Saturday 7 May 2011

ஒரு COPY இருக்குது PASTE இருக்குது கவிதை எழுது கவிதை எழுது


நண்பனே களவுக்கில்லை கட்டுப்பாடு
ஒரு COPY இருக்குது PASTE இருக்குது
கவிதை எழுது கவிதை எழுது
எத்தனை PROFILE கண்டோம்
எத்தனை எத்தனை WEBSITEகண்டோம்
அத்தனையும் சுட்டேடுத்து
POSTING போடு POSTING போடு
BIN LADEN க்குண்டு PEN திருடனுக்கில்லை
கட்டுப்பாடு COPY போடு
COPY போடு COPY போடு

இது மொக்கைப் பாட்டு நீ சக்கை போடு
இது களவாடும் உங்கள் வாழ்க்கைப்பாட்டு
வான் கோழியாடும் ஆட்டம் ஆடு
மொக்கை போடு மொக்கை போடு
மொக்கைக்கில்லைத் தட்டுப்பாடு

நீ சுடும்பாட்டு உன்னால் பெரும்பாடு
கற்பனை யாருக்கு வேண்டும் கவிதைபாட
கணனி ஒன்று வேண்டும் சுட்டுப் போட
சுட்டுப் போடு சுட்டுப் போடு
துப்பாக்கிக்குண்டு மௌஸிற்கில்லை
கட்டுப்பாடு... நீ சுட்டுப் போடு
நீ சுட்டுப் போடு நீ சுட்டுப் போடு

(வைரமுத்து ஐயா/ரகுமான் ஐயா மன்னித்துக் கொள்ளுங்கள்)

Friday 6 May 2011

ஒபாமா - ஒசாமா நகைச்சுவைப் படங்கள்


அல் கெய்தா இயக்கத்தின் கருத்துப்படி இசுலாமிய மதத்திற்காக உயிரைக் கொடுப்பவர்கள் சொர்க்கம் போவார்கள் அங்கு அவர்களுக்கு "சேவை" செய்ய பல கன்னிப் பெண்கள் காத்திருப்பார்கள். அதுக்காக இப்படியா ஒரு மனிசனை வாங்கு வாங்கென்று வாங்குவது...????????????



பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் இருந்து இறப்புச் சாட்சிப்பத்திரத்திற்கு பிரச்சனை மாறியுள்ளது.

ஒசாமாவைக் கோட்டை விட்டார் புஷ். அதற்கு இப்படி:

பின் லாடனைக் கடலில் வீசியதால் வந்த வினை:



ஓசாமாவின் Facebook status இப்படி இருந்ததாம்.







இன்னொரு பேஸ்புக் நகைச்சுவை:



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்குப் பெரும் தலையிடியக் கொடுத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரது பிறப்புப் சாட்சிப் பத்திரம். அவரது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தை பகிரங்கப்படுத்துமாறு அவரது அரசியல் விரோதிகள் நீண்ட நட்களாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர் அமெரிக்கவில் பிறக்கவில்லை என்பது அவர்களது வாதம். இரு வாரங்களுக்கு முன்னர் ஒபாமா தனது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தை பகிரங்கப் படுத்தினார். அவரது மற்றத் தலையிட் ஒசாமா பின் லாடன் அவரை சில மே 1இம் திகதி போட்டுத்தள்ளினார் ஒபாமா. இவற்றை ஒட்டிப் பல நகைச்சுவைகள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


நல்லாக் கேட்கிறாங்களய்ய டிரெய்லு.....

பிரித்தானிய இளவரசர் திருமணத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒபாமா திருமணத்திற்குப் போகாததின் இரகசியம் இப்போது வெளிவந்து விட்டது. அவர் அங்கு பின் லாடனைப் போட்டுத்தள்ளும் திட்டத்தில் பிசி...



பிரித்தானிய இளவரசரின் திருமணத் தோழிச் சிறுமி வெள்ளை மாளிகையில்:

ஹிலரி இப்போது சொல்கிறார் தான் இருமலுக்குத் தான் வாய் பொத்தினேன் என்று. சண்டையைப் பார்த்துப் பயந்து அல்ல. இந்த ரிஸ்க் எல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி.


பாவம் பராக் ஒபாமா அவரே கொன்பியூஸ் ஆயிட்டாரு.
ரிலக்ஸாய் ஒரு கணனி விளையாட்டு


பின் லாடனை வெற்றி கொண்ட வீரனே! வெள்ளை மாளிகை இனி உன் நிரந்தர வசிப்பிடம் என்று கலைஞர் சொல்வாரோ?


"The Republicans are so happy about bin Laden they've granted President Obama full citizenship." —David Letterman



"Apparently, members of Al Qaeda are online slamming the U.S. I don't understand why they're so upset. Everyone in Al Qaeda just got a promotion." -—Craig Ferguson



ஒபாமாவின் குடும்பம் ஒரு இசுலாமிய மதப் பின்னணி கொண்டது என்பதை விட்டுவைப்பதில்லை.
Q. What do you call the most powerful Muslim in the world?
A. The President of the United States.

"Osama bin Laden's death has been in the news all day. Leftist stations are going, 'President Obama saves the world.' Stations on the right are going, 'Obama kills fellow Muslim.'" —Craig Ferguson.

Thursday 5 May 2011

பின் லாடனின் மகள்: தந்தையைக் கைது செய்த பின் கொன்றனர் என்கிறார்.


ஒசாமா பின் லாடனின் 12 வயது மகள் பின் லாடன் இருந்த அறையில் தந்தையுடன் இருந்தார். அவர் தந்தை மீதான தாக்குதலின் போது காயத்துடன் தப்பியவர். அவர் தனது தந்தையை அமெரிக்க சீல் படையினர் முதலில் கைது செய்து அதன் பின் சுட்டுக் கொன்று விட்டு அவரது உடலை இழுத்துச் சென்று ஹெலிக்கொப்டரில் ஏற்றிச் சென்றனர் என்கிறார்.

குத்துக் கரணம் அடித்த அமெரிக்கா.
அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுத் தலைவர் ஜோன் பிரெமன் முதலில் தெரிவித்தவை:
1. பின் லாடன் தன் 27வயது மனைவி அமல் அல் சதாவை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்.
2. பின் லாடன் தன் மனைவியின் பின் இருந்து ஏகே-47ஆல் சுட்டார்.
3. அவரது மனைவியைச் சுட்டுக் கொன்றபின் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தோம்.
இது அமெரிக்கா திங்கட் கிழமை வெளிவிட்ட அறிக்கை.


பாக்கிஸ்த்தானில் ஒரு மருத்துவமனையில் பின் லாடனின் இளைய மனைவியும் மகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வேறு விதமாக இருந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா தனது கருத்தை மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் கூற்றில் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது:
1. பின் லாடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை.
2. அவர் மனைவியை மனிதக் கேடயமாகப் பாவிக்கவில்லை.
3. அவரது மனைவி தாக்குதல் படையினரை நோக்கி வந்த போது அவர் தற்கொலை உள் அங்கி அணிந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் அவரது காலில் சுடப்பட்டது.
வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்ணியே மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஜே கார்ணி பின் லாடனை உயிருடன் பிடிக்கும் உத்தரவே தாக்குதல் அணிக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்க சிஐஏ இன் இயக்குனர் லியோன் பனெட்டா தொலைக்காட்சிச் சேவை ஒன்றிற்கு வழங்கிய தகவலில் கூறியவை:
அமெரிகப் சீல் பிரிவு -6 படையினர் பின் லாடன் இருந்த மாளிகைக்குள் இறங்கியவுடனேயே அங்கு எதிர்தாக்குதல் நடந்தது. முதலில் அமெரிக்கப் படியினர் எதிர் கொண்டது பின் லாடனின் நம்பிக்கைக்குரிய தகவல் பரிமாற்றக் காரரின் தம்பி. அவர் தனது ஆயுதத்தை எடுத்துத் தாக்குதல் செய்ய முற்பட்டவேளை கொல்லப்பட்டார். பின்னர் தாக்குதல் அணியினர் பின் லாடன் இருந்த மாடிக்கு ஏறிச் சென்றபோது அவரது மகனை எதிர் கொண்டனர். அவரும் கொல்லப்பட்டார். பின் லாடனின் படுக்கை அறைக்குச் சென்றபோது ஏகே-47 துப்பாக்கியும் மகரோவ் பிஸ்டலும் பின் லாடனின் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தன. உடனே அவரைக் கொன்றதுடன் அவருடன் இருந்த அவரது மனைவியும் சுடப்பட்டார்.

பின் லாடனின் அறையில் இருந்து 100 thumb drives, DVDs and computer disks, along with 10 computer hard drives and 5 computers. ஆகியவையும் எடுக்கப்பட்டன.

போர் மூடுபனிக்குள்(fog of war) மறையும் அமெரிக்கா
ஏன் இத்தனை முரண்பட்ட தகவல்கள் வெளிவிடப்படுகின்றன என்பதே படைத்துறை ஆய்வாளர்கள் முன் வைக்கும் கேள்வி. இதற்கு அமெரிக்க அரசு தன்னைப் பாது காக்க முன்வைக்கும் பதம் போர் மூடுபனி(fog of war). போர் முடுபனி என்ற பதம் போரில் ஈடுபட்டவருக்கு போரின் போது நடந்தவை பற்றி சரியாக நினைவு கூராமுடியாமல் இருக்கும் என்று பொருள்படும். தாக்குதல் அணியில் 12 பேரின் தலைக்கவசத்தில் காணொளிப்பதிவு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவை நடப்பவற்றைப் பதிவு செய்து நேரடி ஒளிபரப்பை சிஐஏக்கு வழங்கிக் கொண்டிருந்தன. அந்த ஒளிப்பதிவுகளுக்கும் போர் மூடுபனியா?

பின் லாடனை மயக்கச் செய்வதற்காக அவர்மீது மயக்க வைக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?

தொடர்புடைய பதிவுகள்:
பின் லாடனின் இருப்பிடம் அறிந்த விபரமும் தாக்குதல் விபரமும்

பின் லாடனைக் கொல்லவில்லை. உயிருடன் பிடித்தனராம்

பின் லாடன் கொல்லப்படுவதை நேரடி ஒளிபரப்பில் பார்தார் பராக் ஒபாமா

Wednesday 4 May 2011

பின் லாடனின் இருப்பிடம் அறிந்த விபரமும் தாக்குதல் விபரமும்


தாக்குதலுக்குப் பவித்த ஹெலிக்கொப்டர்கள்.

அமெரிக்க ஆட்சியாளர்களை அதிர வைத்த2001இல் நடந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து பின் லாடனைத் தேடுவது அதி தீவிரப்படுத்தப்பட்டது. 2002இல் உலகெங்கும் பல அல் கெய்டா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு கியூபாத் தீவின் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ள குவாண்டமானோக் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர். 2001-09-11இற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பின் லாடனைப் பற்றியும் அவரது உலகெங்கும் உள்ள ஆதரவாளர்கள் பற்றியும் தகவல்களைத் திரட்டத் தொடங்கிவிட்டது.

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா பின் லாடனைப் பிடிக்க பல மில்லியன்கள் செலவில் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் செய்து பல கருவிகளையும் உருவாக்கியது. பின் லாடன் அவற்றில் இருந்து தப்புவதற்காக தன் இருப்பிடத்தில் எந்த வித இலத்திரன் கருவிகளோ உபகரணங்களோ வைத்திருப்பதில்லை. அவரிடம் கைக் கடிகாரம் கூட இருப்பதில்லை. ஆப்கானிஸ்தானில் அல்லது பாக்கிஸ்தானில் என்கோ ஒரு காட்டுக்குள் ஒரு குகைக்குள் அவர் ஒளிந்திருப்பதாகவே நம்பப்பட்டது.

குவாண்டமானோ ஏமாற்றம்.
குவாண்டமானோக் கைதிகளிடம் இருந்து பின் லாடனின் இருப்பிடத்தைப் பற்றி எந்தத் தகவல்களும் பெற முடியாமல் போனது அமெரிக்காவிற்குப் பெரும் ஏமாற்றம். அவர்கள் எவரும் உண்மையில் பின் லாடனின் இருப்பிடம் அறிந்திருக்கவில்லை.


மர்ம தகவல் பரிமாற்றக்காரர்.
அமெரிக்கா பல அல் கெய்தா ஆதரவாளர்களை கிழக்கு ஐரோப்பாவில் சிறைவைத்துள்ளது. அங்குள்ள கைதிகளிடம் இருந்து அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பெற்றுக் கொண்ட ஒரே ஒரு பெறுமதி மிக்க தகவல் பின் லாடனுக்கு ஒரு நம்பிக்கை வாய்ந்த தகவல் பரிமாற்றக்காரர் இருக்கிறார் என்பதே. பின் லாடன் தனது இரட்ண்டால் நிலை சகாக்களுடன் இந்த தகவல் பரிமாற்றக்காரர் ஊடாகத்தான் தொடர்புகளை வைத்திருந்தார். அவரின் உண்மையான பெயரைக் கூட அவர்களால் பெறமுடியவில்லை. இந்நிலையில் அமெரிக்கா குவாண்டமானோ சிறைச்சாலையிலும் மற்றும் கிழ்க்கு ஐரோப்பியச் சிறைச் சாலைகளிலும் கைக்கொள்ளும் சித்திரவதை விசாரணை முறை பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. அங்கு பாவிக்கப்படும் நீரடிக்கும்பலகைச் சித்திரவதை முறையும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. இவை எல்லாம் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இற்கு பலத்த ஏமாற்றத்தையே அழித்தது. கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள கைதிகளில் முக்கியமானவர்கள் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட காலித் ஷேக் முகமதுவும் அல் கெய்டாவின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் அபு பராஜ் அல்-லிபியும். அவர்கள் தங்களுக்கு தகவல் பரிமாற்றக்காரர் பற்றி ஏதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். இப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டது. 2005இல் பின் லாடன் இருப்பிடம் அறிவது என்பது ஒரு முடியாத காரியம் என்று ஆகிவிட்டது. விளைவு "ஆப்பரேஷன் கனன்போல்" இதில் பல சிஐஏ தலைகள் உருண்டன. பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் புதிய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர்.

தேசிய பாதுகாப்பு முகவரகம்.
தேசிய பாதுகாப்பு முகவரகம் என்பது உருவாக்கப் பட்டு அது நவீன கருவிகளைக் கொண்டு பல தொலபேசிதொடர்புகளையும் மின்னஞ்சன்களையும் களவாகப் பதிவு செய்தது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. பாக்கிஸ்த்தானில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் இருந்து மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் குடும்பப் பெயரை சிஐஏ அறிந்து கொண்டது. இது நடந்தது 2007இல். பின்னர் அதிக உளவாளிகள் பாக்கிஸ்த்தானிலும் ஆப்க்கானிஸ்த்தானிலும் களமிறக்கப்பட்டனர்.ஆனால் அவரது இருப்பிடம் பற்றிய தகவல் கிடைக்கப்படவில்லை. அவருக்கு ஒரு சகோதரர் இருப்பதாகவும் அறியப்பட்டது. அவரது இருப்பிடமும் அறிய முடியவில்லை. அல் கெய்டாவின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் அபு பராஜ் அல்-லிபியை மரபு வழிச் சித்திரவதை விசாரணை செய்ததன் மூலம் மர்ம தகவல்பரிமாற்றக் காரரின் பெயர் பெறப்பட்டது. அது முழுப்பெயர் அல்ல. தொடர்ந்த பல நடவடிக்கைகளினால் அவரது முழுப்பெயரும் வாகன இலக்கமும் குடும்பப் பெயரும் பெறப்பட்டது. அவர் குவைத்தில் பிறந்த ஷேக் அபு அகமத். அவரது வாகனத்தை பல நாட்கள் பல தடவைகள் தொடர்ந்த போது. 2010 ஆகஸ்ட் மாதம் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் இருப்பிடம் அறியப்பட்டது. அது அபத்தாபாத் என்னும் அழகிய நகரம். பிரித்தானிய ஆட்சிக்குக் கீழ் பாக்கிஸ்தான் இருந்தபோது அந்த நகரில் ஜேம்ஸ் அபத் என்பவர் அங்கு ஒரு கூர்க்காப் படைத் தளத்தை அமைத்தார். அவர் பெயாரால் அந்த நகர் அழைக்கப்பட்டது.


ஒவ்வொரு மாடியிலும் உயர்ந்த சுவர்கள். 6அடி 5 அங்குல பின் லாடனை மறைக்க.

காட்டிக் கொடுத்த ஏழடிச் சுவர்.
அபத்தாபாத்தில் மர்ம தகவல் பரிமாற்றக் காரரின் சகோதரரின் வீட்டை நோட்டம் விட்ட அமெரிக்க உளவுப் பிரிவினர் அங்கு வீட்டைச் சுற்றி 12 அடி உயரச் சுவரும் மாடிகளில் ஏழடிச் சுவரும் இருப்பதைக் கண்டனர். பின் லாடனின் உயரம் ஆறு அடி ஐந்து அங்குலம். அங்கு பின் லாடன் இருப்பார் என அமெரிக்க உளவுத் துறை நம்பவில்லை. அங்கு ஒரு முக்கியமானவர் இருக்கிறார் என்றுதான் உளவுப்படையினர் நினைத்தனர். அது ஒரு மூன்று மாடி மாளிகை.



மீண்டும் ஏமாறிய தேசிய பாதுகாப்பு முகவரகம்
மூன்று மாடி மாளிகையை செய்மதி மூலமும் நவீன கருவிகள் மூலமும் வேவு பார்த்த தேசிய பாதுகாப்பு முகவரகம் மீண்டும் ஏமாறியது. அந்த மாளிகைக்கு தொலைபேசித் தொடர்போ அல்லது இணையத் தொடர்பு வசதிகளோ இருக்கவில்லை. அதனால் அங்கிருந்து எந்தத் தகவல்களையும் பெறமுடியவில்லை. ஆனால் அப்படி ஒரு மாளிகைக்கு அப்படிப்பட்ட வசதிகள் இல்லாதிருப்பது சந்தேகத்தை வளர்த்தது. அங்கிருந்து குப்பைகள் வெளியில் வீசப்படுகிறதா என்று பார்த்தார்கள். குப்பைகளுக்குள் ஏதாவது தகவல் பெறலாம் என்று. அதுவும் இல்லை. மொட்டை மாடியில் வைத்து குப்பைகள் எரிக்கப்படுவதைக் கண்டனர்.

வாலைத் தேடியவர்களுக்கு தலை கிடைத்தது.
பின் லாடன் எங்கோ ஒரு குகைக்குள் இருப்பதாகத்தான் சிஐஏ நினைத்தது. இந்த மூன்று மாடி மாளிகையில் பின் லாடன் இருப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் வீடாக அது இருக்கலாம் என்று மேற்கொண்ட உளவு நடவடிக்கைகளில் அங்கு பின் லாடன் இருப்பதை உறுதி செய்து கொண்டனர். வாலைத் தேடியவர்களுக்கு தலை அகப்பட்டது. இப்போது 2011 பெப்ரவரி.


பெண்டகனும் சிஐஏயும் கலந்துரையாடின
சிஐஏ அதிபர் லியோன் பனெட்டா பெண்டகனின் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான வில்லியம் மக் ரவனை சிஐஏ பணிமனைக்கு பெப்ரவரி மாதம் அழைத்து அந்த மாளிகைமீது தாக்குதல் நடந்தும் திட்டங்களை வகுத்தார். அவர்கள் மூன்று மாற்றுத் திட்டங்களை வகுத்தனர். 1. பி-2 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் குண்டு வீசி மாளிகையைத் தாக்குவது. 2. ஹெலிக் கொப்டர்கள் மூலம் படையினரை மாளிகைக்குள் இறக்கித் தாக்குவது. 3. பாக்கிஸ்தானின் உளவுத் துறையுடன் இணைந்து தாக்குவது.

ஒசாமாவைக் கொல்ல ஒபாமாவின் ஒப்புதல்
மார்ச் 14-ம் திகதி சிஐஏ அதிபர் லியோன் பனெட்டா மூன்று மாற்றுத் திட்டங்களுடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். பாதுகாப்புச் செயலர் ரொபேர்ட் கேர்ட்ஸ் இரண்டாம் திட்டமான ஹெலிக்கொப்டர் தாக்குதலை விரும்பவில்லை. அது ஆபத்தானது என்றார் அவர். விமானமூலம் தாக்குதல் நடத்துவதாயின் இரண்டாயிரம் இறாத்தல் எடையுள்ள 32 குண்டுகள் வீச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விளைவு மாளிகை இருந்த இடத்தில் பாரிய கிடங்கு. ஆனால் பின் லாடன் கொல்லப்பட்டார் என்பதை உறுதி செய்ய முடியாது. பாக்கிஸ்த்தானுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது நம்பகரமானது அல்ல என்றும் கூறப்பட்டது. பல வாதப் பிரதி வாதங்களின் பின்னர் பராக் ஒபாமா தனக்கு சில மணித்தியாலங்கள் தருப்படி கேட்டார். 16 மணித்தியாலச் சிந்தனைக்குப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் உயர் அதிகாரிகளை அழைத்த ஒபமா ஹெலிக் கொப்டர்கள் மூலம் படையினரை மாளிகைக்குள் இறக்கித் தாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அவருக்கு அத்திட்டம் பற்றி விளக்க முற்பட ஒபாமா அவர்களை இடைமறித்து போய் செய்து முடியுங்கள் என்றார். ஏற்கனவே அமெரிக்கப் படையினர் அபதாபாத் மாளிகை போல் ஒன்றை அமெரிக்காவில் உருவாக்கி தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பாக்கிஸ்தானுக்கு அறிவிப்பு
பாக்கிஸ்தானுக்கு அறிவிக்கும் நேரத்தை அமெரிக்கர்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டனர். முன் கூட்டி அறிவிக்காவிடில் பறக்கும் ஹெலிக்கொப்டர்கள் மீது பாக்கிஸ்தானியப்படைகள் தாக்குதல் நடத்தலாம். பாக்கிஸ்த்தானுக்கு வழங்கிய தகவல் அல் கெய்டாவிற்கு கசியப் போதிய கால அவகாசம் இல்லாதவகையில் தாக்குதலுக்கு சற்று நேரத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இந்த உண்மை வெளிவந்தால் பாக்கிஸ்த்தானில் தீவிரவாதிகள் கிளர்ந்து எழலாம் என்பதற்காக இரு நாடுகளும் இதை மறுக்கின்றன.

சுவரைத் தகர்த்துக் கொண்டு உள்நுழைந்தனர்.





பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள்.

தாக்குதல் விபரம்
பின் லாடனுக்கு ஜெரேனிமோ என்னும் குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டது. அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், நிலம் ஆகிய மூன்று முனைகளிலும் சண்டையிடக்கூடிய சீல்(SEAL) பிரிவினர் ஒசாமா பின் லாடனைக் கொல்லும் சண்டையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கடல் Sea, வான் Air, தரை Land ஆகிய சொற்களின் முதல் எழுத்துக்களில் இருந்து SEAL என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது. SEAL படைப்பிரிவில் மிக நேர்த்தியாகத் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் இந்தப் படை நடவைக்கையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இவர்களை TEAM - 6 என அழைப்பர். ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள ஜலலாபாத்தில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் மாளிகையில் வீரர்களை இறக்கியது. அவர்கள் சுவர்களைக் குண்டுகளால் தாக்கினர். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த ஆணைக் காப்பாற்ற ஒரு பெண் குறுக்கே பாய்ந்தார். அவர் சுடப்பட்டார். அவர் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் மனைவி. ஒரு ஹெலிக்கொப்டர் பின் லாடனின் பாதுகாவலரின் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் எவரும் கொல்லப்படவில்லையாம். பின் லாடன் இருந்த அறையின் சுவர்களைத் தகர்த்தே தாக்குதல் அணியினர் உள்புகுந்தனர். அங்கு இருந்த பின்லாடனின் மனைவியும் இரு மகன்களும் பயத்தில் ஓடிப்போய் தந்தையைக் கட்டிக் கொள்ளுதல் இயல்பு. அதை அமெரிக்கர் பின் லாடன் மனைவியைக் கேடயமாகப் பாவித்தார் என்கின்றனர்.

பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து கணனிகள் மற்றும் பதிவேடுகளை அமெரிக்கத் தாக்குதல் அணியினர் எடுத்துச் சென்றுள்ளனர். அவை அமெரிக்காவிற்கு அல் கெய்தாவிற்கு எதிரான நடவடிக்கைகளிற்குப் பெரிதும் உதவும். பின் லாடனின் நிதி மூலங்கள் ஆயுதக் கிடங்குகள் ஆயுதம் வழங்குபவர்கள் போன்றவை பற்றிய தகவல்கள் அவற்றில் இருக்கலாம்.

பின்லாடன் துப்பாக்கிச் சண்டை புரிந்ததாக முதலில் சொன்ன அமெரிக்கா பின்னர் அதைத் திருத்திக் கொண்டது.

பின்லாடனின் உடலை ஹெலிக்கொபடரில் எடுத்துச் சென்று அரபுக் கடலில் இசுலாமிய முறைப்படி கிரியை செய்துவிட்டுவீசினராம்.

பின்லாடனின் உடல் கொண்டு செல்லப்பட்ட பாதை.

முரண்படும் செய்திகள்

கொல்லப்பட்டவர் பின் லாடன் தானா? அவரது படம் ஏன் வெளிவிடப்படவில்லை? பின் லாடனைக் கொல்லவில்லை கைது செய்து கொண்டு போயினரா? மர்மங்கள் தொடர்கின்றன.

Tuesday 3 May 2011

பின் லாடனைக் கொல்லவில்லை. உயிருடன் பிடித்தனராம்

பிந்திய செய்தி: ஒசாமா பின் லாடனின் இறந்த உடலின் படம் வெளிவிடப்பட மாட்டாது - அமெரிக்கா அறிவிப்பு - Wednesday, May 4th 2011, 3:10 PM(அமெரிக்க நேரம்)

கொல்லப்பட்ட பின் லாடனின் படம் அமெரிக்காவால் வெளிவிடப்பட்டதல்ல அது பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியால் வெளிவிடப்பட்டது. அது போலியானது என்று இப்போது கூறப்படுகிறது. அந்தப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்ததாம்.

பின் லாடன் துப்பாக்கிச் சண்டை செய்தார் என்று கூறிய அமெரிக்க அரச அறிக்கை இப்போது அது தவறு என்றும் அவர் ஆயுதம் வைத்திருக்கவில்லை என்றும் கூறுகிறது.

அமெரிக்கா ஏன் பின் லாடனின் இறந்த உடலைக் கொண்ட எந்த புகைப்படங்களையும் வெளிவிடவில்லை? அமெரிக்க ஏபிசி தொலைக்காட்சி தாக்குதல் நடந்த கட்டிடத்தின் சிதைவுகள், படுக்கை அறை, பின் லாடனின் கட்டில் போன்றவற்றின் படங்களை வெளிவிட்டது. ஆனால் பின் லாடனின் இறந்த உடலை வெளிவிடவில்லை?

அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் இயக்குனர் லியோன் பனெட் கொல்லப்பட்ட பின் லாடனின் படம் மிகவும் கொடூரமாக இருக்கிறது என்றும் அதனால் அதை வெளியிட தாம் விரும்பவில்லை என்றும் அறிவித்துள்ளார். ஆனால் பின்னர் அப்படம் வெளிவிடப்படும் என தான் நினைக்கிறேன் என்கிறார். பின்னர் மட்டும் அப்படம் கொடூரமானது இல்லை என்று ஆகிவிடுமா? அல்லது இபோது உயிருடன் இருக்கும் பின் லாடனிடமிருந்து சகல தகவல்களையும் பிடுங்கிய பின்னர் அவரைக் கொன்று வெளியிடுவீர்களா என்பது நியாயமான கேள்வி.

பின் லாடனின் இருப்பிடத்தை 2010 ஆகஸ்ட் மாதம் அறிந்த அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ அதை அமெரிக்க அதிபருக்கு அறிவித்தது. பின் லாடனைக் கொல்ல வேண்டுமாயின் ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தோ அல்லது ஒரு போர்க் கப்பலில் இருந்தோ சில பட்டன்களைத் தட்டுவதன் மூலம் பின் லாடன் இருந்த கட்டிடத்தைத் நிர் மூலமாக்கி பின் லாடனைக் கொன்றிருக்கலாம். பின் லாடனைக் கொல்ல மேற் கொண்ட படை நடவடிக்கை மிகுந்த ஆபத்து நிறைந்தது என்று படைத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவின் இது போன்ற படை நடவடிக்கைகள் ஈரானிலும் சோமாலியாவிலும் தோல்வி கண்டன. இருந்தும் இந்த நடவடிக்கையை ஏன் அமெரிக்கா மேற் கொண்டது? அதுவும் பாக்கிஸ்தானியப் படையில் கீழ் நிலையில் உள்ள பலர் அமெரிக்க விரோதமானவர்கள். இருந்தும் பாக்கிஸ்தானிய மண்ணில் இதை செய்தனர்.

இரண்டாம் ஜோர்ஜ் புஷ் ஆட்சியில் இருக்கும் போது பின் லாடனை கொல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது ஆனால் கொல்லாமல் விட்டனர். அப்போது கொல்லாமல் விட்டது ஏன்? இப்போது கொன்றது ஏன்?

கொன்றதாகச் சொல்லப்படும் பின் லாடனின் உடலின் டி.என்.ஏ சோதனை எங்கே, எப்போது, எப்படி, எவ்வளவு நேரத்தில் செய்யப்பட்டது?

பின் லாடனைக் கொன்றால் பல பின் லாடன்கள் உருவாகுவார்கள் என்று அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்குத் தெரியும். இருந்தும் ஏன் கொன்றார்கள்?

தொலைவில் இருந்து கொல்லும் வல்லமை பெற்ற அமெரிக்கா நான்கு உழங்கு வானூர்தியில் 79 சிறப்புப் பயிற்ச்சி பெற்ற அமெரிக்க வீரர்கள் பின் லாடனின் குகைக்குள் இறக்கி தாக்குதல் நடத்தி அவரை கைது செய்வதனால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன? பின் லாடனைக் கொல்வதிலும் பார்க்க அவரைக் கைது செய்தால் பின்னர் பின் லாடனின் பின்னால் நின்று செயற்படுபவர்களை இலகுவில் பிடித்து அழிக்கலாம். ஆப்க்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் போர் புரிவதை நிறுத்தலாம். பல அமெரிக்கப் படைகள் ஆப்க்கானிஸ்தானில் இருந்து வெளியேறலாம். அது பராக் ஒபாமாவிற்கு தேர்தலில் வெற்றி பெறப் பெரும் வாய்ப்பாக அமையும். இவற்றை வைத்துக் கொண்டு பார்த்தால் அமெரிக்கா பின் லாடனைக் கொல்லவில்லை கைதுதான் செய்தது என்று கூறலாம்.

பின் லாடன் கொல்லப்படுவதை நேரடி ஒளிபரப்பில் பார்தார் பராக் ஒபாமா


மன இறுக்கம்(Tension)என்றால் என்ன என்று தெரியாதவர்கள் அதை இப்படத்தில் உள்ளவர்களின் முகங்களில் பார்க்கலாம். Click on picture to enlarge.


அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், நிலம் ஆகிய மூன்று முனைகளிலும் சண்டையிடக்கூடிய சீல்(SEAL) பிரிவினர் ஒசாமா பின் லாடனைக் கொல்லும் சண்டையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கடல் Sea, வான் Air, தரை Land ஆகிய சொற்களின் முதல் எழுத்துக்களில் இருந்து SEAL என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது.

TEAM - 6
SEAL படைப்பிரிவில் மிக நேர்த்தியாகத் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் இந்தப் படை நடவைக்கையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இவர்களை TEAM - 6 என அழைப்பர். அவர்களின் தலைகளில் பொருத்தப்பட்ட காணொளிப் பதிவு கருவிகள் அவர்களின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பக் கூடியவை. அதிலிருந்து ஒளிபரப்பப்பட்ட காட்சிகளை அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிலமைகள் அறையில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உதவி அதிபர், சிஐஏ தலவர், ஹிலரி கிளிண்டன் உட்பட சில அரச உயர் நிலையில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

Really Virtual என்னும் பெயரில் பக்கிஸ்தானில் இருந்து ஒருவர் பில் லாடனின் மாளிகை மீதான தாக்குதலை நேரடியாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவருக்கு பின் லாடன் மீதுதான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்று தெரியாது. அவரது பதிவுகள்:
May - 1st

20-58: Helicopter hovering above Abbottabad at 1AM (is a rare event).

21-05: Go away helicopter - before I take out my giant swatter :-/

21-09: A huge window shaking bang here in Abbottabad Cantt. I hope its not the start of something nasty :-S

21-44: all silent after the blast, but a friend heard it 6 km away too... the helicopter is gone too.

21-48:
the few people online at this time of the night are saying one of the copters was not Pakistani...

22-02:
ince taliban (probably) don't have helicpoters, and since they're saying it was not "ours", so must be a complicated situation.

22-10:
The abbottabad helicopter/UFO was shot down near the Bilal Town area, and there's report of a flash. People saying it could be a drone.

22-15:
people are saying it was not a technical fault and it was shot down. I heard it CIRCLE 3-4 times above, sounded purposeful.

May - 2nd

3-45am:
I think the helicopter crash in Abbottabad, Pakistan and the President Obama breaking news address are connected.

4.00am: Interesting rumors in the otherwise uneventful Abbottabad air today.

4.02am: Report from a taxi driver: The army has cordoned off the crash area and is conducting door-to-door search in the surrounding

4-10am:
Another rumor: two copters that followed the crashed one were foreign Cobras - and got away.

4-21am:
Report from a sweeper: A family also died in the crash, and one of the helicopter riders got away and is now being searched for.

4-31am:
Osama Bin Laden killed in Abbottabad, Pakistan.: ISI has confirmed it << Uh oh, there goes the neighborhood :-/

5-41am:
Uh oh, now I'm the guy who liveblogged the Osama raid without knowing it.

8-19am:
The gunfight lasted perhaps 4-5 minutes, I heard. That was around 10 hours ago. There are no other gunfights that I know of.

அனுராதபுரம் விமானத் தளத் தாக்குதலை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் நேரடி ஒளிபரப்பில் பார்த்தார்.

ஹாலிவூட் விரைவில் பின் லாடன் கொலையைப் படமாக்க இருக்கிறது. Kill Bin Laden என்னும் பெயரில் படமாக்குவதற்கு ஆஸ்கர் விருது பெற்ற கத்ரின் பிகேல்லோவும் மார்க் போலும் இதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

Monday 2 May 2011

உண்மையான போர்க் குற்றவாளியின் திரை மறைவுச் சதி.


இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவருவதை ஐநா பொதுச் செயலாளரின் பிரதம ஆலோசகரான இந்தியாவின் விஜய் நம்பியார் தாமதப் படுத்தினாராம். அந்த அறிக்கை 31-03-2011இல் தயாராகிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை உரிய நேரத்தில் வெளிவந்திருந்தால் அது தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்- காங்கிரசு கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வில்லங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியார் அதைத் தாமதப் படுத்தினாராம்.

ஐநாவில் தமிழர்களுக்கு எதிராக இந்தியா.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க சீனா, ரஷ்யா, இந்தியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. இதில் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் இரசியாவும் இரத்து(வீட்டோ) அதிகாரம் கொண்டவை. இந்தியாவும் போர்த்துக்கல்லும் 31-12-2012வரை தமது தற்காலிக உறுப்புரிமையைக் கொண்டிருக்கும். பாதுகாப்புச் சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 15. மற்ற தற்காலிக உறுப்புரிமை கொண்ட நாடுகள்: பொஸ்னியா/ஹெர்செகோவினா, பிரேசில், கபன், லெபனான், நைஜீரியா, கொலம்பியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா ஆகியவையாகும்.

இரசியாவும் சீனாவும் இரத்து அதிகாரம் பாவிக்கத் தயாராம்.
இலங்கைக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் விசாரணைக்குழு அமைக்கும்படி முன் மொழியப்பட்டால் அதை இரசியாவும் சீனாவும் தமது இரத்து அதிகாரத்தை பாவிக்கத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது சற்று ஆழ்ந்து கவனிக்க வேண்டியது. சீனாவிற்கு இந்தியாவில் பிராந்திய நலன் சார் கரிசனை நிறைய உண்டு. அது தன் எதிர்கால இந்து சமுத்திர ஆதிக்கத் திட்டத்திற்கு இலங்கைக்கு முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தியாவிற்கு எதிரான சீனாவின் முத்து மாலைத் திட்டத்தில் இலங்கையும் ஒன்று. ஆனால் இரசியாவைப் பொறுத்தவரை இலங்கை இந்தியாவின் "ஏரியா". அதற்குள் இரசியாவின் நடவடிக்கைகள் இந்திய நலன்களை ஒட்டியதாகவே இருக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் அதைப்பற்றி இலங்கை முதலில் கலந்துரையாடிய நாடு இந்தியா. இது சீனாவைச் சற்று அதிருப்திப்படுத்தியது. இலங்கை இந்தியாவுடன் கலந்துடையாடியதைத் தொடர்ந்து இரசியா அறிக்கைக்கு எதிராக கருத்துக்களை வெளிவிட்டு வருகிறது.
இரசியா தனது இரத்து அதிகாரத்தைப் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு சார்பாக பாவிக்குமாம். லிபியாவிற்கு எதிராக ஐநாவில் தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட போது இரசியா தனது எதிர்ப்பைக் காட்டியது ஆனால் இரத்து அதிகாரத்தைப் பாவிக்கவில்லை. லிபியாவிடன் நீண்டகால நல்ல உறவு உண்டு. அத்துடன் லிபியாவிற்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதம் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை இரசியா செய்திருந்தது. அந்த பல பில்லியன் டொலர் விற்பனையைப் பாதிக்கும் லிபியாவிற்கு எதிரான ஐநாவின் பாதுகாப்புச் சபையின் ஆயுத விற்பனைத் தடைத் தீர்மானத்தை இரசியா இரத்துச் செய்யவில்லை. ஆனால் இலங்கைக்கு எதிராக வரும் தீர்மானத்தை இரசியா எதிர்க்குமாம். இதில் ஒன்று புலனாகிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரினல் இலங்கையின் போர்க்குற்றம் வெளிவரும் வேளையில் அதில் இந்தியாவின் பங்கும் வெளிவரும். உண்மையான போர்க் குற்றவாளிதான் இரசியாவைத் தூண்டுகிறான்....

Sunday 1 May 2011

போர்க் குற்றம்: Archbishop of Canterbury இன்று என்ன சொல்கிறார்?


அர்ச் பிஷப் ஒf கண்டபரி (Archbishop of Canterbury ) என்பவர் இங்கிலாந்து தேவாலயத்தின்(Church of England) அதி உயர் ஆண்டகையாவார். தற்போது இப்பதவியை அலங்கரிப்பவர் Rt Rev Dr Rowan Williams அவர்கள்.

2007ஆம் ஆண்டு மே மாதம்இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த Archbishop of Canterbury Rt Rev Dr Rowan Williams அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரன சிங்களப் படை நவடிக்கைகளைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:

  • "It is undoubtedly inevitable that what you might call surgical military action against terrorism should take place",

Archbishop Williams said in reports filed by TamilNet and the BBC Sinhala service on May 11, 2007.

அவரது கருத்துப்படி சிங்களவர்களின் படை நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்று. அது சந்தேகத்திற்கு இடமின்றி தவிர்க்க முடியாத ஒரு சத்திர சிகிச்சை.

இதைக் கடுமையாக எதிர்த்து ஒரு சிங்கள
ஆங்கிலிக்கன் கிருத்தவர் Rt Rev Dr Rowan Williamsஅவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் முக்கியமான அம்சம்:

What your irresponsible comments have done are to :-

1. Encourage even greater violation of the human rights of the Tamil civilian population by the Sri Lankan Armed Forces.

2. Give invaluable support to Sinhalese ethno-religious chauvinists who are determined to make multi-ethnic, multireligious, multilingual and multicultural Sri Lanka into a Sinhala-Buddhist nation. Today, these extremist elements in Colombo are celebrating your comment – an indication of the damage that has been done by a flippant remark.

3. Strengthen the stance of President Rajapakse and his brothers to establish a fascist dictatorship and embark on a genocidal massacre of the Tamils in the North East. The photograph of Rajapakse greeting you has been circulated all over the world, enhancing his flagging international image and decreasing yours.

4. Make Tamil civilians in the North East, who are being brutalised by the current murderous regime, feel that their suffering is of no concern to you, and that what is being done to them is inevitable ‘surgical military action” which “should take place”..

அக்கடிதத்தின் முழு விபரம் காண இங்கு சொடுக்கவும்: கடிதம்

Archbishop of Canterbury Rt Rev Dr Rowan Williams அவர்களின் கருத்து சிங்களவர்களைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களையும் கொலைகளையும் ஊக்குவிக்கும்; இலங்கையை சிங்கள் பௌத்த நாடாக்கும் முயற்ச்சியை ஊக்குவிக்கும்.

Archbishop of Canterbury Rt Rev Dr Rowan Williams அவர்களின் கருத்து பிழையானது என்பதை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தெளிவாக்கி விட்டது. இலங்கையில் மானிடத்திற்கு எதிரான குற்றமும் போர்க்குற்றமும் இழைக்கப்பட்டன என்று அவர்களது அறிக்கை கூறுகிறது. இன்று அந்தப் பெருந்தகை என்ன கூறுகிறார்? 300,000இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது சத்திர சிகிச்சையா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...