Saturday 6 March 2010

ஐந்து வீதி துப்பரவாக்கும் வேலைக்கு விண்ணப்பித்த 400 பட்டதாரிகள்


உலகெங்கும் பொருளாதாரப் பிரச்சனை. வேலையில்லாத் திண்டாட்டம். இதன் விளைவுகள் பற்பல. சீனாவில் ஷண்டொங் மாகாணத்தில் ஐந்து தெரு துப்பரவாக்கும் வேலைகளுக்கு 400 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். சட்டம், கட்டிட்டக் கலை, கணக்கியற் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் பலர் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களி ஐவருக்கு மட்டுமே அதிஷ்டம் அடித்தது. ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பட்டதாரிகள் வேலையில் இணைந்துள்ளனர். மனித மலங்கள் கூட இவர்களின் துப்பரவு செய்யும் தொழிலில் அடங்கும்.

Friday 5 March 2010

எல்லை தாண்டிய பயங்கர வாதம்


யாழ்ப்பாணத்தில் காணியுடன்
கடை விற்பனைக்குண்டு
இலண்டன் வானொலியில் விளம்பரம்
இதுதான் உலகமயமாதலோ

சுவிஸ் வாழ் சுமதிக்கு
நேர்வேயில் கல்யாணம்
பிரெஞ்சு மாப்பிள்ளை
கனடா அண்ணன் டொலரிலும்
இங்கிலாந்து மாமா பவுண்டிலும்
சீதனமும் சீர்வரிசையும்
இதுவும் ஒரு பன்னாட்டு வாணிபம்.

தப்பித்துப் போய் அகதிகளான
வன்னிப் போர்குற்றச் சாட்சியங்கள்
தமிழ்நாட்டில் கடத்தப்பட்டனர்
இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

Thursday 4 March 2010

கூட்டமைப்பு ஆப்பிழுத்துவிட்டதா?


இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தாம் இல்லை என்று இப்போது தமிழ் தேசியக் (தமிழ்க் காங்கிரஸ் மற்றும் பலர்இல்லாத) கூட்டமைப்பின்தலைவர்கள் அடிக்கடி கூறிவருகின்றனர். இதேவேளை சில ஊடக அறிவாளிகள் தமிழனின் முதலாம் எதிரி இந்தியா என்ற உண்மையை மறைத்து இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதியில்லை என்று போதிக்கின்றனர். அத்துடன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒரு துரோகி அல்ல என்றும் வாதிடுகின்றனர். சம்பந்தனை யாரும் துரோகி என்று அழைக்க முன்னரே இவர்கள் சம்பந்தன் துரோகி அல்ல என்று வாதிடுவது ஏன் என்று தெரியவில்லை.
தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படையிலும் விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும் 2004-ம் ஆண்டு இலங்கையில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தமிழத் தேசியக் கூட்டமைப்பு இலகுவாக வெற்றி பெற்றது. ஆனால் எந்த வெளிசக்திகளும் தமிழத் தேசியக் கூட்டமைப்பைக் கண்டு கொள்ளவில்லை. இலங்கையில் இனப் பிரச்சனையை தீர்க்கவென நடந்த சர்வ கட்சி மாநாடுகளுக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப் படவில்லை.

முள்ளி வாய்க்காலுக்குப் பின் கூட்டமைப்பின் தலைவர் இராசவரோதயம் சம்பந்தன் அவர்கள் 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கும் படி தமிழ் மக்களைக் கோரியது தவறு என்று கண்டித்தார். ஆனால் 2010இல் நடந்த தேர்தலுக்கு சம்பந்தன் ஐயா வாக்களித்து எதைச் சாதித்தார் என்று அறியப் பலர் ஆவலாக இருக்கின்றனர்.

ஒரு நல்ல தலைவர் தன் கீழ் உள்ள மக்களை ஒன்று திரட்டுவான் என்பார்கள். ஆகக்குறைந்தது சிலரையாவது ஒன்று திரட்ட வேண்டும். வடக்குக் கிழக்கில் உள்ள 31 தேர்தல் தொகுதிகளில் 1867 வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு 60 வேட்பாளர் என்ற விகிதத்தில் போட்டியிடுகின்றனர். நாடாளாவிய ரீதியில் பார்த்தால் 225 தொகுதிகளுக்கு 7250 வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு 33 வேட்பாளர்கள் என்ற விகிதத்தில் போட்டியிடுகின்றனர். தமிழர்க்ளைப் பொறுத்தவரை இவ்வளவு தீவிர போட்டி ஏன்? தமிழ் மக்களுக்கு இப்போது நல்ல தலைமை இல்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. தமிழர்கள் மத்தியில் இந்தியத் தலையீடு அதிகரித்து விட்டது என்பது தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளபிளவுகள் எடுத்துக் காட்டுகின்றது. 1980களின் இப்படித்தான் இந்தியா 20இற்கு மேற்பட்ட ஆயுதக் குழுக்களை உருவாக்கி ஒன்றுடன் ஒன்றை மோதவிட்டது.

தமிழ் மக்களுக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சிலர் மஹிந்த ராஜபக்சே முகாமிற்கு சென்றுவிட்டனர். சிலர் தனிக் குழு அமைத்துவிட்டனர். கூட்டமைப்பு என்ற சொல்லிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. தமக்கு எதிராகச் செயற்பட்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களை தோற்கடிக்க ராஜபக்சேக்கள் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். திருமலை மாவட்டத்தில் அதற்கான முனைப்புக்களின் படைத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல ராஜபக்சவும் விக்கிரமசிங்கேயும் ஒன்றுபட்டுச் செயற்படும் சாத்தியக் கூறுகள் உண்டு. இவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் கிழக்கில் தமிழர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டிவரும். அது மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அமோக வெற்றியீட்டினாலும் ஒன்றுபட்ட ஸ்ரீஇலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணையும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. இந்தியாவின் கைக்கூலி ஆயுததாரிகள் இப்போது தமிழ்ப் பகுதிகளில் முகாமிடத் தொடங்கிவிட்டனர். இந்தியாவிற்கு வரதராஜப்பெருமாள் என்ற இன்னொரு கைக்கூலியையும் களமிறக்கும் எண்ணம் உண்டு. அவர் காவற்துறை அதிகாரமில்லாத வடமாகாண முதலமைச்சராக பட்டமளிக்கப்படலாம்.
ஆனந்தசங்கரி, பிள்ளையான், கருணா, டக்ளஸ் போன்றவர்களோடு வரதராஜப்பெருமாளும் இணைந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதி என்ன? இந்திய உளவுத்துறையும் அதன் தமிழ் ஊடகக் கைக்கூலிகளும் கூட்டமைப்பையும் வெளிநாடுகளில் வாழ் தமிழர்களையும் பிரிக்கச் சதிசெய்கின்றனர். சென்ற பாராளமன்றத் தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு விலகினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குத் தானே ஆப்பு வைத்ததாகத்தான் முடியும்.

Monday 1 March 2010

10 ways to speed up your broadband‏


If you're really fed up with the speed you are getting on your broadband connection it is time to take action. With the help of Broadbandchoices.co.uk, the broadband comparison site, which has compiled a guide for consumers, here are ten top tips to speed up your broadband connection. And for more info on speedy broadband and how to improve your finances online, check out Times Money's technology special this Saturday (February 13).
1. Test your speed
If you haven’t already done so, use a speed tester to measure the level at which your broadband connection is currently running. This will allow you to see what difference the following suggestions make to your speed.
2. It’s good to talk
If you are not getting what you expected from your internet service provider (ISP) then pick up the phone. You may be able to boost your connection speed simply by asking your ISP if there is anything it can do to help.
3. Reposition your router
The position of your router can have a significant effect on the quality of your wireless connection. Place it in an area where the signal will be affected by as few obstructions and little interference as possible. For example, away from appliances which emit wireless signals (e.g. cordless phones) and avoiding barriers such as walls and doors between the router and your computer.
4. Spring clean your cache
Every time you visit a webpage, your browser will store, or ‘cache’ it. All these items stored in your cache do take up space and over time it can get very full. Periodically clearing out your browsers cache will enable it to function more effectively.
5. Upgrade your browser
If you are unhappy with the browsing speed of your connection then you should definitely look at upgrading to a newer web browser. Using the latest browsers can greatly reduce the time it takes to download a web page. Check download.com for free downloads of the latest browsers, but you should be careful when making any changes to the settings on your computer.

6. Monitor your applications
There are many applications such as RealPlayer or Windows Updates that may discreetly start running when you log in to your computer and may slow your connection down. Set these applications so they don’t run automatically – this should reduce your bandwidth overhead and make a noticeable difference to your connection speed.

7. Disable P2P software
While music, TV and film download applications are great for entertainment, they are not so great for your connection speed. Some applications continue to run in the background even when you think you’ve turned them off as they continually upload and download. This will not only slow you down but can also use up your download allowance. To avoid this, check the settings and set the programme to ‘no peer to peer,’ so it won’t run when you are not using it.
8. Loathe thy neighbour
If you have wireless broadband, the first thing you should do is secure your wireless network. If you are unwittingly sharing your connection with unauthorised users then they will be using up valuable bandwidth. This means that the speed of your connection and download allowance could take a battering, not to mention the security threat this poses.
9. Traffic jams
The time of day at which you go online can greatly affect connection speeds. When lots of people are trying to access the internet at the same time there is increased traffic on the physical phone lines and also each website’s servers. Heaviest traffic is usually in the evenings, so to benefit from the fastest speeds you should try to surf when internet traffic is low - generally in the day time or very late at night. If you have heavy downloading to do, you will get the fastest download speeds during off-peak periods.
10. Switch
After all these measures, if your current package still isn’t giving you the speed you want, it may be time to switch. The speed you will be able to achieve does depend on some factors outside your control – such as your distance from the telephone exchange. Evaluate the time and money needed to improve on your current connection and decide for yourself if it is worth an upgrade.

From: London Times

புலம் பெயர்ந்த தமிழர்கள் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள்.


ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் இப்போது முக்கியத்துவம் வகிப்பது புலம் பெயரந்த தமிழர்களின் பலத்தை சிதறடிப்பதும் அவர்களுக்கு எதிராக ஈழம் வாழ் தமிழர்களைத் திருப்புவதும்தான். அது இப்போது தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என்பதற்கு:

  • இந்தியாவின் பிராந்திய நலன்களை மீறி மேற்குலகானது எதுவித நகர்வுகளையும் மேற்கொள்ளாது என்பதை புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும் என்ற சில ஆய்வாளர்களின் ஆலோசனையும்;
  • வெறுமனவே மேற்குலக வீதிகளில் கொடிபிடித்து நிற்பதால் எதையும் சாதித்துவிடமுடியாது என்று புலம் பெயர்ந்த தமிழர்களின் முயற்ச்சிகளைக் கொச்சைப்படுத்தி சில ஊடகங்கள் வெளிவிடும் கருத்துக்களும்
நன்கு எடுத்துக் காட்டுகின்றன.

வட்டுக்கோட்டைச் சதியை முறியடித்த புலம் பெயர்ந்த தமிழர்கள்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒன்றை அரைகுறையாக நடாத்தி அதைத் தோல்வியில் முடிவுறச் செய்து தமிழர்கள் மத்தியில் தனிநாட்டுக்கு ஆதரவு இல்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தை செய்ய ஆரிய சிங்களக் கூட்டமைப்பு தம் அடியாட்கள் மூலம் முயன்றது. ஆனால் புலம் பெயர்ந்த மக்கள் தீவிரமாகப் பங்கெடுத்து அதை முறியடித்தனர். ஆனாலும் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் அடியாட்கள் அத்துடன் விடவில்லை மூன்று இலட்சம் மக்கள் வாழும் நாட்டில் அறுபத்து நான்காயிரம் மக்கள் மட்டும் வாகளித்தனர் என்று அடுத்த பொய்ப்பிரச்சாரத்தில் இறங்கினர். மூன்று இலட்சம் மக்களில் அரைபங்கினர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்பதையோ எந்த ஒரு தேர்தலிலும் நூறு விழுக்காடு வாக்களிப்பு எங்கும் நடந்ததில்லை என்பதையோ ஆரிய சிங்களக்க்கூட்டமைப்பு ஏன் உணர மறுக்கிறது. ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் ஒரு சிறுபங்கினரின் கருத்தை வைத்தே முடிவு செய்யலாம்.

இந்திய வல்லாதிக்கம் தனது ஈழத்தமிழர்கள் மீதான பிடியை இறுக வைத்திருந்த 1980களின் இருபதிற்கு மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் 1990களில் தமிழர்கள் இந்திய ஆதிக்கத்தில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். சென்ற பாராளமன்றத் தேர்தலில் தமிழர்கள் ஒன்றுபட்டுத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கீழ் வெற்றி பெற்றது ஆரிய சிங்களக் கூட்டமைப்பை மிகவும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது. இப்போது இந்திய ஆதிக்கம் ஈழத் தமிழர்கள் மீது மீண்டும் இறுகிவருகிறது என்பதற்கு வடகிழக்கு இலங்கையில் உள்ள 27 பாராளமன்ற ஆசானங்களுக்கு 1867 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது நல்ல ஆதாரம்.

பிரித்தானிய அரசியல்வாதிகளின் கருத்து மாற்றம்
பெப்ரவரி 24-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றத்தில் உலகத் தமிழர் பேரவை அங்குரார்பணம் செய்து வைக்கப் பட்டதும் அதற்கு பிரித்தானியப் பிரதமர் வருகைதந்ததும் பிரித்தானியத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சியடையக்குடிய செய்தி. இதை ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகள் கொச்சைப் படுத்தத் தவறவில்லை. இது பிரித்தானியப் பொதுத் தேர்தலுக்கு முன்னோடியான ஒரு நிகழ்வாக வர்ணிக்க முயல்கின்றனர். உலகத் தமிழர் பேரவையுடன் ஒத்துழைக்க அமெரிகாவும் தயார் என்று கூறுவதை அமெரிக்கவின் எந்தத் தேர்தலுடன் இவர்கள் சம்பந்தப் படுத்தப் போகிறார்கள்? பிரித்தனியாவில் தமிழர்கள் "வீதியில் வெறுமனே கொடி பிடித்து நின்றபடியால்தான்" தமிழர்களின் பலத்தையும் திடசங்கற்பத்தையும் புரிந்து கொண்டு பிரித்தானிய அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். இது ஒரு அரச கொள்கை மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணி இப்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் முன் இருக்கிறது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத் தமிழர்களின் நிலை உணராமல் செயற்படுகிறார்கள் என்றும் இலங்கையில் இருந்துகொண்டும் இந்தியாவின் கொடுமைகளையோ சதிகளையோ உணராத அறிவாளிகள் புலம்புகிறார்கள். பிரித்தானியாவில் பல நாட்டினரும் வாழ்கிறார்கள் அவர்களில் ஈழத்தவர்கள் மட்டுமே பழைய மாணவர்கள் சங்கங்கள் தமது ஊருக்கான நலன் புரி அமைப்புக்கள் அமைத்து தாய் நாட்டுக்குச் சேவை செய்கிறார்கள். இதைப் பார்த்து மற்ற நாட்டு மக்கள் வியப்பதுண்டு. ஈழத் தமிழர்கள் இப்போது அடக்கு முறைக்கு உட்பட்டு இருப்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் நன்கு உணர்வர். ஆரிய சிங்களக் கூட்டமைப்பு அவர்களை வாயில்லாப் பூச்சிகளாககியதையும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அறிவர்.

இலங்கையின் "ஜனநாயகம்" பற்றி 1981இல் நடந்த மாவட்ட சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். 1981இல் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு என்று அமெரிக்க நிர்பந்தத்துடன் இலங்கையில் அதிகாரமற்ற மாவட்ட சபைகள் உருவாக்கப் பட்டது. இதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்காவால் இலங்கைக்கு அனுப்பபட்ட அமெரிக்க பேராசிரியர் ஏ. ஜே வில்சன்(தந்தை செல்வாவின் மருமகன்) மாவட்ட சபையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குக் கூடிய அதிகாரத்தை ஒரு (சிங்கள) அரசு தமிழர்களுக்கு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்றார். மாவட்ட சபைத் தேர்தல் நடாத்தியது சிங்கள் ஜே ஆர் ஜயவர்தனே அரசு. ஜே ஆர் ஜயவர்தனே மேற்குலக நாடுகளாலும் சில தமிழ் அரசியல் வாதைகளாலும் அ அமிர்தலிங்கம் உட்பட சிறந்த "ஜனநாயக வாதி" என கூறப்பட்டவர். 1981இல் நடந்த மாவட்டசபைத் தேர்தலில்தான் இலங்கையில் முதல் முதலாக வாக்கு மேசடி இடம்பெற்றது. வாக்குப் பெட்டி நிரப்புதல் என்றால் என்ன என்று முதல் முறையாக தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். தேர்தல் முடிந்த பின் யாழ் சுபாஸ் விடுதியில் ஒரு வாக்குப் பெட்டி கூட கண்டு எடுக்கப் பட்டது. அங்குதான் ஜே ஆர் அவர்களால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பப் பட்ட காமினி திசநாயக்க சிறில் மத்தியூ ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போதுதான் யாழ் நூலகமும் கொழுத்தப் பட்டது. இது ஜனநாயக வழியில் தமிழர்கள் பிரச்சனை எப்படி சிங்களவர்கள் தீர்ப்பர் என்பதற்கு கிடைத்த முதல் எடுத்துக்காட்டு.
மாவட்டசபை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதால் மாகாணசபை முறை இந்திய நிர்பந்தத்துடன் 1987இல் அறிமுகப் படுத்தப் பட்டது. இலங்கையில் ஆயுதக் தமிழ்ப் போராளிகள் பலமான நிலையில் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் செய்யும் வல்லமை பெற்றிருந்த வேளையில், இந்தியாவின் பலமானஅழுத்தம் ஜேஆர் ஜயவர்த்தனே கைகளில் பாராளமன்ற உறுப்பினர்களின் தேதியிடப்படாத பதவி விலகல் கடிதம் ஆகியவை இருந்ததால் ஜே ஆர் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டார் தமிழர்களுக்கு மகாணசபைமூலம் ஒரு அதிகாரப் பரவலாக்கம் செய்வதென்று. ஆனால் மாகாண சபைக்கான தேர்தல் தமிழ்பிரதேசங்களில் 2008வரை நடத்தப் படவில்லை. 2008 இல் தமிழர் மாகாணம் துண்டாடப் பட்டு கிழக்கு மாகாணசபைக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இன்னும் இந்தியாவால் தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று பிரச்சாரம் செய்கின்றனர் இந்தியக் கைக்கூலிகள். இலங்கைப் பாராளமன்றத்துக்குள் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப் படமாட்டது என்று ஏன் உணராமல் இந்த இந்தியக் கைக்கூலிகள் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் போதிக்கிறார்கள். இந்தியா இல்லாமல் தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது என்று தமிழர்களை மிரட்டுவத்ற்கு இந்தக் கைகூலிகள் இந்திய உளவுத்துறைக்கு உதவுகிறார்கள்.

கிழக்குக்கிற்கு காவல்துறை அதிகாரமும் காணி அதிகாரமும் இல்லாத மாகாணசபையும் வடக்கிற்கு காவல் துறை அதிகாரம் இல்லாத மாகாணசபையும் கொடுக்கப் போவதாக் மஹிந்த சொல்கிறார். காவல் துறை இல்லாத மாகாணசபை அரசு எதைச் சாதிக்கும் என்பதை இந்தியக் கைக்கூலிகள் கூறுவார்களா?

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலை யமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக் கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு மேற் குலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் போதிய ஒத்துழைப்பை வழங்கு வதில்லை எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றஞ் சாட்டுகிறாரே அது எப்படிச் சாத்தியமானது? புலம் பெயர்ந்த தமிழர்கள் வெறுமனவே மேற்குலக வீதிகளில் கொடிபிடித்து நின்றதால்தானே.

வெளி உலகு தமக்கு எதிராகவே செயற்படுகின்றது என்று சிங்களவர்கள்
ஆதாரங்களுடன் நம்புகின்றார்கள். சிறிலங்கா எழுத்தாளர் ஒருவர் இதனை
“சிறுபான்மைத் தாழ்வு மனப்பான்மையுடனான ஒரு பெரும்பான்மை இனம்” என
எழுதியுள்ளார் அமெரிக்காவின் மிகப் பழமை வாய்ந்த The Nation
ஏட்டின் ஐ. நா. வுக்கான செய்தியாளரும், New York Times ஏட்டின்
ஐ.நா.வுக்கான ஆசியச் செய்திப்பிரிவி்ன் முன்னாள் தலைமையாளருமான Barbara
Crossette.
இது எண்ணம் எப்படி உருவானது?
துரோகிகள் தலை தூக்கும் போது வன்முறையும் தலைதூக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...