Saturday 5 February 2011

நகைச்சுவை: இந்தப் பெரிய கம்பனியில் வேலை செய்ய விருப்பமா?


இது ஒரு பெரிய கம்பனி.
இதன் பங்குதாரர்கள் பல கோடி. ஆனாலும் பங்கிலாபம் பெறுவதில்லை.
இந்த வியாபாரத்தில் இது உலகின் மிகப் பெரிய கம்பனி.
இது அன்னியர் ஒருவரின் ஆதிக்கத்தில் இயங்கும் கம்பனி.
இங்கு வேலை பெறுவது இலகுவான காரியமல்ல.
இங்கு வேலை பெறுமுன் அங்கு வேலை செய்பவர்களைப்பற்றிய தகவல்களை அறிதல் நன்று.

இந்தக் கம்பனியில் வேலை செய்பவர்களில்
29 பேர் மனைவிகளைக் கொடுமைப்படுத்துபவர்கள்
52பேர் மருமகளைக் கொடுமைப்படுத்துபவர்கள்
117 பேர் பாரிய ஊழல் செய்பவர்கள்
67 பேர் திருட்டுத் தொழில் செய்பவர்கள்
19 கள்ளச் சராயம் காய்ச்சுபவர்கள்
3 பேர் ஏற்கனவே சிறையில் இருந்தவர்கள்
71 பேர் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்காதவர்கள்.
28 பேர் போதைப் பொருள் கடத்துபவர்கள்
54 பேரில் நீதிமன்ற வழக்கு உள்ளது.
84 பேர் குடிபோதையில் வேலைக்கு வருபவர்கள்.
28 பேர் கொலை செய்தவர்கள்

இப்போது உங்களுக்கு அங்கு வேலை செய்ய விருப்பமில்லை என்று தெரிகிறது.

கம்பனியின் பெயர் Loksabha (pvt)Ltd..

Friday 4 February 2011

இதயத்தில் ஒரு வலி


என் இதயத்தில் இன்று நீ
ஒரு வலியாகத்தன்னும்
இருப்பதும் ஒரு சுகம்

அடங்காப் பசி
ஆணவத்தின் உணவகத்தில்
சாப்பிடப் போனவர்கள்
என்றும் பசியாறுவதில்லை

பொய்யும் உண்மையும்
அரசியல்வாதிளின் மானத்தில் அரைவாசி
அவர்கள் சொல்லும் பொய்களால் போகும்
மிகுதியாய் இருக்கும் அவர் மானம்
அவர்கள் பற்றிய உண்மைகளால் போகும்

பயங்கரவாதம்
அரசியலைச் சுத்தமாக்க
செய்ய நாம் நினைப்பதெல்லாம்
அரச விரோதச் செயலாம்.

வாழ்வு
இறப்பு வேண்டாம் என்றால்
முதுமை வேண்டுமா?
நல்ல ஆயுள் ஒரு கொடை
நீண்ட ஆயுள் கடும் தண்டனை

Thursday 3 February 2011

ஹைக்கூ: உணர்ச்சிகளின் பெருக்கம்


துன்பத்தால் நிறைந்தது
துன்பம் தாண்டும் துணிவுடையோர்க்கு உரியது
இவ்வுலகம்

இனிமையில் தொடங்கும்
போதனையில் முடியும்
நல்ல கவிதை

அறிவை வளர்க்கும்
சந்தேகங்கள் தீர்க்கும்
அர்த்தமுள்ள கேள்விகள்

இனிய வார்த்தைகளின் சுருக்கம்
உணர்ச்சிகளின் பெருக்கம்
காதலர் முத்தம்

யாவர்க்கும் போதாதது
சாதனைகளுக்குத் தேவையானது
நேரம்

பாராளமன்ற அமர்வில் i-Pad இல் பலான பெண்களைத் தேடிய MP


பாராளமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்கு வசதியாக அவர்க்ளுக்கு இலவச i-Padகளை அரசு வழங்கியது. அதை வைத்துக் கொண்டு ஒரு பாராளமன்ற உறுப்பினர் நாட்டில் என்ன நடக்கிறது, பொருளாதாரம் எங்கு போகிறது, வேலையில்லாத் திண்டாட்டம் எப்படி இருக்கிறது அல்லது எகிப்திய அரசு கவுழுமா, வன்முறை வெடிக்குமா, என்று அறிய முயலவில்லை. பெண் துணைகளை வாடகைக்கு ஒழுங்கு செய்யும் நிறுவனத்தின் வலைத் தளத்தில் உள்ள பெண்களின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். இவர்ஏற்கனவே மூன்று தடவை திருமணமான 66வயது இத்தாலியப் பாராளமன்ற உறுப்பினர் சைமன் டி கங்கோ அப்ரெசிக்கா என்பவர். அதுவும் பாரளமன்ற அமர்வின் போது. சாதாரண அமர்வல்ல ஆளும் கட்சியின் மந்திரி ஒருவருக்கு எதிரான நம்பிக்கை இல்லப் பிரேரணை விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது. உபரித் தகவல்: ஒரு இரவிற்கு ஒரு பெண்ணுக்கான கட்டணம் £1000.

இத்தாலியப் பாராளமன்ற உறுப்பினர் சைமன் டி கங்கோ அப்ரெசிக்கா என்பவர் i-Padஇல் பெண்கள் படத்தைப்பார்த்துக் கொண்டிருந்தபோது படம்பிடிக்கப் பட்டுள்ளார். அவர் கொடுத்த விளக்கம் தான் தனக்கு வந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக விரஒ ஒரிடத்தில் பட்ட போது வந்த ஒரு pop out windowவில் இருந்த அழகிகளைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அதனால் அந்த அழகிகளைப் பார்ப்பதற்காக அந்த வலயத் தளத்திற்கு சென்றதாக அவர் கூறுகிறார்.

Wednesday 2 February 2011

நகைச்சுவைக் கதை: மன்மோகன் சிங்கின் தலைப்பகை நாறடிக்கப்படுவதைத் தடுத்த சோனியாஜீ



அது ஒரு காங்கிரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். பணமும் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து வந்த இலட்சக்கணக்கான தொண்டர்கள் குழுமி இருந்தனர். மேடையில் சில கரை வேட்டிகள் இருந்து தங்கள் சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர். மன்மோஹன் சிங் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார். இந்தப் பேமானியக் துரத்துவது எப்போ, ராகுலுக்கு முடி சூட்டுவது எப்போ என்ற கவலையுடன் சோனியா காந்தி உட்கார்ந்து இருந்தார் மேடையில்.

மன்மோஹன் சிங் உரையாற்றுகிறார். என்னை கைப்பொம்மை என்கிறார்கள். நான் உலகத்தின் வலுமிக்கவர்கள் பட்டியலில் 18-ம் இடத்தில் இருக்கிறேன். சோனியாஜீ 9-ம் இடத்தில் இருக்கிறார். அவர் எப்போதும் எனக்கு மேலேதான். உலகத்தலைவர்களிலேயே மற்ற உலக நாட்டுத் தலைவர்களின் விருப்பத்துக்குரியவர் பட்டியலில் நான் முதலாம் இடத்தில் இருக்கிறேன். மற்ற உலகத்தலைவர்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாக இருக்கிறேன் என்று பல தலைவர்கள் சொல்கிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தை திறந்து விட்டவன் நான். இந்தியப் பொருளாதாரத்தை தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்த்தவன் நான். லைசென்ஸ் ராஜ் என்று மேற்குலகப் பத்திரிகைகள் விமர்சித்த இந்தியாவை சுதந்திரப் பொருளாதார நாடாக்கிக் காட்டிக் கொண்டிருப்பவன் நான். 1.72இலட்சம் கோடி ரூபாய்கள் கற்றையாக அலையில் அடித்துச் சென்றபோது கற்சிலையாக இருந்தவன் நான் என்று காவிப் பயங்கரவாதிகள் என்மீது குற்றம் சாட்டுகிறார்கள். நான் கற்சிலை அல்ல, நான் கற்சிலை அல்ல, நான் கற்சிலை அல்ல, நான் கற்சிலை அல்ல நான்......என்று மன்மோகன் சிங் பேசிக் கொண்டிருக்கும் போது சோனியாஜீ விரைந்து வந்து அவர்காதில் "உன் தலையில் ஒரு புறா அமர்ந்திருக்கிறது. உன் தொப்பியை நாறடிக்க முன் அதை விரட்டித் தொலையய்யா!" என்றார்.

பெண்களை ஊக்குவிக்கும் ஆண்களை மந்தமாக்கும்


பெண்களே சுறுசுறுப்பாக செயற்படவும் அல்லது வேலை செய்யும் பணிமனையில் முக்கிய சந்திப்பில் சிறப்பாகச் செயற்படவும் மூளையை ஊக்குவிக்கவும் காப்பி அருந்துங்கள். புதிய ஆய்வொன்றின் முடிபு இது.

காப்பி அருந்தினால் பிரச்சனைக்குரிய நேரங்களில், வேலைகளில் பெண்கள் சிறப்பாகச் செயற்படுவார்களாம் ஆனால் பாவம் ஆண்கள் காப்பி அவர்களை மந்தமாகச் செயற்பட வைகிறதாம்.

காப்பி என்பது உலகெங்கும் மிகப் பிரபலமான பானம். பிரித்தானியாவில் மட்டும் ஒரு நாளில் ஏழு கோடி குவளைகள் காப்பி அருந்தப்படுகின்றன.

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் 64 பெண்களையும் ஆண்களயும் வைத்து ஒரு பகுதியினருக்கு அதிக கபீன் உள்ள காப்பியும் ஒரு பகுதியினருக்கு குறைந்த அளவுள்ள காப்பியும் கொடுத்து அவர்களிடம் பல பணிகள் செய்யும் படி கேட்கப் பட்டனர்.

காப்பி அருந்திய ஆண்களின் ஞாபக சக்தி குறைந்திருந்தமை அவதானிக்கப்பட்டது. கபீன் குறைந்த காப்பி அருந்திய ஆண்களிலும் பார்க்க கபீன் கூடிய காப்பி அருந்திய ஆண்கள் சில பணிகளைச் செய்ய 20செக்கண்டுகள் கூட எடுத்தனர். கபீன் கூடிய காப்பி அருந்திய பெண்கள் மற்றவர்களிலும் பார்க்க 100செக்கண்டுகள் விரைவாக செய்து முடித்தனர்.

Tuesday 1 February 2011

இனி மதுபோதையில் இருந்தால் முரண்டுபிடிக்கும் மகிழூர்தி(கார்)


மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களால் உலகெங்கும் பெரும் பிரச்சனை. நடக்கும் உயிராபத்தான விபத்துக்களில் பெரும்பாலானவை மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களால் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அமெரிக்காவில் பத்து மில்லியன் டொலர்கள் செலவழித்து நீண்டகால ஆராய்ச்சி செய்யப்பட்டது. பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் இந்த ஆராச்சியில் ஈடுபட்டன. மதுபோதை விபத்துக்களில் கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

மேற்படி ஆராச்சியின் விளைவாக Dadss என்னும் கருவி உருவாக்கப்பட்டது. Dadss என்பது Driver Alcohol Detection Systems for Safety என்பதன் சுருக்கம். இந்தக் கருவி பல்லாயிரக் கணக்கான உயிரழிவுகளைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. வாகனங்களின் ஓட்டுனரின் இருக்கையில் பொருத்தப் பட்டிருக்கும் கருவிகள் ஓட்டுனரின் தோலையும் மூச்சையும் உணர்ந்து ஓட்டுனரின் இரத்தத்தில் இருக்கும் மதுவின் அளவை தீர்மானிக்கும். இரத்தத்தில் இருக்கும் மதுவின் அளவு அபாயகரமானதாக இருந்தால் வாகனம் ஓடாது அடம்பிடிக்கும்.

Driver Alcohol Detection Systems for Safety என்னும் கருவி இப்போதும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இது பாவனைக்கு வர இன்னும் பத்து ஆண்டுகள் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Driver Alcohol Detection Systems for Safetyகருவியின் பரீட்சார்த்தமாக சென்றவாரம் பயன்படுத்தப் பட்டது. இந்த நிகழ்வில் அமெரிக்கவின் போக்கு வரத்துத் துறைச் செயலரும் கலந்து கொண்டார்.

Monday 31 January 2011

நகைச்சுவைக் கதை: ஐம்பொன்னில் செய்த எலியின் சிலை


சென்னைக்கு பயணம் செய்த இலங்கைத் தமிழர் கனகலிங்கம் அங்குள்ள பூம்புகார் கடைக்குச் சென்றார். அங்கு ஒரு ஐம்பொன்னில் செய்த எலியின் அழகிய சிலை ஒன்று விற்பனைகிருந்தது. அதன் விலை என்ன என்று ஆர்வத்துடன் வினவினார். அதன் விலை ஐந்து ரூபாக்கள் அதன் கதையின் விலை ஐயாயிரம் ரூபாக்கள் என்று பதிலளிக்கப் பட்டது. "இஞ்சை பாருங்கோ! எனக்கு உந்தக் கதை கிதை ஒண்டும்வேண்டாம். எலியை மட்டும் உந்த விலைக்குத் தாங்கோ!" என்றார் அந்த இலங்கைத்தமிழர். அப்படியே அவருக்கு அந்த எலியிலன் சிலை ஐந்து ரூபாக்களுக்கு விற்கப்பட்டது.

கனகலிங்கம் அந்த அந்தச் சிலை கையால் தடவியபடியே கடையில் இருந்து வெளியேறினார். என்ன ஆச்சரியம் அவரைத் தொடர்ந்து சுமார் நூறு எலிகள் அருகிலுள்ள சந்துக்களில் இருந்து அவரைத் தொடர்ந்தன.

கனகலிங்கத்திற்கு ஆச்சரியம் சற்று விரைவாக நடந்தார். இப்போது மேலும் சில நூறு எலிகள் அவரத் தொடர்ந்தன.

இப்போது கனகலிங்கம் ஓடத் தொடங்கினார். இப்போது ஆயிரக் கணக்கான எலிகள் அவரைத் தொடர்ந்தன.

இப்போது கனகலிங்கம் ஓர் ஆட்டோவில் ஏறி விரைந்தார். ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். இப்போது தமிழ் நாட்டில் உள்ள அத்தனை எலிகளும் அவர் பின்னால்!!!


கனகலிங்கம் ஆட்டோவை கூவம் நதிக்கு செல்லும்படி பணித்தார். கூவக்கரையில் நின்று கொண்டு மூக்கை பொத்தியபடி அந்த எலிச் சிலையை கூவத்துக்குள் வீசினார்.

இப்போது ஆச்சரியத்தின் உச்சக் கட்டம். அவர் பின்னால் வந்த அத்தனை எலிகளும் கூவத்துக்குள் பாய்ந்து இறந்து விட்டன.

இப்போது கனகலிங்கம் மீண்டும் பூம்புகாருக்குச் சென்றார். அவரைக் கண்டதும் அங்கு இப்போது எலியின் கதையை வாங்க வந்தீர்களா என்று கேட்டனர்.

"இல்லைத் தம்பி! அதே கதையோடை காங்கிரசுக்காரர் ஐம்பொன் சிலை உங்களிட்டை இருந்தா தாங்கோ. என்ன விலையெண்டாலும் தாறன்." என்றார் கனகலிங்கம்

மக்கள் பேரெழுச்சி: துனிசியாவையும் எகிப்தையும் தொடர்ந்து அல்ஜீரியாவும் லிபியாவும்!


துனிசியாவின் பிரச்சனைகளை மேற்குலக ஊடகங்கள் மூடி மறைத்தே வந்தன. பிராந்தியத்தின் படு மோசமான அடக்கு முறையாளர் ஜினி அல் அபடைன் பென் அலியை மக்கள் நாட்டை விட்டு விரட்டினர். இது திடீரென்று வெடித்த புரட்சியல்ல. தொடந்து பல காலங்களாக நடந்த மக்கள் எழுச்சி அண்மையில் பெரிதாக வெடித்தது.

துனிசியாவில் ஏற்பட்ட எழுச்சியின் முக்கிய அம்சம் இது ஒரு மத சார்பற்ற எழுச்சி. அங்குள்ள கற்றவர்களாலும் தொழிற் சங்களாலும் இப்புரட்சி முன்னெடுக்கப்பட்டது. ஒரு இசுலாமிய நாட்டில் மதசார்பற்ற எழுச்சி ஏற்பட்டது பலரையும் வியக்க வைத்தது.

துனிசியாவில் மக்கள் ஊழல் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து அரசைக் கவிழ்ததைத் தொடர்ந்து எகிப்திலும் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஊரடங்கையும் மீறி தலைநகர் கெய்ரோவில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்தனர். செய்வதறியாது ராணுவம் பின்வாங்கியது. இந்தப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் தனது அமைச்சரவையைக் கலைத்தார் முபாராக். அத்துடன், துணை அதிபரையும், புதிய பிரதமரையும் அறிவித்திருக்கிறார். இவை எதுவும் மக்களை அமைதிப் படுத்தவில்லை போராட்டங்கள் தொடர்கிறது.


அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் கெய்ரோ வீதிகளில் குவிந்து அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். முபாரக் அறிவித்த் மந்திரி சபை மக்களைத் திருப்திப் படுத்தவில்லை. அந்த மந்திரி சபை மக்கள் உடையில்(சிவில்) ஒரு இராணுவக் கும்பல் என்று மக்கள் கருதுகின்றனர்.
எகிப்தில் கிளர்ச்சியை உருவாக்கியது முஸ்லிம் சகோதர அமைப்பு என்னும் ஒரு இஸ்லாமிய அமைப்பு. இது ஒரு செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அமைப்பு. ஆனால் இது வன்முறைகளை விரும்புவதில்லை. அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலைக் கண்டித்தது இந்த அமைப்பு.

அமெரிக்காவின் தந்திரம்
எகிப்து அதிபர் ஹன்சி முபாரக் வீழ்ச்சி அடைந்தால் அது இசுலாமியத் தீவிர வாதிகளின் கைகளில் விழுந்து விடுமா என்ற அச்சம் மேற்கு நாடுகளைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது. துனிசியப் புரட்சி போலில்லாமல் எகிப்தில் நடக்கும் எழுச்சி பல கொள்ளைச் சம்பவங்கள் நிறைந்தவையாகக் காணப்படுகிறது. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி சூயஸ் கால்வாயுடாக நடக்கிறது. எகிப்தின் எழுச்சி மேற்குலக வர்த்தகர்களையும் அரசுகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்குச் சந்தைகளும் ஆட்டம் காண்கிறது. இப்போது மேற்குலக நாடுகள் எப்படி காய்களை நகர்த்தும் எனப்து பெரும் கேள்வி. நோபல் பரிசு பெற்றவரான எதிர் கட்சி அரசியல்வாதி மொஹமெட் அல் பரடெ கிளர்ச்சி செய்யும் மக்களுடன் இணைந்திருப்பது. ஒரு அமெரிக்கக் காய் நகர்த்தலாக இருக்கலாம். நோபல் பரிசு பெற்றாவர்களில் அநேகர் அமெரிக்க விசுவாசிகளே. அமெரிக்கா கிளர்ச்சிக்காரர்களுக்கோ அல்லது முபராக்கிற்கோ ஆதரவு தெரிவித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒரு அமைதியான மாற்றத்தை விரும்புவதாக அமெரிக்கா தெரிவிக்கிறது. இப்போது இருக்கும் தனக்கு விசுவாசமானவரை நீக்கி விட்டு இன்னொரு விசுவாசியை பதவிக்கு கொண்டுவருவதே அமெரிக்காவின் "அமைதியான மாற்றம்" என்பதன் பொருள். எகிப்தின் சகல அரச படைத்துறையினரும் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். அங்கு ஒரு அமைதியான மாற்றத்தை அமெரிக்கா ஏற்படுத்துவது அதற்கு இலகு.


அடுத்த மக்கள் எழுச்சி - அல்ஜீரியா
அல்ஜீரியாவை அப்துல் அசிஸ் பௌடெபிலிக்கா 1999இல் இருந்து ஆண்டு வருகிறார். 2009இல் அவர் தான் தொடர்ந்து ஆட்சி செய்யும் வகையில் அரசமைப்பை மாற்றியுள்ளார். நோயாளியான அப்துல் அசிஸ் பௌடெபிலிக்காவிற்குப் பின்னர் அவரது சகோதரர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அல்ஜீரியாவிலும் விலைவாசி அதிகரிப்பு வேலையில்லத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அல்ஜீரியாவிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிவிட்டன. ஐரோப்பியாவின் எரிபொருள் தேவையில் 20% அல்ஜீரியாவில் இருந்தே பெறப்படுகிறது. ஜனவரி 24-ம் திகதி அல்ஜீரியாவின் எதிர்கட்சியான RCD partyயின் தலமைப்பீடத்தை அரச படையினர் முற்றுகையிட்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. ஜனவரி 29-ம் திகதி பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அல்ஜீரிய அரசுக்கு எதிராக அமைதியான போராட்டம் நடத்தினர். அல்ஜீரிய அரசு துனியாவில் கவிழ்க்கப்பட்ட அரசு போலவே மக்கள் மத்தியில் செல்வாக்கற்றதாகவும் மக்களாட்சிப் பண்புகளுக்கு விரோதமானதாக இருந்தாலும் அது அவிழ்க்கப்பட்ட துனிசிய அரசு போல் மக்களுக்கு எதிராக மோசமான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடவில்லை. அல்ஜீரிய அரசு விலைகளைக் குறைத்த போதும் மக்களின் கொதிப்பு அடங்கியதாகத் தெரியவில்லை. கடந்த வாரம் எட்டுப்பேர் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக தமக்குத் தாமே தீ முட்டினர். அடுத்த வாரம் என்ன நடக்கும்?


அடுத்த மக்கள் எழுச்சி - லிபியா
1969இல் படைத் துறை ஆயுதப் புரட்சி மூலம் பதவிக்கு வந்த லிபியாவின் அதிபர் தளபதி மும்மர் கடாபி மேற்குல்கால் மிகவும் வெறுக்கப் படும் ஒரு அரச தலைவர். தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு சென்ற சொற்களில் ஒன்றான "பறையன்" என்ற சொல் கடாபிக்கு எதிராக அடிக்கடி பாவிக்கப்படும். துனிசியப் புரட்சியைத் தொடர்ந்து கடாபி சற்றுக் கலக்கமடைந்திருப்பதாகத் தெரிகிறது. அவர் துனிசியப் புரட்சி திவிரமாக நடக்கும் போது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். விக்கிலீக்கில் பகிரங்கப்படுத்த அரசதந்திரிகளின் பொய்கள் துனிசிய மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தன என்று கூறி துனிசியாவின் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட பென் அலிக்கு வக்காலத்து வாங்கினார். லிபியாவில் பாரிய மக்கள் போராட்டம் எதுவும் நடப்பதாகத் தகவல் இல்லை. சில போராட்டங்கள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன. லிபியாவில் அரசுக்கு எதிரான மக்கள் ஊர்வலங்கள் நடப்பதில்லை. ஆனால் இரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இரு மகன்களால் லிபியாவில் பிரச்சனை வரலாம் என்று கூறப்படுகிறது. மூத்த மகன் சயிf சில சீர் மக்களுக்கு சாதகமான திருத்தங்களை மேற் கொள்ள விரும்புகிறார். ஆனால் இளைய மகன் தொடர்ந்து ஒரு சர்வாதிகார அரசு இருப்பதை விரும்புகிறார். மேற்குலகின் நீண்டநாள் ஆவல் கடாபியை பதவியில் இருந்து விரட்டுவது. 1986கடாபியைக் கொல்ல அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானங்கள் முலம் குண்டு வீசினார். சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்குலகுக்கு சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கடாபி சற்று அடக்கி வாசித்து வருகிறார். இந்த மக்கள் எழுச்சிப் பரவலை மேற்கு நாடுகள் காடாபியை வீழ்த்தப் பயன்படுத்துமா?

Sunday 30 January 2011

பாக்கிஸ்த்தானிய இளைஞர்களின் துர்நடத்தைகளுக்கு பிரபுத்துவ விளக்கம்.



பிரித்தானியாவில் வாழும் பாக்கிஸ்த்தானிய இளைஞர்கள் வெள்ளை இன சிறுமிகளை பாலியல் உறவுக்கு உடபடுத்துவதாக பிரித்தானிய அரசியல்வாதியான ஜக் ஸ்ரோ அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார். அவர் பாக்கிஸ்த்தானிய இளைஞர்கள் வெள்ளை இனச் சிறுமிகளை பாலியல் "இலகு தசைகளாக" எண்ணுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இது பிரித்தானியாவில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. (Some Pakistani men look at white girls as ‘easy meat’ for sexual abuse.)

பாக்கிஸ்த்தானிய இளைஞர்களின் செய்கைகளுக்கு பிரித்தானியாவின் பிரபுக்கள் சபை உறுப்பினர் அஹமெட் புது வியாக்கியானம் அளித்துள்ளார்:
  • பல பாக்கிஸ்த்தானிய இளைஞர்கள் தங்களின் தந்தை அல்லது தாயின் சகோதரர்களின் மகள்களை கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் திருப்தி அடைவதில்லை. தங்கள் பாலியல் கேளிக்கை தேவைகளை நிறைவேற்ற வெள்ளை இனத்தைச் சேர்ந்த குறைந்த வயதுப் பெண்களை நாடுகின்றனர்.
  • வெள்ளை இன வயதுப் பெண்களை அவர்கள் நாடுவதாயின் அவர்கள் அர்த்தமான உறவைப் பேண வேண்டும். அதற்கு பணம் நேரம் போன்றவற்றை செலவழிக்க வேண்டும். இது அவர்களின் திருமணத்தை முறிக்கலாம்.

அண்மைக்காலங்களாக பாக்கிஸ்த்தானிய இளைஞர்கள் வெள்ளை இன சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பல வழக்குகள் வந்த பின்னரே இந்தச் சர்ச்சை உருவானது.

பிரபுக்கள் சபை உறுப்பினர் அஹமெட் இந்தியா பங்களாதேசத்து இளைஞர்கள் தங்களின் தந்தை அல்லது தாயின் சகோதரர்களின் மகள்களை கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுவது குறைவு என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...