Friday 14 October 2011

கவிதை: தராசு ஒன்று இங்கு சிதைபட்டுக் கிடக்கிறது


செல்கின்ற இடம்
எதுவென்று தெரியவில்லை
செல்ல வேண்டிய இடமும்
எதுவென்று புரியவில்லை
வழிநடத்திச் செல்ல இங்கு
யாருமே இல்லை
வழிகாட்டி வந்தோரும்
வழிவிட்டுப் போயினர்
காக்கவென வந்தோர்
கழுத்தறுத்துப் போயினர்
உடன் வருபவர்களில்
வழிப்பறித் திருடர் யார்?
கால் வாரி விடுபவர் யார்?
பயங்கரமான வழி இது
புதிரான பயணம் இது
தராசு ஒன்று இங்கு
சிதைபட்டுக் கிடக்கிறது.


 தெரு விளக்காய் நின்று
திரு விளக்காய் போனவர்க்கு
ஒரு விளக்கேற்ற
ஏன் இத்தனை குளறுபடி?

1 comment:

Anonymous said...

We share ur Sorrows...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...