Tuesday 19 April 2011

நடந்ததை நினைத்து அழவில்லை முடிந்தது என்று சிரிக்கிறேன்


குறுங்கவிதைகள்

இன்றையப் பொழுதை நீ நடத்து
தவறவிடும் போது
நாளையப் பொழுது உன்னை நடத்தும்.

குப்புற விழுந்தாலும்
உன் நகர்வு
முன் நோக்கியதே
பின்புறம் விழுந்தாலும்
உன் பார்வை மேல் நோக்கியதே.

விடா முயற்ச்சி என்பது
நீ மட்டும் ஓடும் அஞ்சலோட்டம்
தடிகள் மட்டும் மாறிக்கொள்ளும்.

படிப்பவர்கள் மூளைசாலிகளா
மூளைசாலிகள் படிப்பார்களா
கோழியா முட்டையா

வாழ்கையில் வந்ததேன்
இதயத்தில் புகுந்ததேன்
இடையில் விலகியதேன்
நடந்ததை நினைத்து அழவில்லை
முடிந்தது என்று சிரிக்கிறேன்

2 comments:

Anonymous said...

last lines are really good

vijay said...

migavum arumai!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...