Saturday 23 October 2010

பெண்ணே நீயும் ஒரு தெய்வமடி




மேலான பகைவன்
நண்பன் வேண்டியவன்
பகைவன் நண்பனிலும் மேலானவன்
கடன் கேட்க மாட்டான்

பட்டது போதும்
இராமனைப் போல்
எனக்கும் ஒருதாரம்
ஒன்றுடன் பட்டது போதும்

நீயும் தெய்வம் போலே
காணிக்கை செலுத்துவதால் பிரசாதம் தருதலால்
வேண்டுதல் சொல்லுதலால் பூவைத்துப் பார்த்தலால்
மணியடித்தலால் ஆறுகாலப் பூசை செய்வதால்
பெண்ணே நீயும் ஒரு தெய்வமடி

1 comment:

Anonymous said...

களமேகத்தின் கவிதையை நினைவு படுத்துகிறது.
கட்டித் தழுவுவதால் கால் சேர ஏறுவதால்
எட்டிப்பன்னாடை இழுத்தலால்
முட்டி வாய்க்கள்ளை அருந்துவதால்
பாரப்பனையையும் வேசை எனலாமே விரைந்து.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...