Tuesday 8 February 2011
ஆருயிரென அணைத்தவன் ஆருடைய உயிரென்கிறான்!!
புரியக் கடினமானதால் புதிராய் இருப்பதால்
மென்பொருளும் வன்பொருளுமிருப்பதால்
தேவைப்படும் வேளை முரண்டு பிடிப்பதால்
பெண்ணே நீயும் கணனி போலடி
வாக்குறுதிகள் தந்ததால் வரிசைகள் கொண்டு வந்ததால்
ஊர்கூடி இணைந்ததால் ஊர்வலம் போனதால்
விருந்துகள் படைத்ததால் பின்னர் அம்போ என விட்டதால்
எம் திருமணமும் அரசியல் தேர்தல் போலடி
அன்று என்னை ஆருயிர்
என்று அணைத்தவன்
இன்று என் வயிற்றில் இருப்பது
ஆருடைய உயிர் என்கிறான்.
நாளொன்றில் இருந்தன
இனிய இருபத்தி நான்கு மணித்தியாலங்கள்
வாரமொன்றில் இருந்தன
இனிய ஏழு நாட்கள்
வருட மொன்றில் இருந்தன
இனிய ஐம்பத்திரெண்டு வாரங்கள்
திருமணத்தின் முன்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
1 comment:
நாளொன்றில் இருந்தன..
இனிய இருபத்தி நான்கு ..மணித்தியாலங்கள்..
வாரமொன்றில் இருந்தன..
இனிய ஏழு நாட்கள்..
வருட மொன்றில் இருந்தன..
இனிய ஐம்பத்திரெண்டு வாரங்கள்..
திருமணத்தின் முன்...
அனுபவமோ????
Post a Comment