Tuesday 12 April 2011

நகைச்சுவைக் கதை: நரகத்தில் இத்தாலிச் சனியாள்


இத்தாலிச் சனியாள், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகிய மூவரும் இறந்து நரகத்திற்குப் போனார்கள். அங்கு அவர்கள் நிறைய கோழிக் குஞ்சுகள் இருக்கும் ஒரு தோட்டத்தில் அடைத்துவிடப்பட்டனர். மூவருக்கும் பெரும் கவலை தமக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று. அங்குள்ள காவலன் அவர்களுக்கு சொன்னான் நீங்கள் இங்கு உள்ள கோழிக் குஞ்சுகளை மிதிக்காமல் இருக்கும் வரை உங்களுக்கு எந்த விதமான தண்டனையும் கிடையாது.

எங்கு பார்த்தாலும் கோழிக்குஞ்சுகள். ஆனாலும் இத்தாலிச் சனியாள், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகிய மூவரும் கவனமாக இருப்பதாக முடிவெடுத்தனர். ஆனால் மறு நாளே அங்குள்ள தொலைக் காட்சியில் தாளம் படப்பாடல்கள் ஒளிபரப்பானதைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ஐஸ்வர்யா ராய் ஒரு கோழிக் குஞ்சை மிதித்து விட்டார். உடனே அவர் இடி அமீனுடன் ஒரு தனி அறையில் வைத்துப் பூட்டப்பட்டார்.

ஒரு வாரம் இத்தாலிச் சனியாளும் தீபிகா படுகோனும் மிகக் கவனமாக இருந்தார்கள். ஆனால் உடம்பு முழுவதும் மறைக்கும் ஆடையை அணியும் அவர்களுக்குக் கொடுத்த போது தீபிகா படு கோபத்தில் துள்ள ஒரு கோழிக் குஞ்சு மிதிபட்டது. தீபிகா மா ஓ சே துங்குடன் ஒரு அறையில் வைத்துப் பூட்டப்பட்டார்.

இப்போது சனியாள் மிகக் கவனமாகத் தான் இருந்தார். ஒரு கோழிக் குஞ்சு கூட மிதிபடவில்லை. ஆறு மாதங்கள் ஓடியது. ஒரு நாள் திடீரென சனியாள் ஹிரித்திக் ரோஷனுடன் வைத்து ஒரு தனியறையில் பூட்டப் பட்டார். மகிழ்ச்சி தாங்க முடியவில்ல சனியாளுக்கு. ஹிரித்திக் ரோஷன் கவலையுடன் சொன்னார் இரு கோழிக் குஞ்சுகளை ஒரேயடியாக மிதித்து விட்டேன்.

2 comments:

rajamelaiyur said...

Good joke . . . By www.kingraja.co.nr

Anonymous said...

இந்தப் பாணியில் வேறு கதைகளும் உண்டு. ஆனால் வித்தியாசமாக பாத்திரங்களை வைத்து வித்தியாசமாக எழுதியது நன்றாக இருக்கிறது

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...