Saturday 9 October 2010

You are not with me....



Your lipstick mark on my collar
That you made as we dance
Still with me but you are not

The knicker you left
In the back set of my car
Still with me but you are not

The messages you sent
That filled my inbox
Still with me but you are not

The photos you tagged
In my Facebook
Still with me but you are not

Thursday 7 October 2010

வீரசுவர்க்கத்தில் ஒர் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்


சொர்க்கத்திற்கு இலங்கையில் இருந்து ஒரு பத்திரிகை ஆசிரியர் கொண்டு செல்லப்பட்டார். நல்லவர்களுக்கான சொர்க்கத்திற்கு அவர் முதலில் சென்றார் அது மூடப்பட்டுவிட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அது ஏன் மூடப்பட்டுவிட்டது என்று கேட்டபோது அங்கு இப்போது யாரும் வருவதில்லை அதனால் யாரும் இல்லாததால் அது மூடப்பட்டுவிட்டது என்று பதில் கூறப்பட்டது. பத்திரிகை ஆசிரியர் திரு திரு என விழித்துக் கொண்டிருக்க வேண்டுமானால் வீரசுவர்க்கத்தில் இடம் கேட்டுப்பார் என்று அவரிடம் கூறப்பட்டது. அங்கு நீ நிறையப் போராளிகளையும் சந்திக்கலாம் என்றும் கூறப்பட்டது.

பத்திரிகை ஆசிரியரும் வீரசுவர்க்கத்திற்கு சென்று கதவைத் தட்டினார். இங்கு நீ அனுமதி பெற நீ வீரமாக எதையாவது செய்திருக்க வேண்டும் என்று பத்திரிகை ஆசிரியரிடம் சொன்னார்கள். ஆம் நான் வீரமாக ஒரு முறைச் செயற்பட்டிருக்கிறேன் என்றார் பத்திரிகை ஆசிரியர். என்ன எப்போ எங்கு எப்படி விபரமாகச் சொல் என்று பத்திரிகை ஆசிரியரை வீரசுவர்க்கத்தில் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த பத்திரிகை ஆசிரியர் நாலு நாட்களுக்கு முன் பக்சராஜ குடும்பத்தைத் தாக்கி எனது பத்திரிகையில் எழுதினேன் அது மூன்று நாட்களுக்கு முன் பிரசுரமானது. நேற்று என்னை வெள்ளை வானில் கொண்டு போனார்கள் இன்று என் சடலம் கறுப்பு வானில் வந்தது என்று கூறினார். இதுதான் நான் எனது வாழ்க்கையில் வீரமாகச் செய்த செயல் என்றார்.

Wednesday 6 October 2010

பெண்களைத் திருப்திப்படுத்த ஆண்களும் ஆண்களைத் திருப்திப் படுத்த பெண்களும் செய்ய வேண்டியவை.


தம்பதிகள் ஒருவரை ஒருவர் எப்படித் திருப்திப்படுத்துவது என்பதுதான் உலகம் தோன்றிய நாள் முதலாக உள்ள பெரிய பிரச்சனை. ஆனால் இந்தப் பிரச்சனை மற்றப் பிரச்சனைகள் போலப் பெரிதாகப் பேசப்படுவதில்லை. இது பற்றிய ஒரு ஆராய்ச்சி:
பெண்களைத் திருப்திப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டியவை:
1. இப்ப உள்ளதிலும் பார்க்க பெரிதாக ஒரு வீடு வாங்க வேண்டும்
2. அந்த வீட்டில் வசந்த் அண்ட் கோவில் உள்ள அத்தனை பொருட்களையும் வாங்கி நிரப்ப வேண்டும்.
3. கைநிறையப் பணம் வைத்திருக்க வேண்டும்.
4. வாரந்தோறும் ரங்கநாதன் தெருவிற்கு அழைத்துச் சென்று வேண்டியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்
5. வாரந்தோறும் திரைப்படங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்
6. வாரந்தோறும் நல்ல உணவகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
7. அடிக்கடி அவர்கள் அழகாக இருகிறார்கள் அல்லது கவர்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.
8. ஒரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ திரிஷாவைப் போலிருக்கிறாய் என்று. இன்னொரு நாள் சொல்ல வேண்டும் இன்று நீ தமனாவைப் போலிருக்கிறாய் என்று சொல்ல வேண்டும். அத்துடன் அடிக்கடி அவர்கள அங்கங்களையும் அவ்வப்போது பிரபலமான நடிகைகளின் அங்கங்களுடன் ஒப்பிட்டுச் சொல்லவேண்டும். உன் சிரிப்பு சுனைனா போலிருக்கிறது. இடை அனுஷ்க்கா போலிருக்கிறது. முக்கிய குறிப்பு நமிதாவை ஒப்பிட வேண்டாம். பிறது உதுகளை எல்லாம் பார்த்துக் கொண்டு திரிகிறியளோ என்று உதை வாங்க வேண்டி வரலாம்.
9. அவர்கள் சேலை உடுக்கும் போது பக்கத்தில் நின்றும் இருந்தும் மடிப்புக்க்களை சரியாக சரி செய்து விடவேண்டும்
10. அவர்களை அவர்களுக்குத் தேவைப்படும் போது நன்றாகத் திருப்திப்படுத்த வேண்டும்.
11. அவர்கள் நச்சரிப்புக்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
12. அவ்வப்போது அவர்கள் சொல்லும் உடல் வருத்தங்களை அவை போலியாக இருந்தாலும் கரிசனையுடன் கேட்டு அதற்கு பணம் செலவழித்து வைத்தியம் செய்ய வேண்டும்.
13. அவர்களை சிரிக்கவைக்க நல்ல நகைச்சுவைகள் சொல்லவேண்டும்
14. அவர்களின் உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
15. உங்களின் உறவினர்கள் பற்றி அவர்கள் சொல்லும் குறைகளை ஆமோதிக்க வேண்டும்.
16. தொலைக்காட்சி(சென்னைத் தமிழில் டிவி) ரிமோட்டை அவர்கள் கைகளிலேயே விட்டு விடவேண்டும்
17. அவர்களுடன் இருந்து தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டும்
18. அவர்கள்மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
19. அவர்கள் மணித்தியாலக் கணக்காக தொலைபேசியில் கதைக்க அனுமதிக்க வேண்டும்.
20. பல இடங்களுக்கும் நாடுகளுக்கும் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
21. பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும்
22. அவர்கள் செய்வதில் எவற்றை கண்டுக்காமல் இருக்க வேண்டும் எவற்றின்மீது கரிசனை காட்ட வேண்டும் என்பவற்றை அறிந்திருக்க வேண்டும்.
23. அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்
24. அவர்கள் மீது அன்பாயிருக்க வேண்டும்.
25 அவர்கள் மீது ஆசையாய் இருக்க வேண்டும்.
26. இப்போது மீண்டும் முதலாவதிற்கு சென்று அங்கிருந்து தொடரவும்.


ஆண்களைத் திருப்திப் படுத்த பெண்கள் செய்ய வேண்டியவை:
கவர்ச்சிகரமான உடையுடன் நல்ல சாப்பாட்டுடன் அவர்கள் முன் நிற்க வேண்டும்

Tuesday 5 October 2010

இத்தாலிச் சனியாளின் மர்மம் அறிந்து கொண்ட பக்சராஜன்


பக்சராஜன் டெல்லி சென்றிருந்த வேளை இத்தாலிச் சனியாளைச் சந்தித்து அதிகாரம் எப்படிக் கையில் வைத்திருப்பது என்பது பற்றி உரையாடினார். மடம் நீங்கள் பதவியில் இல்லாமல் எப்படி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வியப்புடன் கேட்டார். உடனே சனியாள் இப்போது ஒரு உதாரணத்தின் மூலம் உங்களுக்கு விளக்குகிறேன் என்று கூறிவிட்டு. தனது பிரதம மந்திரியை அழைத்தார். அவர் வந்து பணிவுடன் சனியாள் முன் பவ்வியமாக நின்றார். மோகன்மன் சிங்கா நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல் என்றார். மோகன்மன் சிங்கயா வாய் பொத்தி நின்றார்.

"உனது அப்பாவிற்கு ஒரு மகன். உனது அம்மாவிற்கு ஒரு மகன். அது யார்?" என்று கேள்வியைப் போட்டார். பிரதம மந்திரி மோகன்மன் சிங்கயா உடனே அமெரிக்க பெண்டகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விட்டு தன் பதிலை கண்ணை மூடி நின்றபடி சொன்னார். "நான்தான் அது மடம்".
கெட்டிக்காரப் பயல் என்று கூறு சனியாள் மோகன்மன் சிங்கயாவை அனுப்பிவிட்டார். இதுதான் என் அதிகாரத்தின் மர்மம். நான் நல்ல அறிவாளிகளைத் அடிமையாகத் துணைக்கு வைத்திருக்கிறேன் என்றார் சனியாள்.

பக்சராஜனுக்கு மிக்க மகிழ்ச்சி. தான் சனியாளின் மர்மத்தை அறிந்து கொண்டேன் என்று துள்ளிக் குதித்தார். தான் நாடு திரும்பியதும் தனது பிரதம மந்திரியை அழைத்து "உனது அப்பாவிற்கு ஒரு மகன். உனது அம்மாவிற்கு ஒரு மகன். அது யார்?" என்று கேள்வியைப் போட்டார். பிரதம மந்திரி திருதிருவென விழித்துவிட்டு நான் யோசித்துவிட்டுச் சொல்கிறேன் என்று விட்டுப் போய்விட்டார். தனது சகாக்கள் அனைவரையும் அழைத்து பக்கசராஜனின் கேள்வியை முன்றரை மணித்தியாலங்கள் விளக்கி அதற்கான பதிலை யோசித்து ஒரு வாரத்துக்குள் தரும்படி கூறினார். ஆனால் அந்தக் கேள்விக்கான பதில் ரோ அமைப்பின் ஊடாக தேவையில்லாதானந்தாவிற்கு எஸ் எம் எஸ் மூலம் வந்துவிட்டது. அந்த இடத்திலேயே தேவையில்லாதானந்தா பதிலைக்கூறினார். நீங்கள்தான் அது என்று.

மிக்க மகிழ்ச்சி அடைந்த பிரதம மந்திரி பக்சராஜாவைச் சந்திக்க மீண்டும் அனுமதி கேட்டபோது மூன்று மாதம் கழித்துக் கிடைத்தது. பிரதம மந்திரி பக்சராஜாவைச் சந்தித்தபோது தான் கேள்வி கேட்டதையே அவர் மறந்துவிட்டார். பிரதம மந்திரி அதை நினைவு படுத்தினார். சரி சரி பதில் கண்டு பிடித்து விட்டாயா என்று பக்சராஜன் ஆர்வத்துடன கேட்டார். பதில் வந்தது நீங்கள்தான் அது என்று.பதிலைக் கேட்டதும் கோபத்தில் துள்ளிக் குதித்தார் பக்சராஜா இப்படி ஒரு சிறு கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையா உன்னால். உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பைத் தோற்கடித்தவன் நான். உலகத்தில் சிறந்த தலைவன் நான் எனக்கு இப்படி ஒரு பிரதம மந்திரியா என்று பொரிந்து தள்ளினார். பிரதம மந்திரி அழத் தொடங்கிவிட்டார். திருப்பிப் பார் அந்தக் கேள்வியை.
"உனது அப்பாவிற்கு ஒரு மகன். உனது அம்மாவிற்கு ஒரு மகன். அது யார்?" இதுதாண்டா கேள்வி. இதுக்குச் சரியான பதில் மோகன்மன் சிங்கயா!!! என்றுகூறி பிரதம மந்திரியை அடித்து விரட்டினார் பக்சராஜன்.

I want you to be my Laptop


I am your monitor
As I see you all the time
I am your keyboard
As I always ENTER inputs
I am your mouse
As I move around you
I am your port
As I look for connections
I am your hard drive
As I keep you inside of me
I am your memory stick
As you always stick on my memory
I am your microchip
As I always count on you
I am your infrared
As you don't see me
I am your modem
As I like to make a connection
I am your RAM
As I always think of you
I am your window
As I am opened for you
I want you to be
My laptop forever

Sunday 3 October 2010

குறுங்கவிதைகள்: அறிவு வளர்க்கும் தொலைக்காட்சி நாடகங்கள்


குறுங்கவிதைகள்

We have a right
We have at least one right now
The right to remain silent

தேவையில்லாத வேலை
கடவுள் உலகைப் படைத்தார்
ஆனால் அது நன்றாக இல்லை
அவதாரங்களாக வந்தார்
தூதுர்களையும் அனுப்பினார்
ஆனால் சரிவரவில்லை
கடவுளே உங்களுக்கு
ஏன் தேவையில்லாத வேலை.

நம்பிக்கை
கடவுளை நான் நம்பவில்லை
கடவுளுக்கு என் மீது நம்பிக்கை வேண்டும்

அறிவு வளர்க்கும் தொலைக்காட்சி நாடகங்கள்
தமிழ்த் தொலைக் காட்சிகளின்
நாடகங்கள் என் அறிவை வளர்க்கின்றன
அவை ஒளிபரப்பப்படும் போதெல்லாம்
தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு
புத்தகங்கள் வாசிக்கிறேன்..

காதலியும் வினாத்தாள் போலே
தடவச் சுகமாய் இருப்பதலால்
தெரியாத கேள்விகள் கேட்பதால்
புரியாத புதிராய் இருப்பதால்
தோல்வியில் முடிவதால்
வினாத்தாளும் காதலிபோலே


தகவல்கள்
இனக் கொலைகள்
இயற்கை அனர்த்த அழிவுகள்
தகவல் தரப் பலர் உண்டு
தகவல்கள் அறியத் துடிப்போருமுண்டு
தடுத்து நிறுத்த யாருண்டு
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தது
தகவல்கள் மீதான நடவடிக்கைகள்
என்று உருவாகும்.

Questionable questions??????


If people from Poland are called "Poles," why aren't people from Holland called "Holes?"

If corn oil is made from corn, and vegetable oil is made from vegetable, then what is baby oil made from?

Is Disney World is the only place where people-trap operated by a mouse?

If love is blind, why is lingerie so popular?

If most car accidents occur within five miles of home, why doesn't everyone just move 10 miles away?

If a mime is arrested do they tell him he has the right to talk?

Does pushing the elevator button more than once make it arrive faster?

Do Lipton Tea employees take coffee breaks?

Do infants enjoy infancy as much as adults enjoy adultery?

How far east can you go before you're heading west?

"I am " is reportedly the shortest sentence in the English language. Could it be that "I do " is the longest sentence?

If the singular of GEESE is GOOSE, shouldn't a Portuguese person be called Portugoose?

If pro and con are opposites, wouldn't the opposite of progress be congress?

If women wear a pair of pants, a pair of glasses, and a pair of earrings, why don't they wear a pair of bras?

Why don't they call mustaches "mouthbrows?"

Do Hindu Vampires avoid crosses or "soolam" (trident)?

If a stripper gets breast implants can she write it off on her taxes as a business expense?

Do prison buses have emergency exits?

Why in a country of free speech, are there phone bills?

Why is a person who plays the piano called a pianist, but a person who drives a race car not called a racist?

Why is there a light in the fridge but never in the freezer?

Do astronauts change their clocks when they move over different time zones in space?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...