Tuesday 1 February 2011

இனி மதுபோதையில் இருந்தால் முரண்டுபிடிக்கும் மகிழூர்தி(கார்)


மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களால் உலகெங்கும் பெரும் பிரச்சனை. நடக்கும் உயிராபத்தான விபத்துக்களில் பெரும்பாலானவை மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களால் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அமெரிக்காவில் பத்து மில்லியன் டொலர்கள் செலவழித்து நீண்டகால ஆராய்ச்சி செய்யப்பட்டது. பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் இந்த ஆராச்சியில் ஈடுபட்டன. மதுபோதை விபத்துக்களில் கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

மேற்படி ஆராச்சியின் விளைவாக Dadss என்னும் கருவி உருவாக்கப்பட்டது. Dadss என்பது Driver Alcohol Detection Systems for Safety என்பதன் சுருக்கம். இந்தக் கருவி பல்லாயிரக் கணக்கான உயிரழிவுகளைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. வாகனங்களின் ஓட்டுனரின் இருக்கையில் பொருத்தப் பட்டிருக்கும் கருவிகள் ஓட்டுனரின் தோலையும் மூச்சையும் உணர்ந்து ஓட்டுனரின் இரத்தத்தில் இருக்கும் மதுவின் அளவை தீர்மானிக்கும். இரத்தத்தில் இருக்கும் மதுவின் அளவு அபாயகரமானதாக இருந்தால் வாகனம் ஓடாது அடம்பிடிக்கும்.

Driver Alcohol Detection Systems for Safety என்னும் கருவி இப்போதும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இது பாவனைக்கு வர இன்னும் பத்து ஆண்டுகள் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Driver Alcohol Detection Systems for Safetyகருவியின் பரீட்சார்த்தமாக சென்றவாரம் பயன்படுத்தப் பட்டது. இந்த நிகழ்வில் அமெரிக்கவின் போக்கு வரத்துத் துறைச் செயலரும் கலந்து கொண்டார்.

1 comment:

Anonymous said...

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...