Saturday 30 April 2011

இந்தியாவிற்கு கேடு வருமா? காங்கிரசுக்கு கேடு வருமா?


இந்தியா பல பொய்களைச் சொல்லிக் கொண்டு இலங்கைக்கு இனக்கொலைக்கான எல்லா உதவிகளையும் செய்தது.

தமிழர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது பற்றி இந்தியாவின் பொய்.
இலங்கைப் பிரச்சனைக்கு படைத்துறைத் தீர்வு இல்லை என்று அடிக்கடி வெளியில் பொய் சொல்லிக் கொண்டு இலங்கையில் ஒரு படைத்துறைத் தீர்வுக்கான எல்லா உதவிகளையும் இந்தியா செய்து வந்தது. இலங்கை போரிலிருந்து அமைதிக்கு’ என்ற புத்தகம் ஒன்றை நிதின் கோகலே என்பவர் எழுதியுள்ளார். அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் இரகசியமாக உதவியது என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியக் கடற்படை அளித்த முக்கியமான புலனாய்வு தகவல் காரணமாகவே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் நிற்கும் இடம் பற்றிய தகவல்கள் இலங்கைக் கடற்படைக்குத் தெரிய வந்தது என்றும், பன்னிரண்டுக்கும் அதிகமான ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் நிதின் அதில் கூறியுள்ளார்.

இலங்கைக்கு ஆயுத உதவி இல்லை என்ற இந்தியாவின் பொய்
இலங்கைக்கு தான் ஆயுத உதவி வழங்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இலங்கைக்கு ஆயுத உதவிகளையும் இலங்கைப் படையினருக்கான் பயிற்ச்சிகளையும் இந்தியா வழங்கி வந்தது. கிழக்கு இலங்கையில் உள்ள கருணா குழுவின் பயிற்ச்சி முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தபோது அதில் ஒரு இந்தியப் படைத்துறையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார்.

இலங்கையில் சமாதானம் வேண்டும் என்ற பொய்
இலங்கையில் சமாதானம் வேண்டும் என்று அடிக்கடி கூறிவந்த இந்தியா போரின் போது தனது படைகளை இரகசியமாக இலங்கைக்கு அனுப்பி போரில் நேரடியாக ஈடு படவைத்தது. சார்க் மநாட்டுக்கு இலங்கை சென்ற இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க 3,000 மேற்பட்ட இந்தியப் படைகள் இலங்கை சென்றனர். அவர்கள் சென்றதன் நோக்கம் வேறு. போரின் போது ஈழத்துக்குள் பின்கதவால் நுழைந்த கொலை வெறி நாய்களின் தொகை 20,000 இற்கு மேல்.

போர் நிறுத்தக் கோரிக்கைப் பொய்
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு இந்தியா இலங்கைக்கு போருக்கான எல்லா உதவிகளையும் செய்தது. 2009 மே மாதத்திற்கு முன்னர் போரை முடிக்கக்கூடிய வகையில் போரைத் தீவிரப் படுத்தும் படி திரை மறைவில் இந்தியா இலங்கையை வலியுறுத்தி வந்தது. சிவ் சங்கர் மேனன், எம் கே நாராயணன், பிரணாப் முகர்ஜி போன்றோர் போரை தீவிரப்படுத்தி விடுதலைப் புலிகளின் அழித்தொழிப்பை எப்படி போரை விரைவில் முடிப்பது எப்படி என்பவை பற்றி இலங்கைக்கு ஆலோசனை வழங்கவே இலங்கைக்கு தமிழர்களுக்கு எதிரான போர் நடந்த வேளை அடிக்கடி இலங்கை சென்று வந்தனர். காங்கிரசு ஆட்சியின் நோக்கம் 2009 மே இந்தியப் போருக்கு முன்னர் இலங்கைப் போரை முடிக்க வேண்டும் என்பதே.

இனக்கொலைப் பொய்
1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தை அப்போதைய பாரதப் பிரதம மந்திரி இந்திரா காந்தி ஒரு இனக்கொலை எனக் கூறினார். இந்தியச் சட்டவாளர்கள் அவையும் (Indian Bar Association) அதை ஒரு இனக் கொலை என்றே கூறியது. அன்று கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000. ஆனால் இலங்கையில் இறுதிப் போரில் 300,000தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய பொதுவுடமைக் கட்சியுன் உறுப்பினர் திரு ராஜா அவர்கள் மாநிலங்கள் அவையில் உரையாற்றும் போது இலங்கையில் நடந்தது இனக்கொலை எனக் கூறினார். அவர் பாவித்த இனக் கொலை என்னும் பதத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி உத்தரவிட்டார் அவைத் தலைவர். மாநிலங்கள் அவையில் பெரிய பூசணிக்காய் ஏன் சோற்றில் மறைக்கப் பட்டது?

ஐநா மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவின் பொய்.
இலங்கையில் நடந்த இறுதிப் போரில் மனித உரிமை மீறப்பட்டது என்பதால் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் ஐரோப்பிய நாடுகளால் கொண்டுவரப்பட்டபோது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றியது. அங்கு உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி இலங்கை பயங்கரவாதத்தை ஒழித்தமையைப் பாராட்டிப் பொய் பேசினார். அவர் கூறியது பொய் என்பதை இலங்கைப் போரில் நடந்தவை தொடர்பாக பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை தெள்வு படுத்துகிறது. அது மட்டுமல்ல ஐநாவின் இலங்கைக்கான் வதிவிடப் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் அவர்கள் இலங்கை இலங்கைப் போரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய உளவாளிகள் இருந்தமையால் இந்தியாவிற்கு அங்கு நடந்த போர்க் குற்றம் பற்றி நன்கு தெரியும் என்றார்.

இத்தனை பொய்களையும் சொல்லி 300,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளின் கொலைக்கு காரணமாகியது இந்தியா.பொய் சொல்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி ஔவ்வையார் இப்படிக் கூறுகிறார்:

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

ஔவையார் சொன்ன இத்தனை கெடுதலும் இந்தியாவை ஆளும் காங்கிரசுக்கு வருமா? அல்லது அநியாய ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழாத இந்திய மக்களிற்கு வருமா?

2 comments:

Karan said...

It's very obvious and most of the people in tamil nadu know about this. But still we are sitting idle and reading very often that indian fishermen are attacked by srilankan navy. It's a shame. Good Post buddy.

Anonymous said...

பாஸ் போரை நடத்தியதே இந்தியா தானே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...