Saturday 6 August 2011

ஹைக்கூ: கண் மூடியிருக்கையில் தெரிகிறது

தூக்கத்தில் மனம் பேசுகிறது
கண் மூடியிருக்கையில் தெரிகிறது
காதலில் நான்

இரவுகள் நீண்டன
நினைவுகள் கசந்தன
அவள் பிரிவு

கண்கள் நாவாகும்
உதடுகள் தொடர்பாடும்
காதல்

கல்லாத நாட்கள்
உன்னைக் காணாத நாட்கள்
வீணானது.

Friday 5 August 2011

தமிழ் நாய்களே அடங்குங்கடா என்கிறதா இந்தியா?

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்தியா பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான போரை இந்தியாவே திரை மறைவில் நடத்தி ஒரு இன அழிப்புக்கு வழிவகுத்தது நாம் அனைவரும் அறிவோம். இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை என்று இந்தியா பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு தமிழர்களுக்கு சிங்களவர்களின் இராணுவ நடவடிக்கைக்கு சகல உதவிகளையும் வழங்கியது.

நேற்று (04-08-2011) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இலங்கை தொடர்பாக ஒரு அறிக்கை சமர்பித்தார்.  இந்த எஸ். எம். கிருஷ்ணா ஏற்கனவே இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றியவர். இது தொடர்பான பதிவைக் காண இங்கு சொடுக்கவும்:  எஸ். எம். கிருஷ்ணாவின் மொக்கை. ஐநாவில் கப்பலேறிய இந்திய மானம்.

இலங்கை தொடர்பாக இந்தியா பகிரங்கமாகச் சொல்பவை உண்மைக்குப் புறம்பானவை என்பதே நாம் அனுபவத்தில் கண்டதாகும். நேற்று இந்தியப் பாராளமன்றில் கூறப்பட்டவையின் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம்.

எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும்.
பொருள்: இலங்கை ஒரு விசாரணை நடாத்துவது போல் உலகை ஏமாற்ற வேண்டும் அல்லது பன்னாட்டு அமைப்புக்கள் பன்னாட்டு விசாரணைக்கு வழி செய்யப்பார்க்கும்.

எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: இலங்கை அரசியல் பிரச்சனைக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்படுவது அவசியம்.
பொருள்: இல்லாவிடில் பிராந்தியத்தில் வேறு நாடுகள் தலையிட வழிவகுக்கும். ஏதாவது தீர்வு ஒன்று வருவது போல இலங்கை போலியாக பேச்சுவார்த்தைகளை நடாத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: இலங்கையில் போர் முடிவடைந்துவிட்ட நிலையில், ஒன்றுபட்ட இலங்கைக்குகள் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில், நிலையான அரசியல் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என இந்தியா கருதுகிறது.
பொருள்: ஆயுத போராட்டத்தை தொலைத்தாயிற்று இனி பேரினவாதத்தின் உச்சக்கட்டத்தில் சிறுபானமை இனம் அடக்கி ஆளப்பட வேண்டும். அது இந்தியப் பேரினவாதம் இந்தியாவில் சிறுபான்மை இனங்களை அடக்க உதவும்.


எஸ். எம். கிருஷ்ணா சொன்னது:அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், எவ்வளவு விரைவில், நிலையான அரசியல் தீர்வு காணப்படுகிறதோ அது நன்மை தருவதாக இருக்கும்.
பொருள்: சிங்களவர்கள் திருப்திப்படாத தீர்வு சரிவராது. தமிழ் நாய்களே அடங்குங்கடா.

 எஸ். எம். கிருஷ்ணா சொன்னது:தேசிய நல்லிணக்கத்துக்காக அரசியல் தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகள், மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான முயற்சிகளை இந்தியா பாராட்டுகிறது.
பொருள்: இலங்கையை அடிக்கடி நாம் பாராட்டிக்கொண்டே இருப்போம்.

எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற தலைப்பில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தை கண்ட மக்களின் எதிர்வினைகளையும் அறிந்து வைத்திருக்கிறோம்.
பொருள்: எந்தப் படுபாவி மொபைல் போனுக்குள் கமராவை வைக்கக் கண்டுபிடிச்சுத் தொலைச்சான்? இலங்கை செய்த அட்டூழியங்களுக்கு இந்தியா துணை செய்ததை எந்தப் பாவி படமெடுத்து வைச்சிருக்கிறானோ!


எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கை அரசு உடனடியாக அவசர நிலை விதிமுறைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொருள்: நாம சொன்னா அதை இலங்கை அரசு எங்கு கேட்கப் போகிறது. அவிங்களுக்கு நாம கைக்கூலிமாதிரியெல்ல நடத்துறாங்க.


கிரிக்கெட் ஸ்கோர் சொல்லும் கிருஷ்ணா.
எஸ். எம். கிருஷ்ணா தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏதோ கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது போல் பாராளமன்றத்தில் சொன்னார். கடந்த ஆண்டில் 137 தமிழக மீனவர்களும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 வரை 164 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை - 1000 இந்தியா- 0 .
இலங்கையால் கொல்லப்பட்ட தமிழ் மீனவர்கள் தொகையைப் பற்றி கிருஷ்ணா எதுவும் கூறவில்லை.

இலங்கைத் தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு பிரித்து வைத்ததைப் பற்றி வாசிக்க இங்கு சொடுக்கவும்: துரோகி நேரு.

Thursday 4 August 2011

நவீன மனைவியைக் கவரச் செய்ய வேண்டியவை.

மனைவியைக் கவர்வதற்குச் செய்ய வேண்டியவையும் காலத்திற்கு ஏற்ப மாறும். மல்லிகைப் பூவும் அல்வாவும் இப்பவும் "வேர்க் அவுட்" ஆகக் கூடும். ஆனாலும் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் தேவைப்படும். சில யோசனைகள்:

1. மின்னஞ்சல்: இ-மெயில் அவ்வப் போது அனுப்புங்கள். நல்ல எஸ்.எம்.எஸ் வசனங்களை இணையத்தில் தேடிப்பிடித்து வெறிம் காப்பி அண்ட் பேஸ்ட் செய்யாமல் உங்களுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து உங்கள் மனைவிக்கு அனுப்புங்கள். முதல் நாள் இரவு அனுபவத்தை நினைவு கூர்ந்து மறுநாள் குறுந்தகவல் அனுப்புதல் அவளுக்கு நல்ல கிளுகிளுப்பை ஊட்டும்.

2. எதையும் மறைக்காதீர்கள்: தற்கால மனைவிமார்கள் தங்கள் அறிவிலும் புத்திசாலித்தனத்திலும் அதிக நம்பிக்கை யுடையவர்கள். அவர்களிடம் எதையும் மறைக்காமல் அவர்களுடன் உங்கள் பிரச்சனைகள் தவறுகளைக் கலந்து ஆலோசியுங்கள்.

3. வாகனப் பராமரிப்பு: உங்கள் வாகனத்தை சுத்தமாக வைத்திருங்கள். பிரச்சனைக்குரிய நேரங்களில் உங்கள் வாகனத்தில் செல்வது அவர்களுக்குப் பிடிக்கும். மனைவியிடம் வாகனம் இருந்தால் அதை பராமரிக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். அழுக்குப் பிடித்த வாகனத் திருத்தகங்களுக்கு உங்கள் மனைவியை அனுப்பாதீர்கள்.

4. பாராட்டுங்கள்: இது எக்கால மனைவிக்கும் பிடிக்கும். சில வழமையான நிகழ்வுகளாகினும். நல்லவை நடந்தால் எதையும் மனமாரப் பாராட்டுங்கள்.

5. தவறு பிடிப்பதைத் தவிருங்கள்: அடிக்கடி அவள் விடும் தவறுகளை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொள்ளாதீர்கள்.

6. சமத்துவம் அவசியமில்லை: வீட்டு வேலைகளில் சரி பாதி அல்லது பெருமளவைச் செய்ததல் பாதகமான விளைவையே ஏறப்டுத்தும். வீட்டு வேலைகளில் உதவி செய்யுங்கள். ஆதிக்கம் செலுத்தாதிர்கள். தனனை விட்டால் சாப்பாட்டிற்கோ அல்லது இல்லப் பராமரிப்பிற்க்கோ வேறு கதியில்லை என்ற உணர்வை மழுங்கடிக்காதீர்கள்.

7. ஏழு செக்கண்ட் முத்தம்: நீங்கள் அவ்வப் போது அவளுக்குக் கொடுக்கும் முத்தம் சும்மா ஒர் உரசலுடன் முடியக் கூடாது. குறைந்தது ஏழு செக்கண்ட்கள் தன்னும் நீடிக்க வேண்டும்.

8. பணப்பரிசு: மனைவி செய்யும் நல்ல அல்லது திறமையான காரியங்களுக்கு அவ்வப் போது பணப் பரிசு கொடுங்கள்.

9. மீண்டும் முதல் நாள்: உங்கள் இருவரிடை ஆரம்ப கால நிகழ்விகளை மீண்டும் அடிக்கடி நினைவு கூர்ந்து அப்படியே மிண்டும் செய்யுங்கள்

10. தொடர்பாடல்: நீங்கள் உங்கள் நேரத்தை தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் விளையாட்டு  அரசியல் போன்ற நிகழ்ச்சிகளில் ஆழ்திருந்தாலும் அவ்வப் போது உங்கள் மனைவியுடன் கதையுங்கள். மனைவியுடன் கதைப்பதைக் குறைக்காதீர்கள்.

11. தடவல் தனி சுகம்: மனைவியின் தலைமுடியைத் தடவுதல், கன்னங்களை வருடுதல், தோளில் ஒரு இதமான மசாஜ்.........இப்படிப் பல அடிக்கடி செய்ய வேண்டும்.

12. மற்றவர்கள் முன்னிலையில் முக்கியத்துவம்: மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் மனைவி முக்கியமானவர் என்பதை அவளுக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்டும் படி நடவுங்கள்.

13. அடிக்கடி இன்ப அதிர்ச்சி: திடீரென்று அவளுக்கு பிடித்தமானவற்றை எதிர்பாராத விதமாகச் செய்து அசத்துங்கள்.

14. மன்னிப்புக் கேளுங்கள்: நீங்கள் தவறுவிட்டால் மன்னிப்புக் கேட்கத் தயங்காதிர்கள்.

15. வேலை வேறு வீடு வேறு: வீட்டுக்கு வரும்போது வேலையிடத்துப் பிரச்சனைக்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். வேலை இடத்து மன அழுத்தத்தை மனைவி மேல் எரிந்து விழுவது பாதகமான விளைவையே தரும்.

16. வாழ்த்தும் முத்தமும்: நித்திரைக்கு முன் ஒரு குட் நைட் முத்தமும் காலையில் ஒரு குட் மோர்னிங் முத்தமும் தவறாமல் இடம்பெற வேண்டும்.

17. வீட்டுக் குறைபாடுகளைக் கவனியுங்கள்: வீட்டில் உள்ள சில குறைபாடுகளை திருத்துவதைத் தள்ளிப்போடாமல் செய்யுங்கள்.

18. விடுமுறை அவசியம்: உங்களிடமிருந்து உங்கள் மனைவிக்கு அவ்வப் போது விடுமுறை அவசியம். அவள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அவள் பழகுவதற்கு போதிய அளவு அனுமதியுங்கள்.

19. பணத் தட்டுப்பாடு: பணத்தட்டுப்பாடு வரும்போது குறையை உங்கள் மனைவிமீது போடாதிர்கள்.

20. தலைமை வேண்டும் சர்வாதிகாரம் அல்ல: வீட்டில் நீங்கள் சிறந்த தலமைத்துவப் பண்புகளுடன் நடந்து கொள்ளுங்கள். அதிகாரம் செய்யாதீர்கள்.

ஸ்ஸ்ஸ்ஸ்பாஆஆஆஆஆ இவ்வளவு செய்வதிலும் பார்க்க தினசரி சண்டை போட்டுக் கொண்டு காலத்தைக் கழிக்கலாம் என்றிருக்கிறதா????

Wednesday 3 August 2011

அமெரிக்க கடன் உச்ச வரம்பு உயர்தப்பட்டதன் பின் என்ன நடக்கும்?






அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு உயர்த்தப் படுமா என்ற பிரச்சனையில் உலக நிதிச் சந்தையில் பலர் திணறிக் கொண்டிருந்தனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பொருளாதாரப் பலவீனத்தை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருந்தது அதன் கடன் நெருக்கடி. ஆனாலும் மனித வராலாற்றில் அமெரிக்காவைப் போல் உலக நிதி நடவடிக்கைக்கு உகந்த ஒரு நாணயக் கட்டமைப்பை வேறு எவரும் வழங்கியதில்லை என்று அமெரிக்கர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். அமெரிக்க டொலர் நாணயம் இப்போது உலகில் ஆதிக்கம் செலுத்தும்  ஒதுக்க நாணயம் (dominant reserve currency) ஆகத் திகழ்கிறது.

அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கும் இடையில் அமெரிக்க அரச கடன் உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்ப்பக ஒரு உடனபடிக்கை ஏற்பட்டிருக்க்காவிடில் உலக நிதிச் சந்தையில் பெரும் களேபரம் நிகழ்ந்திருக்கும். ஆனால் உடன்படிக்கை ஏற்பட்டதால் ஒன்றும்பெரிதாக நிகழ்ந்து விடப்போவதில்லை. மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பராக் ஒபாமாவிற்கு குடியரசுக் கட்சியினரைப் பெரும் பான்மையாகக் கொண்ட மக்களவை கடினமான நிபந்தனைகளை விதித்து கடன் உச்ச வரம்பை உயர்த்த சம்மதித்தது.

கடன் உச்ச வரம்பு உயர்த்தும் உடன்பாடு
1. அமெரிக்க  பாதீட்டு  பற்றாக் குறையை அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு ரில்லியர் டொலர்களால் குறைப்பது.
2. அமெரிக்க கடன் உச்ச வரம்பை 2.1 ரில்லியன் டொலர்களால் அதிகரிப்பது.
3. இரு கட்சிகளும் இணைந்து பற்றாக்குறையை 1.5ரில்லியன் டொலர்களால் குறைப்பது.
ஆகியவை உடன்பாட்டின் முக்கிய அம்சங்களாகும்.

அமெரிக்க கடன் நெருக்கடி பற்றிய முந்தைய பதிவு: கடன் பட்டுக் கலங்கும் அமெரிக்கா.

அமெரிக்காவை புல்லுருவி என்றது இரசியா
பழைய சோவியத் ஒன்றியத்தில் ஒன்றும் செய்யாமல் சமூகத்துக்கு பாரமாக இருக்கும் சோம்பேறிகளை புல்லுருவி என பொதுவுடமைவாதிகள் குறிப்பிடுவர். இப்போது அந்தச் சொல்லை இரசியப் பிரதமர் புட்டீன் அமெரிக்கர்களைப் புல்லுருவிகள் என்று அமெரிக்க கடன் நெருக்கடி பற்றிக் குறிப்பிடும்போது தெரிவித்தார்.

நிம்மதிப் பெருமூச்சு விடும் சீனா.
அமெரிக்கா சரியான நகர்வுகளை மேற்கொண்டது என்கிறது சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி என்னும் பத்திரிகை . உலக நிதிச் சந்தை பாதிக்கப்பட்டால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவது சீனப் பொருளாதாரமே. சீன அமெரிக்க அரச கடன் முறிகளில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது. மூன்று ரில்லியன் டொலர் கணக்கில் உலகில் உயரிய அந்நியச் செலவாணி உபரியைக் கொண்ட சீனா தனது வெளி நாட்டுச் சொத்துக்களை டொலரிலேயே வைத்துள்ளது. சீன தனது வெளிநாட்டுச் சொத்துக்களில் மூன்றில் இரு பங்கை அமெரிக்க டொலரிலேயே வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனாலும் கடன் உச்ச வரம்பை உயர்த்த அமெரிக்கா பட்ட பாட்டையிட்டு சீனா அருவருப்படைந்ததாகத் தெரிவித்துள்ளது. சீனாவின் கடன்படு முகவரகம் அமெரிக்க கடன்படுத் திறனை ஏ+இல் இருந்து ஏஇற்கு இறக்கியுள்ளது. சீன மத்திய வங்கி அமெரிக்கா தனது கடன் முறிகளின் பெறுமதியைத் தக்க வைக்க பொறுப்பானதும் காத்திரமானதுமான  நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தைகளில் விலை சரிவு.
நேற்று டோக்கியோவில் இருந்து இலண்டன் ஈறாக நியூயோர்க் வரை சகல உலகப் பங்குச் சந்தைகள் யாவிலும் விலை வீழ்ச்சியையே கண்டன.

மத்திய வங்கிகள் மீண்டும் தங்கங்களை வாங்குகின்றன
அமெரிக்க கடன் நெருக்கடியைத் தொடர்ந்து தங்கத்தின் விலை உலகச் சந்தையில் விலை அதிகரிப்பை அடைந்தன. நேற்று பெரும் ஏற்று மதியைக் கொண்ட தென் கொரியாவின் மத்திய வங்கி 25 மெற்றிக் டொன் தங்கங்களை வாங்கியது. ஏற்கனவே மெக்சிக்கோ, இரசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிவிட்டன.

உலகச் சந்தையில் பாதகமான சூழ்நிலை ஏன் ஏற்பட்டது?

1. அமெரிக்க மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்காது.
அமெரிக்க கடன் உடன்படிக்கையில் வரி விதிப்பு அதிகரிப்பைக் குறைத்தும் அரச செலவீனங்களை பெருமளவில் கட்டுப்படுத்தியுமுள்ளனர். ஊழியர்களின் வரிவீதங்களை அதிகரிக்காமல் அவர்களின் வரிக் குறியீடுகளை(Tax Code) மாற்றவுள்ளானர். இதனால் அவர்கள் அதிக வரி செலுத்த வேண்டி வரும். இது அமெரிக்க மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்காது. மக்கள் கையில் பணப்புழக்கம் இன்றி அவர்களின் கொள்வனவு அதிகரிக்காது. இதனால் தேசிய உற்பத்தி அதிகரிக்கும் வாய்புக்க்கள் குறைகின்றன. அமெரிக்க உற்பத்தி வளராமல் உலகப் பொருளாதாரம் வளர்வதற்கான வாய்ப்புக்களும் குறையும்.

2. அமெரிக்க மக்கள் செலவுகளைக் குறைத்தனர்.

அமெரிக்க மக்கள் தங்கள் செலவீனங்களை ஜூன் மாதத்தில் 0.2 விழுக்காட்டால் குறைத்தனர் என்று நேற்று வெளிவந்த புள்ளி விபரங்கள் தெரிவித்தன. அமெரிக்க பொருளாதாரத்தில் 70% பங்களிப்பைச் செலுத்தும் அமெரிக்க மக்கள் செலவீனம் குறைந்தம அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதிக்கும். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவின் பொருளதாரம் பாதிக்கப் படும் போது அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் தங்கியிருக்கும் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கபப்டும்.

3. அரச் செலவு குறைந்தால் வேலை வாய்ப்புக்கள் குறையும்
அமெரிக்க பாராளமன்றத்தின் மக்களவையில் பெரும்பான்மையாக இருக்கும் குடியரசுக் கட்சி அரச செலவீனங்களைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்தே தேர்தலில் வெற்றி பெற்றது. அதன் அடிப்படையில் அவர்கள் கடன் உச்ச வரம்பை உயர்த்த அரச செலவீனங்களைக் குறைக்கும் நிபந்தனை விதித்தனர். அரச செலவீனத்திற்கும் வேலை வாய்ப்பிற்கும் நேரடித் தொடர்பு உண்டு. அரச செலவீனம் அதிகரிக்கும் போது வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பொருளாதாரம் நலிவடைந்திருக்கும் போது அரச செலவீனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் சில பொருளியன் நிபுணர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர். இப்போதைய அமெரிக்க நிலையில் அமெரிக்க வேலை வாய்ப்புப் பாதிக்கப்படுவது உலக பொருளாதாரத்திற்கு உகந்ததல்ல.

பராக் ஒபாமாவின் செல்வாக்கு சரிவு.
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை எதிர் நோக்குகிறார் பராக் ஒபாமா. அவர் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டமையில் இருந்து அவரது பிறப்புச் சாட்சிப் பத்திரம் எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தனர் அவரது அரசியல் எதிரிகள். அவரது பிறப்புச் சாட்சியம் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. பின்னர் பின் லாடன் எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தனர். மே இரண்டாம் திகதி பின் லாடன் கொல்லப்பட்டார். இப்போது கடன் நெருக்கடியும் வேலைவாய்ப்பின்மையும் ஒபாமாவின் செல்வாக்கை சரித்து விட்டன. அமெரிக்க அரச செலவீனக் குறைப்பு மக்களுக்கான சுகாதார சேவையை பெரிதும் பாதிக்கும். இது ஒபாமாவின் தேர்தலுக்கு உகந்ததல்ல. ஒபாமா இப்போது தனது செல்வாக்கை உயர்த்த ஏதாவது செய்தே ஆகவேண்டும்.

Tuesday 2 August 2011

பின் லாடன் கொலைபற்றிப் புதிய தகவல்கள்

பின் லாடனைக் கொன்றபின் அவரது உடலை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்றனர். முதல் வேலையாக அவரது எலும்புக்குள் இருந்து டி.என்.ஏ மாதிரிகளை எடுத்தனர். பின் லாடனைக் கொன்றவுடன் அவர்கள் அனுப்பிய செய்தி "Geronimo E.K.I.A" . பின் லாடனுக்கு அமெரிக்க உளவுத் துறை வைத்த குறியீட்டும் பெயர்Geronimo.  E.K.I.A என்பது enemy killed in action எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டான். இது போன்ற பல புதிய தகவல்களை நியூயோர்க்கர் வெளியிட்டுள்ளது.


தலைக்கவசத்தில் காணொளிக் கருவிகள் இருந்திருக்கவில்லை.
அமெரிக்க சீல் படையினர் தலைக்கவசத்தில் காணொளிக் கருவிகள் இருந்திருக்கவில்லை என இப்போது கூறப்படுகிறது. முன்பு பின் லாடனைக் கொன்ற அமெரிக்க சீல் படையினரின் தலைக் கவசத்தில் காணொளிப் பதிவு-ஒளிபரப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அவற்றின் மூலம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பின் லாடனுக்கு எதிரான படை நடவடிக்கையை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது. பின் லாடனின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி இங்குகாணலாம்: பின்லாடன் இருப்பிடம் அறிந்த விபரமும் தாக்குதல் விபரமும்.

பின் லாடனைக் கொன்றவர் விபரம் யாருக்கும் தெரியாது.
பின்லாடனைக் கொன்றவர் யார் என்பது பற்றி பராக் ஒபாமா அறிய முற்படவில்லையாம். அவரது பெயர் இன்றுவரை வெளியிடப்படவில்லை. இது ஒரு குழுவினரின் துணீகர முயற்ச்சி தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் அதற்கான பெயரும் புகழும் போய்ச் சேர்வதை விரும்பவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் இருக்கலாம்.

23பேரின் 25நிமிட வேலை.
இறுதிப் படை நடவடிக்கையில் நிலம்-நீர்-ஆகாயம் ஆகிய மூன்றிலும் செயற்படும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படையின் சிறப்புப் பயிற்ச்சி பெற்ற சீல் படையினர் 23பேர் 25 நிமிடத்தில் தங்களுக்கு இட்ட பணியைச் செய்து முடித்தனர்.

முதற் கோணல் முற்றும் கோணல் அல்ல்.
தாக்குதலின் முதல் நிமிடத்தில் ஒரு Black Hawkஎன்னும் உழங்கு விமானம்(ஹெலிக்கொப்டர்) விபத்தில் சிக்கி வீழ்ந்தது. அதனால் படை நடவடிக்கை தோல்வியில் முடியுமா என்ற அச்சம் சில கணங்கள் நிலவியது. இறுதியில் தோல்வியே வெற்றியில் முதல் படியானது.

தற் கொலைத் தாக்குதலுக்கு எதிராக ஒரு சீல் படையினரின் துணிகரச் செயல்.
தாக்குதலுக்கு சென்றவர்களின் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது பின் லாடனின் மூன்று மனைவியரில் யாராவது ஒருவராவது தற்கொலை அங்கியுடன் இருப்பார்களா என்பதே. இதிலிருந்து தப்ப சீல் படையினரில் ஒருவர் மூன்று மனைவிகளையும் தனிமைப்படுத்தி தனியாக ஓரிடத்தில் பின் லாடனைக் கொல்லும் வரை தன்னுடன் வைத்திருந்தாராம்.

பின் லாடனை உயிருடன் பிடிக்க முயலவில்லையாம்.
 நியூயோர்க்கர் மேலும் கூறுகையில் பின் லாடனை உயிருடன் பிடிக்கும் எண்ணம் சிஐஏக்கு இருந்திருக்கவில்லை என்கிறது. ஆனால் பின் லாடனை ஏன் அமெரிக்கா அவர் இருந்த மாளிகையைக் குண்டு வீச்த் தாக்கிக் கொல்லவில்லை என்ற கேள்வி இன்றும் இருக்கிறது. பராக் ஒபாமா பின் லாடன் தங்கி இருந்த அழகிய நகரான அபோட்டாபாத்தில் குண்டு வீச்சால் ஒரு பெரும் குழி ஏற்படுவதை விரும்பவில்லையாம்.


பராக் ஒபாமா கொடுத்த பரிசு.
பின் லாடனின் உடலத்தை பெற்ற படைத் தளபதிக்கு உடலத்தின் உயரத்தை அளப்பதற்கு அவரிடம் அப்போது அளவு நாடா இருந்திருக்கவில்லை. பின் லாடனின் அடையாளங்களில் முக்கியமானது அவரது ஆறடி நாலு அங்குல உயரமே. அதை உறுதி செய்ய முடியாமல் ஒரு திண்டாட்டம் ஏற்பட்டதாம். பின்னர் கடறபடையினரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்தித்த போது தளபதிக்கு ஒரு அளவு நடா ஒபாமாவால் பரிசாகக் கொடுக்கப்பட்டதாம்.


சீல் படையினர் பாவித்த கருவிகள்
Desert digital camouflage gear,  laminated map of the compound. silenced Sig Saucer P226 pistol, silenced M4 rifle போன்றவற்றை சீல் படையினர் வைத்திருந்தனர்.

நம்பமுடியாத பாக்கிஸ்த்தானியர்.
பின் லாடன் இருந்த மாளிகைக்குள் சுரங்கப்பாதை அமைத்து உள்புகும் திட்டமும் இருந்ததாம். ஆனால் இதற்கான காலம் அதிகம் எடுக்கும். அத்துடன் பாக்கிஸ்தானியரின் உதவியும் தேவைப்படும். பாக்கிஸ்தானியர் இந்த திட்டத்தை அம்பலப்படுத்திவிடுவார்கள் என்பதால் அது கைவிடப்பட்டது. இதுபற்றி குறிப்பிட்டது: There was a real lack of confidence that the Pakistanis could keep this secret for more than a nanosecond. பாக்கிஸ்தானியர் ஒரு நொடியின் பில்லியனில் ஒரு பங்கு நேரமாவது இரகசியத்தைக் காப்பாற்ற மாட்டார்கள்.{ A nanosecond (ns) is one billionth of a second}

இரு வாரப் பயிற்ச்சி
 வட கரோலினாவில் பின் லாடன் தங்கி இருந்த மாளிகை போல் ஒன்று அமைக்கப்பட்டது. வைஸ் அட்மிரல் பில் மக்ரவென் தலைமையில் இரு வாரங்கள் அங்கு 23 சீல் படையினருக்கும் பயிற்ச்சி அளிக்கப்பட்டது.  பின்னர் நெவேடாவில் உள்ள ஒரு பாலை வனத்திலும் ஒத்திகை பார்க்கப்பட்டது. உழங்கு வானூர்திகள்(ஹெலிக்கொப்டர்கள்) இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டன. ரடார்களில் தென்படாமல் இருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. உழங்கு வானூர்திகளில் இருந்து வரும் ஒளி, ஒலி, வெப்பம் போன்றவை பாக்கிஸ்தானியப் படையினரால் உணரப்படாமல் இருக்கும் படியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் அஹமட் என்பவர் தாக்குதல் அணியில் 24வது ஆளாகச் சேர்க்கப்பட்டார். மொழி பெயர்ப்பாளராக. அதற்கு முன்பு வானூர்திகளில் இருந்து கயிற்றின் மூலம் இறங்கும் அனுபவமற்றவர் அஹமட் ஆனால் விரைவில் அதைப்பயின்று கொண்டார். இன்னும் ஒரு கெய்ரோ என்னும் நாயும் அணியில் இணைக்கப்பட்டது. அதன் வேலை பின் லாடனின் மாளிகைக்குள் வெளி ஆட்கள் வராமல் பார்த்துக் கொள்வது. 

கட்டளைப் பணியகங்கள்.
ஏப்ரல் 26-ம் திகதி ஜேர்மனியூடாக சீல் படையின்ர ஆப்கானிஸ்தான் சென்றனர். இவர்களுக்கான கட்டளைப்பணியங்கள். பெண்டகன், சிஐஏ தலமையகம்,  ஜலலாபாத்(மக்ரவென் என்னும் வைஸ் அட்மிரல்), இஸ்லாமபத் அமெரிக்கத் தூதுவரகம், என்பவை செயற்பட்டன இவ்ற்றிற்கிடையே காணொளித் தொடரபாடல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சிஐஏ தலமையக்த்தில் இருந்து நேரடியாக நடவடிக்க்கைகள் பற்றி வெள்ளை மாளிகை போர்-அறைக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.


பாக்கிஸ்தானியருடன் போருக்குத் தாயார்.
சீல் படை நடவடிக்கைக்கு  பாக்கிஸ்தானியப் படையினரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பினால் அதற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு அமெரிக்க விமானங்கள் பல தயாராக இருந்தன. படை நடவடிக்கையின் போது சில விமானங்கள் அபோட்டாபாத்தின் மேல் பறந்து கொண்டிருந்தன. Black Hawk என்னும் உழங்கு வானூர்திகளின் செலுத்துனர்கள் ஒளி ஏதும் இன்றி இரவில் பார்க்கும் கண்ணாடி அணிந்தபடி செயற்பட்டனர்.


அதிகாலை 4-00மணி அப்போதைய சிஐஏ தலவர் பராக் ஒபாமாவிற்கு அறிவிக்கிறார்: சீல் படையினர் பின் லாடனின் மாளிகையை அண்மிக்கிறார்கள். 
உடனே ஒபாமா எழுந்து தான் இதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்கிறார். பின் லாடன் மாளிகையின் மேல் 15,000அடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்த அமெரிக்க ஆளில்லா விமானமூலம் தகவல்கள் பெறப்படுகின்றன.


முதற் பலியான தகவல் தொடர்பாளர்.
சீல் படையினர் முதலில் சிறு பிரிவுகளாகப் பிரிகின்றனர். ஒரு பிரிவினர் பின் லாடனின் மாளிகையின் விருந்திரகத்தில் (guest house) இறங்குகின்றனர். அங்கு பின் லாடனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் பின் லாடன் மற்ற அல் கெய்தாவினருடன் தொடர்பு ஏற்படுத்தப் பயன்பட்டவருமான messenger ஒரு ஏகே47 துப்பாக்கியுடன் மனைவி சகிதம் வருகிறார். இருவரும் உடனே சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.


முன் வந்த மூன்றாம் மனைவி
மூன்று சீல்கள் ஒரு இரும்புக் கதவை குண்டு வைத்துத் தகர்க்கின்றனர். படிகளில் அவர்கள் ஏறும் போது பின் லாடனின் 23 வயது மகன் ஒரு ஏகே-47 உடன் வருகிறார். அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். மாடிக்குச் சென்ற சீல் படையினருக்கு தாடியும் நெடிய உருவமும் கொண்ட பின் லாடனை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கவில்லை. முதலில்  பின் லாடனின் மனைவியரில் இருவர் பின் லாடனை மறைக்கின்றனர். இளைய மனைவி அமல் அல் ஃபற்றா முன்னர் நகருகிரார். அவரது காலில் சுடப்படுகிறது. அவர் விழ ஒரு சீல் வீரன் மற்ற இரு மனைவியரையும் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். அவர் அவர்கள் மூவரையும் பிரித்து தனைமைப்படுத்துகிறார். மனைவியர் தற்கொலை அங்கி அணிந்திருக்கலாம் என்ற பயத்தில் அவர்களை அவர் விலக்கிக் கொள்கிறார். பதினொரு வருடங்கள் பல மில்லியன் டொலர்கள் செலவளித்துத் தேடித்திரிந்த அமெரிக்காவின் முதலாம் எதிரி பில் லாடன் தொழுகைத் தொப்பியும் சல்வார் கம்மீஸும் அணிந்தபடி ஆயுதமின்றி சீல் படையினரின் துப்பாக்கி முனையில். முதலில் நெஞ்சிலும் பின்னர் இடது கண்ணிலும் பின் லாடன் சுடப்படுகிறார். For God and country - Geronimo, Geronimo, Geronimo - கடவுளுக்காகவும் நாட்டிற்காகவும் ஜெரோனிமோ, ஜெரோனிமோ, ஜெரோனிமோ என்று ஒலி பரப்பப்படுகிறது. ஒபாமா முதற் சொன்னது அங்குள்ள அனைத்து சீல் படையினரும் பாதுகாப்பாக வரும்வரை எனக்கு நிம்மதியில்லை என்பதே.


பின்னர் சீல் படையினர் மிக விரைவாகச் செயற்படுகின்றனர். பல கணனிகளும் இலத்திரனியல் பதிவேடுகளும் வாரி அள்ளப்படுகின்றன. நீலப் படங்கல் பல அங்கு இருந்தனவாம்.  இன்னொரு வானூர்தி வந்து பின் லாடனின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்கிறது. பின் லாடனின் எலும்பு மொச்சை எடுக்கப்படுகிறது. ஜலலா பாத்தில் பின் லாடனின் உடலை வைஸ் அட்மிரல் மக்ரவன் அடையாளம் காண்கிறார். பின் லாடனின் உடல் ஆப்கானிஸ்தான் கொண்டு செல்லப்படுகிறது.

சவுதி அரேபியாவிற்கு அறிவிக்கப்படுகிறது.
பின் லாடனைக் கொன்ற செய்தி சவுதி உளவுத் துறைக்கு அறிவிக்கப்படுகிறது.  அவரது உடலை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று வினவப் பட்டது. அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. உடல் பின்னர் கடறபடைக் கப்பல் U.S.S CARL VINSON இற்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது.


நாயைச் சந்திக்க விரும்பிய பராக் ஒபாமா
சீல் பிரிவினரின் படை நடவடிக்கையில் நாயும் பங்கு பெற்றதை அறிந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான் அந்த நாயைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

Monday 1 August 2011

தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு பாதகமான விளைவுகளையே தரும்.


இலங்கையில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்படும் ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்களித்தமையை இட்டுப் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழர்கள் தமக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று உலகிற்கு காட்டி தம்மீது சுமத்தப் பட்டுள்ள போர்க்குற்றத்தை திசை திருப்ப தேர்தல் முடிவுகளை தமக்கு சாதகமாக வர ராஜபக்ச சகோதரர்கள் பெரும் பிரயத்தனம் செய்தனர். அது மட்டுமல்ல தமிழர்கள் இனப்பிரச்சனையைக் கருத்தில் கொள்ளவில்லை அவர்கள் தம் பிரதேசங்களில் அபிவிருத்தியையும் மறுவாழ்வையும் மறுசீரமைப்பையுமே வேண்டி நிற்கின்றனர். அதனால் அவர்கள் எங்களுக்கு வாக்குக்களை அள்ளிப் போட்டனர். அதனால் அபிவிருத்தி, மறுவாழ்வு, மறுசீரமைப்புக்கு அள்ளிக் கொடுங்கள் நிதிகளை என்று உலக நாடுகளைக் கேட்கலாம். அதை வைத்து மேலும் சிங்களவர்களை வடக்குக் கிழக்கில் குடியேற்றலாம் என்றும் அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் வேறுவிதமாகச் சிந்தித்தனர்.

இலங்கையின் வரலாற்றில் ஒர் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைப் பற்றி உலகெங்கும் செய்தி அடிபட்டது இதுவே முதற்தடவை. வெளிவந்த சில கருத்துக்கள்:
    • JAFFNA, Sri Lanka, July 29 (Reuters) - Sri Lanka's old war zone has been at peace for two years but the minority Tamils who populate it say they are hungry for jobs, despite the economic revival the government has offered instead of the political powers for which Tamils first took up arms. In Sri Lanka's north and east, people last week voted for the first time in at least 12 years and as many as 29 to elect local councils, two years after the military wiped out the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to end a 25-year war. President Mahinda Rajapaksa's ruling United People's Freedom Alliance (UPFA) swept 250 councils out of 299, but lost miserably in predominantly Tamil electorates, in areas the Tigers wanted to turn into a Tamil-only nation.
    • தினமணி: இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் தமிழர் கட்சிகளுக்கு கிடைத்துள்ள வெற்றி, தனித் தமிழ் ஈழத்துக்கான தீர்ப்பாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
    •   The Weekend Leader - Ramu Manivannan -The remarkable success of the Tamil National Alliance (TNA), the umbrella organization of Tamil Political parties in the recently held local body elections in the North and East of Sri Lanka is yet another reaffirmation of the Tamils’ belief in their right to self determination. The TNA won 18 of the 26 local bodies in the region in an election they fought amidst hostile conditions.
    • விகடன்: தமிழீழம் அமைவதற்கான முன்னோடியாகவே இலங்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இருப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
    • Asia Times: Local election results in Sri Lanka indicate that while President Mahinda Rajapaksa can still count on solid support in the Sinhala south, his post-war development strategy to address Tamil alienation has failed to cut ice with Tamils in the north and east. The Tamil National Alliance (TNA) exceeded expectations to take control of 18 of 26 local bodies in the north and east in the polls on Saturday. Another Tamil party, the Tamil United Liberation Front, took two local councils - both in Killinochchi district - where it was reportedly backed by the TNA.
    • ஆயுத எழுத்து புதுவை ராம்ஜி: அண்மையில் நடைபெற்ற இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்பது, மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கின்றன. இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், அந்தத் தீவு முழுவதிலும் 65 மாகாணங்களில் போட்டியிட்ட ராஜபட்ச்சே  ஆதரவுபெற்ற  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தம் 45 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழர்கள் வாழும்  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாகாணங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது    விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், புலிகள் இயக்கத்துக்குக் கொள்கையளவில் மாறுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், ராஜபட்ச்சே  மீதான இலங்கைத் தமிழர்களின் கோபத்தை ஒட்டுமொத்தமாக உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் பொருள்.
    • Ground Views: The Tamil people have – by ensuring the victory of the TNA – accepted and supported the recommendations of the UN [Panel’s report], which state that the government’s war crimes and human rights abuses require an impartial international investigation. The TNA asks that this verdict of the Tamil people be respected and that the government accept and allow an international investigation. The TNA requests that the international community continues to pressure the government to provide a political solution that allows the Tamil people to live in their homeland with dignity and freedom.
    • New York Times:     Voters in northern and eastern Sri Lanka gave an alliance of parties closely linked to the defeated Tamil Tiger insurgency majorities in 18 of 26 local council elections, according to results released Sunday. The elections allowed residents in many areas the first chance in years to vote after bearing the brunt of two decades of ethnic conflict, and the results underscored just how deeply divided the country remains two years after the fighting ended.
    • தமிழ்வின்: தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் : தலைவர்கள் தவறிழைத்தாலும் தமிழ் மக்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்று 1949ல் தந்தை செல்வா அவர்கள் தீர்க்க தரிசனமாகக் கூறிய கூற்று இன்று நிதர்சனமாகிவிட்டது. இவ்வுரிமைப் போராட்டத்தில் தந்தையும், அவரோடு இணைந்த தளபதிகளும், தனயர்களும் செய்த தியாகம் வீண்போகவில்லை என்பதையும் இன்றும் மக்கள் அவற்றை மறக்கவில்லை என்பதையும் இம் முடிவுகள் துலாம்பரப்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மீதோ அன்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதோ உள்ள பற்றினால் அளிக்கப்பட்ட வாக்குகள் எனக் கருதுவதும் தவறு. தமிழ் மக்களின் உரிமைக் குரலின் குறியீடாக இவர்கள் விளங்குவதால்தான் இவர்களின் தலைமையை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
    • The Independent:     In a set-back for Sri Lanka's ruling party, the Tamil National Alliance has won a landslide victory in local elections, capturing 20 out of 25 seats it contested in areas formerly held by rebels of the Liberation Tigers of Tamil Eelam. Tamil politicians in the north and east of the country said yesterday that the results had delivered them a mandate to pursue change, adding that the Government in Colombo should work towards delivering a genuine political settlement.
    • ஜூனியர் விகடன்: மக்கள் மனச்சாட்சியைச் சொன்ன உள்ளாட்சித் தேர்தல்! இலங்கையில் கடந்த 23-ம் தேதி வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் நடந்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக அனுபவித்த வலியை, உள்ளாட்சித் தேர்தல் முடிவில் வலிமையுடன் காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்! இது மஹிந்த ராஜபக்சவுக்கு விழுந்த சம்மட்டி அடியாகும்.
    • BBC:   Sri Lanka's biggest Tamil party has won local elections in the island's former war zone in the north and east. The Tamil National Alliance (TNA) took 18 out of 26 councils in what is being seen as a rare electoral setback for the government of President Rajapaksa. His Sinhalese-dominated coalition won in all other areas being contested. The TNA was in effect a proxy of the Tamil Tigers, who troops defeated in May 2009, but it now seeks greater devolution for Sri Lanka's provinces.
    • TamilNet:    The results of civic elections in the country of Eezham Tamils decisively show that despite maximum intimidation and ‘development’ lures, people reject the paradigm of ‘collaboration-reconciliation’ but determinedly favour a polity of peace, based on the identity of their nation, political observers in the island said on Sunday. The message should be useful in seeking innovative and creative ways to resolve the national question in the island in order to achieve peace and stability in the region, they further said.
    தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக் கட்சிக்கு பலத்த அடியாகவே அமைந்தன. அதற்காக காங்கிரசுக் கட்சி இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக தனது கொள்கையை மாற்றவுமில்லை மாற்றப் போவதும் இல்லை. அடுத்த லோக்சபாத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரலாம் என்ற நம்பிக்கையுடன் காங்கிரசு இருக்கலாம். பேரினவாதிகள் திருந்துவதில்லை.

    இலங்கையில் தமிழர்கள் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது இது முதற் தடவையல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் தமிழர்கள் இதையே செய்து வருகின்றனர். அதி உயர் பயமுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழர்கள் இம்முறை வாக்களித்தது சிந்திக்க வேண்டியதுதான். ஆனால் பேரினவாதிகள் திருந்துவதில்லை. அவர்கள் தொடர்ந்து அடக்கு முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உதயன்  பிரதம செய்தியாசிரியர் குகநாதன் மீது கொடுரத் தாக்குதல், ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்புக்கு ஏற்ப குளறுபடி செய்யாத அரச ஊழியர்களின் மீது பழிவாங்கல் எல்லாம் பேரினவாதிகள் திருந்துவதில்லை என்பதேயே காட்டுகிறது.

    உயிருடன் இருக்கும் தமிழத்தேசியவாதம் உதைக்குமா? still alive! Will it hick?
    சிங்களமக்களும் ஆட்சியாளர்களும்  தமிழர் பிரதேசங்களின் தேர்தல் முடிவுகளைப் பார்த்து தாம் கொன்றொழித்து விட்டதாக மார்தட்டிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியவாதம் இப்போதும் உயிருடனேயே இருக்கின்றது என்று உணர்ந்து கொண்டனர். அவர்கள் இப்போது யோசிப்பது உயிருடன் இருக்கும் தமிழ்த்தேசியவாதம் மீண்டும் உதைக்குமா என்பதே. தமிழ்த்தேசியவாதத்தை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பது பற்றியே சிங்களவர்கள் இனிக் கவனம் செலுத்துவர். 1970 களில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தவுடன் சிறிமாவே பண்டார நாயக்க செய்த முதல் வேலை சீனாவில் இருந்து பல ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததே. 1977இல் தமிழர்கள் தமிழ்த்தேசியவாதத்திற்கு அபரிமிதமான ஆதரவைத் தெரிவித்த பின்னர் தமிழர்களுக்கு எதிராக வன்முறை ஜே ஆர் ஜயவர்த்தன் அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த வன்முறைக்கு தமிழர்கள் அடங்காமற் போகவே மீண்டும் சிங்களப் பேரினவாதம் தமிழர் மீது மேலும் மோசமான வன்முறையை 1983இல் கட்டவிழ்த்து விட்டனர். தமிழர்கள் அடுத்த அரச பேரினவாதக் கோர தாண்டவத்தை எதிர் கொள்ளலாம். போர்க்குற்றத்தில் சம்பந்தம் இருப்பதாகக் கருதப்படும் இந்தியா மீண்டும் இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு பேருதவி புரியும். இதிலிருந்து தப்ப ஒரே வழி இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க்குற்றச் சாட்டிற்கு வலுச் சேர்ப்பதே. பேரினவாதிகள் திருந்துவதில்லை.

    Sunday 31 July 2011

    சிங்களவர்கள் பார்வையில் சனல்-4

    சனல்-4 வெளிக்கொண்டுவரும் போர்க்குற்ற ஆதாரங்கள் தமிழர்களுக்கு இந்தியாவின் பேருதவியுடன் இலங்கை அரசால் இழைக்கப்பட்ட அநீதிகள் அப்படியே மறைக்கப்பட்டுவிடுமா என்று கலங்கிப் போயிருந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்துள்ளது. சனல்-4 வெளிக் கொண்டு வந்தது உண்மையில் நடந்த இனக்கொலையின் ஒரு சிறு பகுதியே. இதை சிங்கள மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இல்ங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிக்கா விஜய குமாரணதுங்க பண்டாரநாயக்கவும் அவரது மகனும் கூறியதுதான் பொதுவான சிங்கள மக்களின் கருத்தா? சந்திரிக்கா இதற்கு முன்னர் இரண்டு முறை குடியரசுத் தலைவராக இருந்தவர். மஹிந்த ராஜபக்சவின் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி அவரது குடும்பச் சொத்தாக இருந்தது. மஹிந்தவை பிரதம மந்திரியாக்கியரும் அவரே. பின்னர் மஹிந்தவால் அரசியலில் இருந்தே ஓரம் கட்டப்பட்டவர் சந்திரிக்கா. அவருக்கு மஹிந்தவைப் பழிவாங்க பல காரணங்கள் உள்ளது. இவரின் கருத்து சிங்களவர்களின் கருத்தாகாது.

    சனல்-4 பற்றி சிங்களவர்கள் சொல்பவை.
    • யாராவது நோர்வே கொலையாளியை வாடகைக்கு அமர்த்தி அவரை இலண்டனுக்கு அனுப்புங்கள்.
    • சனல்-4 தமிழ்ப் புலிகளின் நிதியால் இயக்கப்படுகிறது
    • நேட்டோப் படையினரின் விமானங்கள் லிபியாவின் உள்ள தொலைக்காட்சிச் சேவைகள் மீது குண்டுகள் வீசியது போல் சனல்-4இன் மீது குண்டு வீச வேண்டும்.
    • ஷவேந்திர சில்வாவும் கோத்தபாய ராஜபக்கசவும் போர்க் குற்றவாளிகள் என்றால் சகல நாடுகளிலும் உள்ள பாதுகாப்புச் செயலர்களும் தளபதிகளும் போர்க்குற்றவாளிகளே.
    • சனல்-4 நகைச்சுவைக் காட்சிகளைத் தருகிறது.
    சில சிங்களவர்கள் போர்க்குற்றம் நடக்கவில்லை என்பதை விசாரித்து நிருபிக்கவும் என்று சொன்கின்றனர். சிலர் சனல்-4 சொல்வது பொய் என்றால் அவர்கள் மீது வழக்குத் தொடுங்கள் என்று சவால் விடுக்கின்றனர்.

    சனல்-4 இனால் குற்றம் சாட்டப்படும் ஷவேந்திர சில்வா(The former General Officer Commanding (GOC) of 58 Division) சொல்பவை:
    • இலங்கைக்குக் களங்காம் ஏற்படுத்த எல்ரிரியினரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சனல்-4 இலங்கைக்கு அரச தந்திர முனையில் களங்கம் ஏற்படுத்த முயல்கிறது.
    • சனல்-4 இற்கு திராணி இருந்தால் தனது பேட்டியை முழுமையாக ஒளிபரப்பட்டும்.
    • எம்மீது குற்றம் சுமத்துபவர்கள் யாரென்பதை வெளியிடும்படி நான் சனல்-4இன் ஜோனார்தன் மில்லரிற்கு சவால் விடுகிறேன்.
    • முகமில்லாதவர்கள் சுமத்தும் குற்றச் சாடுகளுக்கு நாம் பொறூப்பல்ல. முடியுமானால் ஒரு பன்னாட்டு அமைப்பின் முன் அவர்கள் வந்து தாம் யார் என்பதைக் கூறட்டும்.
    திவியன என்னும் சிங்களப் பத்திரிகை இலங்கைப் படையில் இருந்து துர் நடத்தைக்காக விலக்கப்பட்டவர்களே சனல்-4 இற்கு சாட்சியமளித்ததாகக் கூறுகிறது. அவர்கள் பெயர்கள் இதுவரை வெளிவிடப்படாத நிலையில் திவயின எப்படிக் கண்டு பிடித்தது?

    லங்காபுவத்: சனல்-4 இன் பொறுப்பற்ற நடவடிக்கை. மக்களாட்சி மனப்பான்மை கொண்ட இலங்கை மக்களுக்கு எதிரான தனது மனப்பாங்கை சனல்-4 வெளிப்படுத்துகிறது.இந்தச் சின்னஞ்சிறு தீவு மற்ற அணு வல்லரசுகள் செய்ய முடியாத பயங்கரவாத ஒழிப்பைச் செய்ததை அந்த வெள்ளையர்களால் பொறுக்க முடியவில்லை.

    இலங்கை அரசின் கொள்கை.
    இலங்கை அரசைப் பொறுத்தவரை அவர்கள் செய்த போர் ஒரு பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்த அப்பாவி மக்களை விடுவிக்க செய்த "மனிதாபிமான நடவடிக்கை". இலங்கைப் படையினர் ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் மனித உரிமை சம்பந்தமான கையேட்டையும் வைத்துக் கொண்டே போர் புரிந்தனர். இலங்கையில் ஒரு அப்பாவிப் பொது மகன்கூடக் கொல்லப்படவில்லை.

    சிங்களவர்கள் இறந்ததாக மாரடிக்கும் நிருபாமா.
    சிங்களவர்களின் ஆருயிர் "நண்பியான" நிருபாமா மேனன் ராவ் அவர்கள்: சனல்-4 காணொளியின் படி போரின் கடைசி சில நாட்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளது. தெற்கிலும்(சிங்கள) மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்( மார்பில் அடித்து அழுகின்றரா?). நிருபாமா கூறியது: “They have to look at it carefully. As per the (Channel 4) video, there were human right violations during the last few days of the war they were fighting.” அவர் இலங்கை இதை கவனமாகப் பார்க்க வேண்டும் என்றுதான் சொல்கிறார். ராஜபக்ச சகோதரர்கள் மீதுள்ள பாசத்தால்.. நேசத்தால்...கரிசனையால....அக்கறையால் கூறுகிறார். இது பற்றி பன்னாட்டு மட்டத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று நிருபாமா ஏன் சொல்லவில்லை? வரவு குறைந்து விடுமா? சில இந்தியாவின் வால் பிடி ஊடகங்கள் இதை மிகைப்படுத்தியும் திரிபு படுத்தியும் ஏதோ இந்தியா தமிழர்களுக்கு சார்பாக குரல் கொடுப்பது போல் எழுதியிருக்கின்றன. அமெரிக்க தூதுவராக செல்லும் நிருபாமா இனி அங்கு சிங்கள நலன்களைக் கவனிப்பாரா? அவருக்கு மஹிந்த "விருந்து" கொடுக்கிறாரே! நன்றி மறப்பது நன்றன்று நிருபாமா.

    Featured post

    உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

    விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...