Saturday 28 August 2010

பத்மநாதன் தொடர்கிறார். அவர்மீது சந்தேகங்களும் தொடர்கின்றன.


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே. பத்மநாதன் கொழும்பின் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தமிழ்த்தேசியத்தின் விரோதியாகக் கருதப்படும் டி. பி. எஸ். ஜெயராஜிற்கு தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார். கடந்த மூன்று வாரங்களாக இலங்கை அரசுடன் உடன்படு நிலையில் இல்லாத தமிழ்த் தேசியவாத ஆதரவாளர்கள் அனைவர்மீதும் சேறு பூசியும் கோத்தபாய ராஜபக்சவைக் கண்ணியவான் என்றும் விமர்சித்தும் வந்த பத்மநாதன் நாலாவது வாரமாக தனது பேட்டியைத் தொடர்கிறார்.

  • பேட்டி: பத்மநாதனுக்கும் இலங்கைக்கும் உங்களுக்கு ஏதாவது இரகசிய ஒப்பந்தம்(shady deal) ஏற்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் பத்மநாதன் சொல்கிறார் இரகசிய ஒப்பந்தம் ஏதும் இல்லை ஒரு உண்மையான புரிந்து கொள்ளல் மட்டுமே தனக்கும் இலங்கைக்கும் இடையில் என்கிறார். அது மட்டுமல்ல தனக்கும் இலங்கைக்கும் இடையில் பொது நோக்கங்கள் உள்ளது என்கிறார். அதனால் தானும் இலங்கை அரசும் அப்போது நோக்கங்களுக்காக ஒன்று பட்டு வேலை செய்கிறோம் என்கிறார் பத்மநாதன்.
சந்தேகம்: இலங்கை சிங்கள நாடு. தமிழர்களுக்கு இங்கு ஒரு உரிமைகளும் இல்லை. சிங்களவர்கள் கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு வாழவேண்டும் என்பவர்களுடன் எப்படி உங்களுக்கு பொது நோக்கு ஏற்பட்டது. போரில் வெற்றி கொள்ளும் சிங்களப் படைகள் அதற்கு பரிசாக தமிழ் பெண்களைச் சுவைக்கலாம் என்று கூறியவர்களுடன் உங்களுக்கு எப்படி உடன்பாடு ஏற்பட்டது?

  • பேட்டி: பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்புக் காவலில் இருக்கின்றனர் என்று பத்மநாதன் கூறுகிறார்.
சந்தேகம்: ஒருவருடமாக நீங்கள் கண்ணியவானாக விமர்சித்த கோத்தபாய ராஜபக்சவுடன் நல்ல உறவைப் பேணிவருகிறீர்கள். ஒரு பொது நோக்கில் சிங்கள் அரசுடன் வேலை செய்கின்றீர்கள். தடுப்புக் காவலில் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகளுக்காகத்தான் நீங்கள் இப்போது செயற்படுவதாகக் கூறுகிறீர்கள். இப்படிப் பட்ட உங்களுக்கு இன்னும் கூட எத்தனை முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்புக் காவலில் இருக்கின்றனர் என்று தெரியாமல் இருக்கிறது மிகவும் வியப்பாக இருக்கிறது. காவலில் இருக்கும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து கொல்லப் பட்டுக் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகத்தை இது எழுப்புகிறது. இதனால் தான் இதுவரை காவலில் உள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்புக் காவலில் இருக்கின்றனர் என்ற தகவலை இலங்கை அரசு அதிகார பூர்வமாக வெளிவரவில்லை.

  • பேட்டி: இலங்கை அரசு காவலில் உள்ள போராளிகளினதும் பாதிக்கப் பட்டமக்களினது மறுவாழ்விற்காக பனனாட்டுத் தொண்டு நிறுவனங்களையோ அல்லது தமிழ் கட்சிகளையோ ஈடுபடுத்தாமல் ஏன் உங்களை ஈடுபடுத்துகிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த பத்மநாதன் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு கடந்த கால அனுபவங்கள் அடிப்படையில் நம்புவதில்லை என்றும் முன்பு சில தமிழ்க் கட்சிகள் தடுத்து வைத்திருப்பவர்களை சந்திக்க அனுமதித்ததை தவறாகப் பயன்படுத்தின என்றும் கூறினார்.
சந்தேகம்: இதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் என்று பிரகடனப் படுத்திய உங்களை கைது செய்து கொண்டுவந்தார்களா? பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் தமது மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டுவந்துவிடும் என்றுதான் பலரும் கூறுகிறார்கள். உங்களை வைத்து மொத்தத் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மீது சேறை வாரி இறைக்கும் பணியை இலங்கை அரசு செய்கிறதா? தமிழ் கட்சிகள் தடுத்து வைத்திருப்போரை தவறாக நடாத்தியது எங்கே, எப்போது, எப்படி நடந்தது?

(சந்தேகங்கள் தொடரும்)

Thursday 26 August 2010

காதலனே நீயும் ஒரு bra தானே


இதயத்துடன் இதமாய் இருப்பதால்

இறுகக் கட்டி அணைப்பதால்

சோரும் நெஞ்சம் தாங்குவதால்

காதலனே நீயும் ஒரு bra தானே


நகைச்சுவை:சுட்டவை நாற்பது (படிக்கக்கூடாதவையும் உண்டு)


விநோதமான பல குறுந்தகவல் நகைச்சுவைகள் கைப்பேசிகளில் உலாவுகின்றன அவற்றில் தெரிந்தெடுத்த 40
  1. This is the telephone terrorist team. While receiving this message a virus will be activated. This virus should have infected your mobile by now. Your mobile will be disabled, unless you are ugly.
  2. We will now upgrade your brain.......Please wait........Searching.......Searching.......Still searching........Sorry, no brain found !!!
  3. No one has ever complained of a parachute not opening.
  4. God created the earth, God created the woods, God created you too, but yes, even God makes mistakes!
  5. God gave you two legs to walk, two hands to hold, two ears to hear, two eyes to see. But why did he give you only one heart? Cause he gave the other one to someone for you to find.
  6. A bus station is where a bus stops.
    A train station is where a train stops.
    On my desk, I have a work station.
  7. it goes in dry, it comes out wet,
    the stronger its in the stronger it get,
    we can have it in bed just u n me,
    not what u think
    - teabag
  8. News: 3 Chimps escaped from the zoo... 1 was caught watching tv... another playing football and the third one was caught reading this txt message
  9. God made man and then rested. God made women and then no one rested
  10. What is the difference between a woman and a magnet?
    Magnets have a positive side!
  11. Why was Phillip's girlfriend annoyed?
    Coz she found out that Phillips 24 inch was a TV.
  12. What are 3 words you never wanna hear whilst making love? Honey, I'm home!
  13. Minds are like Parachutes. They work best when open.
  14. What is the thinnest book in the world?
    What Men Know About Women.
  15. How Dogs and Women are alike.....
    Neither believe that silence is golden.
    Neither can balance a checkbook.
    Both put too much value on kissing.
  16. A husband was asked: Do u talk to your wife after sex?
    His answer: Depends, if I can find a phone.
  17. Loving you could take my life, but when I look into your eyes, I know you're worth that sacrafice!
  18. If a big fat man creeps into your bedroom one night and stuffs you into a bag, Then do not worry 'cause I told Santa I wanted you for christmas!
  19. Stress is when you wake up and realises that you haven't slept yet.
  20. I am still single, my parents-in-law were not able to have children.
  21. The fact that there are 'intelligent' extraterrestrian creatures is proven by the fact that they did not contact us yet.
  22. I said no to drugs, but they did not listen!
  23. As long as they pretend to pay me, I pretend I am working.
  24. Keep the school clean ... stay home!
  25. Be quiet in the classroom, respect the fact that others sleep!
  26. The word HELLO means: H=How are you? E=Evrything alright? L=Like 2 hear from you! L=Love 2 see you soon O=Obviously I miss you..SO, HELLO
  27. No boys no love, no love no sex, no sex no people, no people no school, no school no problems
  28. The IDEAL man does not smoke, does not drink, does not flirt, goes to bed early, in short ... does not exist
  29. A bra is a thing that keeps up what would hang down otherwise ...
  30. Teachers help you with problems that you would not have if they were not there.
  31. Women are like hurricanes! When they come they are wet and heavy. When they leave they take your home and your car ! !
  32. Computers are machines to help you solve problems you wouldn't have if you didn't have a computer.
  33. What do I miss about my wife? Her absence.
  34. Dear friend! Do you take me 2 b your lawful text mate.2 have & 2 hold.4 dirty quotes or saucy jokes.in text messaging & in poor signal.til low battery do us part?
  35. Theres an urgent meeting in the jungle! Everyones there.. lions, tigers, cheetas and ape, but the meetin cant start because the monkey is reading this text
  36. ….If Jayalalita Wins
    in the Next Election
    and Becomes the
    CM again,
    What would the
    Public say.?

    ?

    ?

    “The Mummy Returns”
  37. “Ideas that can change India”
    Go vote! Stop paying bribes, kill educational reservation, say no to hereditary politics.
  38. Politics is the gentle art of getting votes from the poor and
    campaign funds from the rich, by promising to protect each
    from the other
  39. This is for ADULTS Only. . .
    If you are
    Under the Age of 18,
    Please Please
    Don’t read this sms..

    .



    Election is coming,
    Please Do Vote.!
  40. 10 Terrorists
    Came by BOAT recently..
    543 Terrorists Came by VOTE.. God Bless Us.. Take Care. JAI HIND……

நகர மயமாகும் உலகில் இந்தியாவும் சீனாவும்


இனிவரும் காலங்களில் உலகம் நகர மயமாகப் போகிறது என்று கூறப்படுகிறது. பல கிராமத்தவர்கள் நகரங்களை நோக்கி நகரப் போகிறார்கள். பல கிராமங்கள் நகரங்களாக மாறப் போகிறது. ஆசிய மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் இந்த இரு வகையான நகர மயமாக்கல்களுக்குள்படப் போகிறார்கள். ஒரு பில்லியன் மக்கள் ஆசியாவில் நகரங்களை நோக்கி நகரப் போகிறார்கள். இதை எதிர்கொள்ள ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் தேவைப் படப் போகிறது.

நகரமயமாகலை எதிர் கொள்ள ஆசிய நாடுகள் தயாராக இருக்கிறதா? இனிவரும் இருபது வருடங்களில் சீனாவில் அமெரிக்க மக்கள் தொகையிலும் அதிகமான மக்கள் (400 மில்லியன் மக்கள்)நகரங்களை நோக்கி நகரப் போகிறார்கள். அதே காலத்தில் இந்தியாவில் இருநூற்றிப் பதினைந்து மில்லியன் மக்கள் நகரங்களை நோக்கி நகரப் போகிறார்கள். இது ஸ்பெயின் தேசத்து மக்கள் தொகையிலும் அதிகமானவர்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் சீனாவிற்கு 40 பில்லியன் சதுர மீட்டர்களும் இந்தியாவிற்கு 20 பில்லியன் சதுர மீட்டர்களும் தேவைப்படும். சீனா நாற்பத்தி நான்கு நகரங்களை உருவாக்க்ப் போகிறது. இந்தியா பதினொரு நகரங்களை உருவாக்கப் போகிறது. இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காக இருக்கப் போவது போக்கு வரத்துத் துறை. இதில் சீனா இந்தியாவிலும்பார்க்க அதிக் தொலை நோக்கோடு செயற்படுகிறது. இந்தியா தனது போக்குவரத்து துறையின் அபிவிருத்தியில் உடன் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

சக்தி வளத்திற்கு இந்தியாவும் சீனாவும் போட்டியிடும்
நகரமயமாக்கலில் அடுத்த முக்கிய தேவை சக்தி வளமாகும். சீன நகரங்களுக்கான சக்திவளத் தேவை இப்போது உள்ளதிலும்பார்க்க இரு மடங்காக அதிகரிக்கப் போகிறது. உலக சக்தி வளத் தேவையில் 20% சீன நகரங்களுக்குத் தேவைப் படும். இந்தியாவின் சக்தி வளத் தேவையும் மிக அதிகரிக்கும். சக்தி கொள்வனவில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பலத்த போட்டி நிலவி மோதலாகவும் வெடிக்கலாம். இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்றம் ஏழு மடங்காக அதிகரிக்கலாம்.

இந்தியா இன்னும் செலவு செய்ய வேண்டும்
சீனா ஒரு நகரவாசிக்கு 117 அமெரிக்க டொலர்களையும் இந்தியா 17 அமெரிக்க டொலர்களையும் செலவழிக்கிறது. நியூயோர்க் நகர் ஒரு நகரவாசிக்கு 292அமெரிக்க டொலர்களைச் செலவு செய்கிறது. பன்னாட்டு தரத்திற்கு வர இந்தியா தனது செலவை பத்து மடங்கு அதிகரிக்க வேண்டும்.

மத்திய தர வர்க்க மக்கள்
மேற்கத்திய முதலாளிகள் பார்த்து நாக்கு வடிப்பது இந்தியாவிலும் சீனாவிலும் உருவாகியுள்ள உருவாகிக் கொண்டிருக்கிற பல கோடிக் கணக்கான மத்திய தர வர்க்க மக்களைத்தான். இவர்களை எப்படிச் சுரண்டுவது என்பதில்தான் அவர்களின் முழுக்கவனமும். சீன மத்திய தர வர்க்க மக்கள் ஐந்து மடங்காக அதிகரிக்கும் வேளையில் இந்தியாவில் அது நான்கு மடங்காக இருக்கும். இந்தியாவில் 11 மில்லியன் பேரின் வருமானம் ஆண்டொன்றிற்கு பத்து இலட்சத்திற்கு மேல் இருக்கும்.

போக்கு வரத்து நெருக்கடி
சீனாவிலும் இந்தியாவிலும் ஒரு அம்சம் பொதுவானதாக இருக்கும். அதுதான் போக்குவரத்து நெருக்கடி. அது அடுத்த இருபது ஆண்டுகளில் மோசமடையும். சராசரியாக ஒருவர் வேலைக்குச் செல்ல எடுக்கும் நேரம் 5 மணித்தியாலங்களாக அதிகரிக்கலாம்.

நீர் வழங்கல்
சீனாவும் இந்தியாவும் நீர் வழங்கலில் பெரும் பிரச்சனையை எதிர் நோக்கும். இதுவும் இரு நாடுகளுக்குமிடையிலான ஒரு முரண்படு நிலையை உருவாக்கும். சீனாவில் இருந்து உருவாகும் இந்தியாவின் பிரம்ம புத்திரா நதி தமிழ்நாட்டின் காவேரியாகும்.

Tuesday 24 August 2010

சீனாவும் மேற்குலகும் இந்தியாவை துண்டாடிப் பங்கு போடுமா?


சீனாதொடர்பான அமெரிக்காவின் குறுகிய காலக் கொள்கை அதன் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவது. நீண்டகாலக் கொள்கை அதனுடன் ஒரு பங்காளனாக மாறுவது. பங்காளன் என்னும் போது உயர் தொழில் நுட்பங்களை மேற்குலகின் செல்வந்த நாடுகளும் நடுத்தரத் தொழில் நுட்பங்களை மற்றைய நாடுகளும் உருவாக்கி உலகெங்கும் விற்பனை செய்யவும் சீனா பாவனையாளர் பொருள்களை உற்பத்தி செய்து உலகெங்கு விற்பனை செய்வதும் போன்ற ஒரு ஏற்பாட்டை மேற்குலகம் விரும்புகிறது. இந்தச் சமன்பாட்டில் இந்தியா எங்கே? இந்தியாவில் உருவாகி உள்ள பாரிய எண்ணிக்கையிலான மத்தியதர வர்கத்தை வர்தக ரீதியில் சுரண்டிக் கொள்ள மேற்குலகம் விரும்புகிறது. அதனால் இந்தியாவை குறுங்காலத்தில் ஒரு நண்பனாகவே மேற்குலகம் காட்டிக் கொள்கிறது. நீண்டகால் அடிப்படையில் இந்தியாவிலும் பார்க்க சீனாவிற்கே மேற்குலகம் முக்கியத்துவம் கொடுக்கும்.

இந்தியாவை சுற்றியுள்ள சகல நாடுகளும் இந்தியாவை ஒரு விரோதியாகவே பார்க்கின்றன. இந்தியாவுடன் கலாச்சாரத் தொடர்புள்ள நாடுகளில் இந்திய விரோதப் போக்கு மிக அதிகம்.

மேற்குலகின் பொருளாதார மற்றும் படைத்துறை வல்லுனர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவுடன் பாரிய முரண்பாட்டை வளர்க்க வேண்டாம் என்று மேற்குலக அரசுகளுக்கு அறிவுரை கூறி விட்டனர். அதன் அடிப்படையிலேயே ஹொங்ஹொங் மீண்டும் பிரித்தானியாவால் சீனாவிடம் கையளிக்கப்பட்டது. அல்லது அங்கு ஒரு தனிநாட்டுப் போராட்டமே தொடங்கியிருந்திருக்கும்.

இந்தியா ஒரு பெரிய மக்களாட்சி நாடாக இருந்த போதும் அது ஒரு குழப்பமான மக்களாட்சியே. இந்திய ஆட்சியாளர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாதவர்களாகவே என்றும் இருக்கிறார்கள். மேற்குலக நாடுகள் தீர்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய மக்களாட்சியில்லாத சீனாவை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சிறந்த நண்பனாகவே கருதுகிறார்கள்.

சீனா மேற்குலகப் பங்காளிகளை எப்படிப் பாவிக்கும்? அது செய்யவிருக்கும் விட்டுக் கொடுப்புகள் என்ன? சீனா ஒரு பிராந்திய வல்லரசாகவே இருக்கும். அதன் ஆதிக்கம் ஆபிரிக்காவைத் தாண்டிச் செல்லாது. இதனால்தானா சீனா தனது கடற்படைப் பலத்தை மட்டுப்படுத்தப் பட்ட அளவில் வைத்திருக்கிறது? இதனால்தானா சீனாவிடம் விமானம் தாங்கிக் கப்பல்கள் இல்லை? சீனா ஒரு பிராந்திய வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்படுமிடத்து இந்தியாவின் நிலை என்ன? இலங்கை, பாக்கிஸ்த்தான், நேப்பாளம், பங்களாதேசம், மியன்மார் ஆகியவை சீனாவின் செய்மதி நாடுகளாகிவிடும். அந்தக் கட்டத்தில் சீனா இந்தியாவை என்ன செய்யும்? சீனா இந்தியாவை துண்டாடும். இதை மேற்குலகம் தடுக்க முடியுமா? தடுக்கும் கட்டத்தில் பங்காளி உறவு பாதிப்படையும். சீனா அப்போது மேற்குலகுடன் ஒரு உடன்பாட்டைச் செய்து கொள்ளும். அது இந்தியாவைத் துண்டாடி மேற்குலகுடன் பங்கு போட்டுக் கொள்வது.

தொடர்புடைய பதிவுகள்:
இந்தியாவிற்கு சீனா போடும் சுருக்குக் கயிறு

இலங்கையில் இறுகும் சீனப் பிடி

பரிதாபகரமான நிலையில் இந்தியா

சீன ஆயுத வலிமையும் இந்திய மடைமையும்

DNAபடி ஹிட்லர் யூதராம். இலங்கை இனக்கொலையாளிகளும் அப்படியா?


ஜெர்மனிய சர்வாதிகாரியும் இனக்கொலையாளியுமான அடொல்f ஹிட்லர் ஒரு ஜெர்மானியர் அல்லராம் என டி.என்.ஏ சோதனைகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.

அடொல்f ஹிட்லரின் உறவினர்கள் 39பேரிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளை Jean-Paul Muldersஎன்ற பத்திரிகையாளரும் Marc Vermeeren என்ற சரித்திர அறிஞரும் இணைந்து நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

அடொல்f ஹிட்லரின் உறவினர்கள் 39பேரிடமிருந்து பெறப்பட்ட Haplopgroup E!b1b (Y-DNA) எனப்படும் Chromosome என்னும் டி.என்.ஏ மாதிரி ஜெர்மனியரிடமோ அல்லது மேற்கு ஐரோப்பியரிடமோ காணப்படுவதில்லையாம். மாறாக இவை ஆபிரிக்கர்களிடமும் யூதர்களிடமும் மட்டுமே காணப்படுகிறதாம்


அடொல்f ஹிட்லர் யாரை தனது வாழ்நாளில் வெறுத்தாரோ அவர்களின் உறவினரா அடொல்f ஹிட்லர்?

அடொல்f ஹிட்லர் ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்படுவது இது முதல் தடவையல்ல. ஹிட்லரின் மருமகன் ஒருவர் அவரை அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையை வெளியிடப்போவதாக மிரட்டியதாக தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தது.

அடொல்f ஹிட்லரின் தந்தை அலொய்ஸ் மரியா சிக்கெல்கிறூபர் என்ற பணிப்பெண்ணிற்கும் பிரான்கென்பேர்கர் என்னும் யூதருக்கும் பிறந்தவர் என்று ஏற்கனவே பலர் கூறியிருந்தனர். முதல் முறையாக விஞ்ஞான பூர்வமாக நிறுவ சிலர் முயற்சித்துள்ளனர்.

இலங்கையில் 1950களின் பிற்பகுதியில் மொழிப்பிரச்சனையை முன்வைத்த ஒரு சிங்களத் தலைவர் ஒரு தமிழ் வம்சா வழியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் எல்லாம் புத்தி விருத்தியற்றவர்களாக இருந்தபடியால் அவரது தாயை அவர்கள் குடும்பத் தோட்டத்தில் வேலை செய்த வேலு என்பவருடன் உடலுறவு வைக்கச் செய்து பிறந்தவர்தான் அந்த இனக்கொலையாளி.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பேரன் ரத்வத்த பிரித்தானியருடன் செய்த கண்டி உடன் படிக்கையில் தமிழிலேயே கையொப்பமிட்டுள்ளார். இதனால் இவர் தமிழரா என்ற சந்தேகம் இன்றும் உண்டு.

இன்னொரு 1977, 83 இனக் கொலையாளிச் சிங்களத் தலைவர் ஒரு முஸ்லிம் என்று குற்றம் சாட்டுப்படுபவர்.

ராஜராஜ சோழன் இலங்கையின் உருகுணு பிரதேசத்தைத் தவிர்ந்த மற்றப் பகுதிகளைக் கைப்பற்றினான். உருகுணு மன்னனிடம் பாண்டியர்களின் முடியும் செங்கோலும் இருந்தது. அதனால் பாண்டிய அரசுரிமை தங்களுடையது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தனர். ராஜராஜ சோழனின் மகன் இராசேந்திர சோழன் உருகுணப் பிரதேசத்தையும் கைப்பற்றினான். உருகுணுப் பிரதேசம் அம்பாந்த்தோட்டையையும் உள்ளடக்கியது. உருகுணுப் பிரதேச மீன்வளங்கள் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பதைப் பார்த்த சோழ அரசு அப்பகுதியில் தமிழ் மீனவர்களைக் குடியேற்றியது. இதனால் கரவ என்று அழைக்கப்படும் கரைநாட்டுச் சிங்களவர்கள் தமிழ் மீனவர்களே என்று சொல்வோரும் உண்டு. . அப்படியானால் ராஜபக்சேக்கள்????

Monday 23 August 2010

கே பத்மநாதனின் உலங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) நாடகம்


விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் பத்மநாதன் அவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்களாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டியில் எழும் சந்தேகங்கள்:

  • கே. பத்மநாதன்: பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி அவரது குடும்ப அங்கத்தவர்களை காப்பாற்றும்படி என்னைக் கேட்டபின் நான் ஒரு திட்டம் வகுத்து வான்வழி மூலம் ஆரம்ப ஏற்பாடுகளை செய்தேன். இலங்கை கடற்படை அணுகமுடியாத தொலைவிலுள்ள துறைமுகம் ஒன்றில் காத்திருக்கும் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்தேன். உக்ரேய்ன் நாட்டிலிருந்து எனக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு பாவித்த ஹெலிகொப்டரை வாங்கவும் நான் ஒழுங்கு செய்தேன். எல்.ரீ.ரீ.ஈ. இன் விமானப்படையின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பயிற்றப்பட்ட விமானிகள் வன்னிக்கு ஹெலிக்கொப்டரை கொண்டு செல்வர் என்பதே திட்டம்.
சந்தேகம்: எத்தக் கால கட்டத்தில் இந்தத் திட்டம் உங்களால் முன்வைக்கப் பட்டது? 2008-ம் ஆண்டிலிருந்தே இந்தியக் கடற்படையினர் பருத்தித் துறையிலிருந்து திருமலை வரையிலான கடற்பிரதேசத்தில் நிலை கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வராத படியும் யாரும் வெளியேறாத படியும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் எப்படி இரு விடுதலைப் புலி விமானிகள் வெளியேறுவது, உலங்கு வானூர்தி(ஹெலிகொப்டர்) உள்வருவது, பிரபாகரன் குடும்பத்தை வெளியேற்றுவது?

  • கே. பத்மநாதன்: vஅவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். முழுக் குடும்பமுமே போய்விட்டது. பாலச்சந்திரனின் மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு 12 வயது மட்டுமே. நான் அவனை நேரில் கண்டதில்லை. ஆனால் அவன் சிறுபையனாக இருந்தபோது நான் பிரபாகரனுடன் அடிக்கடி பேசுவேன். பிரபாகரன் தொலைபேசியை அவனிடம் கொடுத்து இந்தா கேபி மாமாவுடன் கதை என்பார்.அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். முழுக் குடும்பமுமே போய்விட்டது. பாலச்சந்திரனின் மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு 12 வயது மட்டுமே. நான் அவனை நேரில் கண்டதில்லை. ஆனால் அவன் சிறுபையனாக இருந்தபோது நான் பிரபாகரனுடன் அடிக்கடி பேசுவேன். பிரபாகரன் தொலைபேசியை அவனிடம் கொடுத்து இந்தா கேபி மாமாவுடன் கதை என்பார்.
சந்தேகம்: 12 வயதுச் சிறுவனை சித்திரவதை செய்து கொன்றவர்களை நீங்கள் உங்கள் முதல் வாரப் பேட்டியில் எப்படி நீங்கள் கண்ணியவான் என்றீர்கள்? அவர்களுடன் சேர்ந்திருந்து எதையோ எல்லாம் சாதிக்கப் போகின்றேன் என்கிறீர்கள்?

  • கே. பத்மநாதன்:ரிவியில் பார்த்தவுடனேயே நான் உடனேயே இது பிரபாகரன் உடல்தான் என்பதை அறிந்துகொண்டேன். நான் மிக மனமுடைந்து போனேன். பல மணித்தியாலங்களாக நான் யாருடனும் தொடர்பின்றி இருந்து தியானம் செய்தேன் பழையதை நினைத்து அழுதேன்.
சந்தேகம்: நீங்கள் நீண்ட நாட்களாக பிரபாகரனைக் காணவில்லை என்று நினைக்கிறோம். மேலுள்ள இரு படங்களையும் பாருங்கள். எப்படி இடது பக்கத்தில் இருக்கும் படத்தை பிரபாகரனது என்று கூறுவீர்கள். 2004-ம் ஆண்டில் அப்படி இருந்த பிரபா எப்படி 2009இல் இளமையானார்? இரு படங்களிலும் அவரது நாடியை உற்று பாருங்கள். இதையெல்லாம் பார்க்காமல் வீணாக அழுது விட்டீர்களே!!! உங்கள் தியானம் வீண்போகவில்லையோ? வெளிநாடுகளில் உள்ள உங்கள் ஆதரவாளர்கள் நீங்கள் பிரபாகரனின் உத்தரவின் பேரில் இலங்கை அரசிடம் சரணடைந்து அவர்களிடம் அகப்பட்டிருக்கும் போராளிகளை பாதுகாக்க முயல்வதாகக் கூறித்திரிகிறார்களாம்!!! பிரபாகரன் இப்போதும் உங்களுடன் "தொடரிபில்" இருப்பதாக வேறு சொல்கிறார்களாம். சற்றுக் கவனியுங்கள்.

  • கே. பத்மநாதன்:ஒன்றை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நான் அங்கு இருக்கவில்லை. எனக்கு சொல்லப்பட்டதையும் நான் கேள்விப்பட்டதையும் வைத்துத்தான் கூறவேண்டும். பிரபாகரனின் மரணத்தை பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல் இது. பிரபாகரனும் 60 பேர் கொண்ட புலிகளின் குழுவும் நந்திக்கடல் அருகே ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் யாவருமே கடைசிவரை போராடினார். மரணத்தை தழுவிக்கொண்டனர்.
சந்தேகம்: முதலில் பிரபாகரனின் படத்தை தொலைக்காட்சியில் பார்த்து நிச்சயமாக அவர் இறந்து விட்டதாகக் கூறிய நீங்கள் பின்னர் ஏன் இப்படி பல்டி அடிக்கிறீர்கள்?

  • கே. பத்மநாதன்: விவாதத்திற்கு வேண்டுமானால் ஆம் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. பிரபாகரனும் பொட்டுவும் உயிருடன் உள்ளனர். அவர்கள் சில வருடங்களின் பின்னர் தோன்றுவர் என்பது அவர்களின் நினைவை அவமதிப்பதும் கேவலப்படுத்துவதும் ஆகும். இந்த நகைப்புக்குரிய விடயத்தை தொடர்ந்து அழுத்தி கூறுபவர்கள் மடத்தனமான கதையை விட்டுவிட்டு பிரபாகரனையும் பொட்டுவையும் வெளிக்கொணரவேண்டும்.
சந்தேகம்: முதலில் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று கூறி அவரை அவமதித்ததும் கேவலப் படுத்தியதும் நீங்கள் தானே!!! மடத்தனமான கதையைச் சொன்னதும் நீங்கள்தானே!!!!! இலங்கை மே 18-ம் திகதி இறந்ததாகச் சொன்னது. நீங்கள் முதல் சொன்னதில் இருந்து பல்டி அடித்து அவர் 17-ம் திகதி இறந்ததாகச் சொன்னீர்கள். மதிவதனியும் துவரகாவும் பாது காப்பாக இருப்பதாகவும் கூறினீர்கள். இன்று சகலரும் இறந்து விட்டனர் என்கிறீர்கள்.

  • கே. பத்மநாதன்:வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புதான் இந்தப்(பிரபாகரனை உழங்கு வானூர்தி மூலம் பாதுகாக்கும்) பணத்தை தந்திருக்க வேண்டும். நோர்வேயில் இருந்த நெடியவன் எனக்கு பணத்தை அனுப்புவார் என காஸ்ட்ரோ, சாள்ஸ் அன்ரனியிடம் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் அவர் அதை செய்யவே இல்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. பணம் அவசரம் தேவை என நான் பல முறை கேட்டேன். பணம் வந்து கொண்டிருக்கிறது, பணம் வந்துக்கொண்டிருக்கிறது என கூறப்பட்டபோதும் அது ஒருபோதும் வரவில்லை. வெளிநாடு ஒன்றிலிருந்து விமானப்பிரிவு தலைவர் அச்சுதனுடன் நெடியவன் தொடர்பு கொண்டிருந்தார். அச்சுதன் முதலில் அந்த நடவடிக்கைக்கு தேவையான எல்.ரீ.ரீ.ஈ விமானிகளை தருவதற்கு சம்மதித்திருந்தார். ஆனால், பின்னர் திடீரென என்னோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். சிலவேளை இது நெடியவனின் கட்டளையாகவும் இருக்கலாம். நான் அந்தரப்பட்டேன். ஊதியத்திற்கு பணியாற்றும் விமானிகளை நாடினேன். ஆனால் நிதி இன்மையால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை.
சந்தேகம்: உங்கள் பேட்டியில் தொடர்ந்து நெடியவனையும் காஸ்ரோவையும் குற்றம் சாட்டி வருகிறீர்கள். பிரபாகரன் இறந்த நாளில் இருந்து நீங்கள் "கைது செய்யப்படும்" வரை நீங்கள் ஏன் அவர்களின் துரோகத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை?



Sunday 22 August 2010

இலண்டனில் பதுங்கிய புலிக் கொடி ஜெனீவாவில் பறந்தது.


சிவந்தன் உரையாற்றுகிறார்.













23 ஜூலை 2010 இலன்று சிவந்தன் ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தை நோக்கித் தனது கால் நடையை ஆரம்பித்தார். கறுப்பு ஜூலையை நினைவு கூரவும் சிவந்தனை வழியனுப்பவும் பிரித்தானியாவின் இலண்டன் நகரில் 5000 முதல் 7000 வரையிலான மக்கள் குழுமி இருந்தனர். இலண்டனின் அன்று புலிக்கொடி எதுவும் பிடிக்கப் படவில்லை. அதற்கு முதல் 2010 மே மாதம் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர நடந்த நிகழ்வில் புலிக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. சென்ற வெள்ளிக் கிழமை ஜெனிவாவில் சிவந்தனை வரவேற்க மக்கள் கூடிய போது பல புலிக் கொடிகள் அங்கு பறந்து கொண்டிருந்தன.

சிவந்தனின் ஆயிரம் மைல் நடைப் பயணத்தில் பிரித்தானியத் தேசியக் கொடி பிரெஞ்சுத் தேசியக் கொடி ஐநா கொடி ஆகியவற்றை அவ்வப் போது தாங்கிச் சென்றார்.

வியாழக் கிழமை மாலை எழுமணிக்கு இலண்டனில் இருந்து புறப்பட்ட நான் மறுநாள் பிற்பகல் 1-30இற்கு ஜெனிவாவை அடைந்தேன். சொகுசு வாகனத்தில் பயணம் செய்த எனக்கே பலத்த களைப்பு. சிவந்தன் அவ்வளவு தூரத்தையும் எப்படி நடந்தார்?

சிவந்தன் முன்வைத்த கோரிக்கைகள்:

• இலங்கை அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மானுடத்திற்கெதிரான முறையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களிற்கான சுதந்திரமான சர்வதேச விசாரணை.
• சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பார்வையிடுவதற்கான படிமுறைகள், போரினால் இடம் பெயர்ந்து நிர்க்கதி நிலையில் உள்ள தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்.

• இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மதிக்கும்வரை அதனை புறக்கணித்தல்.

இவை அடங்கிய கோரிக்கை கடிதத்துடன் ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகழக அதிகாரியைச் சந்தித்தார். சிவந்தன் தமிழ் மக்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளை அவரிடம் எடுத்துச் சொல்லியபோது அவர் கண்ணீர் மல்கினாராம்.

சிவந்தனின் நடை பயணத்தின் இறுதி நாள் நிகழ்வுகளின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...