Saturday 8 May 2010

ஒர் உயிருக்கு ஒரு நகரம்


கண்ணகி எம் தாயென்றால்
தாய்மீது ஆணையெடுப்போம்
ஒர் உயிருக்கு ஒரு நகரழிப்போம்
தமிழ்நாட்டைத் தமிழன் ஆளவைப்போம்.

நாதியற்று வாழவந்த நாய்களை
நீதியற்று ஆளவைத்தது போதும்


ஆரியப் பிணந்தின்னி நாய்களின்
மலம் தின்னி நாய்களை
விரட்டி அடிப்போம்
தாய்மீதாணை எடுப்போம்.

Friday 7 May 2010

பிரித்தானியா: Conservative Party ஆட்சி அமைக்கும்


பிரித்தானியத் தேர்தலில் தொங்கு பாராளமன்றம் என்பது உறுதியாக்கப் பட்ட நிலையில் பழமைவாதக் கட்சி(Conservative Party) ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை தாராணமை வாதக் கட்சித் தலைவர் Nick Clegg சற்று முன் வெளியிட்ட அறிக்கை உருவாக்கியுள்ளது.

தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்பிலேயே தொங்கு பாராளமன்றம் என்பது உறுதியாக கருதப் பட்டது. தொழிற்கட்சியின் தோல்வி எதிர்பார்த்தது போல் படு மோசமாக அமையவில்லை. அது மூன்றாவதாக வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தொழிற் கட்சி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்று காலை பதினொரு மணிவரை தொழிற்கட்சிப் பிரதமர் பதவி விலகவில்லை. பதினொரு மணியளவில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தாராண்மை வாதக் கட்சி ஏற்கனவே அறிவித்தது போல் தாம் கட்சி பேதம் பாராமல் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு முதலாம் இடத்தில் இருக்கும் கட்சிக்கே அரசு அமைக்க ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.

பழமை வாதக் கட்சிக்கு தாராண்மை வாதக் கட்சி வழங்கவிருக்கும் ஆதரவு பிரித்தானியத் தேர்தல் முறையை மாற்றி அமைப்பதை நிபந்தனையாகக் கொண்டிருக்கும். பிரித்தானியாவில் இத்தாலியில் உள்ளது போல் விகிதாசாரத் தேர்தல் முறையை கொண்டுவரவேண்டும் என்று தாராண்மைவாதக் கட்சி எதிர்பார்க்கிறது. இதற்கு சம்பதிக்கும் பட்சத்தில் பழமைவாதக் கட்சி ஆட்சி அமைக்கலாம்.

தேர்தல் முடிவுகள்: 11:30 காலை
பழமை வாதக் கட்சி: 291
தொழிற் கட்சி: 251
தாராண்மை வாதக் கட்சி: 52
மற்றயவை: 27
முடிவுகள் அறியப்படாதவை: 29

இறுதியாக பழமைவாதக் கட்சி 306 ஆசனங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது அறுதிப் பெரும்பான்மைக்கு 20ஆசனங்கள் குறைவானதாகும்.

விகிதாசாரத் தேர்தல் முறை தொடர்ந்து தொங்கு பாராளமன்றத்தையே உருவாக்கும் என்று இந்த முறையை எதிர்ப்போர் வாதிடுகின்றனர்.

To be friends; To be lovers


Are we lovers pretending to be friends?
Are we friends pretending to be lovers?
Are we lovers without our knowledge?
Are we friends who deny the fact?


We are part of each other
Like day and night and nature
In my dream we are together
Doing all what I cannot tell you

I know love have no reason
I do not want to lead to treason
I cannot look into you eyes
And say exactly what is in my heart

We do not know who we are
To be friends; To be lovers
This is the reality
This is what we are

Wednesday 5 May 2010

என் தூக்கத்தை ஏன் பறித்தாய்


தேம்ஸ் நதிக்கரையில் வில்லோ மர நிழலில்
நடனசாலைகளில் மின்னும் விளக்கொளியில்
நகரத் தெருக்களில் மூலை முடுக்குகளில்
இணைந்திருந்த நாட்கள் இன்று எங்கே

என் இனிய காதலை ஏன் சிதைத்தாய்
என் இளகிய இதயத்தை ஏன் வதைத்தாய்
நாம் பழகிய நாட்களை ஏன் மறந்தாய்
அந்த அழகிய கனவுகளை ஏன் கலைத்தாய்

என் அரிய தூக்கத்தை ஏன் பறித்தாய்
பறந்த கற்பனைகளை ஏன் மறித்தாய்
வளர்ந்த அன்பு மரத்தை ஏன் தறித்தாய்
இன்று காரணமின்றி எனை ஏன் வெறுத்தாய்

Tuesday 4 May 2010

Adobe's Flash Playerஐத் தாக்கும் ஆப்பிள்


இந்த வருடம் அறுபது இலட்சம் ஐ-பாட் களை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் தாயாரக இருக்கிறது. ஐ-பாட் இற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் அதில் Adobe's Flash Playerஐப் பாவித்து காணொளிகளைக் காண்பதற்கோ வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவதற்கோ வசதிகள் இல்லை என்று குறை கூறுகின்றனர். ஆப்பிளின் ஐ-போனிலோ அல்லது ஐ-பாட் இலோ Adobe's Flash Player பாவிக்கும் வசதி இல்லை.

இந்நிலையில் ஆப்பிள் அதிபர் ஸ்ரிவ் ஜாப் அவர்கள் Adobe's Flash Playerஐ பலமாக தாக்கி ஒரு திறந்த மடல் வரைந்துள்ளார். அதற்கு அவர் ஆறு காரணாங்களைக் கூறியுள்ளார்:

1. Open
Steve Jobs states: "Adobe’s Flash products are 100% proprietary. They are only available from Adobe, and Adobe has sole authority as to their future enhancement, pricing, etc…" He does note that Apple has "many propriety products too" but these are not web-related. "we strongly believe that all standards pertaining to the web should be open. Rather than use Flash, Apple has adopted HTML5, CSS and JavaScript – all open standards."

2. Full web
"Adobe has repeatedly said that Apple mobile devices cannot access 'the full web' because 75% of video on the web is in Flash," says Steve Jobs (we have to admit, this is a claim by Adobe that is somewhat borne out in our own experience).

"What they don’t say is that almost all this video is also available in a more modern format, H.264, and is viewable on iPhones, iPods and iPads. YouTube, with an estimated 40% of the web’s video" continues Steve Jobs. At this point he seems to lose us. What he appears to be saying is that Adobe Flash powers a lot, but not all, of web video content and that this is changing to the more modern format H.264. Our take on this is that, yes, a lot of video is moving over to H.264 content but this is because of Apple's opposition to it - rather than a reason for Apple not to include Flash in the first place.

The letter then states: "another Adobe claim is that Apple devices cannot play Flash games. This is true. Fortunately, there are over 50,000 games and entertainment titles on the App Store". While we're hardly enamoured by the thought of playing thousands of Flash games on the iPhone it seems rather beside the point. Unless the point is "we're limiting choice by provide an alternative that we control". We can't help but note that the App Store isn't one of Apple's "open" products that Steve Jobs outlines in point 1.

3. Third, there’s reliability, security and performance.
'Symantec recently highlighted Flash for having one of the worst security records in 2009. We also know first hand that Flash is the number one reason Macs crash" says Steve Jobs. A point that is hard to argue with, after all, Flash is probably the number one reason our Web browsers crash as well. Although we're not completely sure about the security aspect, our Mac's seem pretty secure with or without Flash, at least from virus and malware. It's hard to imagine Flash running in anything other than a closed environment on Apple's mobile devices.

4. Battery life
"To achieve long battery life when playing video, mobile devices must decode the video in hardware; decoding it in software uses too much power." note Steve Jobs. "Although Flash has recently added support for H.264, the video on almost all Flash websites currently requires an older generation decoder that is not implemented in mobile chips and must be run in software. The difference is striking: on an iPhone, for example, H.264 videos play for up to 10 hours, while videos decoded in software play for less than 5 hours before the battery is fully drained." As we've never run Flash on an iPhone we'll have to take his word for it. But we know Flash is a power hungry format and it's not hard to imagine it draining battery life. Mind you, there are lots of things we do on an iPhone that drain battery life - playing Real Racing, for example, surfing the Web all day with 3G enabled; capturing video on the iPhone 3G S. Battery life is an issue for the iPhone, but so is consumer choice.

5. Touch
Steve does make an interesting point about touch-screen displays. "Flash was designed for PCs using mice, not for touch screens using fingers. For example, many Flash websites rely on “rollovers”, which pop up menus or other elements when the mouse arrow hovers over a specific spot. Apple’s revolutionary multi-touch interface doesn’t use a mouse, and there is no concept of a rollover. Most Flash websites will need to be rewritten to support touch-based devices. If developers need to rewrite their Flash websites, why not use modern technologies like HTML5, CSS and JavaScript?"

Our take here is that some will, some won't. Why not enable a device to take advantage of those. Again this seems more like Apple trying to force the market down its preferred route than offering a key benefit to the end user.

6. "The most important reason"
Steve states that "We have discussed the downsides of using Flash to play video and interactive content from websites, but Adobe also wants developers to adopt Flash to create apps that run on our mobile devices."

This gets to the heart of the matter, and perhaps expands on the e-mail Steve Jobs sent to a Apple customer that briefly said "we've been there before, and intermediate layers between the platform and the developer ultimately produces sub-standard apps and hinders the progress of the platform." Here Steve Jobs states: "We know from painful experience that letting a third party layer of software come between the platform and the developer ultimately results in sub-standard apps and hinders the enhancement and progress of the platform."

இப்போது அமெரிக்க அரசு ஆப்பிள் அடொப் ஆகியவற்றிற்கு இடையிலான மோதல் தொடர்பாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஆப்பிளோ அடொப்போ அமெரிக்க அரசோ பகிரங்கமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரித்தானியாவில் நாடுகடந்த அரசுத் தேர்தல் குளறுபடிப் பின்னணி.


பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு அத்துடன் "அமைப்பு" தம்மை அழைத்துக் கொள்ளும் ஒரு அமைப்பு ஆகிய மூன்று தமிழர் அமைப்புக்கள் தமிழ்த்தேசிய வாதத்தை அடிப்படையாக வைத்து செயற்பட்டு செயற்பட்டுவருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் தடை செய்யப் பட்ட பின்னர் அவர்கள் தம்மை "அமைப்பு" என்று சொல்லிக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பலத்த ஆதரவுத்தளம் உண்டு. பாரிய அளவில் நிகழ்ச்சிகள் ஊர்வலங்கள் போன்றவற்றை கனகச்சிதமாக நாடாத்தும் திறன் ஆளணி வளம் இந்த அமைப்பிடம் இருக்கிறது. பிரித்தானியாவில் இவர்கள் ஒழுங்கு செய்த பல நிகழ்ச்சிகள் சரித்திர சாதனைகள் படைத்தன. மற்ற இரு அமைப்புக்களும் "அமைப்பிற்கு" இசைவாகவே செயற்பட்டு வருகின்றன.

முள்ளி வாய்க்கால் பின்னடைவிற்கு பின்னர் மேற்படி அமைப்பினர் பலத்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பது உண்மை. இவர்களிற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தவர்களில் சிலர் இந்த "அமைப்பு" சார்ந்தவர்கள் முள்ளி வாய்க்கால் பின்னடைவிற்கு பின்னர் தம்மிடம் விளக்கமளிக்காததையிட்டு பலத்த அதிருப்தியடைந்திருந்தனர். (இவர்களைப் அதிருப்திக் குழு என்று அழைப்போம். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீதான அதிருப்தி கொண்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே இவர்கள்).

அமெரிக்காவில் இருந்து தமிழத் தேசியவாதிகள் நாடுகடந்த அரசிற்கான திட்டத்தை முன்மொழிந்த போது பிரித்தானியத் தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தம்மை அமைப்பு என்று கூறிக் கொள்ளும் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தமது சகல நடவடிக்கைகளுக்கும் வன்னியில் வரும் அறிவுறுத்தல்களின் படி நடந்து வந்தவர்களுக்கு உடனடித் தீர்மானம் நாடு கடந்த அரசு தொடர்பாக எடுக்க முடியவில்லை. நாடுகடந்த அரசில் உடனடி அக்கறையை "அமைப்பு" காட்டவில்லை. இதனால் இந்திய இலங்கை அரசுகளின் உளவாளிகளான தமிழர்கள் சிலர் தாம் நாடுகடந்த அரசாங்கத்தில் அக்கறையுள்ளவர்களாக காட்டிக் கொண்டு அதிருப்திக் குழுவையும் தம்மிடம் இணைத்துக் கொண்டு நாடு கடந்த அரசின் பிரித்தானியப் பிரிவிற்குள் நுழைந்து விட்டனர். ஆனால் பிரித்தானியத் தமிழர்கள் மத்தியில் "அமைப்பு" வின் ஆதரவின்றி எதையும் சாதிக்க முடியாது. இந்த இந்திய இலங்கை உளவாளிகளை ஊடுருவிகள் என்று அழைப்போம். இதற்கிடையில் உலகத் தமிழர் பேரவையை "அமைப்பு" பிரித்தானியாவில் வெற்றிகரமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து இலங்கை இந்திய உளவு அமைப்புக்களை அதிர வைத்தது. ஊடுருவிகளும் தடுமாறினர்.

அமைப்பின்றி அணுவும் அசையாது!
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் "அமைப்பு" வின் ஆதரவின்றி பிரித்தானியாவில் நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்த தமிழ்த் தேசிய சபையும் இறுதியில் "அமைப்பு" விடம் சரணடைந்தது.
"அமைப்பு" வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் பின் தமிழ்த் தேசிய சபை கலைக்கப் படவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியது. தமிழ்த் தேசிய சபையும் கலைக்கப் பட்டு விட்டது.

பிரித்தானிய நாடுகடந்த அரசின் மதியுரைக் குழு அமைக்கப் பட்டபோது. அமைப்பு, அதிருப்திக் குழு, ஊடுருவிகள் ஆகிய மூன்று வகையானோரும் அதில் இருந்தனர். நாடுகடந்த அரசுக்கான் தேர்தலில் ஊடுருவிகள் தாம் பத்துப் பேரை தேர்தலில் நிறுத்தப் போவதாகவும் அமைப்பை பத்துப் பேரை நிறுத்தும் படியும் பரிந்துரைத்தனர். ஊடுருவிகளுக்கு என்று ஒரு ஆதரவுத் தளம் பிரித்தானியாவில் இருக்கவில்லை. அதை வைத்துக் கொண்டு அவர்களால் ஒருவரைத் தன்னும் வெற்றி பெற வைக்க முடியாது. அமைப்பு இதற்கு உடன்படவில்லை. தமக்கு 15 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற முடியும் என்று அமைப்பிற்கு தெரியும். இதைத் தொடர்ந்து பிரித்தானிய நாடு கடந்த தமிழீழ அரசிற்குள் பெரும் முரண்பாடுகள் தோன்றின. அமைப்பு சகல இடங்களிலும் தனது வேட்பாளர்களை நிறித்தியது.தேர்தல் ஆணையம் அமைக்கும் போது அது அமைப்பு, ஊடுருவிகள், புலி அதிருப்திக் குழு ஆகிய மூன்றையும் திருப்திப் படுத்தக் கூடியவர்களை உள்ளடக்கியதாகவே இருந்தது. அறிஞர்களான இவர்கள் தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த போதும் சிறந்த நடுநிலையாளர்களாவே இருந்தனர். இதனால் ஊடுருவிகள் யாரும் குழுக்களாகவோ அல்லது சின்னத்தின் கீழோ போட்டி போட முடியாது என்ற நிபந்தனையை தேர்தல் அறிவுறுத்தல்களில் ஒன்றாக உள்ளடக்கினர்.

செண்பகமாகப் பறந்த புலிகள்
அமைப்பைச் சேர்ந்த நாடுகடந்த அரசிற்கான வேட்பாளர்கள் ஒன்றாக கூடி துண்டுப் பிரசுரங்களில் செண்பகத்தின் படத்தை ஒரு மூலையில் உள்ளடக்கி தமது விபரங்களுடன் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். ஊடுருவிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தபோது பொருட் செலவுகளைத் தவிர்க்கவும் பல முனைப் போட்டிகளைத் தவிர்க்கவும் இப்படி செய்வதாக அமப்பு விளக்கம் கொடுத்தது. வட்டுக் கோட்டைத் தீர்மானத் தேர்தலை தொடக்கிய பிரித்தானிய தமிழ்த் தேசிய சபையைச் சேர்த மூவர் தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். இவர்கள் ஊடுருவிகளுடன் இணைந்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என உணர்ந்த அமைப்பு அவர்களில் இருவரை தம்முடன் இணைத்து அந்த இருவரையும் பிரச்சாரத்திற்குச் சிரமமான இலண்டன் எம்-25 இற்கு வெளிப் பகுதியில் போட்டியிட அனுமத்தித்தது. மூன்றாம் ஆளைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தையும் "அமைப்பு" கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் செண்பகங்களாகப் போட்டியிட்டனர். கலைக்கப் பட்ட தமிழ்த் தேசிய சபையின் மூன்றாம் ஆள் வட கிழக்கு இலண்டனில் போட்டியிட்டார். அதிருப்தியாளர்களில் ஒருவர் வடமேற்கு இலண்டன் பகுதியில் போட்டியிட்டார். இவர் தமிழ்த் தேசியத்திற்கு வழங்கிய பங்களிப்பு செண்பகத்தின் கீழ் எம்-25இல் போட்டியிட்ட இருவரின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் பல்லாயிரம் மடங்கானது என்பது கவலைகுரிய ஒரு அம்சமாகும்.

களமிறங்கிய புகழ் தேடிகள்(Glory hunters)

எந்தத் தேர்தலிலும் புகழ் தேடிகள் களமிறங்குவது தவிர்க்க முடியாதது. இவர்களில் சிறந்த தொண்டர்களும் இருப்பார்கள். துரோகிகளும் இருப்பார்கள். சமயத்திற்கு ஏற்ப மாறும் பச்சோந்திகளும் இருப்பார்கள்.
இலண்டன் வடமேற்குப் பிரதேசத்தில் ஒரு இளம் ஆசிரியை களத்தில் இறங்கினார். இவரது தாயாரும் இப்பிரதேச சமூகதில் மிகுந்த பிரபலமான ஒரு நல்ல பண்புமிக்க பெண்மணி. இவர் ஊடுருவிகளுடன் இணையாமல் இருக்க அமைப்பு தாம் இவருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. அமைப்பு ஏற்கனவே ஐந்து பேரை செண்பகத்தின் கீழ் களம் இறக்கிவிட்டது. இதனால் இவரை செண்பகத்தின் கீழும் போட்டியிட வைக்க முடியவில்லை. செண்பக வேடபாளர்கள் இவருக்கும் சேர்த்துப் பிரச்சாரம் செய்தனர்.

எம்-25 இற்கு வெளியிலான பிரதேசத்தில் ஊடுருவிகள் இருவரைக் களமிறக்கி இருந்தனர். மூவர் தெரிவு செய்யப்படக்கூடிய இப்பிரதேசத்தில் இவர்களால் இருவரை மட்டுமே களமிறக்க முடிந்தது. இந்த இருவரும் தமிழ்த் தேசியத்தின் ஆதரவாளர்களே. அவர்கள் ஊடுருவிகளைப்பற்றி அறியாமலே தேர்தலில் இறங்கினர். பின் நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் தேர்தலில் இருந்து விலகத் தயாராகினர். ஆனால் ஊடுருவிகள் இவர்களை மீண்டும் வற்புறுத்தி தேர்தலில் இருந்து விலகுவதைத் தடுத்தனர்.

செண்பகக் குழுக்கள் தேர்தலில் வெற்றி பெறும் என்பதை அறிந்த ஊடுருவிகள் தேர்தலைக் குழப்பத் திட்டமிட்டனர். செண்பகக் குழுக்கள் தேர்தலில் பெரும் முனப்புடன் ஈடுபட்ட பகுதிகளில் இவர்களால் வாலாட்ட முடியவில்லை. இலண்டனின் ஒருமூலையில் அமைந்திருந்த ஸ்ரொன்லி அம்மன் கோவிலில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் தமது கைவரிசையைக் காட்டினர். எம்-25 இற்கு வெளியில் உள்ள மூன்று வாக்குச் சாவடிகளிலும் இவர்கள் தமது கைவரிசையைக் காட்டினர். ஸ்ரொன்லி அம்மன் கோவிலில் 326 வாக்குகள் பதியப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிக்கை சமர்பித்திருந்தார். ஆனால் வாக்குச் பெட்டியைத் திறந்த போது 60 வாக்குக்கள் அதிகமாக இருந்தன.

தீவிர தமிழ்த் தேசிய ஆதரவாளர்களைக் கொண்ட Milton Keynes இல் மலை நேரம் வாக்காளிக்கச் சென்றவர்களுக்கு அங்கு வாக்குச் சீட்டுகள் முடிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது. இதனால் வாக்களிக்க முடியாமல் போன அவர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். இனி வாக்களிக்க யாரும் வரமாட்டார்கள் என்று எதிர்பார்த்து ஊடுருவிகளின் கைக்கூலிகள் வாக்குச் சீட்டுக்களை ஏற்கனவே திணித்து விட்டனர். இதே போன்ற நிகழ்வுகள் Liverpool, Coventry ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் நடந்தன.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
தேர்தலில் முறை கேடுகள் நடக்காமல் இருக்கப் பல சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. தேர்தல் ஆணையகதில் பல தமிழர் அல்லாதோர் பங்கேற்றிருந்தனர். அவற்றின் சிறப்புத்தன்மைகள் பற்றி பக்கம் பக்கமாக வியந்து எழுதலாம். இப்படி இருந்தும் தேர்தலில் முறை கேடுகள் நடந்து எம்-25இற்கு வெளிப் பிரதேச தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. இதில் எண்ணிய இரு வாக்குப் பெட்டிகளிலும் செண்பகத்தின் கீழ் போட்டியிட்டவர்கள் பெரும் எண்ணிக்கை வாக்குப் பெற்றிருந்தனர். தென் மேற்கு இலண்டன் பகுதித்தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப் படவில்லை. இப்பகுதியில் செண்பகத்தின் கீழ் போட்டியிட்ட முன்னாள் கிழக்கிலங்கை பாராளமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தின் மகன் மருத்துவர் மூர்த்தி ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.

வட மேற்கு இலங்கையில் அமைப்பு செண்பகத்தின் கீழ் ஐவரையும் தமது ஆதரவுடன் வாணி அச்சுதன் என்பவரையும் களத்தி இறக்கியிருந்தது. இதில் செண்பகத்தில் போட்டியிட்ட சுகிர்தகலா கோபிரத்தினத்தை விட சில வாக்குகள் அதிகமாக வாணி அச்சுதன் பெற்று வெற்றி ஈட்டினார். எஸ் ஜெயானந்தமூர்த்தி பெரு வெற்றியீட்டினார். அமைப்பின் சார்பில் போட்டியிட்ட மற்றவர்களும் வென்றனர்.

வட கிழக்கு இலங்கையில் இந்தியக் கைக்கூலியாக சந்தேகிக்கப் படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு என்று தமிழர்கள் மத்தியில் தோன்றிய ஏ கே மனோகரன் தோற்கடிக்கப்பட்டார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...