Thursday 18 November 2010

அட்டூழியம்: சவுதி 24 - குவைத் 14



திருமால் அவதாரங்கள் எடுத்தாராம்
தேவன் குமாரனை அனுப்பினாராம்
அல்லா தூதுவர்களை அனுப்பினாராம்
ஒரு நாளில் வன்னியில் இருபதினாயிரம் கொலைகள்
சவுதியில் ஆரியவதி உடலில்
இருபத்திநாலு ஆணிகள் அறையப்பட்டன.
குவைத்தில் லெட்சுமியின் உடலில்
பதினாங்கு ஆணிகள் அறையப்பட்டன
திரும்பிவந்தால் மனைவியை
கடத்தி இலங்கைக்குக்
கொண்டு செல்வர் என்ற பயமா
மீண்டும் சிலுவையில்
அறையப்படலாம் என்ற பயமா
ஊர்விட்டு ஓடோடிப்போக
வேண்டுமென்ற பயமா

1 comment:

Anonymous said...

அல்லாவும் திருமாலும் ஏசுவும் ஆணி அடிக்கப்படுவார்கள். ஒருவர் மீது ஏற்கனவே அடிக்கப்பட்டது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...