Friday 17 September 2010

காதலும் கண்ணீர் போலே


கண்களில் உருவெடுத்து
கன்னங்களை வருடிக்கொடுத்து
உதடுகளில் உறைவதால்
காதலும் கண்ணீர் போலே

உன்னையும் என்னையும்
நாமாக்கிய காதல்
என்னை மட்டும்
ஏன் வதைகிறது

தவிக்கும் உள்ளங்கள்
அகதித் தஞ்சம் கோருமிடம்
அன்புள்ளம்

நிலைக்காதது அன்புமல்ல
நீடிக்காதது காதலுமல்ல

எவள் உருவம்
உன் இதயத்திற்கு
தெரிகிறதோ
அவளே உன் காதலி

எவள் குரல்
உன் இதயத்தில்
விழுகிறதோ
அவளே உன்னவள்

எவள் தொடுகை
உன் இதயத்தை
வருடுகிறதோ
அவளே உன் தேவதை

1 comment:

Interview Puzzles said...

Nice Poem... Keep continue this...
My Blog1
My Blog2
by
Siva

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...