Thursday 5 August 2010

போர் குற்றம்: இன்று Naomi Campbell நாளை அசின்?


உலகின் முன்னணி மாதிரி அழகி நஓமி கம்பெல் Naomi Campbell பற்றி திடீரென செய்திகளில் அடி பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணம் லைபீரியாவின் சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor)இற்கு எதிரான போர்க் குற்றச் சாட்டில் சாட்சியாக அழைக்கப்பட்டமையாகும். 1997-ம் ஆண்டு நெல்சன் மண்டேலா வழங்கிய விருந்துபசாரத்தில் நஓமி கம்பெல் Naomi Campbellஉம் சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor)உம் கலந்து கொண்டனர். இதில் பாக்கிஸ்த்தானிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கானும் கலந்து கொண்டிருந்தார் என்பது ஒரு உதிரி தகவல்.

மண்டேலாவின் விருந்தில் நஓமி கம்பெல் Naomi Campbellஉம் சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor)உம் சந்தித்துக் கொண்டனர். பின்னர் சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor) நஓமி கம்பெல் Naomi Campbellஇற்கு வைரங்களை வழங்கினாரா என்பதுதான் கேள்வி. இதற்கும் போர்குற்றத்திற்கும் என்ன சம்பந்தம்? சீரா லியோன் தீவிரவாதிகள் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுத்த வைரங்களை சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor)இடம் வழங்கி அதன் மூலம் அவர்களுக்கு சார்ல்ஸ் ரெய்லர் (Charls Taylor) ஆயுதங்களைப் பெற்றுக் கொடுத்தாரா என்பதைத்தான் சார்ல்ஸ் ரெய்லருக்கு (Charls Taylor) எதிரான போர்க் குற்ற தீர்ப்பாயம் (War Crime Tribunal) அறிய முற்படுகிறது. சார்ல்ஸ் ரெய்லர் இடம் தாராளமாக வைரங்கள் இருந்தன என்பதை அறிய போர்க் குற்ற தீர்ப்பாயம் (War Crime Tribunal) முயல்கிறது. ஆனால் சார்ல்ஸ் ரெய்லருக்கு எதிரான போர்க் குற்ற தீர்ப்பாயம் (War Crime Tribunal) விசாரணை செய்கிறது என்பதை நஓமி சாட்சியாக அழைக்கப் பட்ட பின்னர் உலகெங்கும் பலரும் அறிந்து கொண்டுள்ளனர்.

நஓமி கம்பெல் Naomi Campbellதான் முன்னறி முகமில்லாதவர்களிடம் இருந்து வைரங்கள் பெற்றுக் கொண்டதாகவும் அவற்றை ஒரு பொதுத் தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்புச் செய்ததாகவும் ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் அந்தப் பொதுத் தொண்டு நிறுவனம் அப்படி எந்த வைரங்களையும் தாம் பெறவில்லை என மறுக்கிறது.

அண்மைக் காலங்களில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பிற்கு எதிராக தமிழர்கள் அடைந்த ஒரு வெற்றி இலங்கையில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவைத் தோற்கடித்ததாகும். இந்த தோல்வியைத் தொடர்ந்து இந்திய நடிகை அசின் இலங்கை சென்றார். படப்பிடிபிற்காக என்று சொல்லிச் சென்றவர் அங்கு படப்பிடிப்பில் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

இலங்கையிலும் போர் குற்றம் நடந்தது என்று பலரும் கூறுகிறார்கள். பல பன்னாட்டு பொது நிறுவனங்கள் அது தொடர்பாக விசாரணை தேவை அதற்குரிய சாட்சியங்கள் உண்டு என்று சொல்கிறார்கள். அதற்கும் ஒரு நாள் விசாரணை நடக்கும். இந்திய நடிகை அசின் திடீரென்று இலங்கை அரசின் விருந்தாளியாக மாறி திருமதி ஷிராந்தி ராஜபக்சவுடன் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ளவர்கள் மற்ற தமிழ் நடிக நடிகைகளைச் சந்திக்க விரும்புகிறார் என்று அறிக்கை விட்டார். இவரை இப்படிச் சொல்ல வைத்தது என்ன? இவருக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் என்ன கொடுக்கல் வாங்கல் நடந்தது என்பதை அறிய நாம் ஆவலாக இருக்கிறோம். நாளை நடபெறவிருக்கும் போர்குற்ற விசாரணையில் அசின் சாட்சியாக அழைக்கப் படுவாரா? ABC, BBC, CNN, Channel -4 போன்ற ஊடகங்களில் அசினும் தோன்றுவாரா?

இன்று கறுப்பின மக்களைப் பிடிக்காத பல மேற்குலக ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பெரிது படுத்தி நஓமியை வாங்கு வாங்கென்று வாங்குகின்றன. நாளை தென்னிந்தியரைப் பிடிக்காத வட இந்திய ஊடகங்களும் அசினை வாங்கு வாங்கென்று வாங்குமா?

இலங்கையில் நடந்த போர்குற்றங்களை விசாரிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படும். பல முகமூடிகள் பாக்கு நீரிணையின் இருபுறத்திலும் கிழியும். இதனால்தான் ஒரு முட்டைக்கண் பா.....ன நாய் அண்மையில் இலங்கைப் போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு எதிராக ஆசிரியத் தலையங்கம் தீட்டியது.

கீழுள்ள இணைப்பில் நஓமி கம்பெல் Naomi Campbell இன் சாட்சியத்தின் காணொளியைக் காணலாம்:

http://www.youtube.com/watch?v=PJ2zWmzqbJU

3 comments:

Yoga said...

அசின் அப்பிடியே பிசினாக ஷிராந்தியுடன் ஒட்டிக் கொண்டது இதற்குத் தானோ?கருணாசுக்கு இப்போ வயத்தக் கலக்கப் போவுது!

Anonymous said...

ஏற்கனவே அசினின் வியர்வை நாறுவதாக உடன் நடிக்கும் நடிகர்கள் குறை கூறுவதாக வட இந்தியப் பத்திரிகைகள் கதை கட்டி விட்டன...

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...