Saturday 12 June 2010

திரைப்பட விழா நடாத்திய இந்திய நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர வேண்டும் - சிங்கள எம் பி


இலங்கையில் திரைப் படவிழா நடாத்திய இந்திய நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று சிங்கள பாராளமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க பொரிந்து தள்ளியுள்ளார். இலங்கையில் நடந்த திரைப்பட விழாவிற்கு இந்தியாவால் ஒரு ரூபா கூடச் செலவழிக்கப்படவில்லை. முழுச்செலவும் இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையே செய்தது என்று கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திரைப்பட விழாவிற்கு விநியோகிக்கப் பட்ட நுழைவுச் சீட்டு விபரம்
விற்பனை செய்யப் பட்டவை ------------------------------ 15%
ஆதரவு தந்த நிறுவனங்களுக்கு கொடுத்தவை ----- 17%
ஆளும் கட்சியினர்க்கு கொடுத்தவை ------------------68%

மொத்தச் செலவு ----1000 மில்லியன் ரூபாக்கள்
வரவு ------------------------15 மில்லியன் ரூபாக்கள்

இதையறிந்து ஆத்திரமடைந்த சிங்கள் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இந்திய சர்வ தேச திரைப்பட விழாவை நடாத்திய Wizcraft International Entertainment Pvt Ltd நிறுவன மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பச்சான் வராததால் ஏமாந்த சிங்கள மச்சான்
அமிதாப் பச்சான் வராதமையை சிங்கள் எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க மாப்பிளை இல்லாக் கல்யாணம் என்று சொல்லி வந்த இந்தி நடிகர்களைத் தாழ்த்திவிட்டார். அவர் நடந்த விழாத் தொடர்பான கணக்குகள் தேவை என்றும் கோரியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக பாராளமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்தத் திரைப்படவிழா தோல்வியில் முடிவடைந்தது தென்னக நடிகர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தமையாகும். தமிழன் ஒன்றுபட்டால் அது தமிழ்நாட்டில் உள்ள ஆரிய சக்திகளுக்கு அது பேரிடியாகும். இதனால் அவர்கள் இப்போது திரைப்பட விழாவை எதிர்த்தமைக்கு எதிராக குரைக்கத் தொடங்கிவிட்டனர். இதில் குமுதத்தில் ஞானி முன்னிற்கிறார்.

மூன்று தடவை ஜிப் கழற்றிய கட்டழகி


அது ஒரு மக்கள் நெரிசல் மிக்க நகரம். அதில் ஒரு மக்கள் நிறைந்த பேருந்துத் தரிப்பிடம். அதில் ஒரு கட்டழகி வரிசையில் முன்னணியில் நின்றாள். இறுக்கமான குட்டைப் பாவாடை. அதுவும் தோற் பாவாடை. பேருந்து வந்து நின்றது. அவள் காலைத் தூக்கி படியில் ஏற முயன்றாள் முடியவில்லை. தடுத்தது அந்த இறுக்கமான தோற் குட்டைப் பாவாடை. பேருந்து நடத்துனரைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு தனது பாவாடையின் பின் புறத்தில் இருக்கும் ஜிப்பை கொஞ்சம் தளர்த்தினால் ஏறலாம் என்று. பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் முடியவில்லை. மீண்டும் செலுத்துனரைப் பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு மீண்டும் பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் முடியவில்லை. மூன்றாவது தடவையாக செலுத்துனரைப் பார்த்து மன்னிப்புக் கேட்பது போன் ஒரு கவர்ச்சிப் புன்னகை செய்து விட்டு பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே நன்றாகத் தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் மூன்றாம் தடவையும் முடியவில்லை. அவளின் பின்னால் நின்ற நல்ல காத்திரமான உடலமைப்புக் கொண்ட வாலிபன் அவளை இடுப்பில் பிடித்துத் தூக்கி பேருந்தில் ஏற்றினான்.

கட்டழகிக்குக் கோபம் வந்து அவனைப் பார்த்து எனக்கு முன் பின் தெரியாத நீ எப்படி என் உடலைத் தொட்டுத் தூக்க முடியும் என்று சீறினாள். அதற்கு அந்த வாலிபன் எனக்கும் உன்னைத் தெரியாதுதான் ஆனால் நீ முன்று தடவை எனது ஜிப்பை கீழே தள்ளி விட்டபின் நாம் இருவரும் அன்னியோன்யம் ஆகிவிட்டோம் என்றான்

மோதிக் கொள்ளும் கூகிளும் ஆப்பிளும்


கைத்தொலைபேசித் துறையில் விளம்பரங்களுக்கான் கடும் போட்டி இப்போது கூகிளுக்கும் ஆப்பிளுக்கும் இடையில் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது.
ஒரு காலத்தில் சிலிக்கன் பள்ளத்தாக்கில்(Silicon Valley) நண்பர்களாக இருந்த இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையில் கடும் முறுகல் தோன்றியுள்ளது. இப்போது உலகெங்கும் smartphoneகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஆப்பிளின் ஐபோன்களில் கூகிள் விளம்பரங்களைப் புகுத்தாமல் ஆப்பிள் தடை செய்ததைத் தொடர்ந்து இரு நிறுவங்களுக்குமிடையில் மோதல் மோசமடைந்துள்ளது.

Under the terms of Apple’s latest operating system, clarified by the company on Monday, critical information for distributing and analysing adverts cannot be shared with services owned by makers of other mobile operating systems. Effectively, this cuts AdMob, Google’s newly-acquired mobile advertising service, out of the iPhone platform completely.

அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்து அதன் மூலம் மக்களுக்கு குறைந்தவிலையில் பொருட்கள் கிடைக்க வழிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாகும்.

இனிவரும் காலங்களில் இப்போது கணனிகள் வகிக்கும் இடத்தை நவீன கைத்தொலைபேசிகளான smartphoneகள் கைப்பற்ற இருக்கின்றன. அதனால் பல வர்த்தக நிறுவனங்கள் smartphone துறையில் தமது ஆதிக்கத்தை செலுத்தத் தாயாராகின்றன. இதன் முன்னோடியாக கூகிள் நிறுவனம் 750மில்லியன் டொலர்களுக்கு அட்மொப் (AdMob) என்னும் விளம்பரத் துறை நிறுவனத்தை விலைக்கு வாங்கி தனது இணைய விளம்பரத்துறை ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. ஆப்பிளும் தன்பங்குக்கு iAd என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. கைத்தொலைபேசிகளுக்கு குறுந்தகவல்கள் மூலம் விளம்பரங்களை அனுப்பி பெரும் தொகையை சம்பாதிப்பதில்தான் ஆப்பிளும் கூகிளும் மோதிக் கொள்கின்றன.

AT&T, Nissan, Disney ஆகிய நிறுவனங்கள் தமது விளம்பரங்களை iAdமூலம் ஆப்பிளின் கைத்தொலைபேசிகளில்(iPhone and iPod Touch) செய்கின்றன. இதன் மூலம் ஆப்பிளின் ஆரம்ப வருமானம் இந்த ஆண்டில் 60மில்லியன் டொலர்கள். தனது iPhone and iPod Touch ஆகியவற்றில் கூகிளின் விளம்பரங்களைத் தடுப்பதன் மூலம் தனது தனியுரிமையை iPhone and iPod Touch நிலை நாட்ட ஆப்பிள் முயல்கிறது.

கைத்தொலைபேசிகளூடான மொத்த விளம்பர வருமானம் தற்போது 600மில்லியன் டொலர்களாகும். இது இன்னும் மூன்று வருடங்களில் ஒன்றரை பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் பெரும் வருமான வளர்ச்சியை யார் அதிகம் கைப்பற்றுவது என்பதுதான் கூகிளிற்கும் ஆப்பிளிற்கும் இடையில் நடக்க்கும் போட்டி.

Friday 11 June 2010

செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்த பிரித்தானியத் தமிழ்த் தொலைக்காட்சிகள்


இம்மாதம் 23-ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் உலகத் தமிழ செம்மொழி மாநாட்டிற்கு பல தமிழ உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செம்மொழி மாநாடு ஈழத்தில் பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அவலத்துக்கு உள்ளாகி இருக்கும் இவ்வேளையில் தேவைதான என்பதும் இவர்கள் எதிர்ப்பதற்கான பல காரணங்களில் ஒன்று. இபோது அவர்கள் அவலங்களைத் துடைப்பத விட்டு தமிழுக்கு விழா எடுப்பதா என்பதும் ஒரு கேள்வி.

பல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உண்டு. இதை பல சிங்கள அமைச்சர்கள் பலதடவை தெரிவித்து விட்டனர். இதை இந்திய அரசு மறுக்கவுமில்லை. இந்திய அரசில் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு அங்கம். இதனால் இலங்கைத் தமிழர்களின் அவலத்திற்கு திரு மு கருணாநிதிக்கும் அவரது கட்சிக்கும் பல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் பொறுப்பு உள்ளதை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது.

ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்துள்ளது. "பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார். யாழ் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் அமைப்பு செம்மொழி மாநாட்டைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளது.

இலங்கையில் இனக் கொலை நடந்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜி என்ற சிங்களவர்களின் உற்ற நண்பன் எந்த வகையில் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்? செம்மொழி மாநாட்டு அமைப்பாளர்களின் மிக முட்டாள்த் தனமான முடிவு பிரணாப் முஹர்ஜியை அழைத்தது.

பிரித்தானியாவில் உள்ள சில "தமிழ் அறிஞர்கள்" கருணாநிதியின் செம்மொழி மாநாட்டிற்கு அழைக்கப் பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தமிழ்தொலைக்காட்சிகளை அணுகி தங்களைப் பேட்டி காணும்படி கோரினார். அதற்கு இரு தொலைக்காட்சிச் சேவைகளும் மறுத்துவிட்டன.

பத்மநாதன் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள்


கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் இப்போது தெரிவிக்கப்படுகிறன. சென்றவாரம் இலங்கை அமைச்சர் ஹெஹலிய ரம்புக்வெல உள்ளூர் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று தெரிவித்தார்.

பத்மநாதன் கைது செய்யப் பட்டு இலங்கை வந்தாரா? கடத்தப் பட்டாரா? அல்லது இலங்கைக்கு தனது விருப்பத்துடன் சென்றாரா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் தடுமாறுகின்றனர். அத்துடன் அவர் ஏன் இந்தியாவிற்கு நாடு கடத்தப் படவில்லை? இந்தியா ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பல தகவல்களை அறிந்து கொள்ள அதில் முக்கியமாக ராஜீவ் காந்தி கொலைக்கும் ஆர். பிரேமதாசா அரசிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள, விடுதலைப் புலிகளின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ய நீண்ட நாட்களாக முயற்ச்சி செய்து வருகிறது. இதற்காகவே கேணல் கிட்டுவை நடுக்கடலில் வைத்து கைது செய்ய முயன்று தோல்விகண்டது. இந்நிலையில் பத்மநாதன் தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் இப்போது வெளிவருகின்றன.

தகவல் -1 - துரோகி பத்மநாதன்
பத்மநாதன் சில வருடங்களுக்கு முன்பே இலங்கை அரசின் கைப் பொம்மையாக மாறிவிட்டார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் கப்பல்கள் பல இலங்கை இந்தியக் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டன. அவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரிலேயே இலங்கை சென்றார். புலிகளின் நிதிதொடர்பாக அவர் இலங்கை அரசிற்கு தகவல்கள் வழங்கினார்.
இந்த தகவலில் சில சந்தேகங்கள் உண்டு. இலங்கைக்கு உதவி செய்ய அவர் இலங்கை செல்லாமல் தொடர்ந்தும் வெளிநாட்டில் இருந்து கொண்டே விடுதலைப்புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்பை சிதைக்க தொடர்ந்தும் உதவிகளைச் செய்திருக்கலாம்.

தகவல் - 2 துணைவன் பத்மநாதன்
பன்னாட்டு ரவுடிக் கும்பல் விடுதலை புலிகளை ரவுண்டு கட்டித் தாக்கி இறுதிப் போரை முடிவுக்குகொண்டு வந்த பின்னர் இலங்கை அரசிடம் பத்தாயிரம் விடுதலைப் புலி போராளிகள் அகப்பட்டுக் கொண்டனர். ஏற்கனவே இவர்களிடம் இவர்களை மீட்பதற்கு பன்னாட்டு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் உறுதி அளித்திருந்தது. இதன் பிரகாரம் விடுதலை புலிகளின் தலைமப் பீடமும் இலங்கை அரசும் சில உடன்படிக்கைகளைச் செய்து கொண்டன. அந்த உடனபடிக்கையின் ஒரு அம்சமாக பத்மநாதன் இலங்கை அரசிடம் சரணடைந்து விடுதலைப் புலிகளின் சொத்துக்களை இலங்கையிடம் கையளிப்பது அதற்கு கைமாறாக இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள பத்தாயிரம் விடுதலைப் புலிகளைக் கொல்லாமல் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவது.
இந்தத் தகவகளின் உண்மைத் தன்மையை பத்மநாதனுக்கு இனி என்ன நடக்கவிடுக்கிறது என்பதை ஒட்டியே அறிந்து கொள்ள முடியும்.

Thursday 10 June 2010

தென்னிந்திய திரைப்படத் துறைக்கு நன்றி



தென்னிந்திய திரைப்படவுலகம்
தோற்கடித்தது ஆரிய சிங்களக் கூட்டமைப்பை
வெற்றி கொண்டோமென்று கொக்கரித்தது சிங்களம்
சர்வதேச மட்டத்தில் சிங்களத்தை பெருமைப்படுத்த
சதியொன்று தீட்டியது வட இந்தியம்
நடந்தது இந்தியத் திரைப்படவிழாவல்ல
வட இந்திய கோட்டான்களின் கோர தாண்டவம்
நன்றி எம் இனிய உறவுகளே

மமதை கொண்ட ஆரியம்
மண்கவ்வியது கொழும்பு நகரில்
சிங்களம் வீணடித்தது பலகோடிகள்
பாரதிதாசன் கூற்றும் நிறைவேறியது
எம் பகைவர் மறைவர் நாம் ஒன்று பட்டால்

பணம் வாங்கி பேசாதிருந்தது
பார்பனிய ஊடகக் கும்பல்
மௌனித்திருந்தது மஞ்சள் துண்டு
ஆர்பரித்தது ஆரியக் கூட்டம்

தசை மலையென்று வெறுத்திருந்தேன்
தங்கச் சிலையென்று இன்று ரசிக்கின்றேன்
நீ பேசும் ரமிளை இகழ்ந்திருந்தேன்
நின் தமிழை இன்று கேட்டு மகிழ்கிறேன்
என் தமிழரை கொன்றொழித்தோரும்
கொலைக்கு கொடுவாள் கொடுத்த
இத்தாலிச் சனியாளும் இணைந்து
செய்த திரைப் படவிழாவை நீ புறக்கணித்தாய்
துணையென வந்தோர் துரோகிகளாகிய
எம் வரலாற்றில் எமக்கென இரங்கியதற்கு
என் மனதின் இனிய நன்றிகள் நமீதா

Wednesday 9 June 2010

படிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை


ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசையை அவர் அரச வைத்தியரிடம் கூறினார். அவரும் பல யோசைனைகள் செய்தும் பல மருந்துகளை பரீட்சித்தும் பார்த்துவிட்டு இறுதியில் மந்திரியிடம் சொன்னார் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பேன். அதற்காக நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தரவேண்டும் என்று சொல்லி அதற்கான உறுதி மொழியையும் மந்திரியிடம் இருந்து பெற்று விட்டார்.

அரசி குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது மார்புக் கச்சையில் களவாக சருமத்திற்கு அரிப்புத் தரும் ஒரு தூளை தூவிவிட்டார் அரச மருத்துவர். குளித்துவிட்டு மார்புக்கச்சையை அணிந்த அரசிக்கு மார்பில் கடிக்கத் தொடங்கிவிட்டது. தாங்க முடியாத கடி.  அரனிடம் அரசி முறையிட்டு அரசன் அரச மருத்துவரை உடன் அழைத்தார். மருத்துவரும் அரசியை நோயின் குறிகளை விசாரிப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு இதற்கு உரிய மருந்து மந்திரியின் உமிழ் நீரை அவரது நாவாலும் உதட்டாலும் இருமணித்தியாலங்கள் தடவுவதுதான் என்று அரசனிடம் சொன்னார். அரசனும் அரசியாரின் தாங்கமுடியாத மார்புக்கடியை தீர்க்க வேறு வழியின்ரி ஒப்புக் கொண்டார். வைத்தியரும் மந்திரியாரின் வாய்க்குள் மாற்று மருந்தை திணித்து விட்டு மந்திரியாரின் சிகிச்சையை ஆரம்பிக்கச் சொன்னார். மந்திரியும் தனது நீண்டகால ஆசையை இருமணித்தியாலங்கள் தீர்த்து அரசியின் மார்பையும் குணப்படுத்தினார்.

பாவம் மந்திரி மருத்துவருக்கு உறுதி அளித்த படி ஆயிரம் பொற்காசுகளை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். வைத்தியருக்கு வந்ததே கோபம். அதனால் அரசன் குளித்துக் கொண்டிருக்கும் போது அரசரின் கோமணத்தில் அரசியாருக்குத் தூவிய அதே தூளைத் தூவிவிட்டார்!!!!!

கடலில் இலங்கையிடம் அடிவாங்கிய இந்தியர்கள் இபோது தரையிலும் வாங்கிக்கட்டுகிறார்கள்.


கடலில் இந்திய மீனவர்களை சிங்களவர்கள்:
  • தாக்கினர்
  • குருவிகளைப் போல் சுட்டுக் கொன்றனர்.
  • நிர்வாணமாக்கி மானம் கெடுத்து துரத்தினர்.
இப்போது சிங்களவர்கள் மானம் கெட்ட காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இந்தியாவின் குடிமக்களை தரையிலும் தாக்கத் தொடங்கி விட்டனர்.

இலங்கையின் சிலாபத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த மணியம் ஹரிராஜ் என்ற இந்தியர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மணியம் ஹரிராஜ் என்ற இந்தியரைத் தாக்கியவர் ஆரச்சிக்கடுவை பிரதேச சபையின்(இலங்கைப் பஞ்சாயத்து) தலைவரான ஜகத் சமந்த என்று சந்தேகிக்கப் படுகிறது.
தன்வினை தன்னைச் சுடும்

தமிழர்கள் மீண்டும் ஆயுதமேந்திப் போராடுவார்களாம் - பிபிசியின் சதியா?


இலங்கை தொடர்பாக மேலெழுந்தவாரியாகவும் இலங்கை அரசு கூறியவற்றையும் செய்திகளாக வெளியிட்டு வந்த பிபிசி இப்போது தனது நிருபர் Stephen Sackur ஐ இலங்கைக்கு அனுப்பி சற்று ஆழமாக இலங்கை இனப்பிரச்சனையை அணுகுகிறது. பிரித்தானிய சனல் -4 தொலைக் காட்சியின் செய்திச் சேவை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்கள் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் விருதையும் பெற்றது. இது பிபிசியை சிந்திக்க வைத்ததால் இப்படி நடக்கிறதா?

கொக்கரித்த கோத்தபாய ராஜபக்ச
பிபிசீயின் Stephen Sackurஇற்கு வழங்கிய செவ்வியில் போர்குற்றம் தொடர்பாக சர்வ தேச அரங்கில் சாட்சியளித்தால் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா கொல்லப் படுவார் என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
கோத்தபாயவின் கூறியவை:
  • He can’t do that. He was the commander. He’s responsible — that’s a treason! We will hang him if he do that! I’m telling you, that’s a treason! How can he lie that? How can he betray the country? How can he, by such lies — if he says that, he is a liar. He is a liar!

இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பேட்டியை இந்த இணைப்பில் காணலாம்: கோத்தபாயவின் கொக்கரிப்பு


பிபிசீயின் Stephen Sackur இற்கு வழங்கிய இரகசிய தொலைபேசிச் செவ்வியில் சரத் பொன்சேக்கா தான் எந்த சுதந்திரமான விசாரணையிலும் நடந்த போர் குற்றம் தொடர்பாக எதையும் மறைக்காமல் வெளிப்படுத்துவேன் என்றார்.
அவர் கூறியது:
  • General Fonseka told me, in a clandestine telephone interview, that he would be prepared to testify before any independent investigation of alleged abuses during the Tamil war. “I will not hide anything,” he said.

மீண்டும் ஆயுதப் போர் தொடங்கும் என்றார்
ஒரு விடுதலைப் புலிப் போராளி

பிபிசீயின் Stephen Sackurஇற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளி ஒருவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்றார். அந்தப் போராளி இறுதிப் போரில் தப்பி இப்போது மறைந்திருப்பவர் என்ற பிபிசி அவர் பற்றி எந்தத் தகவல்களையும் வெளிவிடவில்லை. இன்னும் சில வருடங்களில் மீண்டும் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது தவிர்க்க முடியாதது. விடுதலைப் புலிப் போராளிகள் பலர் தப்பி இருப்பதை நம்பலாம். ஆனால் அவர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று வந்த ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்குப் பேட்டி கொடுக்கக் கூடிய சூழ்நிலை இன்னும் இலங்கையில் உருவாக வில்லை. பிபிசீயின் Stephen Sackur அவர்களை இலங்கை உளவுத் துறை நிச்சயமாக கழுகு போல் கண்காணித்துக் கொண்டு இருந்திருக்கும். இலங்கை அரசிற்கு தெரியாமல் அவர் எந்த ஒரு பகுதிக்கும் சென்றிருக்க முடியாது. இலங்கை அரசு போர் அழிவுகள் தொடர்பான செய்திகள் வெளியில் வராமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகளை மேற் கொள்கிறது. அப்படியிருக்கையில் பிபிசீயின் Stephen Sackur எப்படி ஒரு விடுதலைப் புலி அமைப்பின் போராளியை நேரடியாக தனது ஒளிப்பதிவுக் குழுவுடன் சென்று பேட்டி எடுத்தார்? இந்தச் செய்தியை வேறு இரண்டு செய்திகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்:

செய்தி-1. விடுதலைப் புலிகள் மீண்டும் அணிதிரள்கின்றன என்றார் இலங்கைப் பிரதமர்:
The Sri Lankan government was aware of attempts by former Tamil Tiger rebels to regroup locally with the backing of international sympathizers, Sri Lankan Prime Minister D. M. Jayaratne told parliament on Tuesday.

"The international groups of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) have not given up their dream for a separate state," Jayaratne said.

"They are in the process of stepping up their local activities in order to regroup," said Jayaratne, adding that some 77 LTTE suspects had been nabbed during May alone.
விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பையும் அவர் தன் விவாதத்திற்கு இழுக்கிறார்.

செய்தி-2. இலங்கை தனது பாதுகாப்புச் செலவீனங்களை தொடர்ந்து பேணுகிறது
Sri Lanka's government on Tuesday proposed maintaining defence spending at nearly the same level as in the final year of its massive military offensive against the Tamil Tiger separatists.
Figures presented to parliament showed that the government had allocated 201 billion rupees (1.8 billion dollars) on defence for 2010, down marginally from an estimated 210 billion spent in 2009.
Defence spending in 2008 was 204 billion rupees.

பிபிசி ஆயுத முகவர்களுடன் இணைந்து செயற்படுகிறதா?
சென்ற ஆண்டு பிபிசி இலங்கையில் நடந்த அட்டூழியங்களைப் பொருட்படுத்தாமல் இருந்ததும் அதையொட்டி தமிழர்கள் பல போராட்டங்களைச் பிபிசிக்கு எதிராகச் செய்ததும் நாம் மறக்கக் கூடாதவை. இதுவரை காலமும் இலங்கை தொடர்பாக மேலெழுந்தவாரியாக செய்தி வெளியிட்ட பிபிசி இப்போது ஆழமாக பேட்டிகளைக் கண்டு செய்தி வெளிவிடுவது இலங்கையில் ஒரு போர் மீண்டும் ஆரம்பிக்கும் என்ற பீதியை கிளப்பவா என்ற சந்தேகம் மேலுள்ள இரண்டு செய்திகளையும் விடுதலைப் புலிப்போராளி எனக் கூறப்படுபவர் வழங்கைய பேட்டி என்று பிபிசி கூறுவதையும் சேர்த்துப் பார்க்கும் போது எழுகிறது.
இலங்கையில் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப் போகிறார்கள் என்ற செய்தி பரப்பப்பட்டால் அதனால் பயனடைபவர்கள் ஆயுத விற்பனையாளர்களே.
இந்த ஆயுதக் கொள்வனவு மூலம் இலங்கை ஆட்சியாளர்களும் பயன் பெறுவர்.
பிபிசீயின் Stephen Sackur முயற்ச்சி இலங்கைக்கு ஆயுத விற்பனை செய்பவர்களின் நலன்கள் சார்ந்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Tuesday 8 June 2010

படிக்கக்கூடாத பகிடி: பலான உண்டியல்


அந்தத் இளம் தம்பதிகளின் கனவு ஹவாய் தீவில் ஒரு வார விடுமுறையை ஒரு 5 நட்சத்திர விடுதியில் கழிப்பது என்பதுதான். அதற்குரிய பணம் அவர்களிடம் இல்லை. அதற்காக ஒரு புதுவிதமான வழியைக் கண்டு பிடித்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் இன்பமாக கட்டிலில் இருந்தவுடன் ஒரு ஐம்பது டொலர் தாளை ஒரு உண்டியலில் போட்டு சேமிப்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக உண்டியலும் வாங்கி சேமிப்பு தொடங்கிவிட்டது.

அவர்கள் கனவு நிறைவேறும் நாளும் வந்தது. உண்டியல் நிறைந்து விட்டது. இருவருமாக இணைந்து உண்டியலை உடைக்க எண்ணினார்கள். உண்டியலை உடைத்த கணவனுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். அந்த உண்டியலில் அவன் போட்டது ஐம்பது டொலர் தாள்கள் மட்டுமே! ஆனால் அதில் பல நூறு டொலர் தாள்களும் இருந்தன. ஆச்சரியத்துடன் மனைவியைப் பார்த்தான். மனைவி நிதானமாகப் பதில் சொன்னாள் "எல்லோரும் உன்னைப் போல் கஞ்சன்களாக இருக்க மாட்டார்கள்"

இந்தியத் திரைப்படவிழாப் படங்கள் - என் கருத்து


ஆரியப் பேய்களும் சிங்கள நாய்களும் தங்கள் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டத்தின் வெற்றியின் ஓராண்டு நிறைவை திரைப்பட விழாவாகக் கொண்டாடி மகிழ முயற்ச்சித்து தோல்வி கண்டன்ர். தங்களுக்குள் முரண்பட்டும் கொண்டனர்.




Monday 7 June 2010

வாசிக்கக்கூடாத நகைச்சுவை: பலான பறவை


கடற்கரையில் நிர்வாணமாகப் படுத்திருந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த ஆண் உல்லாசப் பயணி ஒருவர் தன்னை நோக்கி ஒரு சிறுமி வருவதைக் கண்டதும் தனது இடுப்புப் பகுதியை பத்திரிகையால் மூடிவிட்டார். சிறுமி வந்து பத்திரிகையின் கீழ் என்ன இருக்கிறது என்றாள். அதற்கு அவர் சாதாரண்மாக ஒரு பறவை என்று பதிலளித்தார். சிறுமியும் சென்று விட்டாள். அவர் சிறுது நேரத்தின் பின் ஆழ்ந்த உறக்கம் செய்தார். கண் விழித்தபோது இடுப்புப் பகுதியில் மிகுந்த வலியுடன் ஒரு மருத்துவமனைப் படுக்கையில் தன்னைக் கண்டு அதிர்ந்தார். தனக்கு என்ன நடந்தது என்பதை அறியத் துடித்தார். காவல் துறையினர் கடைசியாக என்ன நடந்தது என்று அவரிடம் வினாவினர். அவரும் நடந்ததைச் சொன்னார். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் அவருக்கு என்ன செய்தாய் என்று விசார்த்தனர்.
சிறுமி கூறிய பதில் அவருக்கு நான் ஒன்றும் செய்யவில்லை. அவரது பறவையுடன் சிறிது நேரம் விளையாடினேன் அது என் மீது துப்பிவிட்டது. ஆத்திரமடைந்த நான் பறவையின் கழுத்தைத் திருகி அதன் கூட்டிற்க்கு தீமூட்டிவிட்டேன் என்றாள்.

இந்தியத் திரைப்பட விழா: காசைக் கொடுத்து பேயை வாங்கிய இலங்கை அரசு



இந்தியத் திரைப்பட விழாவை தென்னக நடிகர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இலங்கையில் நடத்தினர் வட இந்தியப் பேய்கள். இலங்கை அரசு இதற்காக அறுநூறு மில்லியன் ரூபாக்களை செலவிட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது. இந்த விழாவிற்கு சில வட இந்திய உயர் நட்சத்திரங்கள் வராதது இலங்கியில் நடந்த இனக்கொலையை உலகிற்கு மேலும் பறைசாற்றியது.

இந்த இந்தியத் திரைப் பட விழாவில் வட இந்திய சினிமாநடசத்திரங்கள் இந்த விழாவில் சிங்கள சினிமா நட்சத்திரங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்று சிங்களவர்கள் அதிருப்தியடைந்தனர். பழம் பெரும் சிங்கள நடிகை மாலினி பொன்சேக்காவிற்கு பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டது. இந்த மாலினி பொன்சேக்கா சி.என். செய்திச் சேவையின் கருத்துக் கணிப்பின்படி ஆசியாவின் முதல் 25 நடிகர்களில் ஒருவர். பல சிங்கள நடிகர்கள் தாம் புறக்கணிக்கப் பட்டதாக ஆத்திரம் அடைந்தனர். இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே விழாவைப் புறக்கணித்தார். அவர்செலவழித்த பணம் அவருக்கே பயன்படவில்லை. அவர் அங்கு தமிழிலும் ஒரு உரையாற்றி இருந்திருப்பார். ராஜபக்சவின் அலரி மாளிகையில் அவர் இந்திய நட்சத்திரங்களுக்கு விருந்து அளிக்கும் பொருட்டு விடுத்த அழைப்பை இந்திய நட்சத்திரங்கள் புறக்கணித்தன. ராஜபக்சவின் மனைவியும் மகனும் விழாவிற்குச் சென்றுவிட்டு இடையில் எழுந்து சென்று விட்டனர். அரசியல்வாதியும் நடிகருமான ரவீந்திர ரன்தெனிய உள்ளூர் நடிகர்களை அவமதிக்கும் வகையில் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக ஆத்திரத்துடன் தெரிவித்தார்.

இந்தியர்களைப் பழிவாங்கிய இலங்கை
இந்தியாவின் நட்சத்திரங்களின் செய்கைக்கு பழிவாங்கும் முகமாக ராஜபக்சவின் மனைவி இந்திய தொழிலதிபர்களின் நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் பிந்திச் சென்றார். இதனால் பல இந்தியத் தொழிலதிபர்கள் தங்கள் விமானப் பயணத்தை தவறவிட்டனர்.

தவிடு பொடியான இந்தியச் சதித் திட்டம்.
இலங்கையின் மதிப்பை சர்வதேசத்தில் உயர்த்தவும் இலங்கை இந்திய உறவை மேம்படுத்தவும் இந்தியா விடாப் பிடியாக நின்று இந்த விழாவை தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு வழமை போல் மதிப்புக் கொடுக்காமல் நடாத்தியது. இந்தியாவின் இரு திட்டமும் தவிடு பொடியானது.

Sunday 6 June 2010

ராஜபக்ச ராஜ்ஜியத்தில் உய்யலாமே- மங்கையர்கரசி அமிர்தலிங்கம்.



இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். இவர் ஆசியாவில் மதிப்பிற்குரிய ஒரு தலைவர்.

லீ குவான் யூ அதிகாரத்தில் இருக்கும்போது சிங்கப்பூரில் தமிழர்கள் பல முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்று சிலர் அவரிடம் தமிழர்களுக்கு எதிராக வேட்டு வைத்தார்கள். அதற்கு அவர் இந்த நாட்டைக் கட்டி எழுப்பியவர்கள் தமிழர்கள் என்றார்.

லீ குவான் யூ மஹிந்த ராஜபக்சவைப் பற்றி மேற்படி கருத்துத் தெரிவித்திருக்கையில் இலங்கைத் தமிழர்களின் மிக மூத்த தமிழ்ப் பெண் அரசியல்வாதியாகக் கருதப்படும் திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் ராஜபக்ச தமிழர்களுக்கு எதிரான போரில் வென்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் மேடைகளில் ஏறி முழங்கி தமிழர்களுக்கு உசுப்பேத்திய பெண்மணி மங்கையர்கரசி அமிர்தலிங்கம்.

மங்கையர்கரசி அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி ஒருகாலத்தில் பாராளமன்றத்தில் பேசிய காமினி திசாநாயக்க மங்கையர்கரசியின் வயை மட்டும்தான் அடக்க முடியாதா அல்லது பிற உறுப்புக்களையுமா அடக்க முடியவில்லையா என்று கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் மங்கயர்கரசி ஆயிரக் கணக்கில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் பட்டனர் என்று கூறியதைப் பற்றி குறிப்பிடுகையில் ஆயிரக் கணக்கில் பெண்கள் கற்பழிக்கப் படவில்லை ஒரு பெண் ஆயிரம் தடவை கற்பழிக்கப் பட்டார் என்றார்.

ஒரு கொழும்பு பத்திரிகை அரச தோற் பொருள் கூட்டுத்தாபனத்திற்கு தலைவராக நியமிக்கப் படவேண்டும் என்று எழுதியது. சிங்கள மக்கள் விபச்சாரிகளை தோல் வியாபாரிகள் என்று அழைப்பார்கள்.

இதை எல்லாம் மங்கையர்கரசி அமிர்தலிங்கம் மறந்துவிட்டார் தமிழ் இன உணர்வு உள்ளவர்கள் மறக்கவில்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...