Saturday 9 January 2010

இலங்கையில் இந்தியாவிற்கு இன்னொரு தளபதி தலையிடி?


இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளான பாக்கிஸ்த்தான், மியன்மார், பங்களாதேசம் போன்ற நாடுகளில் அவ்வப்போது இராணுவப் புரட்சிகள் ஏற்பட்டு இராணுவத் தளபதிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதுண்டு. அந்தத் தளபதிகள் எல்லாம் இந்தியாவிற் எதிரானவர்களாகவே இருந்தார்கள்.

இலங்கையில் மட்டும் அரசத் தலைவர்கள் தேர்தல் மூலமாகவே தெரிந்தெடுக்கப் படுவார்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட இலங்கை அரசத் தலைவர்கள் மற்ற பிராந்திய நாடுகளின் இந்திய விரோதத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவை மிரட்டியும் ஏமாற்றியும் தமது காரியங்களைப் சாதித்துக் கொள்ளுவார்கள். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், கச்சதீவு தாரை வார்ப்பு, ராஜீவ்காந்தியின் கூலிப்படை, சோனியா காந்தியின் திரைமறைவு கூலிப்படை போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.

இப்போது முதல் முறையாக ஒரு இராணுவத் தளபதி ஓய்வு பெற்ற பின் தேர்தல் மூலம் பதவிக்கு வர முயற்ச்சிக்கிறார். இவர் இந்தியாமீது வெறுப்புக் கொண்டவர். பாக்கிஸ்த்தான் சீனா போன்ற இந்திய விரோத நாடுகளிடன் இலங்கை நல்ல உறவைப் பேணவேண்டும் என்று விரும்புபவர். இவர் பதவிக்கு வருவது இந்தியாவிற்கு தலையிடியாக அமையுமா? போர் முடிந்த பின் மஹிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேக்கவும் இருபெரும் நட்சத்திரங்களாக இலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் உருவாகினர். இதில் சரத்தை விரும்பாத இந்தியா அவரை ஓரம் கட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நம்பப் படுகிறது. அதில் ஒன்றுதான் சரத் ஒரு இராணுவப் புரட்சிக்குத் தயாராகிறார் என்பது. அதில் இருந்து ராஜபக்சே சகோதரர்களுக்கும் சரத்திற்கும் இடையில் முறுகல் தோன்றியது. சரத் ஓரம் கட்டப் பட்டார்.

காத்திருந்து காரியம் சாதிக்கும் அமெரிக்கா.
இந்திரா காந்தி இலங்கை தனது பிராந்தியத்திற்கு உட்பட்டது என்றும் அதில் தான்மட்டும் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்றும் மேற்கு நாடுகளிடம் வலியுறுத்தி வந்தார். அதை பேச்சளவில் மேற்கு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இலங்கையை இந்தியாவின் "பொறுப்பில்" விட்டதால் இந்திய சிவ சங்கரமேனன் நாராயணன் ஆகியோரின் திறமையற்ற செயற்பாட்டால் சீனா இலங்கையின் அம்பந்தோட்டையில் பாரிய துறை முகத்தையும் பெரிய ஆயுதக் கிடங்கையும் உருவாக்கியது. அது மட்டுமல்ல இலங்கயில் போரை இந்தியா நடத்தியவிதமும் ஏற்பட்ட அப்பாவி உயிர் இழப்புகளும் மேற்கு நாடுகளை அதிருப்தி அடைய வைத்தன. இந்நிலையில் தான் அமெரிக்கா ஒரு அதிரடிக் காய் நகர்வுகளை மேற்கொண்டது. அதுதான் சரத் பொன்சேக்காவை போர் குற்றச் சாட்டுகளை வைத்து மிரட்டி தேர்தலில் மஹிந்தவிற்கு எதிராக களமிறக்கியது. தன்னைப் பிடிக்காத சரத் பொன்சேக்கா இலங்கையில் பதவிக்கு வருவதா என்று சிந்தித்த இந்தியா மஹிந்த ராஜபக்சேயை ஆதரிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் திட்டத்தின் உள் நோக்கம் பின்வருவனவாக் இருக்கலாம்:
1. சீன நண்பர்களான ராஜபக்சவை அகற்றுதல்
2. சரத் பொன்சேக்கா தேர்தலை வென்றபின் அரசியலில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவிற்கு "முடிசூட்டுதல்". சரத் மறுத்தால் அவர்மீது போர் குற்றம் சுமத்துதல்.

இந்த இரண்டும் இந்தியாவிற்கு பாதகமானவை அல்ல. ராஜபக்சேக்கள் இன்னும் ஆற்றைக் கடக்கவில்லை அதானால் இந்தியாவுடன் அண்ணன் முறை கொண்டாடுகிறார்கள். ஆற்றைக் கடந்தபின் இந்தியாவை யார் நீ என்று கேட்பார்கள். ராஜபக்சே சகோதர்கள் சீன சார்பானவர்களே. ராஜபக்சே ராஜீவ் காந்தியின் அட்டூழியப் படை இலங்கையில் இருந்த வேளையில் இந்தியாவிற்கு எதிராக நஞ்சு கக்கியவர். காணொளிகாண இங்கு சொடுக்கவும்
ஆகக் குறைந்தது மஹிந்தவின் தோல்வி இலங்கையில் சீன ஆதிகத்தைக் குறைக்கும் என்பதை அறிந்து கொள்ளவும். இலங்கையை சீனாவுடன் பங்கு போட இந்தியா விரும்புகிறதா அல்லது சீனாவை அகற்ற விரும்புகிறதா?

Friday 8 January 2010

தமிழர் எதிர்ப்பு மஹிந்தவிற்கு ஒரு டொமினோ சரிவை ஏற்படுத்துமா?


தமிழத் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு தெரிவித்தமை. பல தமிழ் வாக்குகளை மஹிந்த ராஜபக்சவிற்கி எதிராக திருப்பவுள்ளது. தமிழர்கள் மீது உள்ள அரச கெடுபிடிகளை நீக்குவதன் மூலம் அவர்கள் வாக்குகளைப் பெறமுயன்ற மஹிந்தவிற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முடிவு பலத்த அடியாக விழுந்தது.

பிரபாகரனின் தந்தையின் மறைவு
பிரபாகரனின் தந்தையின் மறைவும் மஹிந்தவிற்கு ஒரு பெரும் அடியாகவிழும். தமிழர்கள் மீதான அவரின் அட்டூழியம் நிறந்த அடக்கு முறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக தமிழ் வாக்காளர்களுக்கு அமையும்.

எஸ் செல்லச்சாமி
மலையக மக்களின் தலைவர் எஸ் செல்லச்சாமியும் மஹிந்தவிற்கு எதிராகத் திரும்பியுள்ளார். பழம் பெரும் தலைவரான இவரது முடிவும் மஹிந்தவிற்கு பெரும் இழப்பு. முக்கிய முஸ்லிம் தலைவர்கள் மஹிந்தவிற்கு எதிராகவே செயற்படுகின்றனர். பல முஸ்லிம் பிரமுகர்கள் வர்த்தகர்களிடம் இருந்து ஆயுதக்குழுக்கள் கப்பமாக பெருந்தொகை பறித்தமையை முஸ்லிம் வாக்காளர்கள் மறந்திருக்க மாட்டார்கள். முஸ்லிம்களின் தலைவர் ரஊப் ஹக்கீம்அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவால் மிக மகிழ்ச்சி அடந்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரத் பொன்சேக்காவின் முடிவை அடுத்து மட்டக்களப்பு முதல்வரும் ஒட்டுக்குழுவைச் சேர்ந்தவருமான சிவகீதா பிரபாகரன் சரத் பொன்சேக்காவை தான் ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் மனித உரிமை மீறல்கள் ஆள் கடத்தல்கள் கொலைகள் மஹிந்த ஆட்சியில் அதிகரித்தமையால் அங்கு மஹிந்த செல்வாக்கை இழந்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க சரத்தை ஆதரிப்பதால் அங்கு மஹிந்த தோல்வியைத் தழுவுவார். காலி அம்பாந்ததோட்டைப் பகுதிகள் சென்றமுறை மஹிந்தவின் கோட்டையாக இருந்தது. இம்முறை இருவரும் சரிசமனாக இருக்கிறார்கள்.

அற்ற குளத்தில் இருந்து அறுநீர்ப்பறவைகள் பறக்கும்.
வெற்றி நிச்சயம் என்று இரு ஆண்டுகளுக்கு முதல் குடியரசுத் தேர்தலை அறிவித்த மஹிந்த இப்போது தோல்வியா என்ற சந்தேகத்தில் மன அழுத்தத்தால் பதிக்கப் பட்டுள்ளார். இவர் வெல்வது சந்தேகம் என்ற எண்ணம் வந்ததால் பலர் மதில் மேல் பூனையாக மாறி உள்ளனர். மஹிந்த அணியில் உள்ள இவர்கள் சரத் பொன்சேக்காவை கடுமயாக விமர்சிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். மஹிந்த தோற்பது நிச்சயம் என்று அறிந்தவுடன் பலர் கட்சித் தாவல்களை மேற்கொள்ளுவர். அது ஒரு தொடர் சரிவை (dominio effect) மஹிந்தவிற்கு ஏற்படுத்தும்.

Thursday 7 January 2010

ஐநா இலங்கைத் தேர்தலிலும் சதி செய்கிறதா?


இலங்கைத் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்களுக்கும் இடையில் நல்ல உறவு உள்ளது. அவர்களுக்கிடையில் ஏதோ பரிமாறப் பட்டதாகவும் வதந்திகள் பரவியிருந்தன. இலங்கையில் போர் முனையில் அப்பாவித் தமிழர்கள் உணவின்றி மருத்துவ வசதி இன்றித் தவித்த போது ஐக்கிய நாடுகள் சபை கைகட்டி வாய்பொத்து நின்றது. இலங்கைக்கு சென்று போர் நிறுத்தம் பற்றி பேச்சு வார்த்தை நடத்தும் படி பான்கீமூனை வற்புறுத்தியபோது தட்டிக் கழித்து காலத்தை வீணாடித்தார் பான் கீ மூன். பின்னர்வில்லங்கமான வில்லனும் இலங்கை அரசின் படைத்துறை ஆலோகரான் சதீஷ் நம்பியாரின் சகோதரருமான விஜய் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பினார். விஜய் இலங்கை சென்று ஐநாவிற்கு அறிக்கை சமர்பிக்காமல் காலத்தை வீணடித்தார். இலங்கை தனது இனக் கொலைப் போரை தங்கு தடையின்றி முடித்தது.

போரில் சதி செய்த ஐநா இப்போது குடியரசுத் தலைவர் தேர்தலிலும் சதி செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அரசின் தேர்தல் ஆணையகம் தேர்தலைக் கண்காணிக்க ஐநாவின் கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்கும்படி கேட்டிருந்தது. இதற்கு இதுவரை பதிலளிக்காமல் கடத்திவந்த ஐநா அதிகாரிகள் இப்போது தாம் கண்காணிப்பாளர்களை அனுப்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதற்கு அவர்கள் காட்டும் நொண்டிச் சாட்டு:
  • we don't want to legitimize an election we have our doubts about. He added that the excuse the UN would give was that the request had come from Sri Lanka's electoral body, and not the Rajapaksa administration. At most, he said, the UN might send some informal representative of the Secretary General.
ஐநா இலங்கைத் தேர்தல் பற்றிச் சந்தேகம் கொண்டுள்ளதாம். அப்படிச் சந்தேகமுள்ள தேர்தலுக்கு தாம் கண்காணிப்பாளர்களை அனுப்பி அதைச் சட்டபூர்வமானதாக்க விரும்பவில்லையாம். கண்காணிப்பாளர்களுக்கான வேண்டுதல் ராஜபக்சவிடம் இருந்து வரவில்லையாம். தேர்தல் ஆணையாளரிடம் இருந்து வந்ததாம். ஐநா சில அதிகாரபூர்வமற்ற பிரதிநிதிகளை அனுப்பக் கூடுமாம்.

Inner City Press மேற்படி தகவலை வழங்கியது. Daily Mirror வேறு விதமாகத் தெரிவிக்கிறது:
  • "In light of the limited lead time available" and because U.N. election observation requires a mandate from the General Assembly or Security Council, "the U.N. informed the commissioner and the government of Sri Lanka that it could not provide observers," Nesirky said.
ஐநா நேரம் போதாமையால் தேர்தல் கண்காணிப்பு வேலையில் ஈடுபட முடியாதாம்.

ஐநா தரப்பில் ஏன் இந்த முரண்பாடு?

இலங்கையில் அரசியல் இராணுவமயமாக்கப் பட்ட நிலையிலும் மோசமான மனித உரிமைமீறல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும் ஒரு நியாயமான தேர்தல் நடக்கும் என்பது பலத்த சந்தேகம். ஐரோப்பிய ஒன்றியமும் நியாயமான தேர்தல் நடத்தாவிடில் தனது ஜீஎஸ்பி+ வர்த்தகச் சலுகை கிடைக்காது என்று இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. இப்போது இலங்கை இருக்கும் நிலையில் சிறந்த ஒரு தேர்தல் கண்காணிப்புச் சேவை இலங்கையில் தேவை. இலங்கையில் ஒரு ஒழுங்கான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது ஐநாவின் கடமை. இதை உணர மறுத்து தேர்தல் முறைகேடாக நடக்கட்டும் என்று ஐநா விரும்புகிறதா? ராஜபக்ச முறைகேடாக தேர்தலை நடாத்தி வெற்றி பெறட்டும் என்று அவரது நண்பர் பான் கீ மூன் விரும்புகிறாரா?

Wednesday 6 January 2010

தமிழர்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும்? சரத்தையா மஹிந்தவையா?


என்னை இரண்டு காடையர்கள் பல குண்டர்களின் உதவியுடன் அடித்து வீழ்த்திவிட்டனர். இப்போது இரண்டு காடையர்களும் மோதிக் கொள்கின்றனர். அவர்களில் யாரை நான் ஆதரிப்பது என்பதல்ல கேள்வி. யார் காலை நான் வாரி வீழ்த்த வேண்டும் என்பதுதான் நான் யோசிக்க வேண்டியது. எவனுக்கு அதிக காயத்தை ஏற்படுத்த முடியும் என்பதைத்தான் நான் சிந்திக்க வேண்டும்.

சரத் பொன்சேக்கா இப்போது ஒரு ஓய்வு பெற்ற தளபதி. அவன் தோற்றாலும் ஒரு
ஒரு ஓய்வு பெற்ற தளபதி. மஹிந்த இபோது குடியரசுத் தலைவர். அவன் தோற்றால் செல்லாக்காசாவான். தமிழர்கள் மஹிந்தவைத் தோற்கடிப்பதால் அவனுக்கும் அவர் சகோதங்களுக்கும் பலத்த இழப்பை ஏற்படுத்த முடியும்.

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த ஜே ஆர் ஜயவர்த்தன, பிரேமதாசா, சந்திரிக்கா ஆகியோர் பதவில் இருக்கும் போது தமிழர்களுக்கு கொடுமைகள் செய்தனர். அவர்கள் பதவியில் இருந்து விலகிய பின் வந்தவர்கள் அவர்களிலும் மோசமான கொடுமைகளையே செய்தனர். சரத் மஹிந்த இவர்களில் யார் வென்றாலும் தமிழர்கள் மீதான் கொடுமை அதிகரிக்கும்.

தமிழர்களின் இப்போதைய தேவைகளில் முக்கியமானவை.

1. போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரணம்.
2. கைது செய்யப் பட்ட போராளிகளின் விடுதலை
3. போர் குற்றங்களை பகிரங்கப் படுத்துதல்.
3. தமிழினத் துரோகிகளை புறந்தள்ளுதல்.
4. தமிழ்த் தேசியப் போராட்டம் மீள ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கம்.


போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரணம்.
மஹிந்த அரசு சீனா, பாக்கிஸ்த்தான், இந்தியாவுடன் இணைந்து தனது அதிகாரத்தை தக்க வைக்க முயல்கிறது. இம்மூன்று நாடுகளும் தமிழர்களின் புனர்வாழ்வைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. இம் மூன்று நாடுகளும் தமிழர்களின் விரோதிகள். இவை தமது பிராந்திய நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளவை. மஹிந்த அரசு சகல வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மீதும் பலத்த கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. மஹிந்த வெற்றி பெற்றால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பெரிய அளவில் நிவாரணங்களை எதிர் பார்க்க முடியாது.

கைது செய்யப் பட்ட போராளிகளின் விடுதலை
கைது செய்யப் பட்ட போராளிகள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஹிந்த அரசு எதுவும் எதுவும் கூறவில்லை. சரத் சில வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளார்.

போர் குற்றங்களை பகிரங்கப் படுத்துதல்
மஹிந்த அரசு போர்க்குற்றம் எதுவும் இடம்பெறவில்லை என்று சாதித்து வருகிறது. சரத் பொன்சேக்காவும் போர்குற்றங்களைப் பகிரங்கப் படுத்த மாட்டார். எந்த ஒரு படைத்துறை அதிகாரியையும் காட்டிக் கொடுக்க மாட்டார். ஆனால் சரத் பசில் ராஜபக்சவை பழிவாங்க சில நடவடிக்கைகளை எடுப்பார்.

தமிழினத் துரோகிகளை புறந்தள்ளுதல்
தமிழினத் துரோகிகளான இந்தியாவும் அதன் கையாட்களும் கருணா பிள்ளையான் போன்றோரும் மஹிந்தவின் பின்னாலேயே நிற்கின்றனர். இவர்களை புறந்தள்ள மஹிந்த தோற்கடிக்கப் படவேண்டும்.

தமிழ்த் தேசியப் போராட்டம் மீள ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கம்.
தமிழ்த் தேசியப் போராட்டம் மீள ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கு இந்தியா கையில் வைத்துள்ள திட்டம் இலங்கையின் அரசியலமைப்பின் 13-ம் திருத்தச் சட்டத்தை அமூலாக்குதல். தமிழர்களால் ஏற்கனவே நிராகரிக்கப் பட்டதுதான் இந்த 13-ம் திருத்தம். இதில் உள்ள வடக்கு-கிழக்கு இணைப்பை மஹிந்த ஒருபோதும் நிறைவேற்றமாட்டார் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வடக்குக்கிழக்கை இணைக்காத 13-ம் திருத்தம் கிழக்கில் தமிழர்களை அடிமைகளாக்கிவிடும். இலங்கை வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் காணாமற் போதல், ஆள் கடத்தல், கப்பம் போன்றவை மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெறுகின்றன. அவன் வென்றால் அவை இன்னும் மோசமாகும். இன்னும் 10 தலைமுறைக்கு தமிழர்கள் உரிமைப் போர் தொடுக்காத வகையில் அவர்களை அடக்கி ஆளவேண்டும் என்று மஹிந்தவும் அவன் சகோதரர்களும் கங்கணம் கட்டி நிற்கின்றனர். சரத் தான் ஆட்சிக்கு வந்தால் மனித உரிமை மீறல்களை இல்லாதொழிப்பதாகவும் இலங்கை அரசமைப்பின் 17-ம் திருத்தத்தை அமூல்செய்வதாகவும் மேற்குலகிற்கு வாககளித்திருக்கிறார். மனித உரிமை சரியாகச் செயற்படும் சூழலில்தான் தமிழர்கள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.

இந்தியாவைப் பழிவாங்கத் துடிக்கும் தமிழர்கள்.
நேற்றைய தினம் இலண்டனில் இருது ஒளிபரப்பாகும் ஐபிசி வானொலியில் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு தொலை பேசியில் பதில் அளித்த அனைவரும் மஹிந்தவிற்கு எதிராகவே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்றனர். இதில் கவனிக்கத் தக்க வேண்டிய ஒரு விடயம் இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைப் பழிவாங்க அது ஆதரிக்கும் மஹிந்தவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் துரோகத்தை மறக்கவோ மன்னிக்கவே மாட்டோம்.
இதைச் சொல்பவர் மலேசியப் பேராசிரியர் இராமசாமி அவர்கள். தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டான். இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்”, என்றார் இராமசாமி.

இந்தியா இலங்கையில் மீண்டும் ஒரு முறை மூக்குடைபடுமா?

Tuesday 5 January 2010

தேர்தலில் காவற்துறையும் தாவற்துறையும்.


காவற்துறை
இலங்கயின் தேர்தலில் காவற்துறை முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது. இம்முறை பல தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிப்பார்கள். அவர்களின் வாக்குகள் முறை கேடாக பாவிக்கப் படாமல இருக்க காவற்துறை சரியான முறையில் பங்காற்ற வேண்டும். ஆனால் காவற்துறைக்குள் ஒரு அதிகார்பூர்வ கடிதம் ஒன்று பரவ விடப் பட்டுள்ளது. அதில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும்படி தெரிவிக்கப் பட்டுள்ளது.

தாவற்துறை
இலங்கையில் தேர்தலுக்கு முன் பல தாவல்கள் நடக்கும். முதல் தாவல் சரத் பொன்சேக்காவால் மேற்கொள்ளப் பட்டது. பாதுகாப்புத்துறையில் இருந்து அரசியலுக்கு ஒரு தாவல். சரத் யூஎன்பி கட்சியுடன் இணந்ததால். அவர் குடியரசுத் தலைவர் ரணில் விக்கிர்மசிங்க பிரதம மந்திரி என்று ஆனவுடன் ரணில் குடியரசுத் தலைவர் தான் பிரதம மந்திரி என்று நம்பியிருந்த எஸ். பி திசாநாயக்க மஹிந்த அணிக்குத் தாவினார்.

சிவாஜிலிங்கமும் தன் பங்குக்கு ஒரு தாவல் தாவினார். தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு அறிவிப்புச் செய்தார். அதற்கு முன் ஐரோப்பிய நாடுகளில் அங்குள்ள தமிழ் அமைப்புக்களின் அனுசரணையுடன் அங்கு தங்கியிருந்தவர் ஐரோப்பாவில் இருந்து வெளிக்கிடும் போது சும்மா வெளிக்கிடவில்லை. ஐரோப்பாவில் உள்ள தமிழர்களிடையே நடக்கும் போட்டியைப் பார்க்கும் போது தனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கிறது. ஐரோப்பாவில் இருப்பதிலும் பார்க்க சிங்களவனின் சிறையில் இருக்கலாம். நான் அங்கு போகிறேன் என்று ஒரு தாவல் தாவினார்.

இந்தியாவின் வேண்டுதலின் பெயரால் மலையகக் கட்சிகளான தோட்டத் தொழிலாளர் காங்கிரசும் மலையக் ஐக்கிய முன்னணியும் மஹிந்தவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கின. தோட்டத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து இருவர் சரத் அணிக்குத் தாவினர்.

கருணா - பிள்ளையான் அணியில் இருந்து பலர் சரத் அணிக்குத் தாவுவதற்குத் தயாராக இருக்கிறார்க்ள். தாம் காணமல் போய்விடுவோமா என்ற அச்சத்தால் தயங்குகிறார்களாம்.

இப்போது ஸ்வர்ணமாலி எனும் சிங்கள நடிகை ஒருவர் சரத் அணிக்கு தாவியுள்ளார்.

இந்தியத் தாவல்
தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்தும் படி பலநாடுகள் அழுத்தம் கொடுத்தபோது அதை இந்தியாவின் உதவியுடன் எதிர் கொண்டு நாம் போரை முன்னெடுத்தோம் என்று சென்றமாதம் அறிவித்த இலங்கை அரசு நேற்று இன்னொரு தாவலைச் செய்துள்ளது. போரை நிறுத்தும் படி இந்தியா பலத்த அழுத்தும் கொடுத்ததாம் அதை தமது அரச தந்திர நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை ஏமாற்றி போரைத் தொடர்ந்தாதாக இலங்கை அரசு இப்போது கூறுகிறது.
இன்னும் பல தாவல்களுக்கு இடமுண்டு.

Monday 4 January 2010

சரத்துக்கு கூட்டமைப்பின் ஆதரவின் பின்னணி என்ன? பின் விளைவுகள் எவை?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடக்கவிருக்கும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பொன்சேக்காவை ஆதரிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சரத் பொன்சேக்காவின் பின்னால் மேற்கு நாடுகளும் மஹிந்தவின் பின்னால் இந்தியாவும் நிற்கின்றன. சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதாக அவர்கள் எடுத்த முடிவின் பின்னணிகள் என்னவாக இருக்கும்?
  • மஹிந்த இதுவரை காலமும் ததேகூ ஐ மதித்து நடக்கவில்லை. சர்வகட்சி மாநாட்ட்டிற்குக் கூட அழைக்கவில்லை.
  • ததேகூ இப்போது தமது பாதுகாபபிற்குவெளிநாடு ஒன்றில் இருந்து உத்தரவாதம் பெற்றுக் கொண்டே செயற்படுகின்றனர். அந்த வெளிநாடுகளின் வேண்டுகோள் சரத் சார்பானதாக இருக்கலாம்.
  • இபோது தமிழர்கள் நாடுகடந்த அரசு அமைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மேற்குலக நாடுகளின் வெறுப்பை சம்பாதிக்க முடியாது. மேற்குலகு சார்பான வேட்பாளரையே அவர்களால் ஆதரிக்க முடியும்.
  • இந்தியா ததேகூ அமைப்பை மஹிந்த ராஜபக்ச போலவே மதித்து நடக்கவில்லை. போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் இந்தியா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்திக்காமல் தட்டிக் கழித்தார். அதனால் அவர்கள் இந்தியாவை வெறுக்கிறார்கள்.
  • சகல தமிழர்களும் தங்கள் முதலாம் எதிரி இந்தியா என்பதை இப்போது உணர்ந்துவிட்டனர். இந்திய சார்பு வேட்பாளரை தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
  • ததேகூ தொடந்தும் அரசியலில் ஈடுபட ஆயுதக் குழுக்களிடமிருந்து பாதுகாப்பு அவர்களுக்குத் தேவை. அதற்காக அவர்களுக்கு ஒரு சிங்களக் கட்சியின் ஆதரவு அவசியம்.
  • இம்முறையும் தேர்தலைப் புறக்கணிக்கும் படி அவர்கள் மக்களை கேட்க முடியாது.
  • சரத் பொன்சேக்கா வழங்கிய வாக்குறுதிகள் மஹிந்த வழங்கிய வாக்குறுதிகளிலும் சிறந்தவையாக இருக்கலாம்.
  • இரு பிரதான வேட்பாளர்களில் மஹிந்தவின் பின்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் எதிரிகளான டக்ளஸ், கருணா பிள்ளையான் போன்றோர்கள் நிற்கின்றார்கள் அவர்களோடு ஓரணியில் ததேகூ வால் நிற்க முடியாது.

சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதன் பின் விளைவுகள் எவை?

  • மஹிந்த தரப்பினர் சரத் புலிகளுடனும் வெளிநாட்டு சக்திகளுடனும் இணைந்து நாட்டுக்கு எதிராக சதி செய்கிறார் என்று பிரச்சாரம் செய்வர்.
  • மஹிந்தவுடன இணைந்துள்ள சிங்கள இனவாதிகள் சரத் தமிழர்களுடன இணைந்து விட்டார் என்று பிரச்சாரம் செய்வர். 1965இல் டட்லி சேனநாயக்கா தந்தை செல்வநாயகத்துடன் இணைந்த போது டட்லியில் நல்லெண்ணை மணக்கிறது என்று இடது சாரிகள் முழங்கினர்.
  • தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம். தமிழ் ஒட்டுக் குழுக்கள் அவர்களைத் தாக்கலாம். கொலைகூடச் செய்யலாம்.
  • தமிழ்த் தேசிய விரோதிகளும் துரோகிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலை போய்விட்டது என்றும் கொலையாளி சரத்திற்கு ஆதரவு வழங்குகிறது என்றும் குற்றம் சாட்டலாம்.
  • கோபாலபுரத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைபின் முடிவை எதிர்த்து ஒரு அறிக்கை வெளிவரலாம்.
  • தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
மற்றைய பதிவுகள்:
கூத்தமைப்பு
தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க முயலும் கூட்டமைப்பு

கூத்தாடும் கூட்டமைப்பு



இலங்கையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களும் ஒரு அம்சத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதாவது தமிழர்களுக்கு எந்த வாக்குறுதிகளையும் தருவதில்லை. வாக்குறுதிகூடத் தர மறுக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் என்ன பயன்?
இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் வாக்களிப்பதால் எந்த பயனும் தமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உலகிற்கு காட்ட வாக்களிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இந்த உண்மையை உணரவில்லை.

2001-ம் ஆண்டு பல தமிழ் அரசியல் கட்சிகளையும் முன்னாள் போராளிக் குழுக்களையும் கொண்டு உருவாக்கப் பட்டது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
இதில் பழைய தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவறுடன் ஈழ மக்கள் விடுதலை முன்னணி (சுரேஸ் அணி) தமிழீழ விடுதலைக் கழகம் ஆகியன உள்ளடங்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முக்கிய மூன்று அம்சங்களைக் கொண்டது: தமிழர்களின் 1. தாயகம், 2. தேசியம், 3. தன்னாட்சி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் பிரபலமடையக் காரணம் இந்த மூன்று கொள்கைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்களது ஒரே பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டமையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001-ம் ஆண்டு பாராளமனறத் தேர்தலில் 348,164 வாக்குக்களையும் 2004-ம் ஆண்டு பாராளமனறத் தேர்தலில் 633,654 வாக்குக்களையும் பெற்றது.

இன்னும் சில வாரங்களில் நடக்க விருக்கும் இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வாக்கு வங்கியை சரியாகப் பயன் படுத்தாமல் கூத்தாடுகிறது கூட்டமைப்பு.

தமிழ் காங்கிரஸ் கட்சி தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மான எடுத்தது. சிவாஜிலிங்கம் தனித்துப் போட்டியிடுகிறார். அவரது சகாக்கள் அவர் மஹிந்த ராஜபக்சவை வெற்றியடையச் செய்வதற்காக பணம் வங்கிக்கொண்டு போட்டியிடுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

கூட்டமைப்புக்குள் ஒரு கூட்டமைப்பு
இராசவரோதயன் சம்பந்தன், மாவை சேனதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவரும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிச் செயற்படுகின்றனர். மூவராவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று பெருமையடைவோமாக.

மீன்பிடித் தடை வேலை செய்யாது.
யாழ் மாநகர சபைத் தேர்தலில் தமக்கு வாககளிக்காவிட்டால் உங்களை மீன்பிடிக்க விடமாட்டோம் என்று மிரட்டி வாக்குக் கேட்டதாக தகவல். குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த மாதிரி எல்லாம் செய்ய முடியாது. சிலரை பதவி ஆசை காட்டி தமது வழிக்குக் கொண்டு வருவதை பிரதான வேட்பாளர்கள் கையாள்கிறார்கள். அத்துடன் தமிழ் மக்களைக்கு என்று இருந்த தடைகளில் சிலவற்றை நீக்கப்பட்டுள்ளது மஹிந்த அரசினால். இவை வாக்களிக்கும் தீர்மானத்தைப் பாதிக்குமா?

வாக்குறுதி வழங்குவதில்லை என்ற உறுதி.
இரு பிரதான வேட்பாளர்களான சரத்தும் மஹிந்தவும் ஒரு விடயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்: தமிழ் மக்களுக்கு என்று எந்த வாக்குறுதியும் வழங்குவதில்லை. ஒரு தரப்பு ஏதாவது வாக்குதி வழங்கினால் மற்றத்தரப்பு அதையே தனதுஆயுதமாகப் பயன் படுத்தும்.

வாக்குறுதிகூடத் தர மறுக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் என்ன பயன்?
இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் வாக்களிப்பதால் எந்த பயனும் தமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உலகிற்கு காட்ட வாக்களிக்க வேண்டும்.
=======================================

Sunday 3 January 2010

சண்டே லீடர் மீண்டும் கிளறும் போர்குற்றம்.




சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பிரிவினர்களைச் சுட்டுக் கொன்ற விடயத்தை மீண்டும் சண்டே லீடர் பத்திரிகை கையில் எடுத்துள்ளது.

He (Sarath Fonseka) claimed he had heard that Gotabaya Rajapaksa ordered any surrendering LTTE cadres to be shot, and related the story of Pulidevan and Nadesan’s surrender.

கோத்தபாய ராஜபக்சே சரணடையவரும் விடுதலைப் புலிகளைச் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டதாக தாம் கேள்விப்பட்டதாக தெரிவித்தார்.

ஒருவர் கேள்விப்பட்டதை மட்டும் வைத்துக்கொண்டு போர் குற்றம் சுமத்த முடியுமா என்ற கேள்வி நியாயமானதே.

ஆனால் சண்டே லீடர் பத்திரிகை அத்துடன் நிறுத்தவில்லை. சரத் பொன்சேக்கா சொன்னதை பிரிசுரிக்கமுன் அது பல படைத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டது.

As the accusation; the massacre of surrendering cadres and their families was extremely serious, I contacted all of those implicated in the General’s denunciation.

When I spoke with General Shavendra Silva he said he could not comment without permission to do so. I then spoke with Brigadier Udaya Nanayakkara who later got back to me saying he had discussed the matter with the current Army Commander Jagath Jayasuriya as well as General Shavendra Silva and collectively taken a decision that they would not issue any comment.

ஜெனரல் ஷவெந்திர சில்வா அவர்களை முதலில் சண்டே லீடர் தொடர்பு கொண்டபோது அவர் அனுமதியில்லாமல் அதுபற்றிக் கருத்துரைக்க மறுத்தார்.

படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காராவைத் தொடர்பு கொண்டபோது அவர் படைத் துறைத் தளபதி ஜெகத் ஜயசூரியாவுடனும் ஜெனரல் ஷவெந்திர சில்வாவுடனும் கலந்துரையாடியபின் தாம் மூவரும் இணைந்து இது தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.

When I spoke with Basil Rajapaksa he denied that Norway had got in touch with him regarding this issue. Rajapaksa however did not deny knowledge of the incident. I tried contacting Gotabaya Rajapaksa but was told he had not come into his office on that day, December 11, 2009. I left a message with his office but Gotabaya Rajapaksa holds a personal grudge against this newspaper and refuses to speak to the Leader.

பசில் ராஜபக்சேயுடன் தொடர்பு கொண்டபோது தன்னுடன் நோர்வே இவ்விடயம்(சரணடைதல்) சம்பந்தமாக தொடர்பு கொள்ளவில்லை என்று மறுத்தார். இருந்தும் பசில் சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கவில்லை.

கோத்தபாய ராஜபக்சாவிடம் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

Realising the impact such striking allegations would have, at 9.45 a.m. before the paper went to print on Saturday I once gain contacted Sarath Fonseka.

During a twenty minute phone conversation the General reiterated that he stood by the allegation. At that point I asked him who the journalist was who had told him about the supposedly illegal order given by Gotabaya Rajapaksa to Shavendra Silva. Fonseka gave me the journalist’s name but asked that I not name him “for reasons for his own personal security.” A request I obliged.

சரத் பொன்சேக்காவின் குற்றச் சாட்டுக்களை (சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றமை) பிரசுரிக்கமுன் சண்டே லீடர் மீண்டும் ஒரு முறை அவரை தொடர்பு கொண்ட போது தனது குற்றச் சாட்டை அவர் மீண்டும் உறுதி செய்தார்.


  • சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றதை சரத் பொன்சேக்கா அம்பலப் படுத்திய போது எந்த ஒரு படைத் துறை அதிகாரியும் அதை மறுக்கவில்லை.
  • கோத்தபாய ராஜபக்சே அதை முதலில் ஒரு காட்டிக் கொடுப்பாகவே வர்ணித்தார்.
  • நிலைமை உலகரீதியில் அடிபடத் தொடங்கிய பின்னரே இலங்கை அரசு தரப்பு சரத் பொன்சேகா கூறியது ஆதாரமற்றது என்றனர்.
சண்டே லீடர் இதை மீண்டும் பிரசுரித்த வேளை இனக்கொலைக்கு எதிரான தமிழர் நடவடிக்கைக் குழு இலங்கை இராணுவத்தினரின் போர்குற்றம் தொடர்பான செய்மதிப் படங்களை சர்வ தேச நீதி மன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சர்வ தேச நீதி மன்றம என்ன செய்யும்.
சர்வ தேச நீதிமன்றில் இலங்கை ஒரு அங்கத்தவர் அல்ல என்பதால் நேரடி வழக்கு சாத்தியமல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக வழக்குத் தாக்குதல் செய்வதை சீனா அல்லது இரசியா இரத்து அதிகார்த்தைப் பாவித்து தடை செய்யும். சர்வ தேச நீதி மன்றின் வழக்குத் தொடுநர் தனது அதிகாரத்தைப் பாவித்து இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது வழக்குத் தொடுத்து தண்டிக்கலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...