Friday 2 September 2011

கவிதை: ஒன்றைப் பார்த்து ஒன்றையே தேர்ந்து ஒன்றிலேமுடிவது காதல்

நெஞ்சில் நினைவுகளின்
சுற்றி வளைப்புக்கள்
ஆசைகளின் ஆக்கிரமிப்புக்கள்
முடிவுறாத் தேடல்கள்
நெஞ்சில் அணையாத்தீயாகின

பலதைப் பார்த்து
ஒன்றை தேர்வதல்ல காதல்
ஒன்றைப் பார்த்து
ஒன்றையே தேர்ந்து
ஒன்றிலேமுடிவது காதல்



ஒவ்வொரு நாளும் பூக்கும்
புதுப் பூக்கள் போல்
புதுப் புது வார்த்தைச் சரசங்கள்
புதுப்புது உணர்வுப் பரிமாற்றங்கள்
தேங்கி எங்கும் நிற்காது
என்றும் ஓடும் நதியே காதல்.


அணைக்க அணைக்க எரியும்
அணைப்பிலே புரியும்
உணர்வுகளின் உச்சக்கட்ட
வெப்பச் சங்கமமே காதல்

வந்த வழியிழந்து
நின்ற இடம் மறந்து
உன்பாதை நீ போக
என்பாதை நான்போகப்
பிரிவதில்லை காதல்
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு நிகழ்வும்
நெஞ்சில் நிலைத்து
நினைவாய் இனிப்பது காதல்

தூரங்கள் தொலைந்து
இடைவெளிகள் மறைந்து
காற்றுக்கும் இடமின்றி
காற்றோடு காற்றாய்
கனவோடு கனவாய்க்
கலக்கும் காதல்

3 comments:

Anonymous said...

வந்த வழியிழந்து,
நின்ற இடம் மறந்து,
உன்பாதை நான் போக,
என்பாதை நான்போகப்,
பிரிவதில்லை காதல்,
ஒவ்வொரு கணமும்,
ஒவ்வொரு நிகழ்வும்,
நெஞ்சில் நிலைத்து,
நினைவாய் இனிப்பது காதல்

superrrrrr

Anonymous said...

புறத்தில் தெரிந்தது
அகத்தில் நுழைந்தது
உடலில் கலந்தது
பின்,
உயிரில் பிறந்தது காதல்...
மனித உயிரில் பிறந்தது காதல்...

பி.அமல்ராஜ் said...

வந்த வழியிழந்து
நின்ற இடம் மறந்து
உன்பாதை நான் போக
என்பாதை நான்போகப்
பிரிவதில்லை காதல்//

அருமையான கவிதை நண்பா..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...