Sunday 23 October 2011

இலங்கைக்கு அமெரிக்கா போடும் தூண்டில்கள்


இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை அமெரிக்கா தொடர்ந்து அவதானித்து வருகிறது. இதை இந்தியாவால் சமாளிக்க முடியாமல் இருப்பதையும் அமெரிக்கா அறியும். இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள் இதியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்கள் குடும்பத்தின் எதிர் காலத்தைப் பற்றித்தான் அவர்களது கவலை. இந்தியா ஆட்சியாளர்களின் ஆலோசகர்களுக்கு தங்கள் சாதி நலன்களை முன்வைத்துச் செயற்படுகின்றனர். தமிழன் என்பவன் சூத்திரன் அவன் ஆளப்படவேண்டியவன்; அவன் ஆளக்கூடாது என்பதில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இலங்கையின் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை அடக்க சீனாவின் உதவி சிங்களவர்களுக்கு அதிகம் தேவை என்று உணர்ந்து அவர்கள் இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை அடக்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கோட்டை விடவும் தயாராகினர். விளைவு அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் அமைப்பதை இந்தியா அனுமதித்தது. 2009இல் இந்திய படைத்துறை ஆய்வாளர்கள் கேர்ணல் ஹரிகரன், பி. ராமன் போன்றோம் அம்பாந்தோட்டையில் சீன துறை முகம் கட்டுவதையிட்டு இந்தியா கவலைப்படத் தேவையில்லை பகிரங்கமாக எழுதினர். ஆனால் பல பன்னாட்டு படைத்துறை ஆய்வாளர்கள் அம்பாந்தோட்டை இந்தியாவிற்கு எதிராக சீனா முத்து மாலை என்ற பெயரில் போடும் சுருக்குக் கயிறு என்று எழுதினர். ஹரிகரனதும் ராமானினதும் கூற்றுப் பிழையானவை என 2010இலேயே உணரப்பட்டுவிட்டது. இது தொடர்பான பதிவை இங்கு காணலாம்: http://veltharma.blogspot.com/2010/11/blog-post.html

சீனா தனது பிடியை இலங்கையில் மெல்ல மெல்ல இறுக்கி வருகிறது. இப்போது இலங்கையில் சீன செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சீனர்கள் இருப்பதாக லங்கா ஈ நியூஸ் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் செம்படை உறுப்பினர்களும் சிறைக்கைதிகளும் ஆவர்கள்.

2009-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு அதிக கடனுதவி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. வீதி அபிவிருத்திக்கு 1.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது. உதவித் தொகையாக 2.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது.
CHINA has emerged as Sri Lanka's biggest single lender in 2009, overtaking the World Bank and the Asian Development Bank, the treasury said on Wednesday. China lent US$1.2 billion to build roads, a coal power project and a port in the island's south last year, more than half the total of US$2.2 billion in foreign aid in 2009.
Project loans accounted for US$1.9 billion of the total, with another US$279.6 million in grants, the treasury said ahead of the 2010 budget.

உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு இந்து சமுத்திரத்தின் ஊடாக நடை பெறுகிறது என்பதை சீனா உணர்ந்து இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை வலுவாக்கிவருகிறது.

இந்தியா தொடர்ந்தும் இலங்கையில் சீன ஆதிக்க வளர்ச்சியை கண்டு கொள்ளாமல் இருக்க அமெரிக்கா இது தொடர்பாக கரிசனை கொண்டுள்ளது.

2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை இது பற்றிக் குறிப்பிடுகையில்:
  • Today, a shifting world order is bearing new fruits for Sri Lanka. Most notably, China’s quiet assertion in India’s backyard has put Sri Lanka’s government in a position not only to play China off against India, but also to ignore complaints from outside Asia about human rights violations in the war.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை தனது துருப்புச் சீட்டாக அமெரிக்கா பாவித்து இலங்கையைத் தன் வழிக்குக் கொண்டுவரும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. அமெரிக்கா இலங்கைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள்:
  • இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தைப் பற்றிய விசாரணை தேவை என அமெரிக்க கூறுகிறது.
  •  அமெரிக்கா இப்போது கனடாவையும் ஒஸ்ரேலியாவையும் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக அக்கறை காட்ட வைத்துள்ளது. 
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அமெரிக்கவிற்கு அழைத்துப் பேச்சு வார்த்தை நடாத்துகிறது.

இலங்கைக்கு அமெரிக்கா போடும் தூண்டில்கள்:
  • இலங்கைக்கான ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை நீடித்தது.
  • அமெரிக்க மக்களவை உறுப்பினர்கள் மூவரை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை சாந்தப்படுத்துகிறது.

அமெரிக்க மக்களவை உறுப்பினர்கள் தங்கள் பயணத்தின் நோக்கத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டனர்:
  • இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை அதிகம் கவலையை ஏற்படுத்துகிறது. 
  • இலங்கையுடனான அரசியல், படைத்துறை மற்றும் வர்த்தக ரீதியிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதன் ஊடாகவே இலங்கையில் சீனாவின் தலையீட்டைக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.புவியியல் ரீதியாக இலங்கையில் அமைவிடம் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இலங்கை மீதான கவனத்தை அமெரிக்கா இழக்கவில்லை.
இக்கூற்றுக்கள் மூலம் அமெரிக்கா இலங்கையில் தனக்கு ஒரு வர்த்தகச் சுரண்டல் தேவை என்றும் சீன ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதிகிறது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மறைமுகப் பொருள் இவை நடக்காவிட்டால் போர்க்குற்றத்தை இலங்கை ஆட்சியாளர்கள் சந்திக்க வேண்டிவரும் என்பதாகும். ராஜபக்சேக்கள் இந்தியாவை ஏமாற்றுவது போல் அமெரிக்காவை ஏமாற்ற முடியுமா?

16 comments:

ஓசூர் ராஜன் said...

இறுதிப் போர் நடக்கும் வரை,சீன ஆதிக்கத்தை தடுக்கவாவது அமெரிக்கா ஈழப் பிரச்சனையில் தலையிடும்,தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை தேசியத்தலைவருக்கு இருந்ததாக அறிந்தேன். அமெரிக்கா போன்ற ஆதிக்க சக்திகள்,தமிழர்களைப் போன்ற தொன்மையான கலாச்சார இனஅழிப்பு, முயற்சிகளுக்கு ஆதரவாக உள்ளதால் ஈழ மக்களின் படுகொலைகளை வேடிக்கை பார்த்தது!

ஓசூர் ராஜன் said...

இறுதிப் போர் நடக்கும் வரை,சீன ஆதிக்கத்தை தடுக்கவாவது அமெரிக்கா ஈழப் பிரச்சனையில் தலையிடும்,தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை தேசியத்தலைவருக்கு இருந்ததாக அறிந்தேன். அமெரிக்கா போன்ற ஆதிக்க சக்திகள்,தமிழர்களைப் போன்ற தொன்மையான கலாச்சார இனஅழிப்பு, முயற்சிகளுக்கு ஆதரவாக உள்ளதால் ஈழ மக்களின் படுகொலைகளை வேடிக்கை பார்த்தது!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...