Wednesday 20 July 2011

நகைச்சுவைக் கதை: சோனியாவின் கடிகாரம்

குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் சிதம்பரம் கொல்லப்பட்டார். அவர் யம லோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். யம லோகத்தில் சித்திர புத்திரனார் அன்று சற்று ஓய்வாகக் காணப்பட்டார். அதனால் அவர் சிதம்பரத்துடன் ஆறுதலாகப் பலவற்றையும் பற்றி உரையாடினார். சிதம்பரம் தான் சித்திரபுத்திரனாரின் பணிமனை முழுவதையும் சுற்றிப்பார்க்க விரும்புவதாகக் கூறினார். சித்திரபுத்திரனாரும் கருணை கூர்ந்து அவரது விருப்பத்திற்கு சம்மதித்தார். சித்திரபுத்திரனாரின் பணிமனைக்குச் சென்ற சிதம்பரத்திற்கு ஒரே ஆச்சரியம் அங்கு கோடானு கோடிக் கணக்கான கடிகாரங்கள் இருந்தன. அவற்றை உற்று நோக்கிய சிதம்பரத்திற்கு மேலும் ஆச்சரியிம். ஒவ்வொரு கடிகாரங்களும் வேறு வேறு கதியில் ஓடிக் கொண்டிருந்தன. பல மிக விரைவாகவும் சில விரைவாகவு ஓடிக்கொண்டிருந்தன. இது என்ன கடிகாரங்கள் இவை ஏன் வேறுபட்ட வேகங்களில் ஓடுகின்றன என்றார் சிதம்பரம். அவை ஒவ்வொன்றும் பூமியில் வாழும் ஒவ்வொரு மானிடர்களினதும் ஆயுளைக் குறிக்கின்றன. அது சரி ஏன் பல வேகமாக ஓடுகின்றன என்று வினவினார் சிதம்பரம். ஒவ்வொரு மானிடனும் பொய் சொல்லும் போது அவை வேகமாக ஓடுகின்றன என்றார் சித்திரபுத்திரனார். அப்போது சிதம்பரத்திற்கு தனது எசமானி அம்மா சோனியாவின் கடிகாரத்தைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. தனது ஆசையை மெல்ல சித்திர புத்திரனாரிடம் தெரிவித்தார் சிதம்பரம். "ஓ அதுவா? அதை நான் எனது ஆசனத்தின் மேல் பூட்டியுள்ளேன். அது மிக வேகமாக கடந்த சில ஆண்டுகளாக ஓடுவதால் அதை கூரை மின் விசிறியாக(Ceiling Fan) நான் பாவிக்கிறேன்" என்றார் சித்திர புத்திரனார்.(யாவும் கற்பனையே)

5 comments:

Unknown said...

இதான் நிதர்சனமும்

Anonymous said...

hm athu sari... athanaal thaan un inathalaivan (pirapagaran)viraivaaga sentruvittaro?

Unknown said...

கற்பனை என்றாலும் யதார்த்தமான மிகவும் சுவையான கற்பனை.

Unknown said...

Correctly said, Nice imagination but comes close to reality. When will god save India and Tamil Community from this Sonia group

Unknown said...

Anonymous said...
இது மாதிரி அனோணிகளிக்கு எம்மின தலைவன் பற்றி கதைக்க அருகதை இல்லை. அது போன்றே பதிலளிக்க வேண்டியதுமில்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...