Wednesday 2 November 2011

முள்ளி வாய்க்கால் உன் முடிவல்லத் தமிழா

சிந்து நதிக்கரை உருவானது
தென் பொதிகையில் தவழ்ந்தது
குமரி முனையையும் கடந்தது
கதிர மலையிலும் கமழ்ந்தது
தமிழா உன் குடும்பம் பெருமைக்குரியது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்

கங்கையும் கொண்டது
கடாரமும் வென்றது
கலிங்கத்தைக் கலங்கடித்தது
சிங்களத்தைச் சிதறடித்தது
தமிழா உன் குடும்பம் வீரம் விளைத்தது

முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்

கலைகள் அறுபத்து  மூன்று கொண்டது
ஏற்றம் மிகு இலக்கணம் கொண்டது
பொது மறையை வையகத்திற்குத் தந்தது

தமிழா உன் குடும்பம் அறிவு நிறைந்தது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்


 

வேற்றுமையை வேரோடு அறுத்திடு
புல்லுருவிகளைப் புறக்கணித்திடு
ஒன்று பட்டு பலத்தை வளர்த்திடு
தமிழா உன் குடும்பம் மேன்மை பெற்றிடும்
முள்ளி வாய்க்கால் உன் குடும்பத்தின்
முடிவல்லத் தமிழா

1 comment:

Shanmugam Rajamanickam said...

அருமைங்க.....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...