Saturday 5 June 2010

இந்தியத் திரைப்பட விழா: விரக்தியடைந்த இலங்கை விலையைக் குறைத்தது



பல வெற்றிக் களிப்புகளில் மூழ்கிக் கொண்டிருந்த இலங்கை அரசிற்கு ஒரு விரக்தி தரும் நிகழ்வாக இந்தியத் திரைப்பட விழா அமைகிறது. அயர்லாந்து, தென் கொரியா, கனடா போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் நடத்தும் படி கேட்டிருந்தும் இலங்கையில் இந்த விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்தது எந்த அடிப்படையில் என்று விளக்கம் இல்லாமல் பலரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நடத்த வேண்டும் என்ற முடிவு பெரும் பணக் கொடுக்கல் வாங்கலின் பின்னர் அல்லது இந்தியப் பேரினவாத ஆட்சியாளர் இலங்கை பேரின வாத ஆட்சியாளர்களுக்கு தமிழர்களை அடக்கியாள தொடர்ச்சியாக செய்து வரும் உதவிகளின் அடிப்படையில்தான் எடுக்கப் பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவிக்கப் படுகிறது. அல்லது இரண்டும் இந்த முடிவை எடுக்கச் செய்திருக்கலாம்.

தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பை வட இந்தியப் பேரினவாதிகள் வழமைபோல் கருத்தில் எடுக்கவில்லை. இலங்கையில் விழாவை நடத்தக் கூடாது என்ற தமிழின உணர்வாளர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்தால் தமது படங்களின் வருவாய் குறையும் என்பதை உணர்ந்த பல வட இந்திய முன்னணி இந்திப் பிரமுகர்கள் இலங்கையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதில்லை என்ற முடிவு இலங்கை அரசிற்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பங்கேற்பதற்கு பெரும் தொகை பணத்தை நுழைவுக் கட்டணமாக அறவிட இருந்த இலங்கை உல்லாசப் பிரயாணத் துறை இப்போது கட்டணங்களை வெகுவாக குறைத்து விட்டது. தலைக்கு இரண்டு இலட்சத்தில் இருந்து பதினொரு இலட்சம் வரை அறவிட இருந்த இலங்கை உல்லாசப் பிரயாணத் துறை இப்போது இருபத்தையாயிரம் ரூபாக்களாக குறைத்துள்ளது.

இந்த விழாவில் பங்கு பற்றுவதில் இருந்து இந்திப்படவுலகின் முன்னணி நட்சத்திரங்கள் விலகியமை இலங்கையினல் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு செய்த இனக்கொலை மேலும் பிரபலம் அடையச் செய்துவிட்டது. இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்ற மாயையை ஏற்படுத்த் முயன்ற ஆரிய சிங்களக் கூட்டமைப்பு இப்போது விழிபிதுங்குகிறது.

Thursday 3 June 2010

செம்மொழி மாநாடு: பேராசிரியர் சிவத்தம்பியிடம் சில கேள்விகள்


இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன் என அவர் மேலும் கூறினார்.

பேராசிரியர் அவர்களே
  • வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றும் போது அதற்கு ஆதரவாக பேசியவர்கள் என்ன கூறி தனிநாட்டிற்கு ஆதரவு கேரினார்கள் என்பதை அறிவீர்களா?
  • தந்தை செல்வா உட்பட பல தமிழ்த் தலைவர்கள் மூன்றரைக் கோடி தமிழர்கள் (அப்போதைய தமிழ்நாட்டு மக்கள் தொகை) எமக்கு உதவுவார்கள் என்று அடிக்கடி கூறியதை நீங்கள் அறிவீர்களா?
  • அந்தத் தமிழர்களின் தலைவர் ஈழத் தமிழர்களின் தலைவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கக் கூடாது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா?
  • ஒருகாலத்தில் நீங்கள் இடது சாரி முகமூடி அணிந்த சிங்களப் பேரினவாதிகளுடன் நல்ல உறவு வைத்திருந்தீரகள். 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படுவதை அப்போது இடது சாரி முகமூடி அணிந்திருந்த சிங்களப் பேரினவாதிகள் தமிழாராய்ச்சி மாநாடு கொழும்பில் நடத்த வேண்டும் என்று அடம் பிடித்தனர். உங்கள் இடதுசாரி "தமிழ் புத்தி ஜீவிகள்" பலர் தங்கள் சிங்களப் பேரினவாதிகளைத் திருப்திப் படுத்த யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராச்சி மாநட்டைப் புறக்கணித்ததை மறந்து விட்டீர்களா? அவர்களையும் மீறி மாநாடு நடந்த போது அப்போதைய உங்கள் சிங்கள இடது சாரி நண்பர்கள் இறுதி நாளில் செய்த சதியை மறந்து விட்டீர்களா? தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாளில் நடந்த் கொலைகளை மறந்து விட்டீர்களா?
  • சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் தமிழ்நாட்டில் இருந்து பத்திரிகைகள் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தியதை எதிர்த்து எழுதிய கொழும்புத் தமிழ்ப் பத்திரிகை வீரகேசரியயை அதன் விழாவிலேயே எதிர்த்து உரையாற்றிய உங்கள் வீரத்தை மறந்து விட்டீர்களா?
  • கருணாநிதியின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து பல நாட்களாகி விட்டன. அவர் தமிழ்நாட்டு முதல்வராக இருக்கும் வரை உலகத்தில் எங்கு தமிழர்களுக்கு எதிராக அடக்கு முறை நடந்தாலும் அவர் குரல் கொடுக்க வேண்டிக கடப்பாடு உடையவர் என்பதை மறுக்கிறீரகளா?
  • சென்ற ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் ஒரு சிறு இடத்தில் போர் நடந்ததால் இலங்கை படைகள் தொலை தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் பாவிக்கப் படமுடியாத நிலை ஏற்பட்ட போது தாம் கனரக ஆயுதங்கள் பாவிக்க முடியாது என்று அறிவித்தனர். அதை சாக்காக வைத்து முதல்வர் கருணாநிதி ஒரு உண்ணா விரத நாடகமாடி வாக்கு வேட்டையாடியதை நீங்கள் அறியவில்லையா?
  • முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்ற பொய் சென்ன பின்னரான 24 மணித்தியால நேரத்தில் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை நீங்கள் அறியவில்லையா?
  • செம்மொழி மாநாடு முதல்வர் கருணாநிதி தனது தலைமையில் எந்த ஒரு தமிழாராய்ச்சி மாநாடும் நடக்க வில்லை என்ற ஆதங்கங்கத்தை தீர்க்க ஒழுங்கு செய்யப் பட்டது என்று கூறுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
  • ராஜபக்சே நல்லவர் அவர் கொடுப்பதை தமிழர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியதை நீங்கள் அறியவில்லையா?
  • தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் உங்களுடைய போராட்டம் என்கிறீர்களே "உங்களுடைய" போராட்டத்திற்கு நீங்கள் இதுவரை செய்த பங்களிப்பு என்ன?
குஷ்பு தமுளும் நமிதா ரமிலும் செம்மொழி மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.

Wednesday 2 June 2010

காதற் போர்க்களம்

 
 உன் கண்கள் செய்தன வலிந்த தாக்குதல்கள் 
உதட்டோரப் புன்னகை ஏவுகணைகளாகின 
ஏன் இந்தப் போர் முனைப்பு
ஏன் இந்த விழி வியூகம் 
நாணமெனும் முன்னரங்க காவலரண் 
முன்னகர்வால் தூளாகியது 
 ஆண்மை ஏற்றது அறைகூவலை 
என் பொறுமைக் கோட்டை தகர்ந்தது 
காம வறுமைக் கோட்டைத் தாண்டியது 
தொடங்கியது ஒரு போர் இங்கு 
உன் மெல்லிய உடலெங்கும் 
வெட்கத்தை தேடியழிக்கும் படையாகியன என் விரல்கள் 
அதிரடித் தாக்குதலின் முனைப்பிது 
 உதடும் நாவும் இணைந்து செய்யும் ஈரூடகத் தாக்குதல் 
மூக்கு முனையில் பெரும் நேரடி மோதல் ஆரம்பம் 
மார்பு வழியாக ஒரு மரபுப் போர் 
பல் சுவை தரும் பன்முனைத் தாக்குதல் 
புதிய பரிமாணத்தில் 
ஒர் ஆக்கிரமிப்பு போரியல் 
உத்திகளின் உச்சம் 
இடைச் சம வெளியெங்கும் 
வருடல்களால் வன்முறைச் சமர் 
இறுக அணைக்க ஒரு உத்தரவு 
கட்டளைப் பீடத்தில் இருந்து வந்தது
கால் ஆல் படை சுற்றி வளைக்கின்றன 
கைகள் செய்யும் முற்றுகைகள்
சாய்ந்த தலைமயகம் நிமிர்ந்தது 
சைகைகளில் செய்திப் பரிமாற்றம் 
 கட்டுமானங்கள் கைவசமாகின 
ஊடறுப்புத் தாக்குதல் உத்திகள் 
கரந்தடியால் நிறைவேறின
 இறுதித் தாக்குதல்கள் தொடங்கின 
 இருதிடல் இடை ஒரு பதுங்கு குழி 
என் முகம் செய்யும் தாக்குதல் வழி 
வழங்கற் பாதை வழிதிறக்கிறது 
ஆழ ஊடுருவும் அணி களமிறங்கிறது

இலங்கை இனக்கொலை: இந்திய மருத்துவரின் மூடி மறைப்பு


தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத இந்திய மருத்துவர் ஒருவர் இலங்கையின் இறுதிப் போர்பற்றி இந்துஸ்த்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அவர் இறுதிப் போரின் போது இலங்கைக்கு இந்தியாவால் அனுப்பப்பட்டு கடமையாற்றியவர். இறுதி மாதங்களில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.

  • நீங்கள் ஏன் உங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை?
  • உண்மை தெரிவித்ததற்காக உங்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
  • உண்மை தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் உங்களைக் கடமையில் ஈடுபடுத்தினரா?
  • இந்தியாவில் இருந்து வந்த மருத்துவர்கள் மனித உறுப்புத் திருட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிப்பதை நீங்கள் அறியவில்லையா?
  • இலங்கையில் இருபதினாயிரம் இந்தியப் படைகள் இனக்கொலையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப் படுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  • இலங்கையில் தடைசெய்யப்பட்ட வேதியியல் ஆயுதங்கள் பாவிக்கப் பட்டதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
  • சீனாவிற்கு பத்தாயிரம் மனித உறுப்புக்கள் அனுப்பப் பட்டன என்று தெரிவிக்கப் படுவதையிட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  • காயமடைந்து இந்தியப் மருத்துவர்களிடம் வந்தவர்களில் விடுதலைப் புலிகளும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் வேண்டுமென்றே காயப்பட்ட கைகள் அல்லது கால்கள் துண்டிக்கப்பட்டனர் என்று கூறப்படுவதை நீங்கள் அறிய மாட்டீர்களா?
  • போரில் அகப்பட்டவர்களுக்கு உணவு அனுப்பாமல் இலங்கை அரசு தடை செய்ததை உங்களிடம் எந்த நோயாளியும் சொல்லவில்லையா?
  • செஞ்சிலுவைச் சங்கம் உணவு கொண்டுவந்த போது அதன் கடற்கலங்கள்மீது இலங்கை அரசு பலமுறை தாக்குதல் நடத்தியதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
  • உண்மையில் நடந்தவை நீங்கள் சொல்பவற்றிலும் மிக மோசமானது. நீங்கள் உண்மை நிலைமையை குறைத்துக் கூறுகிறீர்களா?
  • உணவிற்காக வரிசையில் நின்ற மக்கள்மீது குண்டுத்தாக்குதல் நடத்தியதை நீங்கள் அறிவீர்களா?இவற்றில் எதையும் தெரிவிக்காமல் நீங்கள் மூடி மறைக்கிறீர்களா?

Monday 31 May 2010

விண்டோவைத் தாண்டி வருவாயா?


உள்ளாடையில் எழுதிய உன் பெயர்
உன்னுடன் அடித்த அரட்டையில்
நனைந்து அழிந்தது போனது

நீ சொன்ன சரச வார்த்தைகள்
நீண்டு சென்றன கனவில்
நிலைத்து நிற்கின்றன நினைவில்

indiaglitz.com வெட்டி ஒட்டிய
நின் முகப்பு நிழற்படம்
நிலையான பிம்பமாய்
நெஞ்சில் நிற்கிறது.

அரட்டை விண்டோவைத்
தாண்டி என் மடியில்
நீ வருவாயா

தமிழனின் உணர்விற்கு இந்தியாவில் மதிப்பில்லையா?


இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக பாலித கோஹென்ன நியமிக்கப் பட்டபோது அவர் தனது அமெரிக்காவிற்கான பயணத்தை பிரித்தானியாவினூடாக மேற் கொள்ளும் பொருட்டு தனது பயண அனுமதி வேண்டி கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவராலயத்திற்கு விண்ணப்பித்தார். பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரது பயண அனுமதிக் கோரிக்கையை நிராகரித்தது.

இலங்கை அமைச்சர் தயாசிறி திசேரா சென்ற வாரம் தமிழ்நாட்டுக்கு சென்று அன்னை வேளாங்கண்ணியை தரிசித்து விட்டு சென்றுள்ளார். அவருக்கு இந்திய மத்திய மாநில அரசுகள் பலத்த பாதுகாப்பு வழங்கின.

இந்தியாவில் வாழும் பலகோடி மக்களின் உணர்விற்கு இந்தியா அளிக்கும் மதிப்பு என்ன? அல்லது தமிழர்களுக்கு உணர்வே இல்லை என்று இந்தியா கருதுகிறதா?

இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சில நூறுதமிழர்கள் மட்டும் அங்கு சென்றது ஏன்? ஏன் ஆயிரக் கணக்கில் செல்லவில்லை? நாம் தமிழர் இயக்கம், புதிய தமிழகம் உட்பட ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்க மற்றவை ஒதுங்கி இருந்தது ஏன்?

இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கைது செய்யப் பட்டமை தமிழ்நாட்டைத் தமிழன் ஆளவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறதா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...