Tuesday 26 October 2010

சாட்சியில்லாத பிரபாகரனின் இறப்பு. பின்னணியில் என்ன?





2010 ஜனவரி 31-ம் திகதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் தமக்குக் கிடைக்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வுத் துறை அறிவித்தது. அதுவும் சும்மா அறிவிக்கவில்லை தகவலறியும் சட்டத்தின் கீழ் வற்புறுத்திக் கேட்டதன் பேரில் அறிவித்தது. இந்த இரகசியம் வெளிவந்ததால் சிங்கள் அரசிற்கு சங்கடமான நிலை ஏற்படும் என்று கவலைப் பட்ட சிவகங்கைத் தொகுதியில் ஏதோ செய்து வெற்றி பெற்ற சிதம்பரம் அண்ணாச்சி ஒரு அறிக்கை வெளியிட்டார். ராஜபக்சேக்கள் என்னும் எஜமானிகளின்மீதான எஜமான விசுவாசம் அவரை இப்படி ஒருஅறிகை விடத் தூண்டியதா என்ற சந்தேகம் கூட எழலாம். அவர் விட்ட அறிக்கை தொடர்பாக வந்த செய்தி:
  • India’s Union Home Minister P, Chidambaram said that India’s Central Bureau of Investigation (CBI) has received the 'documentation' from Sri Lanka confirming the death of LTTE Chief Vellupillai Prabhakaran.
  • Speaking to reporters today, Chidambaram said, "The CBI has told me that they received documentation from the Government of Sri Lanka confirming the death of Prabhakaran."

பிரபாகரன் இறந்தது தொடர்பான பத்திரங்கள் இந்திய மத்திய புலனாய்வுத் துறைக்குக் கிடைத்ததாக சிதம்பரம் தெரிவித்தார். அது என்ன பத்திரம் என்பது சிதம்பர இரகசியம். சிதம்பரத்தின் கூற்றில் "Death Certificate" என்ற பதம் பாவிக்கப் படவில்லை. சிதம்பரத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இலங்கை ஊடகங்கள் இறப்புச் சான்றிதழ் கிடைத்ததாக சிதம்பரம் தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டன. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களும் இப்படி அறிவித்தன:
  • இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சிபிஐ (CBI) க்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மரணச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை மரணச் சான்றிதழ் என்பது இலங்கை பதிவாளர் திணைகளத்தில் ஒருவரின் இறப்பைப் பதிவு செய்து அத்திணைக்களம் வழங்கும் பத்திரமே இறப்புச் சான்றிதழ். பிரபாகரனின் இறப்பு இதுவரை இலங்கை பதிவாளர் திணைகளத்தில் பதிவு செய்யப் பட்டதாகத் தகவல் இல்லை. லக்ஷ்மண் கதிர்காமர் கொலைவழக்கில் பிரபாகரனுடையதோ அல்லது பொட்டு அம்மானுடையதோ இறப்புச் சான்றிதழ் சமர்கபிக்கப் படவில்லை. பிரதி சட்டமா அதிபர் ஒரு அறிக்கை மட்டுமே சமர்ப்பித்தார். சிவகங்கைத் தொகுதித் தில்லுமுல்லு சிதம்பரமும் பிரபாகரனுடையதோ அல்லது பொட்டு அம்மானுடையதோ இறப்புச் சான்றிதழ்இந்தியாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டதாகக் கூறவுமில்லை. சிதம்பரம் ஐயா இப்படிச் சொன்ன பின்னரும் இந்திய நீதிமன்றில் பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் எதிரான வழக்கு நிலுவையில் இருந்தது. இந்திய உளவுத் துறை இலங்கையில் இருந்து பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்தமைக்கான நம்பகரமான சாட்சியங்கள் கிடைக்கப் பெறவில்லை என்று அறிவித்தது.

ஏற்கனவே இருமுறை பிரபாகரன் இறந்தபோதும் மரணச் சான்றிதழ்கள் வழங்கப் படவில்லை ஆனால் பகிரங்க அறிவிப்புகள் வெளியிடப் பட்டன.

இப்போது இந்திய உளவுத்துறை திடீரென பிரபாகரன் இறந்து விட்டதாகக் கூறுகிறது. இதற்கு அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை வழக்கில் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்தமையை இலங்கை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது ஒரு சாட்சியாக இப்போது இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் இலங்கையில் இருந்து இறப்புச் சான்றிதழ் கிடைக்காமலேயே இந்திய உளவுத்துறை ஏன் இப்படிச் சொல்கிறது? ஏன் இறப்புச் சான்றிதழை இலங்கை பதிவு செய்யவில்லை என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

இலங்கை அரசை சங்கடங்களில் இருந்து பாதுகாக்கவா இந்திய உளவுத் துறை இப்படிச் சொல்கிறது. இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு சங்கடமான நிலையிலேயே இருக்கிறது என்பது அண்மையில் இந்தியாவில் நடந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டும் போட்டிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சிறப்பு விருந்தினராக அழைத்தது. பின்னர் அவருடன் இந்தியப் பிரதமர் பாராமுகமாக நடந்து கொண்டார் என சில செய்திகள் வெளிவந்தன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு வர முன்னர் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் சீனா செல்லவிருக்கிறார். இதற்காகத்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கைப் பயணம் தள்ளிப் போடப்பட்டதா? அது மட்டுமா பாக்கிஸ்த்தானிய அதிபர் இலங்கைக்கு வரவிருக்கிறார். பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு பற்றியும் அவர் பேச விருக்கிறார். இலங்கை இந்தியாவிற்கு அடங்க மறுக்கிறதா என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்துகின்றன. இதற்கு இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் தேவைப் படுகின்றார்களா? அதற்கு முன்னோடியாக பிரபாகரன் இறந்து விட்டார் என்று அறிவித்து விடுதலைப் புலிகள் மீதான தடைய நீக்கிவிட்டோ அல்லது நீக்காமலோ மீண்டும் தமிழர்களை ஆயுத மயமாக்கி அவர்கள் முதுகில் இந்தியா சவாரி செய்து விட்டு மீண்டும் உதைத்துத் தள்ளுமா?

2 comments:

YOGA.S.Fr said...

இந்தியாவின் திருகு தாளங்கள் இனி மேலும் ஈழத்தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படாது!உண்மையில் தலைவர் விடயத்தில் எந்த ஒரு"விசுவாசியையும்"நம்ப சிங்களப் பேரினவாதம் தயாராக இல்லை!தலைவரை சமீப காலங்களில் பார்த்தோர்,பேசியோர் வன்னி மக்களே!அவர்கள் "அவர்" சம்பந்தமாக எதையுமே சொல்ல மாட்டார்கள்!சொல்லப் போவதுமில்லை!தலைவர் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசால் உறுதி செய்யப்படுமாயின்,அழிக்கப்பட்ட?ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவரும் இல்லை,போராளிகளும் இல்லையென்றான பின்,விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமென்று தடை செய்த நாடுகள் அத்தனையும்,இந்தியா அடங்கலாக தடையை நீட்டிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது!எதற்காகவோ,அல்லது எவரையோ திருப்திப்படுத்துவதற்காகவே இந்தியா இவ்வாறு அறிவித்திருக்கலாம்!இப்போது வி.பு.கள் மீதான தடை குறித்து வாதப்பிரதிவாதங்கள் இந்தியாவில் சூடு பிடித்துள்ளன!இந்தியாவில் வி.பு.கள் மீதான தடையை நீக்கி ஒரு செய்தியை இலங்கைக்குச் சொல்ல இந்தியா முற்படுகிறது போல் தெரிகிறது!சட்டபூர்வமான இறப்புச் சான்றிதழ் இன்றி ஒருவரை,ஒரு கொலை வழக்கிலிருந்து விடுவிப்பது இதுவே முதல் தடவையாகவிருக்கும்!கடைசியாகவுமிருக்கலாம்!!!!!

முல்லை அமுதன் said...

very soon our tamils get eezham.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...