Saturday 22 January 2011

காணொளி: மஹிந்தவின் அமெரிக்கப் பயணத்திற்கு எதிராக தமிழர்கள்


22-01-2011 சனிக்கிழமை மஹிந்த ராஜ்பக்சவின் அமெரிக்கப் பயணத்திற்கு எதிராகவும் அவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது என்றும் அவரை அமெரிக்கா போர் குற்றத்திற்காக கைது செய்ய வேண்டும் என்று கோரியும் பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை இலண்டனில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் நடாத்தினர்.






பொதுவாக இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டம் என்றால் கால நிலைகளையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். ஊர்வலம் என்றால் இலட்சக் கணக்கில் கூடுவர். மஹிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணத்தின் போது மிக மோசமான கால நிலையையும் பொருட்படுத்தாமல் பலர் கூடி சாதனை படைத்தனர். ஆனால் அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். சனிக்கிழமை விடுமுறை நாள், கால நிலையும் மோசமில்லை, இருந்தும் ஏன் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடவில்லை என்று பலரும் வியப்புக்குள்ளாகி உள்ளனர். குறுகிய கால எல்லைக்குள் ஒழுங்கு செய்யப் பட்டது என்று சொல்லப்பட்டாலும் வழமையில் குறுந்தகவல் மூலம் செய்திகள் பரப்பப்படும். இம்முறை எந்தக் குறுந்தகவல்களும் ஏன் வரவில்லை என்ற கேள்வி உண்டு. ஒரு மின்னஞ்சல் மட்டும் பரவியது. தமிழ் இளையோர் அமைப்பு இதை ஒழுங்கு செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் முகப்புத்தகத்தினூடாக செய்தி பரப்பப்படவில்லை! பிரித்தானிய தமிழர் பேரவையில் இருந்து சிலர் வந்திருந்தனர். இதில் இருந்து பிரித்தானிய தமிழர் பேரவை விலகி இருந்ததா?

Friday 21 January 2011

மூளைக்குப் பயிற்ச்சி முக்கியம்



உடலுக்குப் பயிற்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு மூளைக்கும் பயிற்ச்சி முக்கியம். எமது மூளை வயது போகப் போக சிறிதாகலாம். மூளை பத்து ஆண்டுகளில் 2% சிறியதாகிறது. இதை 60 வயதில் தான் நாம் உணர்கிறோம். நல்ல பயிற்ச்சி மூலம் எமது மூளைத் திறனை அதிகரிக்கலாம். உடலில் ஏற்படும் தேய்மானங்கள் போலவே மூளையிலும் ஏற்படும். எமது மூளைக்கு நாம் கொடுக்கும் பயிற்ச்சி எமது மூளையின் புலனுணர்வு இருப்பை அதிகரிக்கிறது. புலனுணர்வு இருப்பு (Congnitive Reserve) என்பது எமது மூளையின் முக்கிய அம்சம். மூளையில் அதிக நரம்பணு இருப்பு மூளையில் ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்கிறது. எமது மூளையை அதிகம் பாவிக்க பாவிக்க அதன் பலமும் அதிகரிக்கும்.

மூளைக்குக் கொடுக்கக் கூடிய பயிற்ச்சிகள்.

விரைவாக கதைக்கவும்
விரைவாகக் கதைத்தல் மூளைக்கு நல்ல பயிற்ச்சி. இது உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

நீண்ட சொற்கள் பலவற்றை மன்னம் செய்யவும்.
பல சொற்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப் பயிற்ச்சி எடுத்தல் நல்லது. நீண்ட சொற்கள் அதிக பயன் தரும்.

கைமாற்றிச் செய்யுங்கள்
நீங்கள் வலது கைகளால் செய்யும் வேலைகளை இடது கைகளாலும் இடது கைளால் செய்யும் வேலைகளை வலது கைகளாலும் அடிக்கடி செய்யுங்கள். கணனி மௌஸ், தொலைக்காட்சி ரிமோட் தொலை பேசி போன்றவற்றை கைமாற்றி இயக்கிப் பழகுங்கள்.


புதிய இடங்களுக்கு பயணம் செய்யுங்கள்

எமது முன்னோர்கள் பல இடங்களுக்கும் அடிக்கடி மாறியாதால் தான் அவர்கள் மூளை வளர்ச்சி பெற்றதாம்.

வழமைகளை அடிக்கடி மாற்றுங்கள்

தினசரி நடவடிக்கைகளை மாற்றுங்கள். வேலைக்கு போகும் வழிகளை அடிக்கடி மாற்றுங்கள். வழமையாகச் செல்லும் கடைகளை விட்டு வேறு கடைகளுக்கு செல்லுங்கள்.

கண்களை மூடிக் கொண்டு செய்யுங்கள்
ஆடை மாற்றுதல் போன்ற சாதாரண வேலைகளை கண்களை மூடிக் கொண்டு செய்யுங்கள்.

உங்களுடன் நீங்களே போட்டி போடுங்கள்
முப்பது செக்கண்களில் எத்தனை மிருகங்களின் பெயர்களை உங்களால் சொல்ல முடியும் என்று பாருங்கள். இன்று மிருகங்கள் என்றால் நாளை மரங்கள். இப்படி பலவற்றை முயற்ச்சி செய்யுங்கள்.

விளையாட்டுக்கள் நல்ல பயன் தரும்
குறுக்கெழுத்து சுடோக்கு போன்றவற்றை அடிக்கடி செய்யுங்கள்

இரு வேலைகளை ஒரேயடியாகச் செய்யுங்கள்

இசையைக் கேட்டபடி சாப்பாடு அல்லது ஒரு மலரை முகர்ந்து பாருங்கள்.

மன அழுத்தம் தரக்கூடியவற்றை தவிருங்கள்
மன அழுத்தம் உங்கள் மூளையை சிறிதாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நிறையத் தண்ணீர் குடியுங்கள்
மற்ற அவயங்களைவிட மூளை அதிக நீர் கொண்டுள்ளது. அதிக நீர் குடிப்பது மூளையை சிறப்பாகச் செயற்பட உதவுகிறது.

இறுதியாக மூளைக்கு இரத்தம் போகக் கூடிய உடற்பயிற்ச்சிகள் செய்யுங்கள். சிரசாசனம் அர்த்த சிரசாசனம் உன்னதமானது

Thursday 20 January 2011

அமெரிக்காவிற்கு ராஜபக்ச என்ன கொடுக்கப்போகிறார்?


பாவம் மஹிந்த ராஜபக்ச! உலகத்திலேயே அதிகாரம் மிக்க பதவியை வகிக்கும் அவர் பகிரங்கமாக அறிவிக்காமல் ஒரு நாட்டுக்கு கூட போக முடியாத நிலை. அவரே இதை பகிரங்கமாக அறிவித்தது அதைவிடப் பரிதாபகரமான நிலை. நேற்று (19-ம்திகதி) இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்ட மஹிந்த ராஜபக்ச எங்கு இருக்கிறார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஏன் இந்தத் தலைமறைவு?

தலைப்பாகைக்கு வந்தது தலைக்கு வரலாம் என்று தலை தெறிக்க ஓடினாரா?
மஹ்ந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாடப் போயிருந்த வேளை அவர் தலைக்கு தலைப்பாகை கட்டிக்கொண்டு பொங்கல் பானைக்குள் அரிசி போடக் குனிந்த வேளை அவரது தலைப்பாகை கழன்று பொங்கல் பானைக்குள் விழுந்துவிட்டதாம். இது அவருக்கு கூடாத சகுனம் என்று பலரும் கூறினார்களாம். அவரது சோதிடர்களின் ஆலோசனைப்படி அவர் வெளிநாட்டில் இருந்தால் நல்லது என்று அமெரிக்கா பாய்ந்தாராம் என்றும் சில செய்திகள் கூறுகின்றன.

தனிப்பட்ட பயணம் அல்ல
மஹிந்த ராஜபக்சபயணம் தனிப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால் அவருடன் இலங்கை படைத்துறையைச் சேர்ந்தவர்களும் சென்றுள்ளார்கள். தனிப்பட்ட பயணத்திற்கு படைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஏன் செல்ல வேண்டும்? அது மட்டுமல்ல மஹிந்தவுடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் ஏன் சென்றார்?

அமெரிக்கப் பிரதி அரசாங்க செயலர் மஹிந்த சந்திப்பு
மஹிந்த ராஜபக்ச அமெரிக்கா சென்றார் என்றவுடன் பன்னாட்டு மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிரந்திய இயக்குனர் சாம் ஜரிபி அவர்கள் மஹிந்த ராஜபக்சமீது போர் குற்றம் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப் படவேண்டும் என்று அறை கூவல் விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணம் செய்யமுன் முன்னாள் அமெரிக்கப் பிரதி அரசாங்க செயலர் ரிச்சர்ட் ஆ(ர்)மிரேச்சை சந்தித்தது ஏன்?

மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவின் அரச விருந்தினராக தங்க முடியாத நிலை. அவர் அரச விருந்தினராக தங்கினால் அமெரிக்கா மனித உரிமை அமைப்புக்களின் கண்டனத்திற்கு உள்ளாகலாம்.

இலங்கயில் நடந்த போர் குற்றம் தொடர்பான சாட்சியங்களை அமெரிக்கா இரு வழிகளில் திரட்டி வைத்துள்ளது. 2009-ம் ஆண்டு நடந்த போரின் போது கொல்லப்பட்ட மக்கள், அவர்களுக்கு உணவு செல்ல விடாமல் தடுத்தமை மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியமை தடை செய்யப் பட்ட குண்டுகள் வீசியமை தொடர்பாக போர் முனையில் செயற்பட்ட பல் வேறு தொண்டு அமைப்புக்கள் மூலமாக தினசரி தகவல்களை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரகம் திரட்டியுள்ளது. அத்துடன் அமெரிக்கா தனது செய்மதிகள் மூலமும் பல சாட்சியங்களைத் திரட்டியுள்ளது. இவ்வாறு இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக திரட்டியவற்றிலுருந்து தயாரிக்கப் பட்ட அறிக்கை முன்பு அமெரிக்க காங்கிரசுக்கு சமர்க்கிப்படவிருந்து அது பின் போடப்பட்டுள்ளது.

பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க காய் நகர்த்தல்கள்
கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சில திரை மறைவு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வருவிருப்பதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் நியமித்த ஆலோசனைச் சபையின் அறிக்கையும் மனித உரிமைக்கழகத்தில் சமர்ப்பிக்கப் படவிருப்பதாக இருந்தது.

இங்கு நாம் நான்கு வேறுபட்ட நிகழ்வுகளை பொருத்திப் பார்க்கவேண்டும்:
  1. முன்னாள் அமெரிக்கப் பிரதி அரசாங்க செயலர் மஹிந்த சந்திப்பு.
  2. மஹிந்தவின் அமெரிக்க பயணம்.
  3. பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க காய் நகர்த்தல்கள்.
  4. திருக்கோணாமலை துறை முகத்தில் முதலீட்டு திட்டங்களை சமர்ப்பிக்கும்படி இலங்கை துறை முக அபிவிருத்திச் சபை சென்றவாரம் விடுத்த அழைப்பு.
இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை மனதில் கொண்டு இந்த நான்கையும் பொருத்திப் பார்க்கும் போது இலங்கையை அமெரிக்கா போர் குற்றங்களை வைத்து மிரட்டி ஏதோ ஒன்றைப் பெறப்பார்கிறதா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே. திருக்கோணாமலையில் மீண்டும் அமெரிக்கா காலூன்ற முயற்சிக்கிறதா?

சீனா ஏற்கனவே அகல ஆழ இலங்கையில் காலூன்றியவேளையில் அமெரிக்காவும் வந்தால் இந்தியாவின் நிலை பரிதாபகரம்.

அமெரிக்காவின் இந்த நகர்வுகள் பற்றி ஏற்கனவே இங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் காண கிழே சொடுக்கவும்:
1. எல்லாவற்றையும் மேலிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
2. இலங்கையில் அமெரிக்காவின் அவிற்பாகம்

Wednesday 19 January 2011

சிறந்த தாம்பத்தியம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.


சிறந்த தாம்பத்திய வாழ்க்கை உங்களை இளமையாக வைத்திருப்பதுடன் ஆரோக்கிய வாழ்விற்கு வழி வகுக்கும் என்று Younger (Sexier) You என்னும் புதிய புத்தகத்தில் Dr Eric Braverman தெரிவித்துள்ளார். வயோதிபத்திற்கு எதிரான நிபுணரான (anti-ageing expert) Dr Eric Braverman சிறந்த முறையில் உடலுறவு கொள்ளும் தம்பதிகளின் உடற் செயற்பாடு (metabolism)களை ஊக்குவிப்பது, மூளை விருத்தி, சிறந்த இருதயச் செயற்பாடு, சிறந்த நோய் எதிர்ப்புத்தன்மை போன்ற நன்மைகள் உண்டாகின்றன.

சிறந்த உடலுறவு செய்து கொள்ளும் தம்பதிகளின் ஹோமோன் மட்டம் உயர்வதால் இளமையாக இருக்க உதவுகிறது என்கிறார் Dr Eric Braverman.

சிறந்த உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:
  • நோய் எதிர்க்கும் உயிரணுக்களின் உற்பத்தி 20% அதிகரிக்கிறது.
  • நல்ல தோல், பலமான எலும்புகள்.
  • prostate cancer வராமல் பாதுகாக்கிறது
  • உடல் எடை குறைக்க உதவுகிறது
  • மன அழுத்தத்தை குறைக்கிறது
  • தன்னம்பிக்கையை வளர்க்கும்
  • தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்கும்
  • நல்ல தூக்கத்தை தருகிறது
  • பெண்களின் இடுப்புத் தசைகளை பலமடையச் செய்கிறது
  • இரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது.

சிறந்த உடலுறவிற்கு உகந்த உணவுகளாக சிலவற்றை குறிபிடுகிறார்கள்: மிளகு, துளசி, சீரகம், இஞ்சி, உள்ளி, மஞ்சள், எள்ளு, சீமைப்பச்சைமிளகாய், குட மிளகாய் ( அட எல்லாம் நம்ம ஊர் சாப்பாட்டில் நிறையச் சேர்ப்போமே) இவற்றுடன் tarragon.

இந்திய அனியின் கொலைக்கான நோக்கம் அறிந்த தென் ஆபிரிக்க காவல்துறை!




சுவிற்சலாந்தில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண் அனி தனது பிரித்தானிய கணவருடன் தேன்நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றிருந்தார். 13-11-2010 இலன்று அனி அங்கு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அனி தீவானியும்(28) , இவரது கணவரான ஸ்ரயன் தீவானியும்(30) மும்பையில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

அனி திவானியின் கொலை தொடர்பாக அவரது கணவர் சொன்னது:

  • இருவரும் தங்களது தேன் நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றனர்.சனிக்கிழமை இரவு இருவரும் தங்கள் இராப்போசனத்தை முடித்துவிட்டுத் தங்கள் காரில் தங்கியிருந்த விடுதிக்கு புறப்பட்டனர்.இதன்போது அவர்களது காரை வழிமறித்த துப்பாக்கி ஏந்திய இருவர், கார் சாரதியை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
  • சுமார் 1 மணி நேர பயணத்திற்கு பிறகு ஸ்ரயனிடம் உள்ளவற்றை கொள்ளையடித்த அந் நபர்கள், அவரையும் காரிலிருந்து கீழே தள்ளி காரை அனி தீவானியை தம்முடன் கடத்திச்சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க பொலிஸார் தேடல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
  • அதன்போது அனி தீவானியின் சடலம் சுடப்பட்ட நிலையில் அவர்கள் பயணம் செய்த காரின் பின் இருக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேரிப்பகுதியொன்றில் கார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை அடையாளம் காண இலண்டன் திரும்பிய ஸ்ரயன் தீவானியை அழைத்தனர். ஆனால் ஸ்ரயன் தீவானி தென் ஆபிரிக்கா செல்லவில்லை. மேற் கொண்டு விசாரணை செய்த காவல்துறையினர் ஸ்ரயன் தீவானிதான் இந்தக் கொலைக்கான ஏற்பாட்டை செய்தார் என்று தெரிவித்தனர். ஸ்ரயன் தீவானியின் ஆதரவாளர்கள் கொலைக்கான நோக்கம் என்ன என்று அறியாமல் ஸ்ரயன் தீவானிமீது கொலைக்குற்றம் சுமத்தப் படுத்துவதை எதிர்த்தனர்.

இப்போது ஸ்ரயன் தீவானி தன் மனைவியைக் கொலை செய்தமைக்கான நோக்கத்தை தாம் அறிந்துள்ளதாகவும் அதை பிரித்தானிய நீதிமன்றில் 20-01-2011இலன்றி சமர்ப்பித்தி ஸ்ரயன் தீவானியை தென் ஆபிரிக்காவிற்கு நாடுகடத்தும் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியப் பத்திரிகைகளில் அனியின் கொலை தொடர்பான பல வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. வெறுவாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்த மாதிரி.

ஸ்ரயன் தீவானிக்கு எதிரான சாட்சியங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று அவருக்கும் கொலைச் சந்தேக நபருக்கும் இடையில் நடந்த கைப்பேசி குறுந்தகவல் பரிமாற்றம். மற்றது. அனி இறந்த பின் ஸ்ரயன் தீவானி கொலைச் சந்தேக நபருக்கு பணம் கொடுத்தமைக்கான காணொளிப்பதிவு. ஒரு பத்திரிகை கூலிக் கொலையாளிகள் முழுக்கூலியையும் முன்கூட்டியே வாங்கிவிட்டித்தான் கொலை செய்வார்கள் என்று தெரிவித்து காணொளிப்பதிவில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

காவல்துறை அதிபரின் முட்டாள்தனம்.
தென் ஆபிரிக்க காவல்துறை அதிபர் காவல் துறைப் பயிற்ச்சி இல்லாத ஒரு முனாள் அரசியல்வாதி. இவர் ஆரம்பத்தில் ஸ்ரயன் தீவானியை இலண்டனில் இருந்து வந்த் குரங்கு என்று குறிப்பிட்டார். ஸ்ரயன் தீவானி சட்டவாளர் தென் ஆபிரிக்க காவல் துறை அதிபர் ஏற்கனவே ஸ்ரயன் தீவானியை விசாரித்து குற்றவாளியாக்கிவிட்டார் என்று குறிப்பிடுகிறார். நாளை இலண்டன் நீதிமன்றில் தென் ஆபிரிக்க காவல்துறை அதிபர் பற்றி கடுமையான விமர்சனக்களை எதிர்பார்க்கலாம். அனி கொல்லப்பட்ட நாலாம் நாள் தென் ஆபிரிக்க காவல்துறை அதிபர் ஸ்ரயன் தீவானி ஒரு சந்தேக நபர் அல்லர் என்று வலியுறுத்தினார். பின்னர் தான் பொய் சொன்னதாகக் கூறினார்.

அனியின் கண்ணீர் வாழ்க்கை.
கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன் தனது சிநேகிதிக்கு அனி அனுப்பிய குறுந்தகவலில் "அழுவது எனது பொழுது போக்கு" என்று தெரிவித்துள்ளார். அனியின் சிநேகிதி இந்த தகவலை பிரித்தானிய பத்திரிகைக்கு வழங்கினார். இதற்கு பணம் பெற்றாரா அந்த சிநேகிதி?

தந்தையின் முரண்பட்ட தகவல்கள்
அனியின் தந்தை வினோத் ஹிண்டோசாவின் தகவலின் படி கொலை செய்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அனி தந்தையுடன் தொலை பேசியில் உரையாடினார். எனது மகள் அவள் போல் இருக்கவில்லை. எனக்குச் சொல்ல நிறைய இருக்கிறது என்றாள் என் மகள். இப்படிச் சொன்னார் அனியின் தந்தை. - Vinod Hindocha said that Anni 'wasn’t herself' when she called to say: 'Dad, I have so much to tell you. I'll be home on Tuesday and I'll have so much to tell you.'ஆனால் முன்னர் தனது மகள் தென் ஆபிரிக்கவில் மகிழ்ச்சியாக இருந்ததாக தந்தை தெரிவித்திருந்தார்.

நாளை இலண்டன் நீதி மன்றம் சர்ச்சைக்குரியதாகப் போகிறது

Tuesday 18 January 2011

நகைச்சுவைக் கதை: பிரதம மந்திரி சோனியா காந்தியைச் சந்திக்கலாமா?



இந்தியப் பாராளமன்றத்திற்கு ஒரு வயோதிபர் சென்றார். அவரை மறித்த கவலாளியிடம் நான் எமது நாட்டின் பிரதம மந்திரியான சோனியா காந்தியை சந்திக்கலாமா என்று கேட்டார். அதற்கு கவலாளி சோனியா காந்தி பிரதமர் அல்ல என்றான். வயோதிபர் சென்றுவிட்டார்.

மறுநாளும் அதே வயோதிபர் வந்து நான் எமது நாட்டின் பிரதம மந்திரியான சோனியா காந்தியை சந்திக்கலாமா என்று கேட்டார். அதற்கு கவலாளி சோனியா காந்தி பிரதமர் அல்ல என்றான். வயோதிபர் சென்றுவிட்டார்

அடுத்த நாளும் அதே வயோதிபர் வந்து நான் எமது நாட்டின் பிரதம மந்திரியான சோனியா காந்தியை சந்திக்கலாமா என்று கேட்டார். அதற்கு கவலாளி சோனியா காந்தி பிரதமர் அல்ல என்றான். வயோதிபர் சென்றுவிட்டார்.

அடுத்த நாளும் அதே வயோதிபர் வந்து நான் எமது நாட்டின் பிரதம மந்திரியான சோனியா காந்தியை சந்திக்கலாமா என்று கேட்டார். கவலாளிக்கு கடும் கோபம் வந்து விட்டது. உனக்கு இதே வேலையா போய் விட்டதா? என் உயிரை ஏன் எடுக்கிறாய்? என்று பாய்ந்தான். அதற்கு அந்த வயோதிபர் "சோனியா காந்தி பிரதமர் அல்ல என்று உன் வாயால் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா மகனே . இதை ஒவ்வொரு நாளும் உன் வாயால் கேட்க வேண்டும்." என்றார்.

xxxxxxxxx

சவுதி அரேபியாவில் ஒரு சவுதி அரேபியனும் ஒரு இந்தியனும் ஒரு இலங்கையனும் ஒரு பாக்கிஸ்த்தானியனும் ஒன்றாக நடந்து கொண்டிருந்தனர். அவர்களை ஒரு நிரூபர் மறித்து "மன்னிக்கவும், உணவுத் தட்டுப்பாடு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன" என்று கேட்டார்.

முதலில் மூவரும் திரு திரு என விழித்தனர்.

தட்டுப்பாடு என்றால் என்ன என்றான் சவுதி அரேபியன்.
சாப்பாடு என்றால் என்ன என்றான் இந்தியன்
கருத்துத் தெரிவிப்பது என்றால் என்ன என்றான் இலங்கையன்
மன்னிக்கவும் என்றால் என்ன என்றான் பாக்கிஸ்த்தானி.

Monday 17 January 2011

நகைச்சுவை: ஆட்சி முறைகளும் கலைஞர் ஆட்சியும்


ஒவ்வொரு விதமான ஆட்சியிலும் மக்கள் வாழ்க்கை வெவ்வேறுவிதமாக இருக்கும்.

மதவாதிகளின் ஆட்சி: உங்களிடம் இரு பசுக்கள் இருந்தால் நீங்கள் கடவுளுக்கு ஒரு பகுதி பால் கொடுக்க வேண்டும் என்று சொல்லி சகலதையும் பிடுங்கிக் கொள்வார்கள்.

பாசிசவாதிகளின் ஆட்சி: உங்களிடம் இரு பசுக்கள் இருந்தால் அதை அரசு கையகப் படுத்திக் கொள்ளும். அப் பசுக்களை நீங்கள் பராமரிக்க வேண்டும். அரசு உங்களுக்கு பால் விற்பனை செய்யும்.

மக்களாட்சி: உங்களிடம் இருக்கும் பசுவையும் பாலையும் என்ன செய்வதென்பதை உங்கள் அயலவர்கள் வாக்களிப்பு மூலம் முடிவு செய்வர்.

சர்வாதிகார ஆட்சி: உங்கள் பசுக்களை அரசு பறித்துவிட்டு உங்களைக் கொன்று விடும்.

சிங்கப்பூர் பாணி ஆட்சி: உங்களிடம் இரு பசுக்கள் இருந்தால் தொடர் மாடிவீட்டில் பசு வைத்திருந்தமைக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

இலங்கை ஆட்சி: தமிழ் பசுவாக இருந்தால் உயிருடன் புதைபடும். சிங்களப் பசுக்கள் மீது சவாரி செய்யப்படும்.

அமெரிக்க ஆட்சி: நீங்கள் வாக்களித்தால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இரு பசுக்கள் தருவதாக வாக்குறுதி அளிப்பார். தேர்தலில் வென்ற பின் அவர் பசுக்களை வாங்குவார். அவர் அதில் புரிந்த ஊழல் cowgate என்று பத்திரிகைகள் எழுதிப் பெரும் பணம் சம்பாதிக்கும். யாருக்கும் பசு கிடைக்காது.

இத்தாலிச் சனியன் ஆட்சி: நாட்டில் உள்ள பசுக்கள் யாவற்றையும் அரசு பொறுப்பேற்று 1.72இலட்சம் கோடி நட்டத்திற்கு விற்பனை செய்யும்.

பிரித்தானிய ஆட்சி: உங்கள் பசுக்களுக்கு பன்றி இரத்தத்தில் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை தனியார் நிறுவங்கள் விற்பனை செய்து பெரும் பணம் சம்பாதிக்கும். உங்கள் பசுக்களுக்கு பைத்தியம் பிடிக்கும்(mad cow desease ). அரசு இவற்றைப்பற்றி எல்லாம் கவலைப் படமாட்டாது.

பெண்ணியவாதிகளின் ஆட்சி: இருபசுக்களும் திருமணம் செய்து கொண்டு ஒரு பசுக்கன்றைத் தத்தெடுத்துக் கொள்ளும். பாலைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். கன்றுக்கு புட்டிப்பால்.

பாக்கிஸ்த்தான் ஆட்சி: பசுக்களைக் கொன்று தின்ன வேண்டும் என்று அரசு உத்தரவிடும் இந்தியர்களை ஆத்திரப்படுத்த.

கலைஞர் ஆட்சி: குன்றுகள் போல் வாழ்ந்த தமிழினத்திற்கு கன்றுகள் இரண்டு இலவசம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞர் சொல்லிடுவார். பிறகு சிலருக்கு பசுக்கன்றுகள் வழங்கப்படும். பசுக்களை வைத்து அவ்வப்போ கலைஞருக்கு பாராட்டு விழா நடாத்த வேண்டும். பசுக்களை வைத்துப் பராமரிக்க வீடுகளை விற்க வேண்டிவரும்.

Sunday 16 January 2011

சிரி கதைகள் - பூதாக்கலம், அமரர் ஊர்தி


உணவுகளால் ஏற்படும் பாதகங்களைப் பற்றிய மாநாடு நடந்து கொண்டிருந்தது. இறைச்சி வகைகளை உண்பதால் ஏற்படும் பாதங்களைப்பற்றி ஒருவர் விளக்கினார். மரக்கறிவகைகளில் உள்ள மோசாமான இரசாயனப் பசளைகளால் உள்ள பாதகங்களைப்பற்றி இன்னொருவர் விளக்கினார். குடிக்கும் தண்ணீரில் உள்ள கிருமிகளைப்பற்றி இன்னொருவர் விளக்கினார். இறுதியில் ஒரு மனிதனுக்கு நீண்டகால பாதகம் தரக்கூடிய உணவு எது என்று கேள்வி வந்தது. ஒரு இந்துப் பெண் சொன்னார் தனது வாழ்வில் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்திய சாப்பாடு தனது திருமணத்தின் போது சாப்பிட்ட பூதாக்கலம் என்றார். ஒரு கிருத்தவப் பெண் தனது திருமணத்திலன்று சாப்பிட்ட wedding cake என்றார்.
xxxx
அது ஒரு புதிய வாடகைக்கார். அதில் ஏறி ஒரு பயணி பெருமையுடன் பயம் செய்து கொண்டிருந்தார். அடுத்த சந்தியில் காரை நிறுத்தச் சொல்லிக் கேட்பதற்க்காக அவர் ஓட்டுனரின் தோளில் மெதுவாகத் தட்டினார். ஓட்டுனர் பெரும் பதட்டப்பட்டு காரை மிக வேகமாகச் செலுத்தி தெருவில் இருந்த கடைக் கதவை இடித்து கடைக்குள் கார் புகுந்து பெரும் களேபரம். நல்ல வேளை ஓட்டுனருக்கோ பயணிக்கோ பெரும் காயம் ஏற்படவில்லை. பயணி ஓட்டுனரைக் கேட்டார் நான் செய்தது உனது தோளில் மெதுவாகத் தட்டியதுதானே. அதற்கு ஏன் இந்த களேபரம். ஓட்டுனர் பதில் சொன்னார் இது தானய்யா பழக்க தோசம் என்பது. 14 வருடங்களாக அமரர் ஊர்தி ஓட்டிக் கொண்டிருந்த நான் இன்று தான் வாடகைக்கார் ஓட்ட வந்தேன். பின்னால் இருந்து சடலம் ஒருநாளும் தோளில் தட்டுவதில்லை.

xxxx

சிகை அலங்கரிப்பவர்கள் சிறந்த வாகனச் செலுத்துனர்கள். ஏன் தெரியுமா? அவர்களுக்குத்தான் நிறைய short cut தெரியும்.

xxxxx
உலகமே ஒரு நாடக மேடையாம்!! அப்போ பார்வையாளர்கள் எங்கு அமர்ந்திருக்கிறார்கள்???

அடேங்கப்பா இந்தியாவிற்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?


தந்தி அடித்த கலைஞர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஆனந்தராஜ் 12.01.2011இலன்று கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்து கடலில் இருந்து தப்பி வந்தவர்கள் இலங்கைக் கடற்படைதான் அவர்களை சுட்டதாகச் சொன்னார்கள். கலைஞர் கருணாநிதி வழமை போல் கடிதம் எழுதாமல் தந்தி அடித்தார் இந்தியப் பிரதம மந்திரிக்கு.

சிங்களக் கைக்கூலிகளின் கூச்சல்
தமிழ் மீனவர் கடலில் வைத்து சுடப்படுவது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பும் பல தடவை சுடப்பட்டனர். யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சோ போன்ற பார்ப்பார பயலுகள் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள் சுடுவதாக பொய்ப் பரப்புரகளும் செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகள் மீனவர்கள் எல்லையைக் கடந்து இலங்கைக் கடலுக்குள் செல்லும் போது அவர்களைச் சிங்களக் கடற்படையினர் கொல்கிறாரகள். சிங்களவனுக்கு அந்த உரிமை இருக்கிறது என்று வாதிடுவதும் உண்டு. ஒரு நாட்டு குடிமகன் தன்னாட்டு எல்லையைக் கடந்து மற்ற நாட்டுக்குச் செல்லும் போது அவரைக் கொல்வது இல்லை கைது செய்வது தான் வழக்கம். இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கும் போதுதான் எல்லை தாண்டுபவர் சுட்டுக் கொல்லப்படுவர். இந்திய பாக்கிஸ்த்தானிய எல்லையிலும் பார்க்க அதிக இந்தியர்கள் இலங்கை இந்தியக் கடல் எல்லையில் கொல்லப்படுகிறார்கள். தமிழ் மீனவர்களை இந்திய மத்திய அரசு இந்தியர்களாகக் கருதுவதில்லையா? அல்லது இந்திய மத்திய அரசின் அதிகாரிகள் பலரும் பார்ப்பனர்காளாக இருப்பதால் மீனவர்கள் கொல்லப்படுவதை அவர்கள் விரும்புகிறார்களா?

இந்தியக் கைக்கூலிகளின் பொய்ப்பரப்புரை
தமிழ்நாட்டு மீனவர் கொல்லப்படுவதைப் பற்றி இந்திய மத்திய அரசு பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் இந்த முறை இந்திய வெளியுறவுத்துறையினர் இலங்கையின் டில்லிக்கான தூதுவரை அழைத்து மீனவர் சுடப்பட்டது தொடர்பாகதமது கரிசனையை வெளியிட்டது. உடனே இந்தியப் பேரினவாதிகளின் கைக்கூலி ஊடகங்கள் இலங்கைக்கு இந்தியா கண்டனம் என்று பொய்ப்பரப்புரை செய்தன. அரச தந்திர மொழியில் கரிசனைக்கும் கண்டனத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

சிங்களவர்களின் கைக்கூலியாக இந்தியா
1986இற்கு பின் கிட்டத்தட்ட இலங்கையின் கைக்கூலியாகவே இந்தியா செயற்பட்டு வருகிறது. 1983இல் இலங்கை திருக்கோணாமலை துறைமுகத்தில் அமெரிக்கா காலடி வைக்க முற்பட்ட போது இந்தியா கொதித்தெழுந்து தமிழர்கள் தலையில் ஏறி இலைங்கையை வழிக்குக் கொண்டுவந்தது. இன்று இலங்கையில் பல பகுதியில் சீனா ஆழ அகலக் காலூன்றிய போது இந்தியா தனது உதவிகளையும் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலையில் இலங்கையின் கைக்கூலியாகச் செயற்படுகிறது.

அம்பலத்தில் வேறு!! அந்தரங்கத்தில் வேறு!!!
இப்படி இலங்கைக்கு பயந்து செயற்படும் இந்தியா திடீரென்று இலங்கைத் தூதுவரை அழைது "கரிசனையை" வெளியிட்டது ஏன்? தமிழ்நாட்டில் இந்த வருடம் வரும் தேர்தலை ஒட்டியதா? தமிழ்நாட்டு வாக்கு இப்போது காங்கிரசுக்கு தேவைப்படுகிறது. இதனால்தான் இந்த கரிசனை வெளிப்பாடா? அல்லது இலங்கைக்கு கரிசனை விடுவது போல் சும்மா பவ்லா காட்டிவிட்டு திரைமறைவில் நீ விரும்பியபடி தமிழ் மீனவர்களைக் கொன்று குவிக்கலாம் என்று தெரிவித்துள்ளதா? 2008-2009இல் போர் நிறுத்தம் வலியுறுத்துவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே இந்தியா தமிழர்களை கொன்று குவிக்க சகல உதவிகளையும் செய்தது. இந்த இந்தியாவின் இரட்டை வேடத்தை மீனவர் ஆனந்தராஜின் கொலைச் சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி அவர்கள் வசம் இருந்த இறால் மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல் போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவர்களின் வலைகளை கடலில் வீசிவிட்டு சென்று இருக்கின்றனர்.

மீண்டும் திருமலையில் அமெரிக்கா?
இலங்கை இப்போது திருக்கோணாமலை துறை முகத்தை மீண்டும் அபிவிருத்தி என்ற போர்வையில் ஒரு வெளிநாட்டுக்கு கொடுக்கத்தயாராகி வருகிறது. இலங்கையின் துறைமுக அபிவிருத்திச் சபை திருக்கோணாமலையின் அபிவிருத்திக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்களை தருமாறு முதலீட்டாளர்களை கேட்டுள்ளது. அமெரிக்கா கடந்த சில மாதங்களாக இலங்கையின் போர் குற்றம் தொடர்பாக கரிசனை காட்டி வருகிறது. அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவை சரிக்கட்ட இலங்கை அதற்கு இலங்கையின் திருக்கோணாமலையைக் கொடுக்க விருக்கிறதா? அமெரிக்காவிற்கு இலங்கையின் சீன ஆதிக்கத்திற்கு சமமான ஒரு ஆதிக்கத்தை நிலைநாட்ட இலங்கை ஏதாவது செய்யாவிட்டால் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக பன்னாட்டு அரங்கில் ஏதாவது செய்யும். இதை உணர்ந்து தான் இந்தியாவின் மீனவர் கொலை தொடர்பான கரிசனை வெளிப்பாடா?

சவால் விடும் இலங்கை
இலங்கை ஒன்றும் இந்தியாவின் கரிசனையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக சாட்சியத்தை சமர்ப்பிக்கவும் என்று சவால் விட்டுள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...