Saturday 12 February 2011

ஆட்சியில் இருந்து விரட்டப்பட வேண்டிய அமெரிக்காவின் அயோக்கிய நண்பர்கள்.


எகிப்தின் மோசமான சர்வாதிகாரியும் அமெரிக்காவின் நண்பருமான ஹஸ்னி முபாரக் மாபெரும் மக்கள் எழுச்சியால் பதவியில் இருந்து விரட்டப்பட்டதை இன்றும் உலகெங்கும் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

அண்மைக்கால வரலாற்றில் பதவியில் இருந்த அமெரிக்காவின் அயோக்கிய நண்பர்கள் பல விரட்டப்பட்டதுண்டு. அவர்களில் சிலர்:
  • ஈரானிய ஷா Mohammed Reza Pahlavi 1979இல் நாட்டை விட்டு விரட்டப்பட்டார்.
  • 1978இல் நிறவெறியன் போத்தா தென்னாபிரிக்காவில் பதவி இறக்கப்பட்டான்
  • 1986இல் பிலிப்பைன்சின் பெர்டினாண்ட் மார்கோஸ் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.
  • 2011 இல் பென் அலி துனிசியாவில் இருந்து விரட்டப்பட்டார்.

ஈரானில் 1979இல் அமெரிக்கா விட்ட தவறு புரட்சிக்குப்பின்னர் வந்த அரசு ஒரு அமெரிக்காவிற்கு எதிரான அரசாக அமையவிட்டது. இதே தவறை அமெரிக்கா 1980இல் பிலிப்பைன்சில் செய்யாமல் தவிர்த்துக் கொண்டது.
பிலிப்பைன்சின் பெர்டினாண்ட் மார்கோஸ் இற்கு எதிரான புரட்சியில் தனது கையாட்களை ஈடுபடுத்திக் கொண்டது.

ஹஸ்னி முபாரக்கிறகு எதிராக எகிப்தில் மக்கள் கிளர்ந்து எழுந்த போது அமெரிக்கா அடக்கி வாசித்து தனது காரியத்தை சாதிக்கிறது. அமெரிக்கா 18நாள் மக்கள் எழுச்சியில் எழுச்சி செய்த மக்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. எகிப்தில் ஒரு "மாற்றம்" தேவை என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தது. எகிப்தில் புதிதாக அமையப்போகும் ஆட்சி அமெரிக்க சார்பானதா இல்லையா என்பதை இப்போது கூறிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. எகிப்திய படையின் பல உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். அமெரிக்கா எகிப்திற்கு ஆண்டு தோறும் வழங்கிவரும் இரு பில்லியன் டொலர்களில் பெரும்பாலானவை எகிப்திய படையினரின் சௌகரியத்திற்கே செலவிடப்பட்டது. ஒரு சர்வாதிகரிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும்போது அச்சர்வாதிகாரியின் படையினர் நடுநிலை வகித்தது எகிப்தில்தான் முதன்முறையாக நடந்தது. இது இந்த நடுநிலைக்குப்பின்னால் ஒரு பெரும் கை இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூற முடியும். இதன் உண்மை நிலை அறியச் சிலகாலம் எடுக்கலாம்.

முபாரக்கைத் தொடர்ந்து பதவியில் இருந்து விரட்டப்பட வேண்டிய அமெரிக்காவின் அயோக்கிய நண்பர்கள்:

சவுதி மன்னர் அப்துல்லா.
2005-ம் ஆண்டிலிருந்து உலக பெட்ரோலிய இருப்பில் ஐந்தில் ஒரு பகுதியை கொண்டிருக்கும் சவுதி அரேபியாவை ஆண்டுவருகிறார். அவரது ஆயிரம் பேருக்கு மேல் உறுப்பினராகக் கொண்ட அரச குடும்பம் சவுதியை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி ஆண்டு வருகிறது. இரு பெரும் இசுலாமியத் புனிதத் தலங்களைக் கொண்ட சவுதியில் தேர்தல் இல்லை அரசியல் கட்சிகள் இல்லை. உலகின் மிக மோசமான அடக்கு முறையைக் கொண்ட சவுதி அரசில் தொண்ணூறு இலட்சம் பெண்கள் எந்தவித உரிமைகளும் இன்றி அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இசுலாமியத் தீவிர வாதிகளை அடக்குவதில் சவுதி அரசு அமெரிக்காவிற்கு பெரும் உதவிகள் வழங்கிவருகிறது. 2010இல் மட்டும் அமெரிக்கா சவுதிக்கு 60பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்தது.

யேமனின் அலி அப்துல்லா சலேஹ்
1978இல் இருந்து வட யேமனையும் 1991இல் இரு யேமன்களும் ஒன்றிணைக்கப்பட்டபின் வட தென் யேமன்களையும் ஆண்டு வரும்
அலி அப்துல்லா சலேஹ். மோசமான அடக்கு முறை கண்டபடி கைதுகள் பெண்கள் மீதான கொடுமைகள் நிறைந்த யேமனின் அலி அப்துல்லா சலேஹ் அமெரிக்காவின் நண்பர்.

ஜோர்டனின் மன்னர் அப்துல்லா - 2
மூன்றில் ஒருவர் வேலையற்றிருக்கும் ஜோர்டனை மன்னர் அப்துல்லா 1999இல் இருந்து ஆண்டு வருகிறார். ஜோர்டனில் நான்கில் ஒருவர் வறுமையால் வாடுகின்றனர்.

உகண்டாவின்
Yoweri Museveni.
ஊழல், வறுமை, வேலையில்லப்பிரச்சனை நிறைந்த நாடு உகண்டா. அங்கு அதன் அதிபர் Yoweri Museveni படாடோப வாழ்க்கை வாழ்கிறார்.

இலண்டனில் சீனர்களின் பணம் சூறை


சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் அங்குள்ள பெரும் பணக்காரர்களின் பணத்தையும் எப்படி ஏமாற்றிப் பறிப்பது என்பது பற்றி இலண்டனில் உள்ள பெரும் கடைக்காரர்கள் தங்கள் தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

சீனாவின் மக்களில் 1700பேர்களில் ஒருவர் அமெரிக்க டொலரில் மில்லியன் பெறுமதியான சொத்துக் குடையவர்கள். இவர்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க ஐரோப்பிய நகரங்களுக்கு செல்வதுண்டு அங்கு அவர்கள் பெரும் தொகைப் பணம் செலவழித்து ஆடை அணிகலன்கள் வாங்குவதுண்டு. அவர்களின் சுற்றுலச் செலவுகளில் 70%மானவற்றில் ஆடை அணிகலன்கள் வாங்குவர். உலகில் எங்கிருந்தாலும் எந்தக் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெரும் பணக்காரர்களில் பலர் தங்கள் வாழ்கை முறையை மேற்கத்தியப் பாணியில் அமைத்துக் கொள்வர்.


வழமையாக இலண்டன் பெரும் கடைகளில் அரபு நாட்டுக்காரர்கள் நிறைய பொருட்கள் வாங்குவதுண்டு. இரசியாவில் இருந்தும் பெரும் பணக்காரர்கள் இலண்டனுக்கு வருவர் பொருட்களை அள்ளிச் செல்ல. இப்போது இரசியாவில் இருந்து வருபவர்கள் தொகை குறைந்து சீனாவில் இருந்து வருபவர்கள் தொகை அதிகரித்துள்ளது. இவர்கள் வடிவமைப்பாளர் ஆடைகள் (designer clothes) நிறைய வாங்குவர். சராசரியா ஒரு சீனப் பயணி £972 பவுண்ட்களுக்கு பொருட்கள் வாங்குவர். இந்த ஆண்டு சீனப் பயணிகள் மோத்தம் 160மில்லியன் பவுண்ட்களுக்கு பொருட்கள் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இலண்டனில் உள்ள பெரும் கடைகள் சீனப் பயணிகளைக் கவர்வதற்காக தங்கள் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்குகின்றன. சீனர்களின் மொழியைப் புரிந்து கொள்ளுதல் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப நடத்தல் போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இலண்டனில் உள்ள பெரும் கடைக்காரர்களுக்கு உள்ள பெரும் பிரச்சனை ஐரோப்பவிற்கு வரும் சீனப் பயணிகளில் 5%மானவர்களே இலண்டன் வருகிறார்கள். இதற்கு காரணம் பிரித்தானியா விசா வழங்குவதில் செய்யும் கெடு பிடிகள்.

Friday 11 February 2011

உண்மைச் சம்பவம்; முதல் முத்தத்தில் உயிரை விட்ட 18 வயது மாணவி


அவள் ஒரு மிகவும் கூச்ச சுபாவமுள்ள கல்லூரி மாணவி. விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடுடையவள். 18வயதான ஜெம்மா பெஞ்சமின். மூன்று மாதங்களாக அவருக்கு ஒரு சக மாணவனுடன் காதல்.

காதலர்கள் வாரத்தில் இருமுறை சந்தித்துக் கொள்வர். அன்று வழமையான சந்திப்பு. உணவகம் சென்று உணவருந்த இருவரும் விரும்பினர். தனது வங்கி அட்டையை காதலன் றொஸ் மறந்துவிட்டு வந்து விட்டான். இருவரும் றொஸ் விட்டிற்கு சென்றனர் வங்கி அட்டையை எடுக்க. றொஸ் வீட்டில் இருவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். றொஸ் செய்தது தன் காதலியை அணைத்து ஆசையாக ஒரு முத்தம் கொடுத்ததுதான்.
ஜெம்மாவை ஆசையாக முத்தமிட்ட காதலனுக்கு அதிர்ச்சி. ஜெம்மா காக்கை வலிப்பு வந்தது போல் துடித்தாள். றொஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கும் ஜெம்மாவின் தாய்க்கும் தொலை பேசி அழைப்பு விடுத்தான். அவசர சிகிச்சைப் பிரிவினர் வந்து கொண்டிருக்கும் போதே றொஸ்ஸிற்க்கு எப்படி முதலுதவி சிகிச்சை செய்வது என்று விளக்கினர். அவனும் அப்படியே செய்தான். பாவம் ஜெம்மா. அவள் உயிர் பிரிந்து விட்டது.

ஜெம்மாவிற்கு cardiac condition SADS, or Sudden Adult Death Syndrome என்னும் இருதய நோய் இருந்திருக்கிறது.

Thursday 10 February 2011

வருகின்றன ஐ-பாட் -2 உம் Facebook இன் கைப்பேசிகளும்.


ஐ-பொட், ஐ-போன், ஐ- பாட் போன்ற தொடர்ச்சியான புதுப் புதுக் கருவிகளை அறிமுகம் செய்து உலகத்தின் மிகப் பெறுமதி மிக்க நிறுவனமாக ஆப்பிள் வளர்ச்சியடையவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் பெறுமதி £269.5 பில்லியன்கள். விரைவில் ஆப்பிள் எரிபொருள் நிறுவனமான Exxonஐ பெறுமதியில் முந்திக்கொள்ளப் போகிறது.

ஆப்பிளின் ஐ-போன்கள் கைப்பேசிச் சந்தையைக் கலங்கடித்தது. பலர் ஐ-போன்களின் அடிமைகளானார்கள். வத்திக்கான் ஐ-போன் மூலம் பாவமன்னிப்புக் கேட்க முடியாது என்று அறிவித்தது.

ஆப்பிளின் ஐ-பாட்டின் வெற்றிகரமான அறிமுகம் தொடுதிரைக் கணனிகள் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மற்ற நிறுவனங்களும் தங்கள் தொடுதிரைக் கணனிகளை அறிமுகம் செய்தன. இறுதியாக
HP நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. ஐபாட்-2 பெரிய ஒலி பெருக்கி, USB இணைப்பு வசதி, அதிக ஒளியுள்ள திரை, முன்புறமும் பின்புறமும் ஒளிப்பதிவு செய்யும் வசதி, SD Slot போன்ற ஐ-பாட் -1 இல் இல்லாத வசதிகளுடன் வருகிறது.

ஐம்பது கோடிக்கு( 500 மில்லியன்கள்) மேற்பட்டவர்களைக் கொண்ட சமூக வலைத்தளமான Facebook விரைவில் கைப்பேசிகளை தயாரித்து விற்பனை செய்யவிருக்கிறது. Facebook இதுவரை மறுத்து வந்த இந்த இரகசியம் இப்போது அம்பலமாகிவிட்டது. இலண்டனைச் சேர்ந்த INQ நிறுவனம் Facebook உடன் இணைந்து 'Facebook phone' ஐ உருவாக்கியுள்ளது. Facebook இன் முக்கிய அம்சங்களான அரட்டை, தகவல் பரிமாற்றம், சுவர்ப்பதிவு, அறிவுறுத்தல்கள் (chat, messages, wall postings and notifications) Facebook phoneஇல் இலகுவாகச் செய்யக் கூடியவையாக இருக்கும்.

Cloud Touch எனப்படும் Facebook phone' இன் முக்கிய அம்சங்கள்: powered by a Qualcomm 600MHz 7227 chipset and offers a 3.5-inch HGVA touch screen, 4MB of memory with an option to add more, and a 5-megapixel autofocus camera.
மேலும்: Wi-Fi 802.11b/g, Bluetooth, GPS, an FM radio, an accelerometer, and a compass.

Facebookஉம் Googleஉம் இணைகின்றன Twitterஐ விழுங்க.
Facebookஉம் Googleஉம் இணைந்து ஆறு பில்லியன் பிரித்தானியப் பவுண்டுகளுக்கு வாங்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. Twitterஇல்175 மில்லியன் பயனர்கள் உண்டு. நாளொன்றிற்கு 95மில்லியன் பதிவுகள் இடப்படுகின்றன.

Wednesday 9 February 2011

நகைச்சுவைக் கதை: அரசியல்வாதிகளும் கடவுளும்


கடவுள் சகல உலக நாட்டுத் தலைவர்களினதும் கனவில் தோன்றி நான் இன்னும் ஒரு வாரத்தில் இந்த உலகத்தை அழிக்கப் போகிறேன் இதை உங்கள் மக்களிடம் சொல்லி அவர்களை அமைதிப் படுத்துங்கள் என்றனர்.

ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் மக்களுக்குக் கூறியவை:

அமரிக்க அதிபர்: அன்புடைய மக்களே உங்களுக்கு இரு செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று நாம் இனி சீனாவின் வளர்ச்சியைப் பறிக்கவலைபடத் தேவையில்லை. கடவுள் வெள்ளை மாளிக்கைக்கு வந்து ஒரு வாரத்தில் உலகை அழிக்கப்போகிறேன் என்றார். அதுவரை குடித்துக் கூதாடி அனுபவிப்போமாக.

சீன அதிபர்: உங்களுக்கு இரு துக்கச் செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று கடவுள் இருக்கிறார். மற்றது அவர் உலகை அழிக்கப் போகிறார்.

சோனியா காந்தி: அன்பான மக்களே உங்களுக்கு இரு செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று எனக்குத் துக்கம் உங்களுக்கு மகிழ்ச்சி. அது ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக முடியாது. மற்றது எல்லோருக்கும் கவலையானது. உலகம் அழியப்போகிறது.

பாக்கிஸ்த்தான் பிரதமர்: அன்பான மக்களே நாங்கள் இந்தியாமீது அணுக்குண்டு போடத் தேவையில்லை. கடவுள் முழு உலகையுமே அழிக்கப் போகிறார்.

இஸ்ரேலியப் பிரதமர்: அன்பான மக்களே இந்த உலகம் அழியும்வரை பலஸ்த்தீனம் ஒரு தனிநாடாக அமையாது.

பிரித்தானியப் பிரதமர்: அன்பார்ந்த மக்களே இனி ஒருநாளும் பிரித்தானியாவில் தொழிற் கட்சி ஆட்சிக்கு வராது.

இத்தாலியப் பிரதமர்: என் இனிய இத்தாலி மக்களே எத்தனை சிறுமிகளுடன் நான் எப்படி நடந்தாலும் யாராலும் என்னைத் தண்டிக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ச: எனது அருமை மக்களே! நான் உயிரோடு இருக்கும் வரை, நீங்கள் உயிரோடு இருக்கும் வரை, இந்த உலகம் அழியும் வரை நானே இலங்கையின் ஜனாதிபதி.

எகிப்திலிருந்து விநோதமான படங்கள்.


அதிபர் முபாரக்கிற்கு எதிராக எகிப்தில் நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட விநோதமான படங்கள்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் சமூக வலைத் தளங்களை நன்கு பயன் படுத்திக் கொண்டனர்.


ஊடகங்களை அடக்கினால். வேறு வழிகள் உண்டு.

இலங்கை அரசு இங்கிருந்து நிறைய கற்றறிந்து கொள்ளலாம்.

மின்கம்பத்தில் தொங்க விட்ப்பட்ட முபாரக்.

இது ஈரானில் நடந்த முபாரக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதிலிருந்து.

அல்ஜசீராமீது மீது பிபிசி சி என் என் போன்றவை பொறாமை கொண்டுள்ளன.

ஹிட்லர் இல்லாமலும் ஒரு ஆர்ப்பாட்டமா?

ஹிட்லராகிய முபாரக்...

முபாரக் முபாயக் (முபா அசிங்கம்) ஆக்கப்பட்டார்.


அரச படையினரின் தாங்கிகளில் முபாரக் எதிர்ப்பு வாசகங்கள்.

அம்பலமான அமெரிக்க அசிங்க முகம்.

தாயும் இரு மகன்களும்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கண்ணில் காயம் பட்டவர். காயத்திற்கு போட்ட கட்டில் போ முபாரக் என எழுதியுள்ளார்.

Tuesday 8 February 2011

ஆருயிரென அணைத்தவன் ஆருடைய உயிரென்கிறான்!!



புரியக் கடினமானதால் புதிராய் இருப்பதால்
மென்பொருளும் வன்பொருளுமிருப்பதால்
தேவைப்படும் வேளை முரண்டு பிடிப்பதால்
பெண்ணே நீயும் கணனி போலடி

வாக்குறுதிகள் தந்ததால் வரிசைகள் கொண்டு வந்ததால்
ஊர்கூடி இணைந்ததால் ஊர்வலம் போனதால்
விருந்துகள் படைத்ததால் பின்னர் அம்போ என விட்டதால்
எம் திருமணமும் அரசியல் தேர்தல் போலடி



அன்று என்னை ஆருயிர்
என்று அணைத்தவன்
இன்று என் வயிற்றில் இருப்பது
ஆருடைய உயிர் என்கிறான்.

நாளொன்றில் இருந்தன
இனிய இருபத்தி நான்கு மணித்தியாலங்கள்
வாரமொன்றில் இருந்தன
இனிய ஏழு நாட்கள்
வருட மொன்றில் இருந்தன
இனிய ஐம்பத்திரெண்டு வாரங்கள்
திருமணத்தின் முன்.

நிருபாம ராவ் இலங்கைக்குப் போய் கதைத்தது என்ன?


இலங்கையில் 2009 மே மாதத்தில் போர் முடிந்தவுடன் இலங்கையைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னிடம் இலங்கைப் படை செய்த போர் குற்ற ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா இலங்கையை மிரட்டியதாம். பதிலுக்கு மஹ்ந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய தன்னிடம் இந்திய இலங்கையுடன் நடாத்திய உரையாடல்களின் ஒலிப்பதிவு இருப்பதாகவும் இந்தியா இலங்கையின் போர் குற்றங்களைப் பகிரங்கப் படுத்தினால் தான் அந்த உரையாடல் களைப் பகிரங்கப் படுத்துவேன் என்றும் பதிலுக்கு மிரட்டி இந்தியாவைப் பணியவைத்தாராம். இப்படி The Ground Report India என்னும் ஊடகத்தில் எழுதினார் வீ. எஸ்.சுப்பிரமணியம் என்னும் இந்திய ஆய்வாளர். இதை கிரிக்கெட் பாணியில் கோத்தபாயாவின் master stroke என்று வர்ணித்தார் அவர்.


2009 மே மாதத்திற்கு முன் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர மேனனும் வெளியுறவுத் துறைச் செயலர் நாராயணன் ஆகிய இருவரும் அடிக்கடி இலங்கை வந்து போனதுண்டு. வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாம் முகர்ஜியும் இலங்கை வந்து போனதுண்டு. போர் முடிந்தபின் இந்தியா இலங்கையின் போரக்குற்றம் பற்றி வாய் திறக்கவில்லை. இலங்கையின் மிரட்டலுக்குப் பயந்த இந்தியா ஐநா சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை சீனாவிடன் இணைந்து இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றித் தன்னைத் தானே கேவலப் படுத்திக் கொண்டுவந்தது.

இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டமைக்கு இந்தியாதான் காரணமென்றும் அதிலும் சோனியா காந்திக்கு தமிழர்கள் மேல் உள்ள ஆத்திரத்திலும் பார்க்க மேனன் - நாராயணனுக்கு அதிக ஆத்திரம் இருந்தது என்று எழுதினார் வீ. எஸ். சுப்பிரமணியம். ஆனால் எந்த உரையாடலை வைத்து கோத்தபாய இந்தியாவை மிரட்டினார் என்று வீ. எஸ். சுப்பிரமணியம் எழுதவில்லை. வேறு ஆய்வாளர்கள் இலங்கை போரை ஆகஸ்ட் 2009இல் முடிக்க எண்ணியிருந்ததாகவும் ஆனால் இந்தியாதான் மே- 2009இல் முடிக்க வலியுறுத்தியதாகவும் எழுதியிருந்தனர்.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது மேனன், நாராயணன், பிரணாப் முகர்ஜி போன்றோர் இலங்கை வந்தது அப்போது இந்தியா கூறியது போல் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த அல்ல எப்படி தமிழர்களைக் கொன்றொழிப்பது என்று ஆலோசனை கூறவும் அதற்க்குத் தேவையான படைத் துறை உதவிகளை எப்படி வழங்குவது என்றும் எங்கிருந்து பெறுவது என்றும் முடிவு செய்யத்தான் வந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். இலங்கையிடம் இருக்கும் இந்தியாவை மிரட்டும் ஒலிப்பதிவு இதைத் தவிர வேறு என்ன?

இப்போது நிருபாம ராவ் ஜனவரி 31-ம் திகதி இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப் படுவது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த வந்திருந்தார். இவர் நடாத்திய பேச்சு வார்த்தையின் பின் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தப் பட மாட்டாது என்று இருதரப்பாலும் உறுதி கூறப்பட்டது. நிருபாமாவும் மஹிந்தவும் இப்படித்தான் உரையாடியிருப்பார்களோ?

நிருபாமா: உங்கடை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்குகிறார்கள் கொல்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் ஒரு சில குழுக்கள் கூச்சலிடத் தொடங்கிவிட்டன. அந்தக் கோமாளிகளை எலக்சன் முடியும் வரை சமாளிக்க வேண்டும். உங்கடை கடற்படையிடம் சொல்லுங்கோ அதுவரைக்கும் கொஞ்சம் தமிழ் மீனவரை விட்டுப் பிடிக்கச் சொல்லி.

மஹிந்த: நம்ம படையினருக்கு தொழில் பொழுது போக்கு எல்லாமே தமிழர்களைக் கொல்வதுதான். நாங்க இதை 1956இல் இருந்து செய்து வருகிறோம். இதை நிப்பாட்ட முடியாது.

நிருபாமா: அதைச் செய்ய வேண்டாமென்று நான் சொல்லவில்லை. தயவு செய்து கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கோ.

மஹிந்த: அது சரியான கடினம். தனியாக தமிழர்களைக் கண்டால் கொல்ல வேணும் போல் இருக்கும் எங்கள் படைக்கு. இந்திய மத்திய அரசுக்கும் தமிழர்களைக் கொல்வது சரியான சந்தோசம்தானே. தமிழர்களைக் கொல்லத்தானே உங்க மத்திய அரசு எங்களுக்கு ஆயுதம் தந்தது பயிற்ச்சி தந்தது, காசு தந்தது. 20,000ஆயிரம் இந்தியப் படையினரைக் கூட அனுப்பிவைத்தது.

நிருபாமா: ஐய்யோ ஐய்யோ நான உங்களைத் தமிழர்களைக் கொல்ல வேண்டாமேன்று சொல்லவில்லை. நல்லாய் கொல்லுங்கோ. அந்தக் குறைந்த சாதி நாய்கள் கொல்லப்படுவதைப்பற்றி யார் கவலைப்படுவான். ஆனால் இந்த எலக்சன் வரைக்கும் கொஞ்சம் பொறுங்கோ. அதுக்குப் பிறகு உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்வம் தமிழர்களைக் கொல்ல.

மஹிந்த: அதெல்லாம ஏலாது. நாங்கள் செய்கிறதைச் செய்வம். நீங்கள் எங்களுக்கு உதவி செய்தே ஆக வேண்டும். இல்லாவிடில் திருக்கோணாமலை, காங்கேசன் துறை, பலாலி, மன்னார் புத்தளம் என்று எல்லா இடத்திலையும் சீனர்களை வந்து காம்ப் அடிக்க விட்டிடுவம். அப்புறம் உங்க கதி அதோகதிதான்.

நிருபாமா: ஐய்யோ சார். உங்களை எங்களால் எப்படி எங்களால் தடுக்க முடியும்? நீங்க எந்த அளவு பெரிய ஆள். நீங்கள் தமிழனை அழித்தால்தான நாங்கள் இந்தியாவில் தமிழர்களை அடக்கி வைத்திருக்க முடியும். அவங்க ஏதாவது பேசினா இலங்கையில் நடந்ததுதான் உங்களூக்கும் நடக்கும் என்று சொல்லலாம். உங்களை எங்களுக்கு மிகவும் தேவை.

மஹிந்த:அப்பிடி வழிக்கு வா.

நிருபாமா: உங்களை மன்றாட்டமாகக் கேட்கிறன் சார். பிளீஸ் சார் ஒரு அறிக்கையாவது விடுவம் இனி மீனவர்களுக்கு கடலில் பிரச்சனை இல்லை என்று. அது மட்டுமல்ல. ஒரு நாடகமாடி தப்பி உள்ள புலிகள்தான் தமிழ் மீனவர்களைக் கொல்கிறார்கள் என்று சொல்லுவம்.
(இப்போது நிருபாமா மஹிந்தவில் காலைப் பிடித்திருப்பாரோ?)

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நிருபமா இலங்கை சென்று வந்த பின்னும் தாக்குதல் நடக்கிறது. இதைத் தவிர வேறு எதைக் கதைத்திருக்க முடியும்?

Sunday 6 February 2011

சுட்டெடுத்து மொழி பெயர்த்த SMS JOKES


நீ மனம் கலங்கும் போது
உன் இதயம் தவிக்கும் போது
உன் கண்ணில் வடியும் போது
என்னை நாடி வருவாயாக
நான் ஒரு கைகுட்டை வியாபாரி
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்

அந்தச் சேலையை ஒரு புறம் போடு
பாவாடையை விலக்கி விடு
மற்ற உள்ளாடைகளையும் கடாசிவிடு
அப்பாடா இப்போது மூடலாம்
பயணப் பையை(suitcase)

கண் உன்னைக் காண்பதற்கு
மனம் உன்னை நினைப்பதற்கு
இதயம் உன்னைக் காதலிப்பதற்கு
கால்கள் உன்னை உதைப்பதற்கு
நீ எனக்கு பல்ப் கொடுத்தால்

தெருவோரத்தில் சில இளம்
ஆண் யானைகள்
கடந்து சென்றது
ஒரு கவர்ச்சியான
பென் யானை
ஆண் யானை
ஒன்று சொன்னது
பாருடா மச்சி
3600-2400-3600

சிறுவன் ஒருவன்
சாமியாரிடம் கேட்டான்
தம்பி ஒன்று வேண்டுமென்று
உன் அம்மாவை அனுப்பிவை
என்றார் சாமியார்.

ஆண்டவரால்
எல்லா இடமும்
இருக்க முடியாது
படைத்தார் தாயை
சாத்தானால்
எல்லா இடமும்
போக முடியாத்
படைத்தான் மாமியாரை

கணவன் மனைவியிடை
கடும் சண்டை
கணவன் சொன்னான்
உன்னைத் திருமணம் செய்யும் போது
நான் ஒரு மடையானாயிருந்தேன்.
மனைவி சொன்னாள்
அது தெரியாததால்தான்
உனக்கு கழுத்து நீட்டினேன்.

இதை மொழிபெயர்த்தால் நல்லயிருக்காது:
(முடிந்தால் யாராவது செய்யவும்)
What is a difference
between a Kiss,
a Car and a Monkey?
A kiss is so dear,
a car is too dear
and a monkey is U dear.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...