Tuesday 21 December 2010

வித்தியாசமான இடத்தில் மடோனா செய்த யோகாசனம் தலைப்புச் செய்தியாகியது


திருமூலரும் பதஞ்சலி முனிவரும் செய்த யோகா கலை உலகெங்கும் பரவியுள்ளது. உலகெங்கும் பலரும் இதைச் செய்கிறார்க்ள். இலங்கையில் அரச படைத்துறையினருக்கு இப்போது யோகா பயிற்ச்சி வழங்கப்படுகிறது. செய்த அநியாயங்களினால ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து நீங்குவதற்காகவா?

உலகெங்கும் பரவியுள்ள யோகா கலையை எந்தப் பிரமுகராவது செய்தால் அது தலைப்புச் செய்தியாகாது. ஆனால் செய்த இடம் வித்தியாசமானதாக இருந்தால் அது தலைப்புச் செய்தியாகும்.

யோகாசனத்தில் அமர்ந்தவர் பிரபல பாப் பாடகி மடோனா. யோகாசனம் செய்த இடம் ஒரு விமானம். நியூயோர்க்கில் இருந்து வந்த விமானம் இலண்டன் ஸ்ரான்ஸ்ரெட் விமான நிலையத்தில் சில மணித்தியாலங்கள் தரித்து நிற்க வேண்டி ஏற்பட்டது. அதில் ஒரு பயணியான மடோனா திடீரென்று நடைபாதையில் யோகாசனத்தில் அமர்ந்து விட்டார். மடோனாவை யோகாசனத்தில் பார்த்த மற்றப் பயணிகளுக்கும் நல்ல மகிழ்ச்சியாம். ஒரு பயணி காத்திருந்தால் பயன் உண்டு என்றாராம். விமானப் பயணத்திற்கு கொடுத்த கட்டணத்திற்கு கைமேல் பயன் என்றாராம் இன்னோரு பயணி. இன்று பல பத்திரிகைகளில் மடோனா யோகா செய்தது தலைப்புச் செய்தியாகிவிட்டது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...