Sunday 10 April 2011

சோனியா காந்தியின் கூற்றைப் பொய் என்கிறது கொழும்பு ஊடகம்


காங்கிரசு அரசு தான் இலங்கையில் 2008/09 இல் தான் போரை நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வெளியில் பொய் சொல்லிக் கொண்டு திரை மறைவில் இலங்கையுடன் சேர்ந்து இனக் கொலையை செய்தது யாம் அனைவரும் அறிந்தது. இப்போது சோனியா காந்தி புதிதாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்.

சென்னையில்2011 ஏப்ரல் 5-ம் திகதி நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசியது:
  • தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் கண்ணியமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியல் சட்டத்தில் செய்ய வேண்டு மென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருகிறது. இப்பிரச்னையில் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்யும்.
சோனியா காந்தியின் இந்தக் கூற்றி கொழும்பில் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டெய்லி மிரர் பத்திரிகையின் வாசகர்: நீ இப்படித்தான் பகிரங்கமாகக் கூறுவாய். திரை மறைவில் நீ சொல்வதும் செய்வதும் உன்னை யாரென்பதை உணர்த்தும்.

இப்படி ஒருவர் எழுதினார்: Shame you are the only one with a shallow mind and rotten brain.

எல்லாவற்றிற்கும் மேலாக ஞாயிறுப் பத்திரிகை ஒன்றில் சோனியா காந்தியின் பொய் பற்றி எழுதிய ஓர் அரசியல் விமர்சகர் கடுமையாக சோனியா காந்தியைச் சாடியுள்ளார்:
  • According to Sonia Gandhi, current President of India’s ruling Congress Party, ‘India is pressing Sri Lanka to amend the constitution to guarantee and ensure equal rights and equal status to Sri Lankan Tamils’. Now I know that politicians are not the most informed people on earth and I know that power not only corrupts, it makes people arrogant and stupid, but on all counts, this statement really puts Ms. Gandhi into serious contention for the Dumbest Gaffe Award, except of course for the danno-danithi clause.
அந்த அரசியல் விமர்சகர் கூறியவை:
  • சோனியா காந்தி விபரமறியாதவர்.
  • அதிகாரமுள்ளவர்கள் ஊழல் செய்பவர்களாகவும் ஆணவம் கொண்டவர்களாகவும் முட்டாள்களாகவும் இருப்பர்.
  • சோனியா காந்தி உலக மகா முட்டாள் விருதுக்கு தகுதியுடையவர்.
பாவம் சோனியா காந்தி. இப்படி மாட்டிக் கொண்டாரே.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...