்கை காந்தியின் இத்தாலியத் தாயாரின் பெயர் அவர் இந்தியக் குடியுரிமை பெற முன்னரே இந்திய வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்தது ஊழல்தானே.

இரசிய உளவுத் துறையிடம் இருந்து ராகுலின் முன்னோர் எவ்வளவும் பணம் இலஞ்சமாகப் பெற்றார்கள் என்று அவருக்குத் தெரியாதா?

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் பேட்டி இந்தியாவில் நடந்த போது செய்த ஊழலில் ராகுலின் பங்கு என்னவென்று ராகுலுக்குத் தெரியாதா?

ராகுலின் குடும்ப ஊழல்களை இந்த இணைப்பில் காணலாம்: http://www.iretireearly.com/sonia-gandhi-and-congress-secret-billions-exposed.html


ராகுலின் சொத்து பதின்நான்கு பில்லியன் டாலர்கள்($14,000,000,000 அறுப்த்தி நான்கயிரத்து நானூறு கோடி இந்திய ரூபாக்கள்????) என்கிறது இந்த இணைப்பு:
http://sabhlokcity.com/2011/03/my-personal-challenge-to-rahul-gandhi-to-disclose-his-black-money-assets/

Friday 26 August 2011

சுவையான SMS நகைச்சுவைகள்


மணமகள் தேவை விளம்பரம்
WANTED SINGLE GIRL,
Able To Cook,
Love And Have Job,
Must Have
HOUSE & CAR.
Plz Send Picture 0f
HOUSE & CAR ... =P =D
 -from sms4smile

Q- a parrots sits on an elephant and the elephant died!!
Prove how is this possible….?
.
.
Physics student:
assume that elephant’s name is parrot
&
parrot’s name is elephant:d:p:)
physics can prove anything
-from sms4smile


Husband was seriously ill.
Doc to wife :-
Give him healthy breakfast, be pleasant & in gud mood,
don’t discuss ur problems,
no tv serial, dont demand new clothes & gold jewels,
Do this for 1 yr & he will be ok.
On the way home..
Husband :- wat did the doc say ?
Wife :- .No chance for u to survive
-from sms4smile



Global recession & financial crisis have become so bad & serious nowadays that,
majority of the men have started loving their own wives..!!

 -
Sunny Patna, Bihar.


SANTA went to court
JUDGE:
"Order ! Order !"
SANTA:
"1 Pizza, 2 Dosa, 3 Idli & 1 Cold-drink !"
JUDGE:
"Shut Up !"
SANTA:"No,No..7-U
-from sms4smile

Love IS not how U forget but how U forgive
not how U listen but how U understand
not what U see but what U feel
and not how U let go but how U hold on

by Megha Shastri
Naugarh, India


Height of insult-
Girl msgs her bf..
jaan i can't live widout u..
Will u marry me???
reply cums..
Whos dis?
I lost all my contacts..
-from sms4smile

"Call A Girl Pretty
& She Will Remember It For
5 Minutes..!
Call A Girl Ugly
& She Will Remember It
Forever..!"
-from sms4smile

Real Love is not based on romance, candle light dinner and walks along the beach...
In fact its based on respect, compromise, care and trust..!!

 
by Rahul Kumar
Sanpada, Navi Mumbai


Opportunity
Is
Like
An
Ice
if
you
think
More
about
it
It Melts  - from sms4smile

Thursday 25 August 2011

கடாஃபி எங்கே?


பிந்திய செய்தி 13.55 GMT: மும்மர் கடாஃபியின் மகன்கள் இருக்கும் ஒரு கட்டிடத்தை தாம் சுற்றி வளைத்துள்ளதாக கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர். கடாஃபியின் மாளிகையில் உள்ள சுரங்கப்பாதையைத் தொடர்ந்து சென்றே இந்தக் கட்டிடத்தை அவர்கள் அறிந்து  கொண்ட்னர். இச்சுரங்கப்பாதை மைல் கணக்கில் செல்கிறதாம்.
15-35 GMT: மும்மர் கடாஃபி பத்திரமாக இருந்து லிபிய விடுதலைப் போரை வழிநடத்துவதாக அவரது பேச்சாளர் மூசா இப்ராகிம் AP செய்திச் சேவைக்குத் தொலை பேசி மூலம் தெரிவித்துள்ளார்.

கடாபியின் படைகளை விரைவில் பென்காஜி நகரத்தில் இருந்து விரட்டிய கடாஃபி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்கள் மிகுதி இடங்களைக் கைப்பற்ற பலத்த சிரமத்தை அனுபவித்தனர். அவர்களிடை ஒற்றுமையின்மை ஒரு காரணம். அதனால் பலத்த சிரமத்தில் தவித்த கிளர்ச்சிக்காரர்கள் முன்னேறுவதும் பின்வாங்குவதுமாக இருந்தனர்.  ஜூலை 28-ம் திகதி மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கொல்லப்பட்டார். கிளர்ச்சிக்காரர்களின் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கடாஃபியுடன் இருந்து பிரிந்து வந்தவர். அவர் கடாஃபியின் இரட்டை உளவாளி என்றும் சந்தேகிக்கப்பட்டது. அவர் ஒரு மேற்குலக ஆதரவாளர் என்பதால் அவரை இசுலாமிய அடிப்படைவாதக் கொள்கையுடையவர்கள் கொன்றனர் என்றும் கூறுகின்றனர். கிளர்ச்சிக்காரர்கள் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கொல்லப்பட்டதன் பின்னர் வேகமாக முன்னேறினர். கடாஃபிக்கு எதிராக பல வெற்றிகளை ஈட்டினர். ஆனால் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் இனது கொலை தொடர்பாக மர்மம் தொடர்கிறது.

கடாஃபிக்கு எதிரான காட்டாறாக கட்டார் நாடு.
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் படைத்துறை அனுபவம் இல்லாதவர்கள். இவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படை அல்ல. நேட்டோ நாடுகள் தமது படைகளை லிபியாவிற்கு அனுப்ப விரும்பவில்லை. அவை  இப்போது உள்ள பொருளாதர நெருக்கடியில் உள்நாட்டில் எதிர்ப்பைத் தோற்றுவிக்கலாம். காட்டார் நாடு பிரித்தானியாவின் ஓய்வு பெற்ற படைத்துறை நிபுணர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை காடாஃபிக்கு எதிரான போரை நெறிப்படுத்தச் செய்தது. காட்டாரின் சிறு விமானப் படையும் நேட்டோப் படைகளுடன் இணைந்து கடாஃபிக்கு எதிராக குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டது.

கடாஃபியின் பணத்தால் கடாஃபியைத் தாக்கிய மேற்கு நாடுகள்.
மேற்கு நாடுகள் இப்போது  இருக்கும் நிதி நெருக்கடியில் தங்கள் பணத்தை லிபியாவில் விரயமாக்குவது உள்ளக எதிர்ப்புக்களை உருவாக்கும். கடாஃபி அரசின் நிதி 34 பில்லியன் டாலர்களை அமெரிக்கா முடக்கி வைத்திருந்தது. மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை சட்டபூர்வமான அரசாக அங்கீகரித்து அந்த நிதியில் ஒருபகுதியை கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா வழங்கியது. மூன்று பில்லியன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைப் பாவித்து கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் படையில் பலரை இணைத்துக் கொண்டனர். இதன் பின்னர் அவர்களின் முன்னேற்றம் விரைவுபடுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளும் தம்மிடமிருந்த லிபியச் சொத்துக்களை கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு கொடுத்தது. நெதர்லாந்து தன்னிடம் இருந்த் லிபியச் சொத்துக்களை உலக சுகாதார நிறுவந்த்த்திடம் வழங்கி அதை லிபிய மக்களின் சுகாதாரத்திற்கும் போரில் காயமடைந்தவர்களைப் பராமரிக்க செலவிடச் சொன்னது.

கடாஃபியின் ஆயுதங்கள் திருடப்பட்டன.
பிரித்தானிய அரசு கடந்த சில ஆண்டுகளாக கடாஃபியுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்தது. இதைப் பாவித்து பிரித்தானியாவின் உளவுத்துறை நீண்டகாலத்திற்கு முன்னரே கடாஃபியின் அரசில் பலமட்டத்தில் தனது உளவாளிகளை நியமித்துவிட்டது. இந்த உளவாளிகள் கடாஃபியின் பல ஆயுதங்களை திருடி வாகனங்களில் ஏற்றி திரிப்போலிக்கு வெளியே கொண்டு சென்று நேட்டோப்படையினரிடம் கொடுத்துவிட்டனர். இறுதி நேரத்தில் காடாஃபியின் படையினர் எதிரிகள் தம்மை அண்மித்த வேளையிலும் பலத்த ஆளணி இழப்புக்களையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அவர்களிடம் ஆயுதப் பற்றாக் குறையே காரணம்.

சிறு குழுக்கள்(Sleeper Cells)

திரிப்போலி நகரில் வாழ்ந்த கடாஃபி அதிருப்தியாளர்கள் அங்கிருந்து களவாக வெளியேறி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களிடம் பயிற்ச்சி பெற்று மீண்டும் திரிப்போலி நகருக்குள் நுழைந்தனர். வெளியில் இருந்தும் பலர் கடல் மார்க்கமாக மீனவர்கள் போல் திரிப்போலீ நகருக்குள் நுழைந்து விட்டனர். இவை திரிப்போலிக்குள் கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells) ஆகச் செயற்பட்டனர்.

கட்சி மாறிகள்.

நேட்டோவின் உளவுத்துறையினர் திரிப்போலிக்குள்ளும் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை பல மாதங்களாக உருவாக்கிவிட்டனர். அது அவரது கோட்டையைபலவீனப்படுத்திவிட்டது. சயிஃப் கடாஃபி, முகம்மட் கடாஃபி ஆகிய இரு மும்மர் கடாஃபியின் புதல்வர்களும் தப்பி ஓட முடியாமல் போனதற்குக் காரணம் அவர்களை சூழ இருந்த கடாஃபி ஆதரவுப் படையினர்கள் கட்சி மாறிக் காட்டிக் கொடுத்தமை காரணமாக இருக்கலாம். கடாஃபியுடன் இருந்தவர்களில் 70%மானவர்கள் பயத்தினாலேயே கடாஃபியின் ஆதரவாளர்களாக இருந்தனர். உரிய நேரத்தில் அவர்களில் பலர் கட்சி மாறினர். லிபியத் தலைநகர் திரிப்போலியில் பல கடாஃபி எதிர்ப்பாளர்கள் இருந்தனர். அவர்களிடம் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதங்களை வெளிநாட்டு உளவாளிகள் மூலம் வழங்கி இருந்தனர். ஆயுதங்கள் வழிபாட்டு நிலையங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இறுதிக் கட்டத்தில் திரிப்போலி நகரின் பெரும் பகுதி விரைவாகவும் இலகுவாகவும் கைப்பற்ற இவர்களே காரணம்.



கடாஃபி எங்கே?
இப்போது விடைகிடைக்காத கேள்வியாக இருப்பது கடாஃபியும் அவரது குடும்பத்தினரும் எங்கே என்பதுதான். கடாஃபியுடன் கடைசிவரை பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருந்த இரசியாவைச் சேர்ந்த உலக சதுரங்க சபையின் தலைவர் கடாஃபி கடைசிவரை திரிப்போலியில் இருந்தார் என்றே சொல்கிறார். கடைசியாக அவருடன் கடாஃபி 23-08-2011 செவ்வாய்க்கிழமை திரிப்போலியில் இருந்து உரையாடினாராம்.  திரிப்போலியில் சண்டை தொடர்கிறது. கடாஃபி தனது மாளிகையின் கீழ் பல சுரங்கப்பாதைகளை அமைத்திருந்தார் அதன் வழியாகத் தப்பி ஓடி இருக்கலாம். கடைசியாக கடாஃபி வெளிவிட்ட உரையின் பின்னணியில் கோழிக் குஞ்சுகளின் சத்தம் கேட்ட படியால் அவர் திரிப்போலி விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள தோட்டத்தில் தங்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. விக்கிலீக்கின் தகவல்களின் படி கடாஃபி கடலுக்கு மேலால் விமானத்தில் பறப்பதற்குப் பயம் கொண்டவர் என்று சொல்லப்பட்டது. அதனால் அவர் கடல் மார்க்கமாக கப்பலில் தப்பிச் செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. கடாஃபி தனது பிறந்த ஊரான சிராரேயின் மறைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சிராரே இப்போதும் கடாஃபி ஆதரவுப் படைகளின் வசமே இருக்கிறது திரிப்போலியில் இருந்து சிராரே செல்லும் பாதையில் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஆச்சரியமளிக்கும் எதிர்ப்பை எதிர் கொள்கிறார்கள். கனடா தனது மிகச் சிறிய ரக ஆளில்லா விமானங்களை கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கியுள்ளது. கடாஃபி மறைந்திருப்பதற்குச் சாத்தியமான இன்னொரு ஊர் சபா. அங்கு அவரது படையினரும் ஆயுதக் கிடங்குகளும் இருக்கின்றன. சிலர் கடாஃப் மறைந்திருப்பதற்குச் சாத்தியமான இடங்கள் பல இருக்கின்றன என்கின்றனர். சிலர் அவரது நேச நாடான சாட்டில் மறைந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். எல்லாம் ஊகங்களே.  கடாஃபிக்கு 1.7 மில்லியன் டொலர்கள் விலை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காடாஃபியிடம் பத்து பில்லியன் டொலர்கள் பெறுமதியான தங்கம் உள்ளது. அதில் பெரும்பகுதியை அவர் தமது நண்பர்களுக்கு தனக்கு உதவி செய்தால் தருவதாக வாக்களித்ததாக அவரது முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார். கடாஃபியைத் தேடுவதில் பிரித்தானிய உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
எங்கே கடாஃபி என்பதற்கு உறுதியான பதில் இதுவரை இல்லை.

Wednesday 24 August 2011

மொழி பெயர்த்த நகைச்சுவைகள்

முதலைகள் நிரம்பிய குளத்துள் மனைவியை வீசிய கணவன் மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது.

ஆசிரியர்: ஒரு நாளில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களாவது நீங்கள் நித்திரை செய்ய வேண்டும்.
மாணவன்: உங்கள் விரிவுரை ஒரு மணித்தியாலம் மட்டுமே!

இரு மாணவிகளை இரு மாணவர்கள் டாவடித்து வந்தனர். ஒரு நாள் அப்பெண்கள் இருமாணவர்களுக்கும் ராக்கி கட்டிவிட்டனர். ஒரு மாணவன் சொன்னான் "மச்சி உன் தங்கையை நானும் என் தங்கையை நீயும் திருமணம் செய்து கொள்வோம்.

தங்கை: பாட்டியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுப்போம்?
அண்ணன்: கால்ப்பந்து.
தங்கை: பாட்டி கால்பந்து விளையாடமாட்டா!
அண்ணன்: எனது பிறந்த நாளுக்கு அவ மட்டும் புத்தகம் பரிசாகத் தரலாமா?

பேருந்தில் இரு பெண்கள் ஒரு ஆசனத்தில் யார் இருப்பது என்பது பற்றி சண்டையிட்டுக் கொண்டனர். உங்களில் யார் முதியவரோ அவர் இருக்கலாம் என்றார் நடத்துனர். ஆசனம் வெறுமையாக இருந்தது.




பார்ட்டி ஒன்றில் ஒரு கவர்ச்சீகரமான கன்னி ஒரு இளைஞனைப்பார்த்து நீ நடனமாட விரும்புகிறாய என்றாள். இளைஞனும் மகிழ்ச்சியுடன் ஆம் என்றான். சரி போய் ஆடு உனது ஆசனத்தில் நான் இருக்க வேண்டும் என்றாள் அவள்.

புதிய கல்யாண உறுதிமொழி: இன்று முதல் எமது Facebook statusஐ married என்று மாற்றிக் கொள்வதாக இத்தால் உறுதிமொழி வழங்குகிறோம்.

ஒரு பிச்சைக்காரன் நூறு ரூபாத்தாள் ஒன்றைக் கண்டெடுத்தான். ஆடம்பர உணவகத்திற்கு சென்று மூவாயிரம் ரூபாக்களுக்கு உணவருந்தினான். பணம் கொடுக்காததால் உணவகம் அவனை காவற்துறையிடம் ஒப்படைத்தது. காவற்துறைக்கு நூறு ரூபாவைக் இலஞ்சமாகக் கொடுத்துத் தப்பித்துக் கொண்டான். இது இந்திய நிதி முகாமைத்துவம்.

கணவன் தவறு செய்தான். மனைவி சத்தமிட்டாள். கணவன் மன்னிப்புக் கேட்டான். மனைவி தவறு செய்தான் கணவன் சத்தமிட்டான். மனைவி அழுது தீர்த்தாள். கணவன் மன்னிப்புக் கேட்டான்.

Tuesday 23 August 2011

கடாஃபின் இறுதி நிகழ்வுகள்

மேற்குலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா, பதவியில் இருந்து விலக்க நினைக்கும் அரசத்தலைவர்களில் வட கொரியாவின் கிம் ஜொங், ஜிம்பாவேயின்ரொபேர்ட் முஹாபே, லிபியாவின் மும்மர் கடாஃபி ஆகியோர் முக்கியமானவர்கள்.

இப்போது உள்ள அரச தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்தவர் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி. மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர் என்று பல மூன்றாம் உலகநாடுகளின் மக்களால் போற்றப் படுபவர் மும்மர் கடாஃபி. 1969-ம் ஆண்டு ஒர் ஆயுதப் புரட்சி மூலம் அப்போது அரசாராக இருந்த இட்றிஸை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர் மும்மர் கடாஃபி. அப்போது அவருக்கு வயது 27. அப்போது அவர் சிறந்த புரட்சியாள்ராகவும், புதிய சேகுவேராவாகவும் மதிக்கப்பட்டார். கடாபி இஸ்லாமையும் சோசலிசத்தையும் கலந்து பசுமைப் புரட்சி என்ற நூல் எழுதினார்.

விடுதலை இயக்கங்களுக்கு உதவிய கடாஃபி
காடாஃபி பலஸ்த்தீன கறுப்பு செப்டம்பர் இயக்கத்திற்கு நிதி உதவுவதாக கூறப்பட்டது. 1972இல் ஜேன்மன் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்றது கறுப்பு செப்டம்பர் இயக்கம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. கடாஃபி பல்வேறு விடுதலை இயக்கங்களுக்கு செய்த உதவியால் அவரை ஒரு பயங்கரவாதிகளிக்கு நிதி வழங்குபவராக அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் கடாபியை மத்திய கிழக்கின் விசர் நாய் என்றும் அவரது லிபியா ஒரு பறையர் நாடு என்றும் விமர்சித்தார்.( தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு போன வார்த்தைகளுக்குள் பறையர் என்ற சொல்லும் ஒன்று). 1986இல் அமெரிக்க விமானங்கள் லிபியாவின் கடாஃபியின் இருப்பிடங்களில் குண்டுகளை வீசி அவரைக் கொல்ல முயன்றன. நிலக்கீழ் அறையில் இருந்ததால் கடாஃபி உயிர் தப்பினார். கடாஃபியின் வளர்ப்பு மகன் அதில் கொல்லப்பட்டார்.

மும்மர் கடாபியின் மீது இப்போது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்:
  • அவரது ஆட்சி உலகிலேயே மோசமான அடக்கு முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஆட்சி
  • மும்மர் கடாபியின் லிபிய நாட்டில் எந்த பத்திரிகைச் சுதந்திரமும் இல்லை.
  • முறை கேடான ஆட்சி
  • பெண்பித்தர்.
மும்மர் கடாபி ஒர் உக்ரேய்ன் நாட்டு கவர்ச்சிகரமான மருத்துவத் தாதியுடன் காதல் வசப்பட்டதாக விக்கிலீக் தகவல்கள் கசியவிட்டது.

பெப்ரவரி
14-ம் திகதி அதாவது எகிப்தின் ஹஸ்னி முபாரக் பதிவி விலகிய மூன்றாம் நாள் ஃபேஸ்புக்கின் மூலம் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 
20-ம்திகதி பென்காஜி நகர் கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
21-ம்திகதி கடாஃபியின் நீதியமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் பதவி விலகினார்.
25-திகதி லிபியச் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியது.
26-ம்திகதி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடாஃபியின் நீதியமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் அவர்களை தமது தலைவராக்கினர். அதே தினம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கடாஃபிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி கடாஃபியினதும் அவரது சகாக்களினதும் சொத்துக்களை முடக்க வேண்டும், லிபியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை ஆயுத விற்பனைத் தடை, மும்மர் காடாஃபியை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து வேண்டும்.

மார்ச்
1-ம்திகதி லிபியா ஐநா மனித உரிமைக்கழகத்தில் இருந்து விலக்கப்பட்டது.
7-ம் திகதி நேட்டோ விமானங்கள் கடாஃபிக்கு எதிராக குண்டு வீச்சுக்களை ஆரம்பித்தன.
17-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபை லிபியாவில் லிபிய விமானங்கள் பறப்பதை தடைசெய்யவும் பொதுமக்களைப் பாதுக்காப்பதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றியது.
18-ம் திகதி லிபியா போர் நிறுத்தம் அறிவித்தது.
19-ம் திகதி நேட்டோ விமானங்கள் கடாஃபியின் படை நிலைகள் மீது குண்டு மாரி பொழியத் தொடங்கின.
30-ம் திகதி லிபிய வெளி நாட்டமைச்சர் மூசா கூசா பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்றார்.

ஏப்ரல்

6-ம் திகதி மும்மர் கடாஃபி அமெரிகாவிற்கு லிபிய மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி கடிதம் எழுதினார்.
29-ம் திகதி நேட்டோவை தனது நாட்டின் வளங்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி கடாஃபி வேண்டுகோள் விடுத்தார்.
30-ம் திகதி நேட்டோ விமானக் குண்டு வீச்சில் கடாஃபியின் ஒரு மகனும் சில பேரன்களும் கொல்லப்பட்டனர்.

மே
8-ம் திகதி லிபியப் படைகளால் கற்பழிக்கப் பட்டதாக ஒரு பெண் முறைப்பாடு.
22-ம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் பென்காஜி நகரில் தனது பணிமனையைத் திறந்தது.

ஜூன்
1-ம் திகதி நேட்டோ விமானங்களின் குண்டு வீச்சுக்கள் மேலும் 90 நாட்கள் நீடிக்கப்பட்டன.
8-ம் திகதி பல நாடுகள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால தேசிய சபையை லிபியாவின் சட்டபூர்வ அரசாக அறிவித்தனர்.
14-ம் திகதி தென் ஆபிரிக்கா லிபியாமீது நேட்டோப் படைகளின் குண்டு வீச்சு பொது மக்களைப்பாதுகாப்பதற்காக இல்லாமல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆக்கிரமிப்புப் படைகளை உட்புகுத்தவும் என்று குற்றம் சாட்டி நேட்டோப் படைகளின் நடவடிக்கைகளைக் கண்டித்தது.

ஜூலை
15-ம் திகதி அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால தேசிய சபையை லிபியாவின் சட்டபூர்வ அரசாக அங்கீகரித்தனர்.
28-ம் திகதி மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கொல்லப்பட்டார்.

ஆகஸ்ட்
9-ம் திகதி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால தேசிய சபையின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் இடைக்கால அரசின்  நிறைவேற்று அதிகாரிகளைப் பதவி நீக்கினார்.
15-ம் திகதி கடாஃபி லிபிய மக்களைக் கிளர்ந்து எழும்படி வேண்டுகோள் விடுத்தார்.
20-ம் திகதி கிளர்ச்சிக்காரர்கள் லிபியத் தலைநகர் திரிப்போலிக்குள் புகுந்தனர்.
21-ம் திகதி கடாஃபி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை ஒலிபரப்புச் செய்யப்பட்டது. லிபியாவைக் காப்பாற்றும் படி அவர் நாட்டு மக்களை வேண்டினார். திரிப்போலிக்குள் கடல் மார்க்கமாக இரு நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சிப்படையின தரை இறங்கினர். முக்கிய படைத் தளங்கள் கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டன.
22-ம் திகதி தலைநகர் திரிப்போலியின் சிறு பகுதியைத் தவிர மற்ற இடங்களைக் கடாஃபி இழந்தார். கடாஃபியின் மூன்று மகன்கள் கிளர்ச்சிக்காரர்களால் கைது. கடாஃபியின் இருப்பிடம் பற்றி தகவல் இல்லை.
23-ம் திகதி கைது செய்ததாகக் கூறப்பட்ட கடாஃபியின் மகன் சயிஃப் கடாஃபி தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றினார்.

Click on picture to enlarge

Monday 22 August 2011

கடாஃபிக்கு எதிரான இறுதிக் கட்டச் சதிகள்

41 ஆண்டுகாலம் லிபியாவை ஆண்டு வரும்(வந்த) மும்மர் கடாஃபியை எதிரிகள் மிக நெருங்கிவிட்டனர். அவரது இரு மகன்களை கைப்பற்றிவிட்டனர். சயிஃப் கடாஃபி கைது செய்யப்பட்டார். முகம்மட் கடாஃபி சரணடைந்தார். இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கமுன் செய்திகள் வேறுவிதமாக அமையலாம். மும்மர் கடாஃபிக்கு எதிராக அரங்கேறிய சதிகள் பலப்பல. தொடர்ச்சியான பல சதிகள் கடாஃபியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன. கடாஃபியின் இன்னொரு மகனான சாதி கடாஃபி எனப்படும் உதைபந்தாட்ட வீரரும் கைது செய்யப்பட்டதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

ஐநாவில் சதி
அரபு நாடுகளின் மல்லிகைப் புரட்சி லிபியத் தலைவர் கடாஃபிக்கு எதிராக பெப்ரவரி 16-ம் திகதி கிளர்ந்த போது மேற்குலக நாடுகளின் பிரதிபலிப்பு துனிசியா, எகிப்து, பாஹ்ரெய்ன், சிரியா ஆகிய நாடுகளின் மக்கள் கிளர்ச்சிக்கான பிரதிபலிப்பிலும் பார்க்க வேறுபட்டே இருந்தது. கிளர்ச்சிக் காரர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுளின் பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. லிபியாமீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்-1973 நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் முக்கிய அம்சம் கடாஃபியின் விமாங்கள் பறப்பதைத் தடுப்பதே. ஆனால் நேட்டோப்படையினர் கடாஃபிக்கு எதிராக சகல முனைகளிலும் தாக்குதல் நடத்தினர். கடாஃபியின் தொலைக்காட்சிச் சேவை நடக்கும் கட்டிடங்களையும் குண்டு வீசி நேட்டோப்படைகள் தகர்தபோது ஐநா மௌனம் சாதித்தது. கடாஃபின் விமானங்கள் பறப்பதைத் தடுத்தமை கிளர்ச்சிக்காரர்களின் கைகளை ஓங்கச் செய்தது.

நண்பர்களின் சதி
 ஐக்கிய நாடுகள் சபையில் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் ஆட்சிக்கு எதிரான தீர்மானம்-1973 இந்த ஆண்டும் மார்ச் 17-ம் திகதி கொண்டுவரப்பட்ட போது சீனாவும் இரசியாவும் தங்கள் இரத்து அதிகாரத்தைப் பாவிக்காமலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்து கொண்டன. தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டாலும் நேட்டோப் படைகள் ஐநாவிற்கு வெளியில் கூடி முடிவெடுத்து லிபியாவிற்கு எதிராக படை நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிந்துதான் இரண்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டன. இத்தனைக்கும் கடாஃபியின் லிபியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் பல பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத விற்பனை ஒப்பந்தம் நடைமுறையில் உண்டு.
கடாஃபியும் இத்தாலியப் பிரதமரும்
  அங்கீகாரச் சதி
மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஒரு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட படையினர் அல்லர். அவர்கள் தொலவில் இருந்து சிறியரக ஏவுகணைகள் எறிகணைகளை வீசியே கடாஃபியின் படை நிலைகளைக் கைப்பற்றுகின்றனர். அதுவும் ஆமைவேகத்தில். அவர்களிடை ஒரு சிறந்த ஒழுங்கமைப்போ கட்டமைப்போ இல்லை. கடாஃபியின் படையினருடன் நேருக்கு நேர் மோதி அவர்களிடமிருந்து திரிப்போலியைக் கைப்பற்றுவது  என்பது இலகுவில் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்பதை நேட்டோ அமைப்பினர் உணர்ந்திருந்தனர். மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபைக்கு (National Transitional Council - NTC) மேலும் படைக்கு ஆள்களைச் சேர்க்கவும் ஆயுதங்களைத் திரட்டவும் நிறைய நிதி தேவைப்படுகிறது. அதற்கான நிதி வழங்க நேட்டோ செய்த சதிதான் இந்த அங்கீகாரம். 

நிதிச் சதி
மேற்கு நாடுகள் இப்போது  இருக்கும் நிதி நெருக்கடியில் தங்கள் பணத்தை லிபியாவில் விரயமாக்குவது உள்ளக எதிர்ப்புக்களை உருவாக்கும். கடாஃபி அரசின் நிதி 34 பில்லியன் டாலர்களை அமெரிக்கா முடக்கி வைத்திருந்தது. மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை சட்டபூர்வமான அரசாக அங்கீகரித்து அந்த நிதியில் ஒருபகுதியை கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா வழங்கியது. மூன்று பில்லியன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைப் பாவித்து கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் படையில் பலரை இணைத்துக் கொண்டனர். இதன் பின்னர் அவர்களின் முன்னேற்றம் விரைவுபடுத்தப்பட்டது.
கடாஃபியும் முன்னாள் பிரித்தானியப் பிரதமரும்

ஆயுதத் திருட்டுச் சதி.
பிரித்தானிய அரசு கடந்த சில ஆண்டுகளாக கடாஃபியுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்தது. இதைப் பாவித்து பிரித்தானியாவின் உளவுத்துறை நீண்டகாலத்திற்கு முன்னரே கடாஃபியின் அரசில் பலமட்டத்தில் தனது உளவாளிகளை நியமித்துவிட்டது. இந்த உளவாளிகள் கடாஃபியின் பல ஆயுதங்களை திருடி வாகனங்களில் ஏற்றி திரிப்போலிக்கு வெளியே கொண்டு சென்று நேட்டோப்படையினரிடம் கொடுத்துவிட்டனர். இறுதி நேரத்தில் காடாஃபியின் படையினர் எதிரிகள் தம்மை அண்மித்த வேளையிலும் எந்த வித ஆளணி இழப்புக்களையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அவர்களிடம் ஆயுதப் பற்றாக் குறையே காரணம். திரிப்போலிக்குள் கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells) திரிப்போலி நகருள் அமைக்கப்பட்டன.
நேட்டோ விமான கடற்படைத் தாக்குதல்கள்-courtesy Telegraph

ஆபிரிக்க ஒன்றியத்தின் சதி
லிபிய மக்கள் பலர் ஆபிரிக்க ஒன்றியம் கடாஃபிக்கு உதவும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் லிபிய விவகாரத்தில் ஒன்றிய நியமங்களைக் கூடக் கடைப்பிடிக்கவில்லை.

 அடுத்துக் கெடுத்த சதி
நேட்டோவின் உளவுத்துறையினர் திரிப்போலிக்குள்ளும் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை பல மாதங்களாக உருவாக்கிவிட்டனர். அது அவரது கோட்டையைபலவீனப்படுத்திவிட்டது. சயிஃப் கடாஃபி, முகம்மட் கடாஃபி ஆகிய இரு மும்மர் கடாஃபியின் புதல்வர்களும் தப்பி ஓட முடியாமல் போனதற்குக் காரணம் அவர்களை சூழ இருந்த கடாஃபி ஆதரவுப் படையினர்கள் கட்சி மாறிக் காட்டிக் கொடுத்தமை காரணமாக இருக்கலாம்.

இறுதித் தாக்குதல்
கடாஃபிக்கு எதிரான இறுதித் தாக்குதல் வெற்றீகரமாக அமைந்தமைக்கான காரணங்கள்:
1. கடல் மார்க்க தரையிறக்கம். இருநூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சிக்காரர்கள் கடல் மார்க்கமாக திரிப்போலியில் இறங்கினர். இவர்கள் கடாஃபியின் படையினருடன் திரிப்போலியின் கிழக்குப்பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கடாஃபியின் படைகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தனர்.
2. காமிஸ் படையணியினரின் வீழ்ச்சி. கடாஃபியின் சிறப்புப் படையணியினரின் தளத்தை  திரிப்போலியின் மேற்குப் புறமாக வந்த கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றியது கிளர்ச்சிக்காரர்களுக்கு பெரு வெற்றியாக அமைந்தது. பின்னர் அவர்கள் 15மைல்கள் எந்த வித எதிர்ப்பும் இன்றி திரிப்போலி நகரை நோக்கி முன்னேறினர்.
3.  கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells). திரிப்போலி நகருள் கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells) நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டு அவற்றுக்கு ஆயுதங்களும் இரகசியமாக வழங்கப்பட்டன. ஆயுதங்கள் வழிபாட்டுத்தலங்களில் மறைத்து வைக்கப்பட்டன. இக்குழுக்கள் உரிய நேரம் வரும்வரை காத்திருந்தன. திரிப்போலி நகர் எதிர்பார்த்ததிலும் வேகமாக வீழ்ந்தமைக்கு இக்குழுக்களே காரணம்.
4. நேட்டோ விமானங்களின் தொடர் குண்டுத்தாக்குதல்கள். தற்காலப் போர் வெற்றியை விமானப்படைகளே தீர்மானிக்கின்றன. கடைசிவர நேட்டோப் படைகளே போரில் முக்கிய பங்கு வகித்தன.

பிந்திய செய்திகள்
1. கடாபி சிம்பாவே அல்லது அங்கோலாவிற்குத் தப்பி ஓடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2. 7-00 GMT லிபியத் தலைநகரில் கடாஃபி ஆதரவுப் படைகளின் எதிர்ப்பு குறைந்து வருகின்றது. தலை நகரின் 80% கிளர்ச்சிக்காரர்கள் கையில்.
3. 8-00 GMT - கடாஃபியின் இருப்பிடம் பற்றி அறிய முடியவில்லை. திரிப்போலியில் உள்ள பச்சை சதுக்கம் கிளர்ச்சிக்காரர்களால் மாவீரர் சதுக்கம் எனப்பெயரிடப்பட்டது.
4. 9-00 GMT - திரிப்போலி நகரில் 95% கிளர்ச்சிக்காரர்கள் வசம்.
 5 . 14-00 GMT -எரிபொருள் விலை வீழ்ச்சி.இனி லிபியாவில் இருந்து எரிபொருள் ஏற்றுமதி ஒழுங்காக நடக்கும் என்ற நம்பிக்கையில்  பிறென்ற் மசகு எண்ணை விலை 1.7% ஆல் $106.8இற்குவீழ்ச்சியடந்தது. அமெரிக்க மசகு எண்ணெய் விலை $83.37.
6 . 15-00 GMT - தென் ஆபிரிக்காவின் விமானம் ஒன்று கடாஃபியை ஏற்றிச் செல்வதற்கு துனிசியாவில் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் ஆபிரிக்கா பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற உடனபடிக்கையில் கையொப்பம் இடாததால் அது கடாஃபிக்கு பாதுகாப்பாக அமையும். காடாஃபிக்கு உகந்த மற்ற நாடுகள் வெனிசுலேவியா, கியூபா, இரசியா, இலங்கை ஆகும்.
7 . 15-30 GMT - ஐநா பொதுச் செயலர் வாய் திறந்தார். தனது நாவன்மையில் நம்பிக்கை இல்லாத் பான் கீ மூன் லிபியா தொடர்பாக பத்திரிகையாளர் மாநாடை நடாத்தினார். லிபியாவில் மேலும் இரத்தக் களரி ஏற்படக்கூடாது, கடாஃபியின் படையினர் போரை நிறுத்த வேண்டும் என்றார். ஐநா லிபியாவிற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கும் என்றார். ஆபத்துக்கள் இனிவரலாம் என்றாலும் இது ஒரு நம்பிக்கை தரும் கணம் என்றார் ஐநா பொதுச் செயலர்.
 7 . 15-38 GMT -மும்மர் கடாஃபி இப்போதும் திரிப்போலியில் இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்க பெண்டகன் தெரிவித்துள்ளது.
8 . 15-48 GMT - சிரியத் தொலைக்காட்சி கடாஃபியின் மகன் சயிஃப் கடாஃபி கைது செய்யப்படவில்லை என்கிறது. அவர் இப்போதும் நாட்டுக்காக போராடுகிறாராம்.

Sunday 21 August 2011

நகைச்சுவை: சனியாளைக் காப்பாற்றிய மருத்துவரின் வேண்டுகோள்

இத்தாலிச் சனியாளுக்கு கடுமையான புற்று நோய். அதுவும் வெளியில் சொல்ல முடியாத இடத்தில் புற்று நோய். இரகசியமாக அமெரிக்காவில் சிகிச்சையளிக்கப்பட்டது. மூன்று மருத்துவர்கள் மிகவும் பாடுபட்டு சகல அசிங்கங்களையும் பொறுத்துக் கொண்டு சிகிச்சையளித்தனர். மூன்று மருத்துவர்களில் ஒருவர் அமெரிக்கர், ஒருவர் ஆபிரிக்கர், ஒருவர் இந்தியர்.

குணமாகிய பின்னர் சனியாள் தனக்குச் சிகிச்சை அளித்த மூன்று மருத்துவர்களையும் அழைத்து  உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் என்றாள். அமெரிக்க மருத்துவர் எனக்கு உங்கள் ஆட்டோக்கிராஃப் வேண்டுமென்றார். உடனடியாக அவர் தேவை நிறைவேற்றப்பட்டது.

ஆபிரிக்க மருத்துவர் எனது மகள் உங்களுடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்புகிறாள் என்றார். அவரது கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது.

இந்திய மருத்துவர் எனது தாயாருக்கு சுகமில்லை. நான் நாளை இந்தியா போகிறேன் அங்கு எனக்கு ஒரு சக்கர நாற்காலி(Wheel chair) வேண்டுமென்றார். ஏற்பாடு செய்கிறேன் என்று அவருக்குப் பதிலளிக்கப்பட்டது. ஏன் சக்கர நாற்காலி(Wheel chair) வேண்டுமென்று கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை. அவர் யார் உயிரைக் காப்பாற்றினார் என்று தெரிந்தால் இந்திய மக்கள் அவருக்கு என்ன செய்வார்கள் என்று அவருக்குத்தான் தெரியும்.


பி. கு: இக்கதையில் வந்த கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே. உயிருடன் இருப்பவர்கள் அல்லது இருக்கக் கூடாதவர்கள் யாராவது இத்துடன் சம்பந்தப்பட்டது போல் தோன்றினால் அது வெறும் பிரமையே.

ராகுல் காந்தி கிளியல்ல.
இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் ஊழலுக்கு எதிரான அன்ன ஹசாரேயின் உண்ணாவிரதப்போராட்டம் பற்றி ஆளும் காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஏன் வாய் திறக்கவில்லை என்று நிருபர்கள் கேட்டபோது காங்கிரசின் பேச்சாளர் ரேணுகா சௌத்திரி "He (Rahul), too, is entitled to Freedom of Expression. He will speak when he will feel like it. He is not a parrot," "அவருக்கும்(ராகுல்) பேச்சுச் சுதந்திர உரிமையுண்டு. அவர் பேச விரும்பும்போது பேசுவார். அவர் கிளியல்ல." என்றார்.

தான் பேசவிரும்பும் போது பேசுபவன் தலைவன் அல்ல. மக்கள் விரும்பும் நேரமெல்லாம் பேசுபவனே தலைவன். மக்கள் ஒரு பெரும் பிரச்சனை மத்தியில் இருக்கும் போது பேசாமல் இருப்பவன் தலைவன் அல்லன். கிளியாவது சொல்லிக் கொடுத்ததை ஒழுங்காகச் சொல்லும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...