Saturday 20 March 2010

இந்தியக் கைக்கூலிகளே அடங்குங்கள்.

இலங்கையில் நடக்கும் பாராளமன்றத் தேர்தலில் அளவிற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதை பார்க்கும் போது 1980களில் இருபதிற்கு மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் உருவாகி இருந்ததுதான் ஞாபகத்திற்கு வரும். இரண்டுக்கும் ஒரே காரணம் இந்திய உளவுத் துறை. இலங்கையில் போர் முடிந்தவுடன் இந்தியா செய்த முதல் வேலை யாழ் துரையப்பா விளையாட்டரங்கை அபிவிருத்து செய்ய தனது ஆட்களை அனுப்பியதுதான். ஏதோ யாழ்ப்பாணத்தில் என்று போர் முடியும் எமக்கு எல்லாம் இருக்கிறது ஒரு விளையாட்டரங்குதான் இல்லாததுதான் குறை என்று மக்கள் தவித்துக் கொண்டிருந்தார்களா? ஒரு நல்ல பொருளாதாரத் திட்டத்தை ஆரம்பிக்காமல் ஏன் இந்த விளையாட்டரங்கம்? பொருளாதாரத் திட்டத்தை ஆரம்பித்தால் தமிழர்களுக்கு நன்மை கிடைத்துவிடும். அப்படி எதுவும் கிடைக்காமல் தமிழ்மக்களுக்குள் தனது உளவாளிகளை அனுப்புவதற்கு உகந்த திட்டம் விளையாட்டரங்கம்தான். கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியபின் தமிழர்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றி இந்தியா அவற்றை அபகரித்துக் கொண்டது. இலங்கை அரசு ஆகஸ்ட் 2009 இல் முடிக்கத் திட்டமிட்டிருந்த போரை இந்தியா இந்தியத் தேர்தலுக்கு முன் முடிக்க இலங்கையை வற்புறுத்தியது. அதற்காக இலங்கையில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப் பட்டன. பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். தப்பித்தவறி கங்கிரஸ் தேர்தலில் தோற்றால் இத்தலிச் சனியனின் குடுப்பத்தின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது என்ற பயம். இப்படிப்பட்ட கேவலமான் இந்திய ஆட்சியாளர்களுக்கு நாம் அடி பணிய வேண்டுமாம் கூறுகிறார்கள் இந்தியக் கைக்கூலிகள். பாலசிங்கம், தமிழ்செல்வன், நடேசன் ஆகியோர் பலதடவை இந்தியாவிற்கு நேசக் கரம் நீட்டினர். கரங்களைத்துண்டித்தது இந்தியா. இந்தியா இப்போது தமிழர்களை பல கூறுகளாக துண்டாடுவதில் வெற்றி கண்டு வருகிறது. பிள்ளையானையும் அணைக்கிறது சம்பந்தனுடனும் சம்பந்தம் வைக்கிறது. இப்போது தமிழ்த் தேசிய உணர்வு நிறைந்தவர்களைக் குறிவைக்கும் இந்தியா தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி தமிழர்களுக்கு இல்லை என்ற போதனையை தனது கைக்கூலிகள் மூலம் செய்கிறது. இப்படிப் போதித்து தமிழர்களை இந்திய ஆதரவு என்னும் ஒரு குடைக்குக் கீழ் திரட்டும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை. அதன் சதி தமிழ் தேசிய உணர்வாளர்களை இந்தியா ஆதரவுப் பிரிவினர் இந்திய எதிர்ப்புப் பிரிவினர் என இருகூறாகப் பிரிப்பது தான் இந்திய உளவுத் துறையின் எண்ணம். இந்தியா பிராந்திய வல்லரசாம் இந்தியக் கைக்கூலிகள் பிதற்று கிறார்கள். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாம். இந்திய சமூத்திரத்தைப் பொறுத்தவரை மேற்குலகம் இந்தியாவின் தயவில்தான் இருக்கிறதாம். இந்தியாவில் தனது call centres அமைத்த வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய ஊழியர்கள் தமது வாடிக்கையாளர்களின் கடன் அட்டை விபரங்களைத் திருடுவது அறிந்து கொண்டன. மேற்கு ஊடகங்கள் இப்படி செய்தி தந்தன:India's image as an outsourcing utopia replete with cheap, skilled workers is under attack. London's Evening Standard reports that, in two recent incidents, staff at outsourced call centers in India accepted bribes from Indian organized crime outfits and, in exchange, helped them hack into the computer systems of British banks for which they provided services. Financial and credit card details were stolen at least once. Such episodes show that "there are some things that you really should not send overseas," according to Britain's National Outsourcing Association. "For organized criminals, this is a godsend." இப்படிப்பட்ட இந்தியாவை எம்மை நம்பச் சொல்கிறார்கள் இந்த இந்தியக் கைக்கூலிகள். இந்தியாவின் பலவீனங்கள் என்ன?
  • சமாளிக்க முடியாத சனத் தொகை. இந்தியா தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிகளைக் கண்டாலும் அங்கிருந்து வறுமையை சமூக வேறுபாடுகளை ஒழிக்க முடியவில்லை.
  • மாற்ற முடியாத பழமை வாதம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான இந்திய இந்துப் பழமைவாதத்தில் இருந்து இன்னும் இந்தியா விடுபடவில்லை. இன்றும் சாதிகள் என்று சொல்லி அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்திய முட்டாள்கள்.
  • சூழ்பகை. இந்தியாவைச் சுற்றிவர உள்ள நாடுகள் எல்லாம் இந்தியாவைத் தமது எதிரிகளாகவே பார்கின்றன.
  • தளராத அமெரிக்க பாக்கிஸ்தானிய உறவு. இந்தியாவுடன் நட்பு வளர்ககப் படும் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்கப் படும் என்று கூவி அமெரிக்கா வாழ்இந்தியர்களின் வாக்குக்களை பெற்ற பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஒரு தசாப்தமாக வளர்ந்த அமெரிக்க இந்திய உறவை ஒருவருடத்தில் பின்தள்ளிவிட்டார். அமெரிக்கா தொடர்ந்து பாக்கிஸ்த்தானுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கிவருகிறது.
  • அடங்காத் தீவிரவாதம். இந்திய தனது நாட்டில் தீவிரவாதத்தை அடக்க முடியாமல் திணறுகிறது. 2007இல் ஜேன்ஸ் வீக்லி இப்படிச் செய்தி வெளியிட்டது: Terrorists struck India again with multiple bombs in Hyderabad on 25 August. Islamic extremists are the prime suspects, although the bombs were poorly targeted if they were intended to incite communal violence between Muslims and Hindus. At the same time, the bombings highlighted the complex nature of the jihadist threat to India and the country's poor record in bringing to justice the people responsible for a growing number of mass-casualty attacks.
  • மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரம். இந்தியப் பேரினவாதிகள் இந்திய அரசின் அதிகாரங்களை பரவலாக்கத் தயாராக இல்லை. இது பெரும் நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • மக்களாட்சி(ஜனநாயகம்) இல்லாத தேசியக் கட்சிகள்: இந்தியாவின் தேசியக் கட்சிகளின் மாநிலக் கிளைகளுக்கு அதிகாரங்கள் இல்லை. மாநிலக் கிளைகளுக்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை மாநில உறுப்பினர்கள் முடிவு செய்வதில்லை. டில்லியில் இருப்பவர்களே முடிவு செய்கின்றார்கள். சில கட்சிகள் குடும்பத்தின் பிடியில் இருக்கின்றன. அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவரக்ளது சொற்படி ஆடுபவரகள் மட்டுமே ஆட்சியில் இருக்கலாம். 
பன்னாட்டு அரங்கில் இந்தியச் செல்வாக்கு பிரித்தானியாவில் Lancaster Houseஇல் தலிபான்கள் தொடர்பான மாநட்டில் 60 நாடுகள் கலந்து கொண்டன. அதில் தலிபான் பாக்கிஸ்த்தானின் ஒரு அமைப்பே என்ற கருத்தை இந்தியா முன்வைத்தது. அதை எந்த ஒரு நாடும் ஆதரிக்கவில்லை. இந்தியாவை ஒரு ஊடகம் Indian Motion எனும் தலைப்பில் இப்படி ஏளனம் செய்தது:
  • As representatives from more than 60 countries convened at the historic Lancaster House, New Delhi's representative to the summit, Foreign Minister S.M. Krishna, emphasized to his British counterpart that it would be a monumental folly, at this juncture, to make a dintinction"between a good Taliban and a bad Taliban" or to legitimize the former through reaching out. From India's perspective, because the Taliban was originally an extension of Pakistan's intelligence agency and because it has been used by Islamabad to mount attacks against India, there can be no "good Taliban." But Krishna, seated in the second row, was politely ignored. Alas, it wasn't the first time.
முழு ஆசிய நாடுகளும் செய்யும் பாதுகாப்புச் செலவீனத்திலும் பார்க்க அமெரிக்கா செய்யும் பாதுகாப்புச் செலவீனம் மூன்று மடங்கானது. இப்படி இருக்கையில் மேற்குலகம் இந்தியத் தயவில் தங்கி இருக்கிறது என்று இந்தியக் கைக்கூலிகள் பிதற்றுகின்றனர். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் வறுமைகாரணமாகத் தற்கொலை செய்து கொண்டநாடு வல்லரசாகுமா? இந்தியாவில் வளரும் மத்திய தர வர்கத்தினரை சுரண்டுவதற்காக மேற்குலகம் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணிவருகிறது என்பதுதான் உண்மை. இப்படி இருக்கையில் தமிழர்களை மேற்குலகை நோக்கிச் சாரமல் இருக்க இந்தியக் கைக்கூலிகள் ஏதோ எல்லாம் சொல்கிறார்கள். அடங்குங்கடா!!!!!

Friday 19 March 2010

செருப்பாய் இருப்பாய் தமிழா என்கிறது இந்தியா.



தமிழர்கள் இன்று இருக்கும் நிலையையும் 1987இல் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்திற்கு முன் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கை இராணுவம் நடமாட அஞ்சி இருந்தது அன்று. இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ்ப்போராளிக் குழுக்கள் தாக்குதல் நடத்தி பாரிய அழிவுகளை விளைவிக்கலாம் என்று இலங்கை அரசு அன்று அஞ்சி இருந்தது. தமிழர்கள் கைகளில் ஆயுதம் இருந்தது அன்று.

இன்று தமிழனுக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறதா? என்ற கேள்விக்குறி மட்டும்தான் தமிழனின் சொத்து.

ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தப் படி தமிழ்ப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படக்க வேண்டும். போராளிக் குழுக்களும் ஆயுதங்களை ஒப்படைத்தன. பிரச்சனை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில். அதைத்தீர்க்க ஒப்பந்தம் செய்தவர்கள் அபோதைய இலங்கை குடியரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்தனேயும் அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும். இதில் தமிழர்களின் பங்கு என்ன? தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப் பட்டது. அதன் படி இந்தியா பல வாக்குறுதிகளை தமிழர்களுக்கு வழங்கியது,

தமிழர்களுக்கும் இந்தியா கொடுத்த வாக்குறுதிகள்.
  • தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்கும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காணும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இலங்க அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்ப்டும்.
  • இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டு தமிழர்களின் தாயகமாக ஏற்றுக் கொள்ளப் படும்.
இவை இந்தியா கொடுத்த வாக்குறுதிகள். இவை எழுத்தில் கொடுக்கப்படாத கனவான் ஒப்பந்தம். ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தப் படி விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா 1987இல் ஆரம்பித்தது. இலங்கையும் இந்தியாவும் இணைந்து அன்றிலிருந்து அரும் பாடுபட்டு 2009இல் தமிழ்த் தேசியத்தின் ஆயுத் பலத்தை மழுங்கடித்தது.

இப்போது 1980களில் செய்தது போல் தமிழர்களை பல கூறுகளாகப் பிரிப்பதில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

இந்தியக் கைக்கூலிகளின் பூச்சாண்டி
இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறுகதியில்லை என்று இந்தியக் கைக்கூலிகள் போதித்து வருகின்றனர். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். தமிழர்கள் மேற்குலகை சார்ந்து விடுவார்களோ என்றபயம் இந்தியாவிற்கு இருப்பது இயற்கை. அதனால் இந்தியா தனது கைக்கூலிகள் மூலம் இந்தியாவை மிஞ்சி எந்த மேற்குலகமும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன்வராது என்று போதிக்கின்றனர். ஒரு இந்தியக் கைக்கூலி மேற்குலகம் இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்திற்கு இந்தியாவையே நம்பி இருக்கிறது என்று பொய் கூறுகின்றனர். இந்தியப் படை பலத்திலும் பார்க சீனப் படைபலம் மூன்று மடங்கானது. சகல ஆசிய நாடுகளின் பாதுகாப்புச் செலவீனங்களிலும் பார்க்க அமெரிக்க பாதுகாப்புச் செலவீனம் பலமடங்கானது. இப்படிப்பட்ட இந்தியாவின் தயவு யாருக்குத் தேவை? இந்திய சனத்தொகையை எப்படிச் சுரண்டுவது? இந்தியக் இணையக் கூலிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதுதான் மேற்குலகின் திட்டம். சீனாவின் இருவகையில் இந்தியாவிற்கு ஆப்பு வைக்கிறது. ஒன்று இந்தியாவைச் சுற்றி முத்துமாலைத் திட்டம் என்றபெயரில் இந்தியாவிற்கு போடும் சுருக்குக் கயிறு. மற்றது உள்ளூரில் வளரும் மாவேயிஸ்ட் வாதம். இந்தியாவின் வருங்காலம் அதோகதி!!!

இந்தியா தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறது?
சென்ற ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இந்திய விற்பன்னர்கள் தமிழர்கள்மீது அநுதாபம் காட்டுவது போல் தமிழர்களைப் பற்றி கேவலமாக எழுதி வந்தனர். இனித் தமிழர்கள் பிச்சாண்டிகள் என்பது போலும் எழுதினர். It is Hobson’s Choice for Tamils என்று ஒரு கட்டுரையை கேணல் ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார். ஹொப்சன் என்னும் குதிரை வாடகைக்கு விடும் ஆங்கிலேயர் தனது ஒரு குதிரையை மட்டும் எல்லோரும் வாடகைக்கு கேட்பதால் தான் கொடுக்கும் குதிரையை மட்டுமே வாடகைக்கு பெறவேண்டும் அல்லது ஒரு குதிரையும் கிடைக்காது என்று நிபந்தனையை விதித்தாராம். அதாவது தமிழர்கள் முன் உள்ள ஒரே தெரிவு சிங்களவர்கள் கொடுப்பதைப் பெறுங்கள். அந்தளவு பிச்சாண்டிகள் தமிழர்கள். அல்லது உங்களுக்கு எதுவுமில்லை என்று ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார்.

இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிள்ளையானைச் சந்தித்த பின் பிள்ளையான் ஒஸ்லோத் தீர்மானத்தை நிராகரித்தார். 13வது திருத்தம் தான் வழி என்கிறார்.
பேரின வாத இந்தியாவின் தற்போதை ஒரே எண்ணம் சிங்களப் பேரினத்தின் செருப்பாய் தமிழன் இருக்க வேண்டும் என்பதுதான்.

தாத்தா சுதுமலையில் கொடியேற்றினார்

பேரன் கீரிமலையில் கப்பலோட்டினார்
தகப்பன் திருமலையில் கோபுரம் கட்டினார்
மகன் பாரெங்கும் அலைகின்றான்.

செந்நீர் பாய்ச்சி
உயிர்பல உரமிட்டு
துயர்மிக சுமந்து
இடர்பல பட்டு
நாம் வளர்த்த
விடுதலைப் பயிர் பற்றி
கண்ணீர் விட்டு
சுதந்திரப் போர்ப் பயிர்
வளரத்தோர்க்கு
புரியாமல் போனதென்ன

நம்மை அடுத்துக் கெடுத்த
இந்தியாவே எம் முதல் எதிரி
என்றான பின்பே
ஆரியக் கைக்கூலிகள்
இந்தியாவை விட்டால்
எமக்கு வேறு கதியில்லை
என்று புலம்பித் திரிகின்றன.

Thursday 18 March 2010

You Took the Wrong Exit


We met first in the flight from LA to Heathrow
We exchanged few formal and kind words
You made those hostesses ugly ducklings
You made that long flight very short

Our second meeting was in Eastham Temple
You were struggling to pull the rope
And to keep your silky sary intact
We exchanged sweet smiles
You made that day more divine

Our next meeting was on FA Cup day
In the North Circular Road traffic jam
As our cars were side by side
You asked me for short cut to Harrow
I asked you to follow me along
I lead you to the right destination

In real life you failed to follow me
You took the wrong exit
Ended in a wrong destination
I still feel the pain as I think of you
From the unchartered territory
Where I ended up without you.

Wednesday 17 March 2010

தலைகீழாக ஒரு வீடு


கட்டிடக் கலை நிபுணர் ஒருவர் தனது கற்பனையை கன்னா பின்னா என்று ஓடவிட்டார்.

விளைவு தலை கீழாக ஒரு வீடு!

ஜெர்மனியில் இந்த வீட்டைக் காணப் பலரும் திரள்கிறார்கள்.

உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாக இது அமைந்து விட்டது.

வெளியில் இருந்து பார்க்க தலைகிழாக இருக்கும் இந்த வீடு உள்ளே வழமையான வீடு போல்தான் இருகிறது. படுக்கை அறை, சமையலறை, குளியலறை என ஒரு வீட்டிற்கு இருக்கவேண்டிய அத்தனையும் இதில் உள்ளது.

வீட்டிற்கு என்ன பெயர் தெரியுமா? ‘Crazy House’.

பான் கி மூனின் அடுத்த கபட நாடகம்?


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க விற்பன்னர்கள் சபையை விரைவில் அமைக்க விருப்பதாக அறிவித்துள்ளார்.

சென்ற ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி பலர் ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூனைக் கேட்டிருந்தனர். அதை கவனத்தில் எடுக்காத பான் கீ மூன் பல கண்டனங்கள் ஊடகங்களால் தெரிவிக்கப் பட்டதை அடுத்து விஜய் நம்பியார் என்ற தமிழ் மக்களின் வில்லனை இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்று பின் இந்தியா சென்றார். அதன் பின்னர் ஐநா வந்த அவர் தனது அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்காமல் காலத்தை இழுத்தடித்தார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரித்தானியா முற்பட்ட போது அவர் தமது அறிக்கையை ஐநா அதிபரிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை பற்றி மூடப்பட்ட அறைக்குள் கலந்துரையாடப் பட்டது. இந்த இழுத்தடிப்புக்கள் யாவும் இலங்கைக்கு போரை முடிக்க
வழங்கப்பட்ட அவகாசமாகும். போர் முடிந்த பின் இலங்கைக்கு சென்ற பான் கீ மூன் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உறுதியளிக்கப் பட்டவையை இலங்கை குடியரசுத் தலைவர் ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்வி ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ முனிடம் அதன் பின் பல தடவை எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த கூட்டறிக்கையின் படி இலங்கை அரசு:
  • போரினால் பாதிக்கப் பட்டவர்களை மீள் குடியேற்றுதல்.
  • சர்வ தேச நியமங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகளை மதித்து நடத்தல்.
  • இலங்கை வாழ் சகல சமூகங்களின் அபிலாசைகள் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
  • இலங்கையின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்காக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுதல்.
  • இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுதல். இதற்காக தமிழ் மக்களுடன் பரந்த அளவில் பேச்சு வார்த்தை நடாத்துதல்.
இலங்கைக் குடியரசுத் தலைவரும் ஐக்கிய நாடுகளின் செயலரும்வெளிவிட்ட கூட்டறிக்கையில் எதுவும் இது வரை நிறை வேற்றப் படவில்லை.

இதனால் பான் கீ மூன் ஊடகங்களின் கண்டனத்து உள்ளானார். குறிப்பாக இன்னர் சிற்றி பிரெஸ் என்னும் ஐநா ஊடகம் பான் கீமூனை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அது மட்டுமல்ல ஐநா மனித உரிமைக் கழகத்தின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையில் நட்ந்த போர் குற்றம் தொடர்பாக விசாரணை தேவை என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து பான் கீ மூன் இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க விற்பன்னர்கள் சபையை அமைக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இதை ஐநா சபையின் அணிசேரா நாடுகள் எதிர்ப்பதாகத் தெரிவித்தவுடன் சபை இப்போது அமைக்கப் படமாட்டாது என்று பான் கீ மூன் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நவநீதம் பிள்ளைக்கும் பான் கீ மூனிற்கும் இடையில் ஒரு சந்திப்பு நடந்தது. இப்போது இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க விற்பன்னர்கள் சபை விரைவில் அமைக்கப் படவிருப்பதாக பான் கீ மூன் "பல்டி" அடித்துள்ளார்.

பான் கீ மூன் தனது பதவி நீடிப்பைக் கருத்தில் கொண்டு செய்ற்படுவதால் இப்படித் தடுமாறுகிறாரா?

அது மட்டுமல்ல ஆலோசனை சபை தொடர்பாக ஐநா தரப்பில் இருந்து ஒன்றுக் ஒன்று முரண்பட்ட கருத்துக்கள் வெளிவருகின்றன. அதில் ஒன்று ஆலோசனைச் சபை இலங்கை அரசுடன் கலந்தாலோசித்த பின்பே வெளி விடப் படும் என்றும் கூறுகிறது. இன்னொன்று ஆலோசனைச் சபையில் ஒருவரை நவநீதம் பிள்ளை சிபாரிசு செய்துள்ளதாகக் கூறுகிறது.

ஆலோசனை சபை பான் கீ மூனுக்கு மட்டுமே!
பான் கீ மூன் தான் அமைக்க விருக்கும் சபை தனக்கு மட்டுமே ஆலோசனை வழங்கும் என்றும் கூறியுள்ளார். இது சபையின் அறிக்கையை மூடி மறைக்க அல்லது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்க வாய்ப்பாக் அமையும். மீண்டும் பான் கீ மூன் கபட நாடகம் ஆடுகிறாரா?

Tuesday 16 March 2010

மஹிந்தவை கடுமையாகத் திட்டும் சரத் பொன்சேக்கா.


மஹிந்த அயோக்கியன், தேர்தல் வெற்றியைத் திருடியவன்.
சனல்-4 தொலைக்கட்சிக்கு இரகசியமாக சிறையில் இருந்து சரத் பொன்சேக்கா பேட்டியளித்துள்ளார். சனல்-4 இன் சார்பாக சிறையில் இருக்கும் இலங்கையின்ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவருமான சரத் பொன்சேக்காவிற்கு இரகசியமாகக் கேள்விகள் அனுப்பப் பட்டன. அவற்றிற்கு சரத் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
தனது பதிலில் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவை அயோக்கியன் என்றும் தேர்தல் வெற்றியைத் திருடியவன் என்றும் சரத் பொன்சேக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
"But I will never give up exposing rogue president for sake of country," இப்படிக் கூறினார் சரத்.
பொறாமை பிடித்தவன் மஹிந்த
"He is jealous of me as I got more votes than him although he rigged he knows that I can challenge him [sic]," the general wrote, adding that he believed he was being held illegally and that his life remains at risk.
இப்படிப்பட்ட கடுமையான வாசகங்களை சரத் பாவித்துள்ளார்.

இங்கு முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய அம்சம் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவானவர்கள் மஹிந்தவின் படையணிகளுக்குள் நிறைய இருக்கிறார்கள் என்பதாகும். அவர்களின் உதவியின்றி இந்த பேட்டி சாத்தியம் இல்லை. சனல் -4 தொலைக் காட்சிக்கு எதிரான போக்கு இலங்கையில் கடுமையாகக் காணப்படிகிறது. இருந்தும் அதற்கு விலைபோகக் கூடியவர்கள் இலங்கை அரசில் இருக்கிறார்களா?

சனல்-4 இன் செய்திக் காணொளியை இங்கு காணலாம்.

Monday 15 March 2010

என் காதலியும் கலைஞர் தொலைக் காட்சியும்


அரும்பும் என் காதலுக்கு
அன்பு வாழ்துச் சொல் என்றேன்

இரும்பாகிப் போனாள்.


அழகிய தமிழ்மகள்
என்று
ஆசை கொண்டேன்
இளகிய மனமின்றிப் போனாள்.


விழியில் மானாடுது

இடையில் மயிலாடுது என்றேன்

"எலிமினேற்" செய்துவிட்டாள்

பார்த்ததும் பாட்டுக்குப் பாட்டாக

பாடிப் பாடி நின்றேன்

பார்காதது போல் போனாள்.


விசாரணை செய்தேன்

வானம்பாடியாவோமா என

போடா பயலே என்றாள்.


மங்கையவள் உலகத்தில்

இரசிகனாய் நின்றேன்

கொதிக்க வைத்துப் போனாள்


பார்த்தால் தில் தில்

மனதில் என்றேன்

செல் செல் என்று போனாள்.


சிரிப்பு வருகுது

பார்ததும் என்றேன்

செருப்பு வருமென்றாள்.


உன் நாளைய இயக்குனர்

நான் என்றேன்

மயங்கவைத்துச் சென்றாள்.


விடியலே வா - என்

மடியிலே வா என்றேன்

தடியனே போ என்றாள்


அவள் ஒரு மின்சாரம்

எனக்கென்றேன்

அதிர்ச்சி தந்தாள்.


நீ தேனும் பாலும் போல்

சுவையோ சுவையென்றேன்

எல்லாமெ சிரிப்பென்றாள்


என் இதயத்தில் அவள்

திரைத் துளியென்றேன்

வைர மங்கையானாள்


உறவுக்குக் கை கொடுப்போம்

மஹா இலட்சுமியே என்றேன்

சதி செய்தாள் லீலாவதி.


விளக்கு வைக்கும் நேரத்தில்

நீ என் அபிராமி என்றேன்

விளக்குமாறே என்றாள்


லாஜிக் இல்லா மஜிக்

அவள் பார்வையென்றேன்

கருத்து யுத்தம் செய்தாள்


தங்கமான புருசன்

நான் என்றேன்

உரசாமற் போனாள்.


என் குடும்பம் என்றும்

உனக்கென்றேன்

வாடகைவீடு பார் என்றாள்

ஐபோனில் இசை அமைக்கலாம்


ஐபோனைப் பாவித்து ஒரு பாடலுக்கு இசை அமைத்துள்ளார் சீனப் பொப் பாடகியான பிக்ஸி ரீ என்பவர். ஐபோனில் உள்ள ஒலிகளை(bleeps, thuds and strums) பாவித்து ஸ்ஹங் சுஅன்யன் என்னும் இயற்பெயர் கொண்ட இந்தப் பாடகி இந்த இசை அமைப்பைச் செய்துள்ளார். Drum- Meister, Bassist, iDrum, NlogSynthesizer, NESynth and iShred ஆகிய செயற்படு மென் பொருள்கள் இந்த இசையமைப்புக்கு இவரால் பாவிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு இசைத் தட்டு நிறுவனத்தின் விளம்பர உத்தி என்று சந்தேகமும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதைச் சாமானியர்களால் செய்ய முடியாது விற்பன்னர்களால் மட்டும்தான் செய்ய முடியும் என்று குறையும் கூறப்பட்டுள்ளது.

ஒரு மணித்தியாலத்தில் 25,000 ஐபாட்(Ipad) விற்பனை.
பிக்ஸி ரீயின் இரசிகர்கள் இவரை அப்பிள் நிறுவனம் தனது விளம்பரத்திற்கு பயன்படுத்த் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அப்பிள் நிறுவனம் தனது ஐபாட் விற்பனையில் வெகு இலாபம் ஈட்டிவருகிறது. ஒரு மணித்தியாலத்திற்கு 25,000 ஐபாட்டை அப்பிள் நிறுவனம் விற்று வருகிறது. ஐபாட் இப்போது அமெரிக்காவில் அமோகமாக் விற்பனையாகி வருகிறது. விரைவில் இது பிரித்தானியாவில் 545 பவுண்டுகளுக்கு விற்கப்படவிருக்கிறது.

Sunday 14 March 2010

காணொளி - சாத்தான்கள் ஓதும் வேதம்


கீழுள்ள காணொளி கொடூரமான படங்களைக் கொண்டது.

How to choose a mobile phone?


What type of mobile phone user are you? Research has identified three distinct behavioural profiles:

1. Mobile Pioneers,

2. Mobile Wannabes and

3. Mobile Traditionalists.

The Mobile Pioneer (15 per cent of the market) embraces smartphone technology, downloads applications, and uses advanced features such as the internet, e-mail and social networking sites.

The Mobile Wannabe (25 per cent of the market) has tried to use some of these advanced features and would like to use them more.

Mobile Traditionalists (60 per cent of the market) generally use their phones for voice calls and occasional texting, with two-thirds of Traditionalists over 35 years old.

If you are a Mobile Traditionalist, or are simply in the market for a basic mobile phone, you could be forgiven for thinking that handset manufacturers have forgotten that for most people, a mobile phone’s primary role is for voice calls. For Traditionalists ease-of-use, good quality reception, a clear screen and easy-to-use buttons are essential. Less important are internet access, e-mail, or the latest smartphone technology.

So where do you start if you just want a basic easy to use handset? Before you start searching for models, take a little time to consider what you need. First, think about what style of phone you want. Models fall into categories such as candybar-shaped, slider (which offers protection for the keypad and camera lens), clamshell (also called flip-phones), Qwerty phones with a keypad (useful for texting) and the increasingly popular touchscreen type. Although popular, touchscreen models can be difficult to read in bright sunlight and vary considerably in their touch sensitivity and ease-of-use.

Next, think about the features you need. If you’re in the market for a basic mobile phone, ease of making a voice call should top your list of priorities. Good-sized buttons will help here, as will a simple menu system that will enable you to recall the telephone numbers for your favourite contacts.

After voice calls, texting is an important feature to consider. It is an increasingly popular way of keeping in touch, particularly with teenagers! An astonishing 4.1 million text messages are sent on average every hour in Britain. All phones, with the exception of just a few specialist models, can send and receive text messages. If texting is of prime importance, choose a phone with well-spaced buttons that feel comfortable to use. A Qwerty keypad can make texting easier.

A good quality and reasonable-sized screen makes sense. Check the size of the text and numbers on the screen. Some budget phones have tiny screen text that anyone with less than perfect vision will struggle to read. Ideally look for a phone with a colour screen with a good resolution. Screen resolution is expressed in the number of pixels - most new mid to high-end mobile phones have at least 240 x 320 pixel resolution.

Even the most basic of phones will offer a wide range of features such as alarms, timers and a calendar. A camera and the ability to play music are features that are available on many, but by no means all basic phones.

Using a camera to take a quick snap can be fun, and although the image quality won’t be as good as that of a good quality digital camera, you’re more likely to have your phone to hand when a photo opportunity arises.

Listening to music on mobile phones is very popular, and saves carrying around a separate MP3 player or radio. If this is of interest, it makes sense if your chosen phone supports the same music format as you use on your computer.
Whatever type of phone user you are, it’s worth picking a phone with a good battery life. Infrequent users are far more likely to find their phone has a flat battery when they finally want to use it. Regular users usually charge their phone every day or two as a matter of routine. Phones vary considerably in how long their batteries last, but take some of the manufacturers’ more extravagant standby and talk-time claims with a ‘pinch of salt’!

Finally, although it might seem obvious, before you choose any phone tied to a network or a contract, make sure that you will get a signal in the main areas where you plan to use it. Networks vary considerably in their coverage of the country, particularly in rural and remote areas. If you are not sure, ask friends, family, or work colleagues which network provides good signal coverage for them. Don’t just rely on the predictions made by the networks!

From London Times

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...