Saturday 16 July 2011

இலங்கையின் "நாய்க் கொலை மக்களாட்சியும்" இந்தியாவும்.

எங்கெங்கு என்றென்று
தமிழ்த் தேசியம் தலை துாக்குகிறதோ
அங்கங்கே அன்றன்றே
ஆரியப் பேய்கள் தலையிட்டு
தமிழ்த் தேசியத்தை அடக்கும்
தமிழனை அழித்தொழிக்கும்
அநியாயத்தை நிலை நாட்டும்


பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான காணொளிப்பதிவு இந்தியாவில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து இந்தியாவில் சிலருக்கு இலங்கையின் நடந்த அட்டூழியங்கள் தெரியவந்துள்ளன. இது தொடர்பாக முதலில் இந்தியா கருத்துக் கூற ம|றுத்தது. பின்னர் இந்தியாவின் சில மக்களிடையே இது தொடர்பான கரிசனை ஏற்படத் தொடங்கியதை அடுத்து இந்தியாவின் அரச மட்டத்தில் இருந்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது. "கொழும்பு முரண்பாடுகளை பரீட்சிக்க வேண்டும்" என்று இதியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
An Indian foreign ministry spokesman in New Delhi said Colombo must examine the controversy.
"The sequence of events during the last days of the conflict is unclear (and) the government of Sri Lanka would need to go into the matter in greater detail," the foreign ministry said in a statement on Friday.
"The concerns that are being expressed in this regard need to be examined," it added. என்று செய்திச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
  இந்தியாவில் ஆளும் கட்சி மந்திரிகள் மட்டத்தில் கருத்துக்கள் எதுவும் வெளிவிடப்படவில்லை. முதலில் நிருபாமா ராவ் சனல்-4 காணொளி தொடர்பாக கருத்துக் கூற மறுத்திருந்தார்.  கருத்துத் தெரிவித்திருந்தால் அடுத்த முறை இலங்கை போகும்போது "கவனிப்பு" குறைந்து விடும் என்ற பயமா?

கருத்து வெளிவிட்ட இந்திய அதிகாரி ஒரு பன்னாட்டு மட்ட விசாரணையைக் கோரவில்லை. இலங்கையில்தான் விசாரணை மேற்கொள்ளப் படவேண்டும் என்கிறார். இந்தியாவில் செங்கம்பள வரவேற்புப் பெற்ற இலங்கை அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச இலங்கையில் ஒரு அப்பாவிப் பொது மகன் தன்னும் கொல்லப்படவில்லை படையின் போரில் ஈடுபடும் போது ஒரு கையில் ஆயுதமும் மறுகையில் மனித உரிமை பற்றிய புத்தகத்தையும் வைத்துக் கொண்டுதான் செயற்பட்டனர் என்கிறார். அது மட்டுமல்ல இலங்கையில் போர்க்குற்றம் நடக்கவுமில்லை அங்கு எந்த ஒரு படைவீரன் தன்னும் தண்டிக்கப் படமாட்டான் என்றும் சூளுரைத்துள்ளார். இப்படி இருக்கையில் இலங்கையில் இலங்கையில் எப்படி நீதிவிசாரணை நடக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

 இலங்கையின் "நாய்க் கொலை" மக்களாட்சி
இந்தியாவின் பகவதியின் தலைமையில் நியமித்த விசாரணைக்குழுவிற்கு என்ன நடந்தது என்று இந்தியாவிற்கு தெரியாதா? இலங்கையில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் எல்லாம் பயனற்றும் போனதை பல மனித உரிமை அமைப்புக்கள் பல முறை சுட்டிக்காட்டியதை இந்தியா அறியாதா? இலங்கையில் இறந்த தமிழரின் கிரியை நடந்த இடத்தில் நாய்களைக் கொன்று போடுவதும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீட்டு வாசல்களில் நாய்களை கொன்று உடல் வேறு தலை வேறாகப் போடுவதும் தான் இலங்கையின் மக்களாட்சி. இப்படிப்பட்ட இலங்கையில் நீதியான விசாரணை நடக்கும் என்று இந்தியா நம்புகிறது.

இந்தியா பயப்படுகிறதா?
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் இந்தியாவின் உதவியுடன் நடத்தப் பட்ட போர். இந்தியாவிற்காக இலங்கை நடாத்திய போர் என்று இலங்கை அரச மட்டத்தில் பல தடவை தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு மட்டத்தில் ஒரு விசாரணை நடந்தால் இலங்கையின் இனக்கொலையில் இந்தியாவின் பங்களிப்பு வெளிவந்துவிடும் என்று இந்தியா பயப்படுகிறதா?

1 comment:

RJ Dyena said...

sattappadi post..............

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...