Saturday 4 December 2010

தலிபான்களை அடக்க அமெரிக்காவின் புதிய துப்பாக்கி


ஆப்கானிஸ்த்தானில் தலிபான்களை அடக்குவதற்கென்று புதிய ரக துப்பாக்கிகளை அமெரிக்காஅறிமுகப்படுத்தியுள்ளது. XM25 Counter Defilade Target Engagement System அல்லது smart grenade launcherஎனப் பெயரிடப்பட்டுள்ள தோளில் சுமந்து செல்லக்கூடிய எறிகுண்டு செலுத்தித் துப்பாக்கிகள் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் கணனியும் பொருத்தப்பட்டுள்ளது. லேசர் தொழில் நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒளிந்து கொண்டிருந்து தாக்குதல் நடாத்தும் தலிபான்கள் மீது தாக்குதல் நடாத்த விமானப்படையே பயன்படுத்தப் படுகிறது. இது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக பல ஆண்டுகள் திட்டமிட்டு smart grenade launcher உருவாக்கப்பட்டுள்ளது இது 25மில்லிமீற்றர் குண்டுகளை 700 மீற்றர் தூரத்துக்குச் செலுத்தக் கூடியவை. இக்குண்டுகள் படும் இடத்தில் ஒரு கைக்குண்டு வீசப்பட்டது போல் வெடிக்கும். இது தாக்கி வெடிக்கும் இடத்தை மிகச் சரியாக முன்கூட்டியே தீர்மானிக்கலாம். இது சுவர்கள் பாறைகள் பதுங்கு குழிகள் போன்றாவை பின்னால் மறைந்திருக்கும் எதிரியை தாக்குவற்கு மிக வாய்ப்பாக அமைகிறது. முதன் முதலாக ஒரு துருப்பின் கையில் கணனி சார் தாக்குதல் முறைமை வழங்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தூரத்தில் உள்ள ஒரு இலக்கின் பின்னால் சரியான கணிப்புடன் கைகுண்டை வீசுவது போன்றது.

ஒரு துப்பாக்கியின் விலை முப்பதினாயிரம் அமெரிக்க டொலர்கள். பெண்டகன் 12500 துப்ப்பாக்கிகளை பயன்படுத்தவுள்ளது.

இப்போது உள்ள மற்ற சிறந்த துப்பாக்கிகளிலும் பார்க்க மூன்றுமடங்கு திறமையானதும் துல்லியமானதுமாகும் இந்த smart grenade launcher. இப்போது உள்ள மற்ற சிறப்பான துப்பாக்கிகளை மறைவின் பின்னால் இருக்கும் எதிரியை தாக்க வளைவான பாதையில் சுடுவதற்கு துருப்புக்கள் பல ஊகங்களை செய்ய வேண்டியுள்ளது. அந்த ஊகங்களை smart grenade launcherஇல் உள்ள கணனி செய்து கொள்ளும். இதுபற்றிய் ஊடகக் குறிப்புக்கள் இப்படிக் கூறுகின்றன:

The revolutionary advance involves an array of sights, sensors and lasers that reads the distance to the target, assesses elements such as air pressure, temperature, and ballistics and then sends that data to the microchip embedded in the XM25 shell before it is launched.
Previous grenade launchers needed to arc their shells over cover and land near the target to be effective.
"It takes out a lot of the variables that soldiers have to contemplate and even guess at," Lehner said.
If, for example, an enemy combatant pops up from behind a wall to fire at US troops and then ducks behind it, an XM25 gunner can aim the laser range finder at the top of the wall, then program the shell to detonate one meter beyond it, showering lethal fragmentation where the insurgent is seeking cover.
Use of the XM25 can slash civilian deaths and damage, the Army argues, because its pinpointed firepower offers far less risk than larger mortars or air strikes.

இந்தத் துப்பாக்கிகளுக்கு ஏற்ப தலிபான்கள் தங்கள் உத்திகளை இனி மாற்ற வேண்டி இருக்கும்.

Thursday 2 December 2010

காணொளி: தமிழர் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து தலை தெறிக்க ஓடிய ராஜபக்சே







கொட்டிய பனியிலும் கடும் குளிரிலும் இலண்டனுக்கு பயணம் செய்த இலங்கை அதிபர் ராஜ்பக்சவிற்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தாயிரத்திற்கு மேலானவர்கள் இதில் பங்குபற்றினர்.

முன்பு ஒரு முறை இலங்கை அதிபர் பிரித்தானியாவிற்கு மேற் கொள்ள இருந்த பயணம் அவர் போர் குற்றத்திற்காக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் கைவிடப்பட்டது. பின்னர் அதிபர் ராஜபக்சே பிரித்தானிய மகராணிக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி தன்னை பிரித்தானியப் பயணத்தின் போது கைது செய்யாமல் இருக்க ஆவன செய்யும்படி மன்றாட்டமாகக் கேட்டுகொண்டார். இதனை அடுத்து ஒரு நாட்டுத் தலைவர் என்றரீதியில் அவருக்கு அரசதந்திர பாதுகாப்பு உண்டு என்று பிரித்தானிய நீதித்துறை முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பிரித்தானிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உரையாற்ற ராஜபக்சே பிரித்தானியா வந்தார். அவர் வருகை தந்தபோது பல்லாயிரக் கணக்கான தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இலண்டன் ஹீத்துரூ விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். ( சில இந்திய ஊடகங்கள் சிங்களவர்களிடம் வாங்கும் கைக்கூலிக்கு விசுவாசமாக நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்று செய்தி வெளிவிட்டன). பிரித்தானியக் காவல்துறை அவரை இரகசியமாக விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றியது

கைகழுவி விட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
02/12/2010 வியாழக்கிழமை ராஜபக்சே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உரையாற்ற ஏற்பாடாகி இருந்தது. இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி மேலும் ஒரு காணொளிப்பதிவை வெளியிட்டது. தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஒரு போர்க்குற்றவாளியை அழைத்த பழியில் இருந்து தப்பிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பாதுகாப்புக் காரணங்களைக்காட்டி ராஜபக்ச ஆற்ற இருந்த உரையை இரத்துச் செய்துவிட்டது.

பாவம் பணம் வீணாகியது
ஒரு பொதுத் தொடர்பு நிறுவந்த்திற்கு பெரும் பணம் கொடுத்துத்தான் மஹிந்த தனது பயண் ஏற்பாட்டையும் ஆக்ஸ்போர் பலகலைக்கழ்க உரையையும் ஏற்பாடு செய்திருந்தார். அவர் எந்த ஒருபொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. Bell Pottinger என்பதுதான் அந்த நிறுவனம் என்று சொல்லப்படுகிறது.


தலைதெறிக்க ஓடிய ராஜபக்ச
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பாதுகாப்புக் காரணங்களைக்காட்டி ராஜபக்ச ஆற்ற இருந்த உரையை இரத்துச் செய்துவிட்டதைத் தொடர்ந்து பிரித்தானியா வாழ் தமிழர்கள் இலண்டன் மாபிள் ஆர்ச்சில் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு முன் ஆற்பாட்டம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதைக் கேள்விப்பட்ட ராஜபக்ச யாருக்கும் தெரியாமல் தலைதெறிக்க அங்கிருந்து தப்பி ஓடி இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுவரகத்துக்குள் தஞ்சம் புகுந்து கொண்டார். 02-12-2010 வியாழன் மாலை நான்கு மணியில் இருந்தே தமிழர்கள் மாபிள் ஆர்ச்சில் கூடி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால் ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடியது யாருக்கும் தெரியாது. தனது மாலை ஏழு மணிச் செய்தியில் ராஜபக்சே தப்பி ஓடிய செய்தியை சனல்-4 ஒளிபரப்பியது. அதைக்காண் இங்கு சொடுக்கவும்: சனல்-4

சனல்-4 செய்தி ஒளிபரப்பிய நேரம் கிட்டத்தட்ட இரவு 7-30. மாபிள் ஆர்ச்சில் கூடி ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களில் பலர் அப்போது கலையத் தொடங்கிவிட்டனர். எஞ்சி இருந்த தமிழர்கள் பின்னர் இலங்கைத் தூதுவராலயத்தின் முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு மிகப் பலத்த காவல்துறைப்பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்தது.

ராஜபக்சவை ஒதுக்கிய பிரித்தானிய அரசு
இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்ட ராஜபக்சவை எந்த அரச பிரதிநிதிகளும் அதிகார பூர்வமாகச் சந்திக்கவில்லை. பிரித்தானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோம் பொக்ஸ் மட்டும் ஒரு தனிப்பட்ட சந்திப்பை மேற் கொண்டார். லியாம் பொக்ஸ் இலங்கை அரசின் செலவில் ஏற்கனவே தனது விடுமுறையை இலங்கையில் பல தடவை கழித்தவர்.

தப்பினோம் பிழைத்தோம் என ஓடினார்கள்
மஹிந்த ராஜபக்சவுடன் பிரித்தானியா வந்தவும் ஜி எல் பீரிசும் சாஜி கமகே என்னும் இராணுவ அதிகாரியும் வியாழக்கிழமை இரவோடு இரவாக சிறப்பு வாடகை விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து தப்பி ஓடிவிட்டதாக தகவல் வந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை மஹிந்த ராஜபக்சவுடன் பிரித்தானியா வந்த சாஜி கமகே என்னும் இராணுவ அதிகாரியைக் போர்குற்றத்திற்காக கைது செய்யப்பட பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

அதிருப்தி அடைந்த பிரித்தானிய அரசு
தனிப்பட்ட பயணம் என்று பிரித்தானியாவிற்குள் நுழைந்த ராஜபக்சவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் கட்சி தாவி ஜீ எல் பீரிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஏன் வந்தனர்? என்று பிரித்தானிய அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இப்படிப்பட்ட பயணங்களை இனி மேற் கொள்ளவேண்டாம் என்று அவரிடம் பிரித்தானிய அரசு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

உண்மைச் சம்பவம்: ஆந்தை விடு தூது


புறாவிடு தூது அன்னம் விடுதூது கேள்விப்பட்டிருக்கிறோம். தோழியைத் தூதுவிட்டு தோழியை தலைவன் டாவடிப்பதையும் கேள்விப்படுகிறோம். இங்கிலாந்தில் ஒருவர் தனது காதலிக்கு ஆந்தையைத் தூதுவிட்டுள்ளார்.

இங்கிலாந்து Stoke on Trent என்னும் இடத்தைச் சேர்ந்த ஜேஸன் தனது நீண்டகாலக் காதலியைத் தன்னைத் திருமணம் செய்யும்படி ஒரு பட்டுப் பையில் திருமண மோதிரத்தை வைத்து அதை ஜூலு என்னும் ஆந்தையின் காலில் கட்டி தனது காதலியிடம் அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட காதலியும் திருமணத்திற்கு சம்மதித்தார்.

Wednesday 1 December 2010

விக்கிலீக் - ராஜபக்ச போர் குற்றப் பொறுப்பாளி


விக்கிலீக் இணையத்தளம் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச போர்குற்றப் பொறுப்பாளிஎன்று கொழும்பிற்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிஷியா பியூட்டீனிஸ் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

It is "unsurprising" that Sri Lanka's government has not investigated the issue, noting "there are no examples we know of a regime undertaking wholesale investigations of its own troops or senior officials for war crimes while that regime or government remained in power."

அதிகாரத்தில் இருக்கும் அரசு தனது உயர் அதிகாரிகளையோ துருப்புக்களையோ பூரணமான போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்திய உதாரணங்கள் எதுவும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளுமிடத்து இலங்கை அரசு பிரச்சனைய(போர்குற்றத்தை) விசாரிக்கவில்லை என்பது ஆச்சரியப் படத்தக்க ஒன்றல்ல.

In Sri Lanka, this is further complicated by the fact that responsibility for many of the alleged crimes rests with the country's senior civilian and military leadership, including President Rajapakse and his brothers and opposition candidate General Fonseka.

இலங்கையில் இந்த நடந்ததாகக் கருதப்படும் போர்குற்றத்திற்கான பொறுப்பு அந்த நாட்டின் அதிபர் ராஜபக்கவும் அவரது சகோதரர்களும் எதிர்கட்சி வேட்பாளர் ஜெனரல் பொன்சேக்காவும் உட்பட பல உயர் இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் மீதும் இருப்பது மேலும் இதைச் சிக்கலாக்கியுள்ளது.

விக்கீலீக் இணையத்தளம் இப்போது தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அங்கு சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பிரித்தானிய சனல் -4 தொலைக்காட்சி இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிஷியா பியூட்டீனிஸ் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல் குறிப்பைப்பெற்று பகிரங்கப் படுத்தியுள்ளது. இதை இந்த இணைப்பில் காணலாம்: சனல்-4

அடி மேல் அடி வாங்கும் மஹிந்த
சனல்-4 இரண்டாவது நாளாக இலங்கை அரசின் கொடூரங்களை அம்பலப்படுத்தியுள்ளது. இன்று மஹிந்த ராஜபக்சவிற்கு இரு பெரும் இடிகள் பிரித்தானியாவில் விழுந்துள்ளது. அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்து மாணவர் ஒன்றியத்தில் நிகழ்த்த இருந்த உரை பிரித்தானியா வாழ் தமிழர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி இரத்து செய்யப்பட்டது. இந்த செய்தி வந்த சில நேரங்களின் பின் விக்கிலீக் இணையத் தளத்தின் தகவலை சனல்-4 வெளியிட்டுள்ளது. இது போதாது என்று பன்னாட்டு மன்னிப்புச் சபை பிரித்தானியா பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய மஹிந்த மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென்றது. இது மட்டுமா ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட ஏனைய யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் - 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் சேர்ந்து
என்கெங்கோ அடிவாங்குறாய்
ராஜபக்சனே

பொய்யே உரைத்திருப்பான்
பொய்யிலே வாழ்ந்திருப்பான்
தமிழர்க்குப் பகையாவான்
ராஜபக்சனே



மஹிதவை கௌரவப்படுத்தி தன்னைக் கேவலப் படுத்திய இந்தியா.
இந்தியப் பன்னாடைப் பாரளமன்ற உறுப்பினர்களால் பொன்னாடை போர்க்கப் பட்டு இந்தியப் பல்கலைக் கழகத்தால் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் மஹிந்த ராஜபக்ச. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கு சோனியாவின் இந்தியா அவரை சிறப்பு விருந்தினராக செங்கம்பளம் விரித்து அழைத்து தனது சொந்த நாடல்லாத இந்தியாவை கேவலப்படுத்தினார்.

விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா?


பன்னாட்டுக் காவற்துறையான Interpol தனது சிவப்புப் பட்டியலில் அமெரிக அரச இரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்கின் நிறுவனர் ஜூலியன் அசங் ( Julian Assange ) என்பவரை பதிவு செய்துள்ளது. சுவீடனில் இரு பெண்களை கற்பழிப்பு செய்ய முயற்சி செய்தார் என்பதே இவர்மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டு.

உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களின் தகவல் பரிமாற்றக் குறிப்புகள் 251,287ஐ விக்கிலீக் பெற்றுள்ளது. இவற்றில் 291 மட்டும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல அசிங்கங்கள் அம்பலமாக்கப் படவுள்ளது.

"சர்வதேச சமூகம்" என தம்மைக் கூறிக்கொள்ளும் ஒரு அசிங்கமான கொடுங்கோலர் கும்பலின் உண்மை முகத்தை வெளிக் கொண்டுவந்துள்ள விக்கிலீக் இணையத்தளம் பல ஆட்சியாளர்களின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆடுகிறது. அவர்களுக்கிடையிலான உண்மையான உறவு என்ன அவர்கள் பாவிக்கும் அசிங்கமான வார்த்தைகள் செயற்பாடுகள் என்பன வெளிவரவுள்ளது.
இலங்கையைப்பற்றியும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தகவல்கள் உள்ளன. அவை 2009 மேமாதம் நடந்த பல போர்க்குறங்களையும் போரின் இறுதிக் கட்டங்களில் எவர் இறந்தனர் எவர் தப்பிச் சென்றனர் என்ற உண்மைகளையும் அதில் இந்தியாவின் கேவலமான பங்களிப்பு பற்றியும் பல தகவல்கள் வெளிவரலாம்.

விக்கிலீக்கைப் பழிவாங்க அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கியுள்ளதா. அதற்காக நதி மூலம் ரிஷிமூலம் தேடி உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ அதன் நிறுவனர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறதா?

விமான ஓட்டியின் நகைச்சுவைகள்


ஒவ்வொரு விமான ஓட்டியும் பறப்புக்களின் பின் விமானத்தில் உள்ள குறைபாடுகளைப் பதிவு செய்து குறிப்பு சமர்ப்பிக்க வேண்டும் விமானத்தைப் பழுது பார்ப்பவர்கள் அதற்குரிய திருத்த வேலைகளைச் செய்தபின் பதில் குறிப்பு எழுத வேண்டும். இதில் சில நகைச்சுவை கலந்தவையாக இருக்கும் அப்படியுள்ள சில:
(P - விமானியின் குறிப்பு; S - பழுதுபார்த்தவரின் குறிப்பு)

P: Left inside main tire almost needs replacement.
S: Almost replaced left inside main tire.

P: Test flight OK, except auto-land very rough.
S: Auto-land not installed on this aircraft.

P: Something loose in cockpit.
S: Something tightened in cockpit.

P: Dead bugs on windshield.
S: Live bugs on back-order.

P: Autopilot in altitude-hold mode produces a 200 feet per minute descent.
S: Cannot reproduce problem on ground.

P: Evidence of leak on right main landing gear.
S: Evidence removed.

P: DME volume unbelievably loud.
S: DME volume set to more believable level.

P: Friction locks cause throttle levers to stick.
S: That's what they're there for.

P: IFF inoperative.
S: IFF always inoperative in OFF mode.

P: Suspected crack in windshield.
S: Suspect you're right.

P: Number 3 engine missing.
S: Engine found on right wing after brief search.

P: Aircraft handles funny.
S: Aircraft warned to straighten up, fly right, and be serious.

P: Target radar hums.
S: Reprogrammed target radar with lyrics.

P: Mouse in cockpit.
S: Cat installed.

P: Noise coming from under instrument panel. Sounds like a midget pounding
on something with a hammer.
S: Took hammer away from midget.

Tuesday 30 November 2010

இலங்கையிலிருந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மிரட்டி விரட்டப்பட்டாரா?



இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தை முதலில் பாராளமன்ற விவாதங்களாகவும் பின்னர் அறப் போராட்டமாகவும் நடத்தினர். இவை தோல்வியடைந்த நிலையில் போராட்டம் கைத்துப்பாக்கிகளுக்கும் கைக்குண்டுகளுக்கும் மாறின. பிராந்திய சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த இந்திய ஆட்சியாளர்கள் செய்த சதியின் விளைவு இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு பேரழிவு மிக்க ஆயுத மோதலை உருவாக்கியது. ஆரம்பத்தில் தமிழர்களின் "ஆபத்பாந்தவன்" போல் தன்னைக் காட்டி நாடகமாடிக் கொண்ட டில்லி பின்னர் தமிழர்கள் ஆயுத பலம் பெற்ற வேளையில் தனது உண்மையான தமிழ்த் தேசிய எதிர்ப்பு முகத்தை பகிரங்கப் படுத்தியது. அமைதிப் படை என்ற கொலை வெறி நாய்ப்படைகள் வடிவில் தமிழர்களைக் கடித்துக் குதறியது. அதன் பின்னரும் தமிழ்த் தேசியம் வீறு கொண்டு எழுந்த போது பின்கதவால் இலங்கைக்கு உதவி செய்யத் தொடங்கியது இந்தியா.

இலங்கையில் மும்முரமாக இன அழிப்புப் போர் நடந்தபோது இந்தியா பலமுறை போர்நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசிடம் முன் வைத்தது. இலங்கை அரசும் உதாசினம் செய்தது. இது இலங்கை இந்திய உறவைப் பாதிக்கவில்லை. ஏன்? இந்தியா பகிரங்கமாக போலியான போர்நிறுத்தமே கேட்டது. திரை மறைவில் இந்தையாவே போரை நடாத்தியது. சிவ் சங்கர மேனனும் நாராயணனும் இலங்கைக்கு மேற்கொண்டபயணங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே நடந்தேறின. அவர்கள் எப்படி தமிழர்களின் ஆயுத போராட்டத்தை மழுங்கடிக்கவே உதவிகள் செய்து கொண்டிருந்தனர். ஆனால் பாக்கு நீரிணைக்கு இருபுறத்திலும் இருக்கும் டெல்லியின் அடி வருடிகளும் அவர்களின் ஊடகங்களும் நாராயணனும் சிவ் சங்கர மேனனும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவே இலங்கை செல்வதாக பொய்ப் பிரச்சாரம் செய்தனர்.

இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழர்கள் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வு காணமுடியாது அரசியரல் தீர்வு மட்டுமே சாத்தியம் என்று இந்தியா பலமுறை அறிகை விட்டது. இதுவும் போலியானதே. போர் முடிந்து விட்டது. இலங்கையை அரசியல் தீர்விற்கு இந்தியா நிர்பந்திக்கவில்லை. மாறாக இலங்கைக்கு இந்தியா பெரும் தொகைப் பணம் வழங்கியுள்ளது.

கிருஷ்ணா கூறியவை
இலங்கைக்கு சென்ற வாரம் பயணம் மேற் கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இப்படிக் கூறினார்:
  • ஆயுதப் போராட்டம் முடிவுற்ற நிலையில் தேசிய நல்லிணக்கத்துக்கான அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்தச் சாதகமான நிலைமையைப் பயன்படுத்தி 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதி, ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத் தும் என்று இந்தியா நம்புகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் சமூகங்களின் பங்களிப்புடன் விரை வில் ஆரம்பமாகும் என்று நாம் நம்புகிறோம்.
எஸ் எம் கிருஷ்ணா இலங்கைப் பயணம் செய்கிறார் என்றவுடன் பாக்கு நீரிணையின் இரு புறமும் உள்ள இந்திய அடிவருடிகளும் அடிவருடி ஊடகங்களும் அவர் வந்து அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தப் போகிறார் என்று பெரும் கூச்சலிட்டனர். இவரது பயணமும் நாராயணன் - மேனன் பயணம் போலவே வெளியில் சொல்வது ஒன்று உள்ளுக்குள் நடப்பது வேறு. இலங்கையினதும் இந்தியாவினதும் தமிழர்களுக்கு எதிரான கூட்டுச் சதியில் இப்போது முக்கியத்துவம் பெறுவது தமிழர் நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களின் சுதந்திர வேட்கையை இனி தலை எடுக்காமல் பண்ணுவதே அதற்கு சிங்கள மக்கள் தமிழ் பகுதிகளுக்கு இலகுவாக வந்து போவற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். அதற்காகத்தான இந்தியா தமிழர் பகுதிகளுக்கான தொடரூந்து சேவைகளை அபிவிருத்தி செய்வதில் அக்கறை காட்டுகிறது.

50,000 வீடுகள்
இலங்கையும் இந்தியாவும் இணைந்து தமிழர்களின் பல இலட்சக் கணக்கான வீடுகளை அழித்தொழித்தது. இப்போது இந்தியா தமிழர்களுக்காக 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப் போவதாக பிதற்றிக் கொண்டிருக்கிறது. இந்த 50,000 வீடுகள் கட்டும் பணி மும்பாயில் உள்ள ஒரு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஊழலில் பிறந்து ஊழலில் வளர்ந்த இந்திய ஆட்சியாளர்களின் ஒரு சதி. குறிப்பிட்ட அந்த மும்பாய் நிறுவனம் எவ்வளவு பணம் யாருக்குக் கொடுக்குமோ?

காசைக் கொடுத்துவிட்டு பொத்திக்கிட்டுப் போய்யா
கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகை Time for political solution: Krishnaஎன்ற தலைப்பில் வெளிவிட்ட செய்தி சிங்கள மக்களை ஆத்திரமடையச் செய்தது. இதற்கு அவளிட்ட பின்னூட்டங்கள்:
  • of course it is for Kashmir problem,not in Sri Lanka. India created the problem.
  • All those who commented have very short memories Mr.Krishna,You have a short memory too. India should stop this type of intimidation before its too late. No other country in the world try to dictate terms of a neighbouring country like India. Listen Krishna........
  • Leave us alone and get lost for good.
  • We could manage our own affairs. Try to resolve your own concerns at Tripura, Punjab, Misori ect...
  • I think Krishanan should find a political solution to the 17 ongoing separatist movements in India before advising Sri Lanka.
  • Time for a political solution for Kashmir.
  • Mr. Krishna dude, mind your own business.
மொத்தத்தில் சிங்களவர்கள் கிருஷ்ணவிற்கு சொல்வது காசைக் கொடுத்துவிட்டு பொத்திக்கிட்டுப் போய்யா என்பதுதான்

கோவிந்தா கோவிந்தா
எஸ் எம் கிருஷ்ணா தமிழ்த் தலைவர்களை சந்திப்பார் என்று முதலில் கூறப்பட்டது ஆனால் அவரை நம்பியிருந்தவர்கள் நெற்றியில் பட்டை நாமம் தீட்டி கோவிந்தா கோவிந்தா எனக் கைவிட்டு விட்டுச் சென்று விட்டார் எஸ் எம் கிருஷ்ணா. ஆனால் கிருஷ்ணா இலங்கைக்கான 1.7பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப்பற்றி சிங்களவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

மிரட்டி விரட்டப்பட்டாரா எஸ் எம் கிருஷ்ணா?
எஸ் எம் கிருஷ்ணா தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலையகத் தமிழர்கள் முஸ்லிம் தரப்பு ஆகியோரைச் சந்திப்பதாக நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர் தரப்பினரை சந்திப்பதை எஸ் எம் கிருஷ்ணா இரத்துச் செய்துவிட்டு முஸ்லிம்களை மட்டும் சந்தித்தார். இதற்கு இந்தியத் தூதுவராலயம் கூறிய நொண்டிச் சாக்கு கால நிலை சரியில்லை என்பதாகும். இச்சந்திப்புகள் என்ன கூரைகளில்லாத வன்னி முகாமிலா நடக்க இருந்தன? நட்சத்திர விடுதிகளுக்குள் வெள்ளமா? இப்போது இலங்கையின் ஆதரவு ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற இந்தியாவிற்குத் தேவை. தமிழர்கள் பிரச்சனையில் நாம் சொன்னபடி கேட்காவிட்டால் ஆதரவு கிடைக்காது என்று இலங்கை எஸ் எம் கிருஷ்ணாவை மிரட்டி தமிழர்களைச் சந்திக்க வேண்டாம் தமிழர் விவகாரத்தில் நாம் சொல்வதைக் கேள் என்று விரட்டப்பட்டாரா பாவம் கிருஷ்ணா?

Monday 29 November 2010

தகவல் கசிவு: உலக அரங்கில் அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடி


விக்கிலீக் என்னும் இணையத்தளம் அமெரிக்க அரசின் பல அந்தரங்க தகவல்களை பகிரங்கப் படுத்தி அமெரிக்க ஆட்சியாளர்களை பெரும் நெருக்கடுக்குள்ளாக்கியுள்ளது. அது வெளியிட்ட 250,000 தகவல்களுள் முக்கியமான வை:

In a report of a 2008 meeting with U.S. General David Petraeus, the Saudi ambassador to Washington said King Abdullah wanted the White House 'to cut the head off the snake' before Iran developed nuclear weapons and threatened its neighbours in the Middle East.
சவுதி அரேபிய மன்னர் அமெரிக்காவை ஈரானின் மீது வான் தாக்குதல் நடத்தும் படி வல்லியுறுத்தினார். இந்தத் தகவல் மத்தியகிழக்கிலும் சில மத்திய கிழக்கு நாடுகளுடன் அமெரிக்க உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சீன ஆட்சியாளர்கள் பல இணையத்தளங்களை ஊடுருவியமை.

ஹிலரி கிளிண்டன் பல நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதிகளை உளவு பார்க்க உத்தரவிட்டிருந்தாராம். இது பன்னாட்டுச் சட்ட விரோதச் செயல் ஆகும்.

பிரித்தானிய இளவரசர் அண்ட்ரு முறைகேடாக நடந்தமை. பிரித்தானிய சட்ட அமூலாக்க அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்தமை, வெளி நாடு ஒன்றைப் பற்றி தகாத வார்தைகள் கூறியமை.

இரசிய அரசு மாபியாக்களைப் பாவித்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது. இரசிய அரசை ஒரு மாபியா அரசு எனக் குறிப்பிட்டமை. இரசியத் தலைவர் புட்டீனை alfa நாய் எனக் குறிப்பிட்டமை.

ஆப்கான் தலைவரை ஒரு பயந்தாங் கொள்ளி எனக் குறிப்பிட்டமை.

இஸ்ரேலியப் பிரதமரை elegant & charming என்றும் வாக்குறுதிகளைக் காப்பாற்றாதவர் என்றும் குறிப்பிட்டமை.

வட கொரியத் தலைவரை குண்டன் என்று விமர்சித்தமை. இரு கொரியாக்களையும் இணைக்கும் அமெரிக்க சதி.

ஈரானியத் தலைவரை ஹிட்லருடன் ஒப்பிட்டமை.

French President Nicholas Sarkozy ஐ ஒரு நிர்வாண அரசர் என்றும் இத்தாலியப் பிரதமர் PM Silvio Berlusconi ஒரு முட்டாளாகவும் அமெரிக்காவில் வர்ணிக்கப் பட்டமை.

அமெரிக்கா ஐக்கிய இராச்சியத்துடன் சிறப்பான உறவை வைத்துள்ளதாக இரு நாடுகளும் அடிக்கடி கூறி கொண்ட போதிலும் பல அமெரிக்கர்கள் ஐக்கிய இராச்சியத் தலைவர்களை மோசமாக விமர்சித்துள்ளனர்.

இலண்டனுக்கான அமெரிக்கத் தூதுவர் ஐக்கிய இராச்சிய அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நாடாத்தி வருகிறார். இந்தத் தகவல் கசிவு நாடுகளின் பாது காப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு சிரிப்புக் கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒருவன் அரசனை முட்டாள் என்று பகிரங்க இடத்தில் வைத்துக் கூறிவிட்டானாம் அவனுக்கு இரட்டிப்பு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டதாம். ஒன்று அரசனை நிந்தித்தமைக்கு மற்றது அரச இரகசியத்தை வெளியில் விட்டதற்கு.

விக்கீலீக் இணையத்தளத்தின் மேற்படி தகவல்கள் அடங்கிய பகுதிக்கு இப்போது செல்ல முடியாமல் இருக்கிறது. இது அமெரிக்க அரசின் வேலையா?

திருமணம் செய்யப் போகிறவர்கள் வாசிக்க வேண்டியவை...


Marriage is not a word. It is a sentence--a life sentence.

Two men are talking. The first said, "I got married because I was tired of eating out, cleaning the house, doing the laundry and wearing shabby clothes."
"That's amazing," said the second, "I just got divorced for the very same reasons.

Marriage is very much like a violin; after the sweet music is over, the strings are attached.

Marriage is love. Love is blind. Therefore, marriage is an institution for the blind.

Why is divorce so expensive?
Because it's worth it!

My wife really worships me, she puts burnt offerings in front of me every day.

Marriage is a thing which puts a ring on a woman's finger and two under the man's eyes.

Marriage certificate is just another word for a work permit.

A smart wife will always ask her husband's opinion - after she has made up her mind.

Marriage requires a man to prepare 4 types of "rings":
* The Engagement Ring
* The Wedding Ring
* The Suffe-Ring
* The Endu-Ring

Married life is full of excitement and frustration:
* In the first year of marriage, the man speaks and the woman listens.
* In the second year, the woman speaks and the man listens.
* In the third year, they both speak and the neighbors listen.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...