Tuesday 10 August 2010

ஆஸ்த்மா மருந்தால் புற்று நோய் ஆபத்து


ஆண் ஆஸ்த்மா நோயாளிகள் பாவிக்கும் ஆஸ்த்மா உள்ளுறிஞ்சிகளால்(Asthma Inhalers) புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாக ஆராச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள். ஆஸ்த்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆஸ்த்மா உள்ளுறிஞ்சிகள்(Asthma Inhalers)இல் இருக்கும் steroid மருந்து prostrate cancer வரும் சாத்தியத்தை 40% அதிகரிகிறது என்று ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Broncholidator என்னும் மருந்தை ஆஸ்த்மா உள்ளுறிஞ்சிகளாகப்(Asthma Inhalers) பாவிப்பவர்களுக்கு புற்று நோய் வரும் ஆபத்து 36% அதிகம் என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மெல்பேர்னில் prostrate cancer நோயுடைய 1179 ஆண்களிடையே நடாத்தப் பட்ட ஆய்விலிருந்தே இந்த முடிவிகள் பெறப்பட்டன. அதுமட்டுமல்ல ஆஸ்த்துமா நோயாளி ஒருவருக்கு புற்று நோய் வரும் ஆபத்து ஆஸ்த்மா நோய் இல்லாதவர்களிலும் பார்க்க 25% அதிகம்.

சிலர் இந்த ஆராச்சிகள் ஆரம்ப நிலையில்தான் உள்ளன என்றும் இதற்கான மேலதிக ஆராச்சிகள் தேவை என்றும் கூறுகின்றனர். பிரித்தானிய வைத்தியர் எலைன் விக்கேர்ஸ் அவர்கள் இப்போது ஆஸ்த்மா உள்ளுறிஞ்சிகள்(Asthma Inhalers) பாவிப்பவர்கள் அதை உடனடியாக நிறுத்தத் தேவையில்லை என்றும் கூறுகிறார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...