Tuesday 19 April 2011
நடந்ததை நினைத்து அழவில்லை முடிந்தது என்று சிரிக்கிறேன்
குறுங்கவிதைகள்
இன்றையப் பொழுதை நீ நடத்து
தவறவிடும் போது
நாளையப் பொழுது உன்னை நடத்தும்.
குப்புற விழுந்தாலும்
உன் நகர்வு
முன் நோக்கியதே
பின்புறம் விழுந்தாலும்
உன் பார்வை மேல் நோக்கியதே.
விடா முயற்ச்சி என்பது
நீ மட்டும் ஓடும் அஞ்சலோட்டம்
தடிகள் மட்டும் மாறிக்கொள்ளும்.
படிப்பவர்கள் மூளைசாலிகளா
மூளைசாலிகள் படிப்பார்களா
கோழியா முட்டையா
வாழ்கையில் வந்ததேன்
இதயத்தில் புகுந்ததேன்
இடையில் விலகியதேன்
நடந்ததை நினைத்து அழவில்லை
முடிந்தது என்று சிரிக்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
2 comments:
last lines are really good
migavum arumai!
Post a Comment