Wednesday 21 July 2010

சும்மா இருப்பதாயின் மிக உயர்ந்த இடம் வேண்டும்.


அது ஒரு சொகுசான மாளிகை. அங்கு ஒரு நாய் சும்மா மெத்தைக் கதிரையில் படுத்திருப்பதும் சாப்பிடுவதுமாக இருந்து வந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த கோழிக்குஞ்சுக்குத் தானும் சும்மா இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன என்ற எண்ணம் வந்து விட்டது. தான் போய் ஒரு மெத்தைக் கட்டிலில் ஏற முயற்சித்தது. முடியவில்லை. பல முறை முயற்ச்சித்தது முடியவில்லை. நிலத்தில் படுத்து நித்திரை செய்து கொண்டிருந்த ஒரு அடர்த்தியான ரோமங்களைக் கொண்ட பூனையை இதுவும் ஒரு உல்லாச இருக்கை என்று எண்ணி அதன் மேல் உட்கார்ந்து ஓய்வெடுத்தது. சிறிது நேரத்தில் பூனை விழித்து விட்டது. லபக்கென்று அந்த கோழிக் குஞ்சை விழுங்கி விட்டது.

  • இந்தக் கதையின் நீதி: நீ சும்மா இருந்து வாழ்க்கையை ஓட்டுவதாயின் மிக உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...