Thursday 8 September 2011

நகைச்சுவைக் கதை: கடவுள் அனுப்பிய காசைச் சுட்ட மோகன் மன்சிங்

அவன் ஒரு ஏழு வயதுச் சிறுவன். உலகத்தில் உள்ள மொத்த வறியவர்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இந்தியாவில் பிறந்ததால் அவன் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்குச் சேரவேண்டிய பணம் அவன் பிறப்பதற்குப் பல நாட்களுக்கு முன்னர் இருந்தே கொள்ளை அடிக்கப்பட்டு சுவிஸ் வங்கியில் இருக்கிறது.

அந்த ஏழு வயதுச் சிறுவனுக்கு தனது வறுமையைத் தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி தனக்கு ஆயிரம் ரூபாக்கள் அனுப்பும் படி எழுதினான். கடவுள் எங்கும் நிறைந்தவர் என்று அவன் அடிக்கடி கேள்விப்பட்டதால் கடவுள், இந்தியா என்று விலாசமிட்டு அனுப்பினான்.

கடிதத்தைப் பார்த்த தபால் துறையினர் அதனால் மனம் நெகிழ்ந்து அந்தக் கடிதத்தை மோகன் மன்சிங்கிற்கு அனுப்பினர். மோகன் சிங் அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு அந்தச் சிறுவனுக்கு ஆயிரம் ரூபாக்களை  அனுப்பினால் அவன் பணக்காரன் ஆகிவிடுவான் என்று பயந்து இரு நூறு ரூபாக்களை மாட்டும் அனுப்பி வைத்தார்.

சிறுவனிற்கு பணம் கிடைத்தது. சிறுவன் கடவுளுக்குப் பதில் கடிதம் எழுதினான். "கடவுளே எனக்குப் பணம் அனுப்பியமைக்கு நன்றி. நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாக்களை டெல்லிக்கூடாக அனுப்பினீர்கள். அவர்கள் வழமை போலவே அதில் எண்ணூறு ரூபாக்களைச் சுட்டுவிட்டு எனக்கு இருநூறை மட்டும் அனுப்பினார்கள்."

 
நன்றி: newsforindia




 அவன் ஒரு வழிப்பறித் திருடன். அவன் தொழிலுக்கு அன்றிரவு சென்றது ஒரு சிவப்பு விளக்குப் பகுதி. அங்கு ஒரு தெருவில் ஒரு கதர் வேட்டிக்காரன் தான் அன்றிரவு அவனுக்கு அகப்பட்டான். அவன் கழுத்தில் கத்தியை வைத்தபடி உன் பணம் முழுவதையும் எடு என்றான். அதற்கு அந்தக் கதர் வேட்டிக்காரன் என்னை யாரென்று நினைத்தாய் நான் ஒரு மந்திரி என்றான். அப்போது திருடன் உன்னிடம் இருக்கும் எனது பணம் முழுவதையும் உடனடியாகக் கொடு என்றான்.

சிக்கிபிடியா என்ற ஒரு இனவெறி நகைச்சுவைக்கு பெயர் போன இணையத்தளம் ஒன்றில் இப்படி ஒரு நகைச்சுவை:

இலண்டனுக்கு புதிதாக வந்து குடியேறிய பாக்கிஸ்தான் இளைஞன் ஒருவன் தனக்கு உடலும் மனமும் சரியில்லை என்று மருத்துவரிடம் சொன்னான். அதற்கு மருத்துவர் நீ ஒரு வாளியை எடுத்து அதற்குள் முதலில் மலம் கழி பின்னர் அதற்குள் நாறிய மீனையும் அழுகிய கோவாவையும் போடு. அப்படியே அதை ஒரு வாரம் மூடி வைத்திருந்து விட்டு பின்னர் அதை முகர்ந்தபடி ஒரு மணித்தியால இரு. எல்லாம் சுகமாகும் என்றார். அவனும் அப்படியே செய்தான். அவனது மனமும் உடலும் சுகமானது. மருத்துவரிடம் மகிழ்ச்சியாக அவன் தான் சுகம் பெற்றதைச் சொல்லி இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றான் அந்தப் பாக்கிஸ்தானிய இளைஞன். அதற்கு மருத்துவர் நீ வீட்டு ஏக்கம் (home sick) நோயால் பீடிக்கப்பட்டுள்ளாய் என்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...