Saturday 4 June 2011

அல் கெய்தா முறைப்படி குண்டுக் கேக் தாயாரிக்கும் முறை


சுவையான குண்டுக் கேக் தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ள அல் கெய்தாவின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். அல் கெய்தா திவிர வாத இயக்கம் ஒரு புனிதப் போருக்கான இன்ஸ்பையர் என்னும் பெயரில்இணையச் சஞ்சிகை(jihadist magazine "Inspire") ஒன்றை நடாத்தி வருகிறது. இதில் புனிதப் போரைப் பற்றி அறியப் போனவர்களுக்கு ஒரு ஆச்சரியம். அங்கு சுவையான கப் கேக் செய்யும் முறை பற்றி விளக்கம் கொடுக்கப் பட்டிருந்தது.

இன்ஸ்பையர் இணையத்தில் குண்டுகள் செய்யும் முறை பற்றி விளக்கப் பட்டிருந்தது. இதன் ஆபத்தை உணர்ந்த பிரித்தானிய உளவுத் துறையினர் அந்த இணையத் தளத்தை ஊடுருவல் செய்து குண்டு செய்யும் முறையை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக கப் கேக் செய்யும் முறைபற்றிய தகவல்களைப் பதிவு செய்து விட்டனர்.

இணையவெளிப் போர் இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என்று இதிலிருந்து தெரிகிறது. இணையவெளிப் போர் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பைப் பார்க்கவும்:
இணையவெளிப் போர்

அமெரிக்காவில் இயங்கும் அல் கெய்தா இயக்கப் பிரிவுத் தலைவர் அடம் கதான் தங்கள் ஆதரவாளர்களுக்கு விடுத்த வேண்டு கோளில் தனிப்பட்ட முறையில் அவர்களை புனிதப் போரில் ஈடுபடும்படி கூறியுள்ளது.

பின் லாடனைக் கொல்லச் சென்ற அமெரிக்க சீல் படையினர் பின் லாடனின் மாளிகையில் இருந்து பெருமளவு கணனிப் பதிவுகளை எடுத்துச் சென்றனர். இது அல் கெய்தாவிற்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தும். நேற்று முன் தினம் பாக்கிஸ்த்தான் எல்லையில் இலியாஸ் கஷ்மீரி என்ற பெயருடைய அல் கெய்தாவின் முக்கிய தளபதியை அமெரிக்கப் படையினர் கொன்றனர். இலியாஸ் கஷ்மீரி பின் லாடனுக்குப் பின் அல் கெய்தாவிற்கு தலமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. பின் லாடன் கொலைக்குப் பின்னர் அல் கெய்தாவிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு இது என்று சொல்லப்படுகிறது.

மேற்குலகத்திற்கும் இசுலாமியப் போராளிகளுக்கும் இடையிலான போர் இனி இணையவெளியிலும் உக்கிரமடையும்.

கடாஃபி எப்படித் தாக்குப் பிடிக்கிறார்?



வீடு வாங்க முயல்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மூன்று அம்சங்கள் 1. location, 2. location, 3. location என்று சொல்வார்கள். லிபியாமீது மேற்கு நாடுகள் காட்டும் அக்கறைக்கும் லிபியாவில் உள்ள எண்ணெய் வளத்திலும் பார்க்க இதே மூன்று காரணங்கள்தான் காரணம். லிபியாவின் பூகோள அமைப்பு மிகவும் படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது. சூயஸ் கால்வாயும் எகிப்தும் மற்றும் மத்தியதரைக்கடல் பிராந்தியமும் மற்றும் அரபு நாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டுமாயின் லிபியா எதிரியின் கையில் இருக்கக்கூடாது என்று மேற்குலக படைத்துறை வல்லுனர்கள் கருதுகிறார்கள். 1941இல் சூயஸ் கால்வாய் உட்பட பெரிய பிரதேசத்தை இத்தாலியிடம் இருந்து கைப்பற்றுவதற்கான தாக்குதலை பிரித்தானியப் படைகள் லிபியாவில் இருந்தே மேற்கொண்டன.

கடாஃபியின் தவறு
ஒரு சிறந்த எண்ணெய் வளம் மிக்க நாடு லிபியா. ஆபிரிக்காவில் லிபியாதான் அதிக தனி நபர் வருமானம் கொண்ட நாடு. தனி நபர் வருமானம் என்பது தேசத்தின் மொத்த உற்பத்தியை மக்கள் தொகையால் வகுக்க வருவது. ஆனால் லிபிய மக்களின் வாழ்க்கைத் தரம் மற்ற எண்ணெய் வள நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்ததே. அங்கு தேச வருமானம் சரியான முறையில் பங்கிடப்படவுமில்லை; பாவிக்கப்படவுமில்லை. லிபிய மக்களின் கல்வித்தரம் மிகவும் பிந்தங்கியது. மற்ற அரபு நாடுகள் நகர நிர்மாணம் தெரு நிர்மாணம் என்பவற்றில் அதிக ஈடுபாடு காட்டிய போது லிபியா என்ன செய்தது என்ற கேள்வி உண்டு. லிபியக் கிராமப் புறங்கள் மிகவும் பின் தங்கியவை. லிபிய் அதிபர் மும்மர் கடாபியின் பொருளாதர நிர்வாகம் மோசமானது. தவறுகள் நிறைந்தது. இதுதான் லிபிய மக்களை துனிசியா எகிப்திய மக்களைப் போல் அரசுகு எதிராக கிளர்ந்தெழத் தூண்டியது.

சென்ற மாதம் மும்மர் கடாஃபியின் படைகளை அவருக்கெதிரான கிளர்ச்சிக்காரர்கள் நேட்டோப் படைகளின் உதவியுடன் மிசரட்டா நகரில் இருந்து விரட்டினர். சென்ற வாரம் கடாஃபியின் படையில் இருந்து ஐந்து ஜெனரல்கள் உட்பட எட்டு உயர் படைத்துறை அதிகாரிகள் தப்பி ஓடி இத்தாலியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இருந்தும் கடாஃபி தாக்குப் பிடிக்கிறார். கடாஃபிக்கு எதிரான போர் ஓர் தேக்க நிலையிலேயே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நேட்டோப் படையினர் கடாஃபியின் படைகளை அழித்தொழிப்பதிலும் பார்க்க அவர்களைச் சரணடையச் செய்வதையே தங்கள் உபாயமாகக் கொண்டுள்ளனர்.

கடாஃபியின் தாக்குப் பிடித்தலுக்கு மேற்கு நாட்டு படைத்துறை ஆயவாளர்கள் கூறும் நொண்டிச் சாட்டு "எமது படைக்கு இந்தப் போர் ஒரு மனிதாபிமான நடவடிக்கை. கடாஃபியின் படைக்கு இது வாழ்வா சாவா என்ற பிரச்சனை. இதனால் அவர்கள் அதிக முனைப்புடன் போராடுகிறார்கள்". கடாஃபி மீது பன்னாட்டு நீதிமன்றில் போர்க்குற்றம் சுமத்தி கைது உத்தரவு பிறப்பித்தமை அவருக்கு போரைத் தவிர வேறு தெரிவு இல்லை என்று ஆக்கப்பட்டுவிட்டது.

கடாஃபி பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு எதிரான புரட்சிச் சதிக்கு எதிராக சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து விட்டார். கடாபியின் படையில் இருந்து விலகி பலர் கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்தாலும் இந்த விலகல்கள் கடாஃபியின் படைபலத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை. கடாபியின் எதிரி நாடுகள் ஆட்சி முறை மாற்றமா? ஆட்சியாளர் மாற்றமா? மக்களைப் பாதுகாப்பதா? என்பதில் குழம்பி நிற்கின்றனர். இந்தக் குழப்பம் கடாஃபிக்கு சாதகமாக அமைந்தது.

நேட்டோப்படைகள் பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்க்க விரும்புவதால் தங்கள் தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருப்பதாகக் கூறுகின்றன.

கடாஃபியின் தாக்குப் பிடித்தலின் இரகசியம் அவர் அழுத்தங்களுக்கு மசியாதவர், அழுத்தங்களை எதிர் கொண்ட அனுபவம் நிறைய உடையவர். தன்னை கொல்வதற்கு எதிரான சதியை எப்படிக் கையாள்வது என்ற அனுபவம் நிறைய உள்ளவர்.

Thursday 2 June 2011

வல்லரசு நாடுகளின் இணையவெளிப் போர்


இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமெரிக்கப் படை பலத்தை ஆய்வு செய்த சீனப் படைத் துறை வல்லுனர்கள் அமெரிக்கப் படைபலம் இரு அம்சங்களில் பெரிதும் தங்கியுள்ளதை அவதானித்தனர். அமெரிக்கா தனது உலகெங்கும் உள்ள தனது விமானம் தாங்கி கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், நீர் மூழ்கிக்கப்பல்கள், உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கும் அவற்றிற்கிடையான தொடர்பாடல்களுக்கும் செய்மதிகளிலும் இணையவெளியிலும் பெரிதும் தங்கி இருக்கின்றன.

போர் நடவடிக்கையாகக் கருதும் அமெரிக்கா
தனது நாட்டு கணனிக் கட்டமைப்புக்கள் மீது மேற்கொள்ளப் படும் ஊடுருவல் நடவடிக்கைகளை அமெரிக்காமீது தொடுத்த போராக கருதப் போவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைத் தலைமையகமான பெண்டகன் 2011 ஜூன் முதலாம திகதி அறிவித்தது. இந்த அறிவிப்புப் பாரதூரமானது. எந்த ஒரு நாட்டில் இருந்தாவது அமெரிக்க கணனிக் கட்டமைப்பின் மீது ஊடுருவல்கள் மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தலாம்.

உலகை அதிர வைத்த சீன விஞ்ஞானிகள்
2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் திகதி அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, தாய்வான் ஆகியவை உடபட பல நாடுகளை அதிரவைத்தனர் சீன விஞ்ஞானிகள். சீன விஞ்ஞானிகள் தரையில் இருந்து செலுத்திய ஒரு ஏவுகணையினால் தமது செய்மதி ஒன்றை அழித்தனர். இது அமெரிக்காவின் பலம் தங்கி இருக்கும் இரண்டில் ஒன்றைப் பலவீனமாக்கியது.

இணையவெளி ஊடுருவல்கள்
கணனித் துறையில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் இணையவெளியூடாக மற்றவர்களின் கணனிகளை ஊடுருவது வழக்கம். இது ஒரு திருட்டுத் தொழிலாகவும் மாறியது. சிலர் மற்ற நாட்டுப் படைத் துறையினரின் கணனிகளை ஊடுருவதும் உண்டு. உலகெங்கும் நடக்கும் கணனி ஊடுருவல்களில் காற்பங்கு சீனாவில் இருந்து மேற் கொள்ளப் படுகின்றன என்கிறார்கள் இணையவெளி வல்லுனர்கள். இவற்றில் பெரும் பகுதி சீனப் படைத்துறையுடன் சம்பந்தப்பட்டவை. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் திகதி அமெரிக்கப் படைத்துறைத் தலைமையகமான பெண்டகனின் கணனிகளை சீனாவில் இருந்து ஊடுருவியமை கண்டறியப்பட்டது. ஆனால் இவை சீனப் படைத்துறையில் இருந்து மேற் கொள்ளப்பட்டதா என்பதை பெண்டகனால் உறுதி செய்ய முடியவில்லை.

இணையவெளிப் போராளிகள்
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது.

அமெரிக்காவை உலுக்கிய கூகுளின் அறிவிப்பு
2011 ஜூன் 2-ம் திகதி சீனாவில் இருந்து அமெரிக்காவில் உள்ளவர்களின் பல மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டதாக கூகிள் அறிவித்தது அமெரிக்க அரசை உலுக்கியுள்ளது. இது அமெரிக்க அரசுச் செயலர் கிலரி கிளிண்டனையே களத்தில் இறக்கியது. அவர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். மின்னஞ்சல்கள் ஊடுருவப்படுவது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் கூகிளின் அறிவிப்பை அமெரிக்க அரசு பாரதூரமானதாக எடுத்துக் கொண்டமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இந்த ஊடுருவல் சீனாவின் படைத்துறைப் பயிற்ச்சி மையங்கள் உள்ள நகரில் இருந்து மேற்கொள்ளப்பட்டமை; மற்றது அமெரிக்கப் அரச அதிகாரிகளின் மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டுள்ளன. சில வெள்ளை மாளிகை அதிகாரிகளின் மின்னஞ்சல்களும் குறிவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. சீனாவில் கூகிளை போன்று போலியான ஒரு வலைத் தளத்தை உருவாக்கி அதன் மூலம் பலரது மின்னஞ்சல் முகவரிகளும் கடவுச்சொற்களும் திருடப் பட்டுள்ளன. இப்படிச் செய்வது ஒரு நிறுவனத்தால்தான் முடியும். தனிப்பட்ட ஒருவாரால் செய்ய முடியாது.



மரபு வழிப் போருக்கு இணையாக இணையவெளிப்போர்.
இணையவெளிப் போரில் ஒரு வளர்ச்சியடைந்த நாட்டின் பல குடிசார் நடவடிக்கைகளை முடக்க முடியும். இதனால் வங்கி நடவடிக்கைகள் பொருட்கள் விநியோகம், மருத்துவ சேவை போக்குவரத்து போன்ற அத்தியாவசியப் பணிகளை முடக்க முடியும். அத்துடன் படைத்துறையின் தொடர்பாடல்கள் வழங்கல் சேவைகளை முடக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலக இலகுவான உளவாடலுக்கு இணையவெளி மூலம் செய்யலாம். இதனால் பல நாடுகள் இப்போது மரபு வழிப் போருக்கு இணையாக இணையவெளிப் போரையும் கருதுகின்றன. சீனாதான் இந்த இணையவெளிப் போரில் முன்னோடி என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். 31 மே 2011இலன்று பிரித்தானிய தான் இணையவெளி படைபலத்தை தான் 650மில்லியன் பவுண்கள் செலவில் பல ஆயிரம் இணையவெளி வல்லுனர்களை படைத்துறையில் இணைத்து அதிகரித்துக் கொள்வதாக அறிவித்தது. 2003-ம் ஆண்டே வட கொரியா தனது இணயப் போராளிகள் பலரை வெளி நாடுகளுக்கு அனுப்பி நவீன இணையவெளி ஊடுருவல் தொடர்பாகப் பயிற்றுவித்தது. ஈரானின் அணுக்குண்டுத் திட்டத்திற்கு எதிராக பெண்டகன் ஒரு சிறப்பு வைரசை உருவாக்கி திட்டதில் பின்னடைவை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் புதிய திட்டம்.
அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுக்களை செயற்பட வைக்க முடியும். இந்த வைரசுக்கள் வெறும் படைத்துறையை மட்டும் இலக்கு வைக்குமா அல்லது மற்ற சேவைகளையும் குறிவைக்குமா என்று வெளியிடப்படவில்லை.

கொஞ்சம் மாத்தி யோசியுங்களப்பா.
உலகம் பொருளாதாரத்தில் மோசமாகிக் கொண்டு போகிறது. உணவு உற்பத்திப் பிரச்சனை, எரி பொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சனை என்று எத்தனை பிரச்சனைகள்? இவற்றைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்களா? எல்லாவற்றையும் மேலுள்ள மாதிரி ஆழ சிந்தித்து செய்பவர்கள் இப்படி எல்லம் ஆளுக்கு அடித்துக் கொள்ளாமல் இருப்பது எப்படி என்று சிந்திக்க மாட்டார்களா?

நகைச்சுவை: புதிய கருவிகளும் புதிய விதிகளும்


எமக்குத் தேவையில்லாத கருவிகளை எம்மீது திணித்து எம பணத்தைப் பிடுங்குவதுதான் சந்தைப்படுத்துவர்களின் தந்திரம். இந்தப் பொருட்களைப்பற்றி புதிய விதிகளை உருவாக்கியுள்ளார்கள் சில நகைச்சுவையாளர்கள்:

Slbrink’s Law: “The cheaper the printer, the more expensive the ink cartridge.”
அச்சிடுகருவிகள் எந்த அளவிற்கு மலிவானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதற்கான மைகளின் விலைகள் அதிகமாக இருக்கும்.

MichaeLVosburg’s law: “Any gadget’s ease of use is inversely proportional to the number of engineers who worked on it.”
ஒரு கருவியின் பயன்படுத்துதலின் இலகு தன்னமை அதில் ஈடுபட்ட பொறியிலாளர்களின் (எஞ்சினியர்களின்) எண்ணிக்கைக்கு நேர் மாறாக இருக்கும்.

Invisible_Daddy’s law: “Any cool feature you try to show your spouse won’t work, discrediting your enthusiasm for your new purchase.”
நீங்கள் வாங்கிய புதிய கருவியின் சிறப்பம்சங்களை நீங்கள் உங்கள் மனைவி/கணவனுக்கு காட்டும் போது உங்களை அக்கருவியை வாங்கத் தூண்டிய ஆவலை அது பாதிக்கும்.

Pogue’s Latest Law: “The more convenient a device is, the worse the audio/visual quality.”
ஒரு கருவி எவ்வளவு இலகுவானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதன் ஒளி ஒலி தரம் மோசமானதாக இருக்கும்.


Murphy's Laws:
  • A hardware failure will cause system software to crash, and the customer engineer will blame the programmer.
  • A system software crash will cause hardware to act strangely and the programmers will blame the customer engineer.
  • Undetectable errors are infinite in variety, in contrast to detectable errors, which by definition are limited.
  • A failure in a device will never appear until it has passed final inspection.
  • Logic is a systematic method of coming to the wrong conclusion with confidence.

Wednesday 1 June 2011

கைப்பேசிகளால் மூளைக் கட்டி ஆபத்து ஏற்படலாம்.


கைப்பேசிகளில் இருந்து ஒரு வகை கதிர் வீச்சு வருகிறது. இந்த radiation known as non-ionising. இவை வலுக்குறைந்த மைக்ரோ அடுப்புக்களில் இருந்து வரும் கதிர் வீச்சுப் போன்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இணைந்து நடாத்தி ஆய்வின் படி கைப்பேசிகளில் இருந்து வரும் கதிர் வீச்சு மூளைக் கட்டி என்னும் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்துக் கொண்டது.

கைப்பேசிகளின் கதிர்வீச்சுக்களால் ஏற்படும் ஆபத்தை 'carcinogenic hazard' என்று விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

Tuesday 31 May 2011

தென்னிந்திய விரோதமும் இலங்கைப் பிரச்சனையும்.?


2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானம் வந்த போது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றியது. அப்படிச் செய்ய வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு இருந்தது. இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான போரையே இலங்கை செய்து முடித்தது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் கருத்துப் படி "தமிழன் ஆளப்பட வேண்டிய சூத்திரன். அவன் ஆளக்கூடாது." என்பதாகும். இதற்காக தமிழர்களின் சொந்த அரசுக்கான போராட்டத்தை இலங்கையும் இந்தியாவும் இணைந்து அடக்கின.

போர் வெற்றியின் பங்கிலாபம்.
போருக்குப் பிந்திய அபிவிருத்தியில் இலங்கை மக்களைச் சுரண்டுவது யார் என்ற போட்டியின் விளைவுதான் பன்னாட்டு அரங்கில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அக்கறையை பல நாடுகளிடை ஏற்படுத்தியது. போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் மேற்குலக நாடுகள் இலங்கையால் ஒதுக்கப்பட்டன. இந்தியாவை இலங்கை கவனமாகக் கையாண்டது. இந்தியாவிற்கு வாக்களித்தபடி இலங்கை நடக்காமல் இழுத்தடித்து வந்தது. ஆனால் சீனாவின் திட்டங்கள் இலங்கையில் துரிதமாக நடந்தேறி வருகின்றன. இலங்கை இந்தியாவிற்கு வாக்களித்தபடி இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் இழுத்தடித்து வருகிறது.

ஐநாவின் நிபுணர்கள் குழு அறிக்கை.
இலங்கையில் நடந்த போரில் இழைக்கப் பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் நியமித்த நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து இலங்கை தீயை மிதித்தவன் போல் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு சரியாகக் கைகொடுக்கக் கூடிய ஒரு நாடு ஐநா பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் கொண்ட சீனாதான். ஆனால் சீனாவிடம் போனால் இந்தியா கோபித்துக் கொள்ளும் என்று இலங்கை முதலில் இந்தியாவிடம் ஓடிச் சென்றது. பாவம் இந்தியா. இந்தியாவின் ஆளும் கட்சி அப்போது தமிழ்நாட்டுத் தேர்தலில் கடுமையாகத் தண்டிக்கப்பட்டது. இலங்கை எதிர்பார்த்த உதவியை இந்தியாவால் செய்ய முடியவில்லை. இந்தியா தனது சொந்தத் தேவைகளை இதைச் சாக்காக வைத்துச் சாதிக்க முயல்கிறது. வெளியில் போலியாக இலங்கை இனப் பிரச்சனை தீர்க்கப் படவேண்டு மென்று சொன்னது.

இந்திய ஆளும் வர்க்கமும் தமிழர்களும்
இந்தியாவை ஆளும் குடும்பம் மலையாளிகளின் ஆலோசனைப் படி செயற்படுகிறது. இந்திய மத்திய அரசின் நிர்வாக சேவையில் மலையாளிகளின் ஆதிக்கம் நிலவுகிறது. வட இந்தியர்களுக்கு தென் இந்தியர்களைப் பிடிக்காது. அப்படி இருக்கையில் பல வட இந்திய நடுநிலை ஆய்வாளர்கள் இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தவறிழைத்து விட்டதாக எழுதி வருகின்றனர். இவற்றிற்கு தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள் நல்ல விளம்பரம் கொடுத்து நிற்கின்றன. இந்திய ஆட்சியில் மலையாளிகளின் ஆதிக்கத்தைப் பிடிக்காத பல வட இந்தியர்கள் இப்போது தமிழர் பிரச்சனையில் இந்தியா விட்ட தவறை தமக்கான ஆயுதமகப் பாவிக்கத் தொடங்கி விட்டனர். இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு தடுமாற்றம் காணப்படுகிறது. ஆனால் இது தமிழர்களுக்கு சாதகமாக அமையப் போவதில்லை. சாத்கமாக அமைய தமிழ்நாட்டில் உள்ள தமிழ் விரோதப் பார்ப்பன சக்திகள் விடப்போவதில்லை.

மலையாளிகளின் தமிழின விரோதப் போக்கு
இந்தியாவில் மலையாளிகளுக்கு போட்டியாக இருப்பவர்கள் தமிழர்களே. இதனால் மலையாள தமிழ் கசப்புனர்வு உண்டு. ஆனால் மலையாளிகள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதற்கான காரணம் இது மட்டுமல்ல. தமிழ்நாட்டில் உள்ள தமிழன் அடிமையாக்கப்படவேண்டியவன் எனக் கருதும் சோ, சுப்பிரமணியசுவாமி, இந்து ராம் போன்ற பார்ப்பன சக்திகள் மலையாளப் பார்ப்பனர்களை தமிழர்களின் விரோதிகளாக்கிவிட்டன. இலங்கையில் தமிழர்களுக்கு என ஓர் அரசு உருவானால் அது பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று இந்த சக்திகள் கருதிகின்றன. இதனால் அவர்கள் எப்போதும் இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் அரசு மட்டுமல்ல அதிக அதிகாரம் கொண்ட ஒரு கட்டமைப்புக் கூட உருவாகக் கூடாது என்று இந்த பார்ப்பனக் கூட்டம் கருதுகின்றன. இந்தப் பார்பன சக்திகள் மலையாளப் பார்ப்பனர்களைப் பாவித்து மலையாளிகளை எளிதாக இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட்டன. இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானதாக அமைந்தது. இந்திய மைய அரசில் உள்ள பார்ப்பன மலையாள சக்திகள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூடக் கருத்தில் கொள்ளாது செயற்பட்டன. இந்த உண்மையை இன்னும் வட இந்தியர்கள் உணரவில்லை. இலங்கையில் சீன அதிகரிக்கும் ஆதிக்கம் இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக அமைந்து கொண்டிருக்கிறது. இதையும் வட இந்தியர்கள் சரியாகப் புரிந்து கொண்டு செய்ற்படத் தொடங்கவில்லை. இதை உணரும் போது அவர்களுக்கு தென் இந்தியர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கும். ஐநா மனித உரிமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் சீனா இலங்கைக்கு தனது பலத்த ஆதரவைத் தெரிவித்து உரையாற்றிய வேளையில் இந்தியா மௌனமாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. 2009இல் ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா இப்போது மௌனமாக இருப்பது. இரண்டில் ஒன்று தவறு எனச் சுட்டிக்க்காட்டுகிறது.

Monday 30 May 2011

As long as you are in my heart


I hear the melody you sing
Even from thousands miles away
I can feel your heart-beat
As long as I am in it

As long as you are in my heart
My heart beat is the sweetest music
Every molecules of my heart
Sing your name

Sunday 29 May 2011

வட ஆபிரிக்கா - பிரித்தானியாவின் இரட்டை வேடம் அம்பலம்


லிபிய மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக போராடும் மக்களுக்க்கு ஆதரவாக பிரித்தானியாவும் பிரான்சும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையைக் கூட்டி அங்கு லிபியாவில் விமானங்கள் பறப்பதைத் தடை செய்வது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதைச் சாக்காக வைத்துக் கொண்டு லிபியாவில் உள்ள கட்டங்கள் நேட்டோப் படைகள் மீது குண்டுகளை வீசித் தரை மட்டமாக்கி வருகின்றன. லிபியத் தலைவர் மும்மர் கடாபி இப்போது குண்டு வீச்சில் இருந்து தப்ப மருத்துவ மனைக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்.

வட ஆபிரிக்காவில் அநியாயம் பிடித்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் கிளர்ந்து எழுந்து மல்லிகைப் புரட்சி செய்து துனிசியாவிலும் எகிப்திலும் சர்வாதிகாரிகள் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டனர். இந்த மக்கள் எழுச்சியை ஆபிரிக்க வசந்தம் என்று மேற்குலகப் பத்திரிகைகள் பாராட்டின.

பாஹ்ரெய்னில் பல இலட்சக் கணக்கான மக்கள் தம்மை ஆளும் மன்னர் அல் கலிபாவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இவர்களுக்கு எதிராக மன்னர் தனது படைகளை ஏவி விட்டதுடன் பாஹ்ரெய்ன் மன்னருக்கு ஆதரவாக சவுதி அரேபியப் படைகளும் கிளர்ச்சி செய்யும் பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தின. சவுதி அரேபியாவிலும் மன்னராட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அங்கும் படைகள் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டன. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சவுதி அரேபியாவின் படைகளுக்கு பிரித்தானியா பயிற்ச்சியும் ஆயுதங்களும் வழங்குவது இப்போது அம்பலமாகியுள்ளது.

பாஹ்ரெயின் ஒரு மேற்குலக சார்பு நாடு. அங்கு அமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த படைத்தளம் உள்ளது. அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு அங்கு நிலை கொண்டுள்ளது. 1948இல் இருந்தே அமெரிக்காவின் வளைகுடா கடற்படைத் தலைமையகமாக இது இருந்து வருகிறது. பாரசிகக்குடா, ஓமான் வளைகுடா, செங்கடல், இந்து மாக்கடலின் சில பகுதிகள் போன்றவற்றை அமெரிக்கக் கடற்படை இங்கிருந்தே வழிநடத்துகிறது. இதனால் பாஹ்ரெய்னில் மேற்குல்க சார்பு அரசு ஒன்று இருப்பது மிக முக்கியம். இதனால் நீதி லிபியாவிற்கு வேறு பாஹ்ரெய்னிற்கு வேறு.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...