Saturday 4 September 2010

ஹைக்கூ கவிதைகள் - இரவு நடக்கவிருப்பதை எண்ணி வெட்கம்.


இயற்கை அன்னைக்கு
மரம் வெட்ட மனம் தவிக்கிறது
வற்றும் கண்ணீர்


விளக்குச் சிவந்திருந்தது
முகம் சிவக்கவில்லை
இதயம் சிவந்தது


பூமிக்கும் சூரியனுக்கும்
இனிய ஊடல் முகம் திரும்பியது
இரவு

என்னிடம் இருந்தால் பாதுகாப்பு
உன்னிடம் இருந்தால் அழிவு
அணு குண்டு

ஏன் இந்த வெட்கம்?
இரவு நடக்கவிருப்பதை எண்ணியதாலா?
செவ்வானம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...