Thursday 21 October 2010

Currency War: நாணயமற்ற நாடுகளின் நாணயப் போர்.


நாணயப் போர் என்றால் என்ன?
ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணய்ப் போர் உருவாகிறது.

ஒரு பிரித்தானியப் பவுண்டின் பெறுமதி இந்திய ரூபாவிற்கு எதிராக £1=Rs75 என்று இருக்கையில் இந்தியாவில் 15000ரூபா பெறுமதியான ஒரு சேலையை பிரித்தானியாவில் இருநூறு பவுண்களுக்கு வாங்க முடியும். ரூபாவின் பெறுமதி £1=Rs100 என்று விழ்ச்சியடைந்தால் அச்சேலையின் விலை நூற்றைம்பது பவுண்களாகும். இதனால் பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களும் இலங்கையர்களும் அதிக சேலைகளை வாங்குவர். இது இந்தியச் சேலை உற்பத்தியை அதிகரிக்கும். இப்படிப் பல இந்தியப் பொருட்கள் பிரித்தானியாவில் அதிகம் விற்கப்பட இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும். இப்பின்னணியிலேயே நாடுகள் தமது நாணயப் பெறுமதியை குறைந்த மதிப்பில் வைத்திருக்க முயல்கின்றன.

சர்வ தேச நாணயத்தின் (IMF)நிர்வாக இயக்குனர் டொமினிக் ஸ்ரௌஸ் கான் அண்மையில் இப்படிக் கூறினார்: There is clearly the idea beginning to circulate that currencies can be used as a policy weapon. Translated into action, such an idea would represent a very serious risk to the global recovery... Any such approach would have a negative and very damaging longer-run impact

ஜப்பான் தனது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தையும் உதவிகளையும் செய்து உலகெங்கும் தனது உற்பத்திப் பொருள்களை சந்தைப் படுத்தியதால் அதன் நணயத்தின் பெறுமதியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் 1980களில் வலியுறுத்தின. 1985இல் ஜப்பான் தனது யென் நாணயத்தின் பெறுமதியை அதிகரிக்க இணங்கியது. அமெரிக்க டொலருக்கு எதிராக ஜப்பானிய யென் மூன்றுபங்கு பெறுமதி வளர்ச்சியடைந்தது. இதனால் தென் கொரியாவும் சீனாவும் தமது நாணயங்களின் பெறுமதியக் குறைவாக வைத்துக் கொண்டு தமது ஏற்றுமதிகளை பெருமளவு அதிகரித்தது. இதன் விளைவு சீனாவின் அந்நியச் செலவாணிக் கையிருப்பு அபரிமித நிலையை அடைந்தது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியை அதிகரிக்க மறுத்து வருகின்றது.

சீன வட்டி வீத அதிகரிப்பு
இந்த மாதம் 19-ம் திகதி சீனா தனது வட்டிவீதத்தை மூன்று வருடங்களின் பின் அரை வீதம் அதிகரித்தது. சீனாவின் இந்த நடவடிக்கை சீனா ஒரு நாணயப் போருக்கு நவம்பர் மாதம் நடக்க்க விருக்கும் ஜீ-20 நாடுகளின் மாநாட்டுக்கு முன்னதாகத் தயார்படுத்திக் கொள்வதாக கருதப் படுகிறது. சீனாவின் வட்டிவீத அதிகரிப்பால் சீன மக்களின் கொள்வனவுத் திறன் பாதிக்கப்பட்டு சீனா பிறநாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதியைக் குறைக்கும். இது மற்றநாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். மாறாக சீனா தனது பணவீக்கத்தையும் அதிகரித்து வரும் கட்டிட விலைகளையும் கட்டுப்படுத முடியும்.

கலங்கி நிற்கும் ஜேர்மனி
சீனாவிற்கு அடுத்தபடியாக உலக ஏற்றுமதியில் இரண்டாம் நிலை வகிக்கும் ஜேர்மனி யூரோ நாணயத்திற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி தனது ஏற்றுமதியையும் பொருளாதரத்தையும் பாதிக்கிறது என்று கலங்கி நிற்கிறது.
நாணய வர்த்தக முதலைகள்
சில நாணய வர்த்தகர்கள் உலகப் பொருளாதார உற்பத்திக்கு எந்தப் பங்களிப்பும் செய்யாமல் பெரும் செல்வம் ஈட்டியுள்ளனர். இவர்களின் வருமானம் மைக்ரோசொfரின் வருமானத்தைவிடப் பலமடங்காகும். ஒரு நாட்டின நாணயத்தை எப்போது வாங்கி எப்போது விற்க வேண்டும் என்ற சூட்சுமத்தை இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். ஒரு நாட்டுக்கு அந்நியக் கடன் தேவைப் படும்போது இவை கடனாகக் கொடுத்து பின்னர் அந்த நாட்டு நாணயத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க இவர்களால் முடியும். ஒரு யூதக் கும்பல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சீனப் பொருளியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். Rothschild Family ஐ சீனப் பொருளியலாளர்கள் இதற்கு உதாரணம் காட்டுகின்றனர். இவர்களின் சொத்து 5 trillion dollars ஆம், இதேவேளை பில் கேட்ஸின் சொத்து 40 billion dollars மட்டுமே.

சென்ற வாரம் வந்த செய்திக் குறிப்பு இப்படிக் கூறுகிறது:
The war of words over international currency valuations escalated yesterday when the Chinese premier Wen Jiabao told the European Union to stop pressuring Beijing to revalue the yuan as any rapid shift risked unleashing serious social unrest in China.
Speaking in Brussels, Wen said that China would move towards making its currency more flexible but he rejected calls for a rapid appreciation as the issue threatened to dominate this weekend's meeting of the International Monetary Fund and G7 countries in Washington.
"Do not work to pressurise us on the renminbi [yuan] rate," Wen said, departing from a prepared speech on the sidelines of a summit with EU leaders. "Yes, we are going to proceed with the reforms.

சீனாவிடம் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான அந்நியச் செலவாணிக் கையிருப்பைக் கொண்டு அதனால் மற்ற நாட்டு நாணயங்களை வாங்குவதன் மூலமும் விற்பதன் மூலமும் அந்நாட்டு நாணயத்தின் பெறுமதியை தான் விரும்பிய நிலையில் வைத்து கொள்ள முடியும்.
இன்னொரு செய்திக் குறிப்பு இப்படிக் கூறுகிறது:

Mr Soros (ஒரு நாணய வர்த்தகர்) told BBC Radio 4’s Today programme that China had a “huge advantage” over international competitors because it can control the value of its currency. He said China could also influence the value of other world currencies because they have a “chronic trade surplus”, which means the Chinese have a lot of foreign currencies. “They control not only their own currency but actually the entire global currency system,” he said.
Writing in the Financial Times, Mr Soros added: “Whether it realizes it or not, China has emerged as a leader of the world. If it fails to live up to the responsibilities of leadership, the global currency system is liable to break down and take the g

நாணயத்தின் பெறுமதியை குறைத்து வைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் கைங்கரியத்தை இப்போது பல நாடுகள் செய்கின்றன. அதில் இந்தியாவும் பிரேசிலும் முன்னிற்கின்றன. சீனா தனது நாணயப் பெறுமதியை அதிகரித்தால் அதனால் பெரும் பயனடையப் போவது இந்தியா என்பதை சீன உணர்ந்துள்ளது. அந்நியச் செலவாணிக் கையிருப்பின் முதலாம் இடத்தில் இருக்கும் சினா 159 இடத்தில் இருக்கும் இந்தியாவின் கண்களுக்குள் விரல் விட்டு ஆட்ட முடியும். சீனா இந்திய ரூபாக்களை வாங்கி இந்திய ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க முடியும்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் பலத்த பாதீட்டு பற்றாக் குறையால் பரிதவிக்கின்றன. அவை தமது பொருளாதாரத்தை ஏற்றுமதியின் மூலம் பிரச்சனையில் இருந்து மீட்கத் துடிக்கின்றன. இதற்கு அவை தமது நாணயங்களின் பெறுமதிகளைக் குறைத்து வைத்திருக்க விரும்புகின்றன. 1985 இல் மேற்கு நாடுகள் நாணயப் பிரச்சனையை ஜப்பானுடன் தீர்துக் கொண்டது போல் இப்போது சீனாவிடன் தீர்த்துக் கொள்ள முடியவில்லை இப்போது பல நாடுகள் ஏற்றுமதி வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாடுகள் சுமூகமாகத் தீர்க்காமல் போட்டி போட்டுக் கொண்டு தமது நணயங்களின் பெறுமதியைக் குறைக்கும் போது உருவாகும் நாணயப் போர் உலக வர்த்தகத்திலும் உலகத் பொருளாதார நடவடிக்கைகளிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஐக்கிய இராச்சியத்தின் மத்திய வங்கி ஆளுனர் இப்படி எச்சரிக்கிறார்:
முன்னணிப் பொருளாதார நாடுகள் தங்களின் நாணய மதிப்புக்கள் மீதான போட்டிகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளாவிடில் சில நாடுகள் தங்கள் பொருதாரத்தைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தி அது 1930களில் ஏறபட்டது போன்ற உலகப் பொருளாதர நெருக்கடிக்கு வழிவகுக்க்கும்.

Unless it is, it will be only a matter of time before one or more countries resort to trade protectionism as the only domestic instrument to support a necessary re-balancing" of economies.

That could, as it did in the 1930s, lead to a disastrous collapse in activity around the world. Every country would suffer ruinous consequences -- including our own.

4 comments:

Tamil Fa said...

இவ்வளவு தகவல்களை அறிந்த பின்பும் கமாண்ட் போடாமல் செல்ல முடியவில்ல. நன்றாக இருந்தது. இன்னும் எழுதுங்கள்.

Anonymous said...

Very useful posting

Unknown said...

Very good posting. Keep it up.

ராம்ஜி_யாஹூ said...

அற்புதமான தலைப்பு.

பயனுள்ள பதிவு, நன்றிகள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...