Friday 4 February 2011

இதயத்தில் ஒரு வலி


என் இதயத்தில் இன்று நீ
ஒரு வலியாகத்தன்னும்
இருப்பதும் ஒரு சுகம்

அடங்காப் பசி
ஆணவத்தின் உணவகத்தில்
சாப்பிடப் போனவர்கள்
என்றும் பசியாறுவதில்லை

பொய்யும் உண்மையும்
அரசியல்வாதிளின் மானத்தில் அரைவாசி
அவர்கள் சொல்லும் பொய்களால் போகும்
மிகுதியாய் இருக்கும் அவர் மானம்
அவர்கள் பற்றிய உண்மைகளால் போகும்

பயங்கரவாதம்
அரசியலைச் சுத்தமாக்க
செய்ய நாம் நினைப்பதெல்லாம்
அரச விரோதச் செயலாம்.

வாழ்வு
இறப்பு வேண்டாம் என்றால்
முதுமை வேண்டுமா?
நல்ல ஆயுள் ஒரு கொடை
நீண்ட ஆயுள் கடும் தண்டனை

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

துனுக்கு கவிதைகள் அருமை
வாழ்த்துக்கள்..

mangalesh said...

கவிதைகள் அருமை...............

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...