Tuesday 8 March 2011

அடுத்த வாரம் பூமிக்கு மிக நெருக்கமாக வரும் சந்திரன்-ஆபத்தானதா?


அடுத்த வாரம்(மார்ச் 19) சந்திரன் பூகிக்கு மிக அண்மையாக வருகிறது. சந்திரன் அப்போது பூமியில் இருந்து 354,507கி. மீ அல்லது 221,567மைல்கள் தொலைவில் இருக்கும். இதனால் பூமியில் சில அனர்த்தங்கள் ஏற்படலாம் என சில விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இப்படி பூமிக்கு அண்மையாக சந்திரன் 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் வந்தது. 1974-ம் ஆண்டு பூமிக்கு மிக அண்மையில் சந்திரன் வந்தபோது டார்வின் எனப்பெயரிடப்பட்ட சூறாவளி அவுஸ்திரேலியாவைத் தாக்கியது. 2005இல் வந்தபோது சுனாமி ஏற்பட்டுப் பேரழிவு நிகழ்ந்தது என்று கூறி சில சோதிடர்கள் அபாயச் சங்கொலி ஊதுகின்றனர்.

சில விஞ்ஞானிகள் மேற்படி நிகழ்வுகள் சந்திரனுடன் தொடர்பற்றவை என்று சொல்கின்றனர். பூமியில் நடக்கும் எந்த ஒவ்வொரு நிகழ்வையும் வானில் உள்ள உடுக்கள், கிரகங்கள், உபகிரகங்களின் நிலைகளுடன் சம்பந்தப்படுத்தலாம் ஆனால் அவற்றிற்கிடையில் எந்த விஞ்ஞான பூர்வ தொடர்பும் கிடையாது என்கின்றனர். பூமிக்கு மிக அண்மையில் சந்திரன் வரும்போது வழமைக்கு மாறானசில கடற்பெருக்கு ஏற்படலாம் என்கின்றனர் அவர்கள். மற்றும் படி அழிவு ஏற்படும் என்பதை அந்த விஞ்ஞானிகள் மறுக்கின்றனர்.

நம்ம சோதிடர்கள் நடந்ததின் பின்னர் தங்கள் வசதிக்கு ஏற்ப அதற்கான விளக்கம் தருவார்கள் எதையாவது சம்பந்தப்படுத்தி.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...