Friday 2 December 2011

கைப்பேசிகளில் தகவல் திருடும் செயலி (application) - வழக்குத் தொடர ஆலோசனை

The Carrier IQ என்னும் அமெரிக்க நிறுவனம் Android, BlackBerry, Apple and Symbian ஆகிய smartphoneகளில் இரகசியமாக புகுத்தியுள்ள செயலி(application) படு மோசமானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 140மில்லியன் கைப்பேசிகளின் இந்த The Carrier IQஇன் செயலி(application) புகுத்தப்பட்டுள்ளது.

இந்த The Carrier IQஇன் செயலி(application)  நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் கைப்பேசியை அழுத்தும் போதும் சகல தகவல்களையும் The Carrier IQ நிறுவனம் பெற்றுக் கொள்ளும். இந்தச் செயலி உங்கள் சொந்த விபரங்கள் அனைத்தையும் திருடும் வல்லமை கொண்டதுடன் உரையாடல்கள், குறுந்தகவல்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை அறியும் திறனும் கொண்டது.

நொக்கியா, பிளக்பெரி ஆகிய நிறுவனங்கள் தங்கள் கைப்பேசிகளில் இந்த The Carrier IQஇன் செயலி(application) இல்லை என்று சொல்கின்றது. ஆப்பிள் நிறுவனம் தங்கள் கைப்பேசிகளில் இனி இந்தச் செயலி இருக்காது என்று கூறியுள்ளது.

Carrier IQநிறுவனம் தமது செயலி கைப்பேசிகளின் செயற்படு திறன்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே சேகரிக்கும். கைப்பேசிப் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் சட்டவியலாளர்கள் Carrier IQவின் செயல் சட்ட விரோதமானது கைப்பேசிப் பாவனையாளர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர முடியும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

 Carrier IQ என்பது என்ன?
Carrier IQ is software that comes per-installed on certain hand-held devices. It collects usage data that mobile operators and device manufactures analyze so they can make hardware, network and service improvements, according to Carrier IQ. It runs all the time and cannot be turned off, although it can be removed by unlocking the phone and gaining administrator access, which typically voids the warranty.

Carrier IQ நிறுவனம் தாம் மூன்று செயற்பாடுகளை மட்டுமே செய்வதாக அடித்துக் கூறுகின்றனர்.Three of the main complaints we hear from mobile device users are (1) dropped calls, (2) poor customer service, and (3) having to constantly recharge the device.

ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ முகவேட்டின் மூலமாக பல தகவல்களைச் சேகரிப்பதாக அதிலும் குறிப்பாக எகிப்தியப் புரட்ச்சிக்குப் பின்னர், குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எகிப்திய மக்களின் எழுச்சி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ முன்கூட்டியே அறிந்திருக்காதது அமெரிக்க ஆட்சியாளர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எகிப்த்தியர்களின் முகவேட்டுப் பக்கங்களை சாதாரணமாக பார்த்திருந்தாலே எகிப்தியப் புரட்சியை எதிர்வு கூறியிருக்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...