Friday 30 September 2011

கவிதை: இதயத்துள் ஆழ ஊடுருவும் அணி


உன் இமை மடல்களின் அசைவுகளில்
என் இதயத்துக்கு எழுதும் மடல்கள்
பார்வைகளின் உரசல்களில்
உணர்வுகள் தீப்பிடிக்கின்றன
எண்ணங்கள் எதையோ தேடிக்
கண்டம் விட்டு கண்டம் பாய்கின்றன
மதி மயக்கத்தில் இதம் தேடி
மதியுடனோர் செய்மதித் தொடர்பு
கலாச்சாரங்களின் கண்டனங்கள்
கட்டுப்பாடுகளின் அணைக்கட்டுக்கள்
நாணக் காப்பரண்கள் தகராதோ
இதயத்துள் ஆழ ஊடுருவும் அணி
களமிறங்காதோ கரந்தடிக்காதோ

2 comments:

Anonymous said...

மதி மயக்கத்தில் இதம் தேடி
மதியுடனோர் செய்மதித் தொடர்பு
கலாச்சாரங்களின் கண்டனங்கள்
கட்டுப்பாடுகளின் அணைக்கட்டுக்கள்

இனிய வரிகள்....

Anonymous said...

கவிதை நன்று நண்பரே...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...