Saturday 9 April 2011

தமிழர்களை முட்டாள்களாகக் கருதும் காங்கிரசுக் கட்சியின் தேர்தல் அறுவை (அறிக்கை)


தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி 63 இடங்களில் போட்டியிடுகிறது என்பது தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு தோல்வியான நிகழ்வாகும். காங்கிரசைப் பொறுத்தவரை இலங்கையில் தமிழர்களை அடக்கிவிட்டது. இலங்கையில் அது நடந்து கொண்டவிதம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனி கனவிலும் ஒர் உரிமைப் போர் பற்றி சிந்திக்கக் கூடாது என்ற ஒரு படிப்பினையை அவர்களுக்கு ஊட்டும் செயலாகும். தமிழ்நாட்டுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி நடந்து கொள்ளும் விதம் திராவிடக் கட்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு நகர்வாகும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை இனி பதவியில் இருந்து அகற்றுவதே காங்கிரசுக் கட்சியின் திட்டம். துக்ளக் சோவின் வழிகாட்டலின்படி செயற்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு திராவிடக் கட்சியல்ல. இலங்கையில் நடந்தது தமிழர்களுக்கு எதிரான படைத்துறை முள்ளிவாய்க்கால் என்றால், தமிழ்நாட்டில் இன்று நடந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஒர் அரசியல் முள்ளி வாய்க்கால்.

தேர்தல் செல்லாக் காசுகளான தமிழின உணர்வாளர்கள்
சோவின் வழிகாட்டலின்படி ஜெயலலிதா காய்களை நகர்த்தி வை. கோபாலசாமியை செல்லாக் காசு ஆக்கிவிட்டார். ஏற்கனவே நெடுமாறன் தமிழருவி மணியன் போன்ற தமிழின உணர்வாளர்கள் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை செல்லாக் காசுகளே. இவர்களால் ஒரு தொகுதியின் வெற்றியைத் தன்னும் தீர்மானிக்கக் கூடிய வாக்கு வங்கி இல்லை. திருப்பி அடிப்பேன் என்கிற சீமான் யாருக்கு, எங்கே, எப்போத, எப்படி அடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2007-ம் ஆண்டில் இருந்தே காங்கிரசுக் கட்சி தனது "தோழமைக் கட்சி" திமுகவை மிரட்டி தான் நினைத்தபடி ஆட்டி வைக்கத் தொடங்கிவிட்டது. திமுகவிற்கு எதிராக மத்திய அரசின் கையில் இருக்கும் ஆதாரங்களை வைத்து காங்கிரசு திமுகவை இலகுவாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது சிவ சங்கர மேனன், நாராயணன், பிரணாப் முஹர்ஜி போன்றோர் அடிக்கடி வந்து கருணாநிதியைச் சந்திப்பர். அது இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாகவும் அங்கு போர் நிறுத்தம் ஏற்படுத்துவது தொடர்பாகவும் கருணாநிதியைச் சந்திப்பதாக வெளியில் கூறப்பட்டது. ஆனால் இலங்கையில் நடக்கும் போரில் தமிழர்கள் கொன்றொழிக்கப் படும் போது அதற்கு எதிரான உணர்வலை தமிழ்நாட்டில் கிளர்ச்சியாக மாறாமல் இருக்க எப்படி தமிழின உணர்வாளர்களை அடக்க வேண்டும் என்பது பற்றிய பேச்சு வார்த்தைகளே நடந்தன. இலங்கையில் இந்தியா தனது பிராந்திய நலன்களைப் பலியிட்டு தமிழத் தேசிய வாதத்தை அடக்கியது. தமிழ்நாட்டுத் தேர்தலில் கூட்டணி தர்மத்தைப் பலியிட்டு தானது கட்சி தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை திமுகவை சரிப்பதையே காங்கிரசுக் கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் உளவுத்துறை அனைத்துமே திமுக வெற்றி பெறாமல் இருக்க சகல நடவடிக்கைகளையும் மேற் கொள்கிறன. காங்கிரசின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் முள்ளிவாய்க்கால் அழிவை தமிழ்நாட்டுத் தமிழ் இன உணர்விற்கு எதிராக அரங்கேற்றுவதாகவே அமைந்துள்ளது. தான் இன்னொரு அவசரநிலைக்கு( இந்திராகாந்தியின் "எமேர்ஜென்சி") உள்ளாக்கப் பட்டிருப்பதாக கருணாநிதி பகிரங்கமாக அறிவித்தது இதைத்தான். காங்கிரசை மனதில் வைத்துக் கொண்டுதான் பேராசிரியர் அன்பழகன் சொன்னார் திமுகவை தோற்கடிக்க நினைக்கும் சக்திகளை மனதில் வைத்துக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று.

காணமற் போன கொள்கை அரசியல். வெற்றி பெற்ற இலவச அரசியல்.
ஒரு கட்சி தனது கொள்கைகளை மக்கள் முன்வைத்து அதற்காக மக்களிடமிருந்து தேர்தல் நிதி திரட்டி தன் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் கொள்கை அரசியல் தமிழ்நாட்டு அரசியலில் காணாமல் போய்விட்டது. இப்போது பணபலமும் ஊடக பலமும் உள்ள ஒரு கட்சி வாக்காளர்களுக்கு பணமும் பிரியாணியும்வாக்காளர்களுக்குக் கொடுத்து இலவசங்களை வழங்குவதாகப் பிரச்சாரம் செய்தால்தான் தேதலில் வெற்றி பெற முடியும். பணபலமும் ஊடக பலமும் உள்ள திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழ்நாட்டு அரசியலில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்த முடியும். பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை இந்த இருகட்சிகளைச் சார்ந்தே தேர்தலில் போட்டியிட வேண்டும். அல்லது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போல் போட்டியில் இருந்து விலகவேண்டும்.

புதிதாக உருவாகிய மிரட்டல் அரசியல்.
காங்கிரசுக் கட்சிக்கு என்று ஒரு நல்ல தலைவர்களோ அல்லது ஒழுங்கான கட்டமைப்போ தமிழ்நாட்டில் இல்லை. அது தனது வாக்குப் பலத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசி திமுக கூட்டணியில் 63 இடம் பெறவில்லை. மாறாக திமுகவை மிரட்டியே அவற்றைப் பெற்றது. தமிழர்கள் தொடர்பான தனது கொள்கைகளையோ அல்லது திட்டங்களையோ அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் தனது அரசியல் செல்வாக்கை வளர்க்காமல் காங்கிரசின் அதிகாரபலம் தமிழர்களை ஒடுக்கி ஆள முற்படுகிறது.

காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை தமிழர்களை எவ்வளவு முட்டாள்களாகப் பார்கிறது என்று அதன் தேர்தல் அறிக்கையைப் பார்கத் தெரிகிறது.
  • தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலத் திட்டங்களை பரவலாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஒரு புதிய இயக்கமாக செயல்படும்.
  • கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்கள், சமூகநீதி, மதசார்பற்ற நிர்வாகம் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்ட புதிய இயக்கமாக காங்கிரஸ் செயல்படும்.
காங்கிரசு இதுவரை இங்கு ஒரு பழைய இயக்கமாகவே இருக்கிறது. கான் என்ற பெயரைக் காந்தி என்று மாற்றியவர்களின் கட்சி மதசார்பின்மையைப்பற்றி பேசுகிறது.
  • மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் மூலம் தூய்மையான நிர்வாகத்தை வழங்க பாடுபடுவோம். லஞ்சக் கொடுமை, நிர்வாக திறமையின்மை வேரறுத்து ஒழிக்கப்படும்.
அலைக்கற்றை ஊழல் பற்றி ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்று காங்கிரசு நினைக்கிறது.
  • சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தில் நடக்க காங்கிரஸ் துணை நிற்கும்.
தமிழ்மக்களிடை சாதியை ஒழிக்காமல் அதை வளர்தெடுத்து சாதி அடிப்படையில் மோதவிடுதல் ரெம்ப வசதி.
  • முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இரு மாநிலங்களுக்கு இடையே நட்புறவு பாதிக்கப்படாமல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

காவேரி நீர்ப் பிரச்சனை தீர்த்தது போல் இதுவும் தீர்க்கப்படும்.

மீனவர் பாதுகாப்புப் பற்றி ஏதாவது சொன்னார்களா?

தொடர்புடைய பதிவுகள்:
நீலப்பட நடிகர்களுக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் என்ன ஒற்றுமை?
நகைச்சுவைக் கதை: கண்விழித்த காங்கிரசுப் பூனை.

எகிப்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்


எகிப்தை ஆண்ட ஹஸ்னி முபாராக்கை 18 நாட்கள் தொடர்ந்து நடாத்திய உறுதியான போராட்டத்தால் பதவியில் இருந்து அகற்றியதுடன் எகிப்தியப் பிரச்சனைகள் தீரவில்லை. மக்களின் பிரச்சனைகள் புது வடிவம் பெற்றுள்ளது. முபராக்கிற்கு பின்னரான அரசி எப்படி அமைய வேண்டும் எப்படி அரசியலமைப்பை திருத்த வேண்டும் பாராளமன்றத் தேர்தலின் பின்னர் அதிபர் தேர்தலா அல்லது அதிபர் தேர்தலுக்குப் பின்னர் பாராளமன்றத் தேர்தலா புதிய எகிப்து மத சார்பற்றதா அல்லது ஒரு இசுலாமிய நாடா இப்படிப் பல முரண்பாடுகள் இப்போது எழுந்துள்ளன.

எகிப்தின் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒவ்வொரு அரச பணிமனையிலும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் தினந்தோறும் முரண்பாடுகளும் ஆர்ப்பாட்டங்களும் நடந்த வண்ணமே இருகின்றன. ஹஸ்னி முபராக் மட்டும்தான் பதவியில் இருந்து அகற்றப் பட்டுள்ளார். அவரது அரச இயந்திரம் அப்படியே இருகிறது. அவரது இராணுவ அதிகாரியின் கையில்தான் இப்போதும் அதிகாரம். அரச இயந்திரங்கள் யாவும் முபராக்கால் நியமிக்கப்பட்ட உளவாளிகள் இப்போதும் இருப்பதால்தால் இந்த முரண்பாடுகளும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன. மக்களின் உண்மையான தேவை ஆட்சியாளர் மாற்றம் மட்டுமல்ல ஆட்சி முறை மாற்றமுமே.

சமுதாயத்தின் சகல அம்சங்களிலும் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடு புரட்சியின் வெற்றியைப் பாழடித்து விடுமா அல்லது பாழடித்து விட்டதா என்பதுதான் எகிப்தியரின் இன்றைய அச்சம்.

பெருமை மிகு வரலாற்றை கொண்ட எகிப்தியர் முதல் முதலாக அரச இயந்திரத்தின் அசைவில் தமது பங்கும் இருக்க வேண்டும் என்றும் தமது அபிலாசைகளை அது பிரதிபலிக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர். மக்களாட்சியென்பது வாக்களிப்பது மட்டுமல்ல மக்களின் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்ப வாக்களிப்பால தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசை இயக்குவதுதான்.

மக்களாட்சிக்கு பரிச்சயமில்லாத எகிப்தியர் அங்கு உருவாகியுள்ள பல்வேறு அமைப்புக்களை சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கின்றனர். ஏப்ரல்-6 இயக்கம்தான் முபாரக்கிற்கு எதிரான புரட்சியை ஒழுங்கு படுத்தியதும் முன்னின்று நடாத்தியதும். அல் மஹால்லா அல் குப்ரா என்னும் எகிப்திய நகரில் 2008 ஏப்ரில் 6-ம் திகதி அங்குள்ள தொழிற்சாலை ஊழியர்களால் வேலை நிறுத்தத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது பேஸ்புக் குழு ஏப்ரல் 6 இயக்கம். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்பது மிக நீண்டகாலமாக செய்ற்பட்டு வரும் ஒரு அரசியல்-மத இயக்கம். ஏப்ரல்-6 இயக்கம் ஆரம்பித்த ஹஸ்னி முபாரக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் இணைந்து கொண்டது. இவை இரண்டும் இப்போது முரண்பட்டு நிற்கின்றன.

அதிக ஊழியம் அதிக உரிமை போன்றவை கேட்டு ஊழியர்கள் போராட்டம் நடாத்துவது பரவலாக நடந்து வருகிறது. ஷேக் அல் அஜார் என்னும் உயர் மதத் தலைவரின் வீட்டைச் சுற்றி எகிப்திய தற்காலிக அரசு தாங்கிகள் சகிதம் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. எகிப்திய அரசுக்குச் சொந்தமான காப்புறுதிச் சேவையை தனியார் மயமாக்கும் தற்காலிக அரசின் முயற்ச்சிக்கும் எதிராக தினம்தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எகிப்தியப் பல்கலைக் கழகத்தில் அதன் தலைவரை பதவி நீக்கும்படி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சிலர் இந்த ஆர்ப்பாட்டங்கள் புரட்சி எதிர்ப்பாளர்களால் செய்யப்படும் சதி என்று குறை கூறுகின்றனர். ஆனால் எகிப்திய மக்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை யார் புரட்சியாளர் யார் புரட்சி எதிர்ப்பாளர் என்று கண்டறிவதே.

Thursday 7 April 2011

முரண்பட்டு நிற்கும் லிபிய எழுச்சியாளர்கள்


லிபியத் தலைவர் மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் சிறு பிள்ளைகள் போல் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார் அவர்களை ஒற்றுமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அரசறிவியல் விஞ்ஞானி ஃபத்தி பாஜா. லிபியாவின் கிளர்ச்சிக்காரகளில் மூன்று ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளும் முக்கியமானவர்கள் இருக்கிறார்கள்.

அப்துல் பத்தா ஜூனிஸ்: இவர் லிபியத் தலைவர் மும்மர்கடாஃபியின் முன்னாள் உள்துறை அமைச்சருமாவார். சில வாரங்களுக்கு முன்னர் வரை இவர் கடாஃபியுடந்தான் இருந்தார். இவர்தான் பெயரளவில் மும்மர்கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் படைகளுக்கு தலைமை தாங்கினார். இவர் ஒரு திறமையான படைத் தலைவன் அல்ல.

ஹலிபா ஹெஃப்டர்: இவர் முன்னாள் படைத் தளபதி. 1980களின் பிற்பகுதியில் சாட் நாட்டில் லிபியாவின் படை நடவடிக்கையைத் தொடர்ந்து இவருக்கும் லிபியத் தலைவர் மும்மர்கடாஃபிக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற இவர் அங்கு வர்ஜீனியாவில் வசித்து வந்தார். இவரைச் அமெரிக்க உளவுத் துறை சிஐஏயின் கையாள் என்று பலரும் நம்புகின்றனர். அமெரிக்காவில் இருந்து லிபியா வந்த இவர் தன்னைத்தானே கிளர்ச்சிக்காரர்களின் Field Commanderஎன்று பிரகடனப்படுத்திக் கொண்டார்.

ஒமர் மொக்தர் அல் ஹரிரி(Omar Mokhtar El-Hariri):இவர் கடாபியுடன் இணைந்து 1969இல் அப்போது இருந்த லிபிய மன்னருக்கு எதிராக புரட்சி செய்தவர். பின்னர் மும்மர் கடாஃபியின் படைத்துறை அமைச்சராக இருந்து வருகையில் 1975 இல் கடாபிக்கு எதிராகப் புரட்சி செய்ய முயன்று தோல்வி கண்டவர். பின்னர் சிறையில் இருந்தவர். பின்னர் 2011இல் லிபியாவில் மக்கள் எழுச்சி ஏற்படும் வரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர். இவர் இப்போது கிளர்ச்சிக்காரர்களின் பாதுகாப்புத் துறை அமைச்சர்.

இவர்களை ஒன்றிணைக்கப் பெரும்பாடுபட்டார்கள் லிபியக் கிளர்ச்சிக்காரர்கள். அரசறிவியல் விஞ்ஞானி ஃபத்தி பாஜா அவர்களின் தலைமையில் பல இணக்கப்பாடுக் கூட்டங்கள் நடந்தன. முடிவில் அப்துல் பத்தா ஜூனிஸ் படைத் தலைவராகவும் ஒமர் மொக்தர் அல் ஹரிரி பாதுகாப்பு அமைச்சராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். ஹலிபா ஹெஃப்டர் தான் ஒமர் மொக்தர் அல் ஹரிரின் கீழ் பணியாற்றத் தயாரில்லை என்று கூறிவிட்டார். பின்னர் அல்ஹரிரின் மகன் தனது தந்தைதான் இப்போதும் படைத் தளபதி என்று சொன்னதைத் தொடர்ந்து மீண்டும் பிரச்சனைகள் உருவானது.

கட்டுக் கோப்பில்லாத ஆனால் உறுதியான படை அமைப்பு
லிபியத் தலைவர் மும்மர்கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் படைகள் நேட்டோவின் குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர் கூட காத்திரமான முன்னேற்றம் காணவில்லை. அவர்கள் முன்னேறுவதும் பின்வாங்குவதாகவும் இருக்கின்றனர். லிபியக் கிளர்ச்சிக்காரர்களின் படையைச் சேர்ந்த ஒரு இளைஞன் எறிகணை ஒன்றைச் செலுத்த முற்பட்டவேளை அவனத் தடுத்தி நிறுத்தி எப்படி அந்த எறிகணையைச் செலுத்த வேண்டும் என்று ஒரு அனுபவம் வாய்ந்த ஒருவர் சொல்ல முற்பட்ட போது "நான் 37 நாட்களாகச் சண்டையிடுகிறேன் எனக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை" என்று பதிலளித்தான் அந்த இளைஞன். இதை அவர்களுக்கு இடையில் கட்டுக் கோப்பின்மையை எடுத்துக் காட்டுகிறது என்கிறார் ஒரு ஊடகர். அதே வேளை அவர்களின் தீரமும் சுதந்திர வேட்கையும் மிகவும் உறுதியானது என்கிறார் அந்த ஊடகர்.

தேக்க நிலையில் போர்
லிபியாவின் உள்ளூர் போர் இப்போது ஒரு தேக்க நிலையிலேயே உள்ளது. யாரும் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. மும்மர் கடாஃபியும் பாரிய திட்டங்களுடன் தான் செயற்பட்டு வருகிறார். தனது நிலைப்படு பற்றி முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வேண்டு மென்றே கசியவிட்டு எதிரிகளைக் குழப்புவதில் வெற்றி கண்டுள்ளார். மிக ஆரம்ப நிலையிலேயே தான் நாட்டை விட்டுத் தப்பி ஓடிக் கொண்டிருப்பது போல் ஒரு செய்தியை கசிய விட்டு பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சரின் முகத்தில் கரி பூசினார். போதாக் குறைக்கு நேட்டோவின் குண்டுகள் அவ்வப்போது பொதுமக்களையும் கிளர்ச்சிக்கார்களையும் கொல்கிறது. நேட்டோவில் உள்ள ஒரே ஒரு முசுலிம் நாட்டான துருக்கியை லிபியக் கிளர்ச்சிக்காரர்கள் நேட்டோவின் தாக்குதல் மந்த நிலையை அடைந்தமைக்கான காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

கூலிப்படை எதிர் கூலிப்படை.
லிபியத் தலைவர் கடாஃபி கைக்கூலிப்படைகளைப் பாவிக்கிறார் என்ற கூச்சல் இருந்தது. இப்போது நேட்டோ அமைப்பு வெறும் விமானக் குண்டுத்தாக்குதலும் தொலைதூர ஏவுகணைத் தாக்குதல்கள் மட்டும் போதாது தரையிலும் படைகள் தேவை என்று உணர்ந்து தாமும் கூலிப்படையினரை லிபியாவிற்குள் அனுப்ப முயற்சி செய்கிறார்கள். அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா போர் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்தவர், இப்போது அடுத்த தேர்தலை விரைவில் எதிர் நோக்குகிறார். அமெரிக்காவும் தனது தரைப்படையை மற்ற நாட்டுப் படைகளுடன் இணத்து லிபியாவிற்கு அனுப்ப திரைமறைவில் திட்டமிடுகிறது. கடாஃபியை அகற்றுவது அவ்வளவு சுலபமல்ல.

Wednesday 6 April 2011

பார்க்கக் கூடாத பச்சையான பச்சை குத்தல் படங்கள்






பச்சை குத்திக் கொள்வது உலகெங்கும் உள்ள ஒரு வழக்கம். எங்கே எப்படிக் குத்துவது என்பதில் எவ்வளவு வேறுபாடுகள்!!!













இந்தப் பெண் 1981இல் பிறந்தவரோ!!!!

மேலாடை தேவையில்லை!!!

பஞ்ச கௌவியம் கிடைக்குமோ!!

Tuesday 5 April 2011

நீலப்பட நடிகர்களுக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் என்ன ஒற்றுமை?


கேள்வி: ராகுல் காந்திக்கும் Fiat Uno காருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
பதில்: இரண்டும் இத்தாலிய இந்திய இணைப்பால் உருவான மட்டரகமான உற்பத்திப் பொருட்கள்.

கேள்வி:
ஜெயலலிதா எப்போது பொய் சொல்வார்?
பதில்: அவர் உதடு அசையும் போதெல்லாம்

கேள்வி: கேம்பிரிட்ஜில் கோட்டை விட்டவனையும் கேம்பிரிட்ஜில் படித்தேன் என்று பொய் சொன்னவளையும் சேர்ந்தால் என்ன கிடைக்கும்.
பதில்: ராகுலும் பிரியங்காவும்.

கேள்வி:
ஒரு கிறிஸ்மஸ் பாப்பா ஒரு தேவதை ஒரு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான தமிழன் மூவரும் மரீனா கடற்கரையில் அதிகாலை நேரம் போய்க்கொண்டிருக்கும் போது வழியில் ஒரு தங்கச் சங்கிலியை கண்டனர். யார் அதை முதலில் எடுப்பர்?
பதில்: எவரும் எடுக்க மாட்டார்கள். மூன்றுமே கற்பனையானவை. காங்கிரசுக் கட்சியில் இருப்பவன் தமிழன் அல்லன்.

கேள்வி: ஒரு முட்டாள் சட்டவாளரை எப்படி அழைப்பது?
பதில்: Your honour

கேள்வி: நம்பக்கூடாத மூன்று வகையானோர் எவர்?
பதில்: காதலில் விழுந்தோர், மது போதையில் உள்ளோர், தேர்தலில் நிற்போர்.(பாவம் விசயமில்லாதகாந்த்)


கேள்வி: நீலப்பட நடிகர்களுக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் என்ன ஒற்றுமை?
பதில்: தங்கள் நிலைகளை கமெரா முன் அடிக்கடி மாற்றிக் கொள்வர்.

கேள்வி: மகாத்மா காந்திக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: காந்தி நாட்டுக்காக தன்னுயிரையும் கொடுக்கத் தயாரானார். காங்கிரசுக்காரர்கள் தன் தலைவிக்காக தமிழர்கள் உயிர்களை எடுத்தனர்.

கேள்வி: அரசியல் என்பது என்ன?
பதில்: அதில் ஈடுபட விரும்பாத அறிவாளிகளை அதில் ஈடுபட்டுள்ள அறிவிலிகள் ஆள்வது.

கேள்வி: அரசாங்கத்திற்கும் கொள்ளைக் கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
பதில்: கொள்ளைக்கூட்டத்திற்கு ஒரு திறமையான தலைவன் இருப்பான்.

கேள்வி: உண்மையான காந்தியவாதி யார்?
பதில்: காங்கிரசிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பவன்.

சோனியா காந்தி:கலாச்சாரம் மிகுந்த இந்தியாவில் விவாகரத்துக்கள் ஏன் நடக்கின்றன?
மன்மோகன் சிங்(பெண்டகனுடன் கலந்தாலோசித்துவிட்டு):திருமணம் செய்து கொள்வதுதான்

உண்ணா விரதம் இருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்.


உண்ணா விரதம் என்றவுடன் எமக்கு நினைவிற்கு வருவது தீலீபனின் தியாகமும் அமைதிப்படை என்ற போர்வையில் இலங்கை வந்த இந்தியக் கொலைவெறி நாய்களும்தான். அமெரிக்கவில் உட்ட என்னும் பிரதேசத்தில் வாழும் மொர்மோன் இன மக்கள் மாதத்தில் ஒருநாள் தன்னும் 24 மணித்தியாலம் உணவு எதுவும் இல்லாமல் இருப்பது வழக்கம். அவர்களிடையே மேற் கொண்ட ஆய்வில் அவர்களுக்கு இருதநோய்கள் வருவது குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. உண்ணாமல் இருப்பதைத் தவிர்த்துக் கொள்பவர்களின் இரத்தக் குழாய்கள் சுருங்கி இருப்பதையும் x-ரே படம் மூலம் அறிந்துள்ளனர். உண்ணாமல் இருப்பது நீரழிவு நோய் ஏற்படுவதி 50% குறைக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு ஆரம்ப நிலையில்தான் உள்ளன. இவற்றைப் பின்பற்றும் படி மக்களுக்கு அறிவுரை சொல்ல இன்னும் காலம் எடுக்கும். மேலும் ஆய்வுகள் தேவை என்கின்றனர்.

Monday 4 April 2011

கடாஃபியின் குடும்பத்தைப் பற்றி புதிய செய்தி: புரளியா? தந்திரமா?



லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் இரு புதல்வர்கள் அவருக்கு எதிராக சதிசெய்வதாக புதிய புரளி இப்போது வெலிவந்துள்ளது.

மும்மர் கடாஃபியின் இலண்டனில் படித்த ஒரு புதல்வரான சயிஃப் கடாஃபியும் இத்தாலியில் உதைபந்தாட்டம் ஆடிய சாதி கடாஃபியும் தந்தையைப் பதவியில் இருந்து விலக்கிவிட்டு தாம் இடைக்கால அரசுக்கு தலைமை தாங்கத் தயாரக உள்ளதாகவும் அதற்குப்பதிலாக நேட்டோப் படையினர் லிபியா மீதான குண்டுத்தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சயிஃப் கடாஃபி பிரித்தானிய இத்தாலிய உளவுத் துறையுடன் தொடர்பு கொண்டு இப்போது உள்ள ஆட்சியில் மாற்றம் ஏற்படும் வரை தானும் சகோதரர் சாதி கடாஃபியும் இடைக்கால அரசுக்கு பொறுப்பாக இருப்பதாகவும் மும்மர் கடாஃபி பதவியில் இருந்து விலக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

68 வயதான மும்மர் கடாஃபிக்கு ஏழு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் சயிஃப் கடாஃபியும் சாதி கடாஃபியும் தீவிரவாதத்தில் நம்பிக்கை குறைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மற்றவர்கள் தீவிரப்போக்கு உடையவர்கள் என்றும் நம்பப்படுகிறது. இவர்களுக்கிடையிலான போட்டியை மும்மர் கடாஃபியே உருவாக்கி தனது பதவி பாதுகாப்பாக இருக்கவும் மகன்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தன்னைப்பதவியில் இருந்து விலக்காமல் இருக்கவும் தந்திரமாகச் செயற்படுகிறார் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்ததுண்டு.

இரு புதல்வர்களும் மும்மர் கடாஃபியின் ஏற்பாட்டின் பேரிலேயே இப்படிச் செயற்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மும்மர் கடாஃபி தனது பதவியைப் பாதுகாக்கவும் அவர் செய்யும் தந்திர நாடகம் இதுவாகவும் இருக்கலாம். பொதுவாக பெற்றோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்கள் வெளிநாட்டு நிதி வைப்புக்களை ஐரோப்பிய அமெரிக்க வங்கிகளில் வைப்பிலிட்டு வைப்பது வழக்கம். தேவைப்படும் நேரங்களில் அவற்றை அரசுகள் முடக்கி வைப்பதும் உண்டு. இதை முன் கூட்டியே உணர்ந்த மும்மர் கடாஃபி தனது நிதி வளத்தை தங்கங்களாக வாங்கி தனது நாட்டிலேயே குவித்து வைத்துள்ளார். மும்மர் கடாஃபியிடம் 143.8தொன் எடையுள்ள தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல உலகிலேயே அதிக மசகு எண்ணைக் கையிருப்பும் லிபியாவிடம் உள்ளது. ஆனால் லிபியாவின் பெரும்பாலான எண்ணெய் வளம் இப்பொது கிளர்ச்சிக்காரர்கள் கைவசம் உள்ளது.

தொடரும் நேட்டோ கூட்டமைப்பின் தாக்குதல்களும் எண்ணெய்த் தாகமெடுத்துத் துடிக்கும் மேற்குலக அரசுகளும் உள்ளூர் கிளர்ச்சிக்காரர்களும் மும்மர் கடாஃபியின் அதிகாரத்திற்கு பலத்த ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு மத்தியில் மும்மர் கடாஃபி தனது காய்களை நகர்த்துகிறாரா?

தாய்ப்பால் தரும் பசுக்களை உருவாக்கிய சீனர்கள்


மரபணுக்களை மாற்றியதன் மூலம் தாய்ப்பால் தரும் பசுக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மனித மரபணுக்களைக் கொண்ட 300 பசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் நின்ங் லீ தலைமையில் ஒரு விஞ்ஞானிகள் குழு இந்தச் செய்துள்ளனர்.

தாய்ப்பாலில் உள்ள human lactoferrin & lysozyme எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும் புரதம் இந்தப் புதிய பசுக்கள் தரும் பாலில் உள்ளன என்கின்றனர் சீன விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டு பிடிப்பிற்கு பல எதிர்ப்புக்களும் கிளர்ந்துள்ளன. தாய்ப்பால் பிள்ளைக்குத் தேவையான சகல ஊட்டச் சத்துக்களைக் கொண்டதும் வளர்ச்சிக்குத் தேவையானவற்றையும்,நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொண்டதுமாகும். இதற்கு இணையானதாக இந்தப் பசுப்பால் இருக்குமா என்பது பலத்த சோதனைக்கு உள்ளாக்கப் பட வேண்டும் என்கின்றனர். இந்தப் பாலில் எமக்குத் தெரியாத எம்மால் கண்டறிய முடியாத பல ஆபத்துக்கள் இருக்கலாம் என்றும் சிலர் அஞ்சுகின்றனர்.

இந்த சீனப் பரீட்சார்த்த நடவடிக்கை மிருகங்களின் நலன்களுக்கு எதிரானது என்றும் சிலர் கருதுகின்றனர். இந்தப் பரிசோதனையில் உருவாக்கப்பட்ட 42 கன்றுகளில் 26 மட்டுமே தப்பியது. மற்றவை இறந்து விட்டன.

சீனாவில் உள்ள மரபு அணு மாற்றம் தொடர்பான கட்டுப்பாடுகள் ஐரோப்பியாவில் உள்ளவை போல் இல்லை.

இந்திய விஞ்ஞானிகள் கராம்பசுக்களை உருவாக்கினால் அடுத்த தேர்தலில் அவற்றை இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு வசதியாக இருக்கும்.

தேர்தல் நகைச்சுவை: குடும்பம் ஒரு கழகம்


சுயமரியாதை உளோர் வாக்களியார் காங்கிரசுக்கு
வாக்களிப்பர் வடகத்தையான் வழிப்பிறந்தோர்.

எப்பொருள் யார் யார் இலவசமாய்தரினும் அப்பொருள் உன்னிடம் கொள்ளையடித்த பொருளென்று காண்பதறிவு.

தோழியோடு வாழ்க்கை உடைத்தாயின்
தேர்தல் வெற்றியின் பெரும் பேறது

ஐந்தாண்டு காத்திருந்து வாக்களிப்பதெல்லாம்
இலவசம் பெறுதற் பொருட்டு.

பயன் தூக்கி இரட்டை இலைக்கு வாக்களிப்பதெல்லாம்
குண்டம்மா பாதம் தொழுதல் பொருட்டு


போன வருடம் தேர்தலில் நின்று தேர்தலில் வென்ற உன் கணவர் இப்போது என்ன செய்கிறார்?
ஒன்றும் செய்வதில்லை.

அரசியல்வாதிகளின் வீடுகளில் ஏன் திருட்டுப் போவதில்லை?
தொழில்சார் தயவு(professional courtesy)

தந்தை: எப்படிச் சொல்கிறாய் மகன் அரசியல்வாதியாக வருவான் என்று?
தாய்: அவன் பேசுவதைக் கேட்க நன்றாக இருக்கிறது. ஒன்றுமே புரியவில்லை. அவன் பேசியதை உடன் மறந்துவிடுகிறான்.

அரசியல் உலகத்தில் இரண்டாவது பழமை வாய்ந்த தொழில். அதனால் அது முதலாவது பழமை வாய்ந்த தொழிலைப் பலவிதத்திலும் ஒத்திருக்கிறது - ரொனால்ட் ரீகன்.

எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றலாம் இலவசங்கள் தருவதாக வாக்குறுதிகள் கொடுத்தால்.

Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it wrongly, and applying unsuitable remedies'. Sir Earnest Benn.

Sunday 3 April 2011

இந்திய கிரிகெட் வெற்றி பற்றி உலகப் பத்திரிகைகள்

CLICK TO ENLARGE
நியூயோர்க் ரைம்ஸ், வாஷிங்டன் ரைம்ஸ் போன்ற பத்திரிகைகளுக்கு கிரிக்கெட்பற்றி எதுவும் தெரியாது போல் இருக்கிறது. அவை உலகக் கிண்ணப் போட்டியைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. வாஷிங்டன் போஸ்ற் இப்படிக்கூறுகிறது: India wins cricket World Cup for 1st time in 28 years: India won cricket’s World Cup for the first time in 28 years Saturday with a six-wicket victory at home over Sri Lanka. “It’s the ultimate thing and I’m experiencing it,” Tendulkar said. “I couldn’t have asked for anything better. It’s the proudest moment of my life.”

India captain Mahendra Singh Dhoni and Gautam Gambhir pulled off an impressive run chase to beat Sri Lanka by six wickets in the World Cup final in Mumbai.

The fourth-wicket pair ensured India did not panic in front of a capacity home crowd after the early loss of big guns Virender Sehwag and Sachin Tendulkar in pursuit of 274 for six.

The favourites prevailed with 10 balls to spare in today's showpiece between sub-Continental neighbours, both seeking their second World Cup, despite a wonderful 103 not out from Sri Lanka's Mahela Jayawardene.

எல்லாப் பத்திரிகைகளும் தெண்டுல்க்கர் பற்றியே பெரிது படுத்தின. டெலிகிராப் தோனியைப் புகழ்ந்தது

Telegraph

India captain Mahendra Singh Dhoni timed entire World Cup campaign to perfection.

Play without fear!” recommends Sachin Tendulkar. His captain MS Dhoni is the definition of that. Unfazed by a highest score in the tournament of just 34, he promoted himself to No 5 and strode to the crease with the match in the balance at 114-3. With total conviction and complete self-assurance he clipped and chipped, occasionally carved, and ultimately clubbed, his side to handsome victory with a massive six over long on to finish 91 not out. The prolific Tendulkar may be India's national treasure but Dhoni is their modern icon

Guardian

Not without controversy or melodrama, the Indian dream came true. In the euphoric atmosphere of the Wankhede Stadium India won the 10th World Cup final by four wickets with 10 balls to spare.

Ultimately, in the battle of the captains Mahendra Dhoni, after a dodgy start to the day, prevailed in a pulsating climax to the tournament. There were suggestions that Dhoni had been hoodwinked at the toss by Kumar Sangakkara, but it was the India captain who had the last laugh when the fireworks exploded into the night sky of Mumbai

It may be that Sri Lanka tried to be too clever by half. They shuffled their side dramatically, making four changes from the semi-final, only one of them forced after Angelo Mathews's injury. Ajantha Mendis, the unorthodox spinner, was omitted on the basis that the Indians play him rather well. In this tournament Mendis has been bowling rather well, but that was not deemed to be sufficiently relevant.

டெய்லி மெயில்
பில்லியன் மக்கள் கொண்டாடும் வெற்றி. கண்ணீரில் தென்டுல்கர். இலங்கையைத் தோற்கடித்து கிண்ணத்தைக் கைப்பற்றிய இந்தியா. சச்சின் தென்டுல்கர் தான் சொரிவது ஆனந்தக் கண்ணீர் என்றார். தனது வாழ்க்கையின் பெருமைமிகு கணம் இது என்கிறார் லிட்டில் மாஸ்டர்.

Independent

India are champions of the world. To the unstinting adulation and unbridled joy of millions upon millions of countrymen, the side led – and led from the front – by Mahendra Singh Dhoni defeated Sri Lanka in an enthralling final by six wickets to take the title for the first time in 28 years.

Only 33,000 were present to witness what has long been predicted to be India's destiny but it felt as if the population of Mumbai and of many cities beyond was crammed into the Wankhede Stadium. Dhoni, who had had a quiet tournament with the bat, entered the arena with India in a tricky position on 115 for 3, needing 275 to win.

But he shared a composed, studiously determined fourth-wicket stand of 109 from 118 balls with Gautam Gambhir which tilted the match irrevocably India's way. Gambhir was out three short of his century, trying to slog his way to three figures, but his captain saw it through.

BBC WEB:

India beat Sri Lanka by six wickets in a pulsating final to deliver World Cup glory to their cricket-mad population for the first time since 1983.

Sri Lanka smashed 91 from their last 10 overs to post 274-6 in Mumbai, with Mahela Jayawardene making a superb 103.

India lost Virender Sehwag and Sachin Tendulkar early on but Gautam Gambhir and Mahendra Dhoni rebuilt the innings.

Gambhir was out for 97, but captain Dhoni's brilliant unbeaten 91 led India to a famous win with 10 balls to spare.

FINANCIAL TIMES - LONDON

A nerveless, match-winning 109-run partnership between Gautam Gambhir and Mahendra Singh Dhoni propelled India past sub-continental rivals Sri Lanka to their second cricket World Cup victory.

India captain Dhoni produced his best innings of the tournament and was named man of the match, hitting a match-winning six and finishing with 91, while Gambhir fell for 97, just short of what would have been a well deserved century.

Australia

INDIA has won the World Cup for the first time since 1983 with a hard-fought, six-wicket win over Sri Lanka in Mumbai.

MS Dhoni brought up the win in spectacular fashion by hitting a six with 11 balls remaining as India hauled in Sri Lanka's total of 6/274.

Gautam Gambhir and skipper Mahendra Singh Dhoni starred for the home team as India won their first World Cup for 28 years. The finale gave Tendulkar, the world's most successful Test and one-day batsman, his first World Cup title in six appearances since 1992. The defeat ended Sri Lankan star bowler Muttiah Muralitharan's dream of being part of a second World Cup-winning team, having won the title under Arjuna Ranatunga in 1996 in Lahore.

Gambhir, dropped on 30 and nearly run out on 49, made 97 to put India within sight of victory after openers Virender Sehwag (0) and Sachin Tendulkar (18) both fell cheaply to fast bowler Lasith Malinga.

நாணயச் சுழற்ச்சியில் குள்றுபடி என்கிறது இலங்கைப் பத்திரிகை

The pressure of the epic final began even before a ball was bowled. There were various conspiracy theories about the toss and how the captains often do not see which way the coin turns. Immediately, there was confusion regarding as to who won the toss initially.

Replays of the toss indicated decisively that Sri Lankan captain Kumar Sangakkara called heads the first time as well, and the call was audible to the television producers, it was reported. In the noise, Dhoni misheard it as a 'tails' call and he turned towards TV convener Ravi Shastri saying, "we will bat."

However neither Shastri nor match referee Jeff Crowe had heard Sangakkara's call, due to the noise. Then Shastri looked across to Crowe. The referee said, "I didn't hear it." There was then a brief conversation and the toss was made again and Sangakkara called right once again.

பாக்கிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் பிரதமருக்குப் பக்கத்தில் இருந்த மன் மோகன் சிங் ஏன் மஹிந்தவிற்குப் பக்கத்தில் இருக்கவில்லை என்ற கேள்வி கொழும்பில் எழுந்துள்ளது.

மஹிந்த தனக்கும் தனது பரிவாரங்களுக்கும் 40 ஆசனங்கள் கேட்டிருந்தார் ஆனால் 20 ஆசனங்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் சபை கொடுத்தது.

தோல்விய நேரில் காண்ட மஹிந்தவும் வெற்றியைக் காணமுடியாத மன்மோகனும் பரிதாபத்துக்கு உரியவர்களே.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...