Tuesday 13 July 2010

ஐநா பான் கீ மூனுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் திரை மறைவு உடன்பாடா?


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று பல பன்னாட்டு மனித நேய அமைப்புக்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பான் கீ மூன் தான் இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை கூற ஒரு நிபுணர் குழு அமைக்க இருப்பதாக அறிவித்தார். பின் காலத்தை இழுத்தடித்து சென்ற மாதம் அந்த நிபுணர் குழுவை அமைத்தார். இது கொழும்பை உலுக்கி விட்டது. அங்கு பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. உச்சக் கட்டமாக இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை தனது அடியாட்கள் சகிதம் முற்றுக்கையிட்டு அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக்கியதுடன் பணிமனை முன் ஒரு சாகும் வரையிலான உண்ணா விரதத்தையும் ஆரம்பித்தார். பின்னர் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபகசவின் வேண்டுதலின் பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் கைவிட முன்னராக ஐநா இந்த அறிக்கையை வெளியிட்டது:

New York, 9tha July2010: Statement attributable to the Spokesperson for the Seretary General on Sri Lanka
Following his decision yesterday to recall the United Nations Resident Coordinator in Colombo and close the UNDP Regional Centre in Colombo, the Secretary-General calls again upon the Government of Sri Lanka to take urgent action to normalise conditions around the United Nations Offices in Colombo so as to ensure the continuation of the vital work of the Organization to assist the people of Sri Lanka.

The Secretary-General believes the strong reaction to his establishment of a Panel of Experts on accountability in Sri Lanka is not warranted. The United Nations has consistently held that this Panel has been set up to advise the Secretary-General with regard to taking forward the objectives of the Joint Statement of 23rd May 2009. These objectives include the further fostering of reconciliation and related issues as well as reflecting the commitment by Sri Lanka to the promotion and protection of human rights and the importance of accountability in order to continue the strengthening of peace and development in that country. The United Nations recognizes that the responsibility in this regard is that of the Government of Sri Lanka. The Panel itself will advise on the modalities, applicable international standards and comparative experience relevant to an accountability process. It will be a resource available to assist the Government of Sri Lanka and the Commission on Lessons Learnt and Reconciliation in applying the international best practice in this regard.

இந்த அறிக்கையின் படி பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க அமைத்த நிபுண்ர்கள் குழு:
  • பான் கீ மூனும் மஹிந்த ராஜபக்சவும் 23-05-2009இலன்று வெளியிட்ட கூட்டறிக்கைக்கு இணங்க அமைக்கப் பட்டது.(இந்த அறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்: http://www.un.org/News/Press/docs/2009/sg2151.doc.htm).
  • இணக்கப்பாட்டிற்கும் மனித உரிமைப் பாது காப்பிற்கும் வகை சொல்லலின் முக்கியத்துவத்திற்கும் இலங்கையில் அமைதியையும் அபிவிருத்தியையும் மேம்படுத்த அமைக்கப் பட்டது. (இவை தொடர்பான பொறுப்பு இலங்கை அரசினுடையது என்று ஐநா ஏற்றுக் கொள்கிறது.)
  • இலங்கைக்கு உதவக்கூடிய ஒரு மூல வளமாக அமையும்.

2009 மே 23-ம் திகதி வெளியிடப்பட்ட மஹிந்த-மூன் கூட்டறிக்கையில் போர் குற்றம் என்ற சொல் ஒரு இடத்தில் தன்னும் இடம் பெறவில்லை. ஒரு இடத்தில் மட்டும் தமிழர் தரப்பு என்ற சொல் பாவிக்கப் பட்டிருக்கிறது.


2010 ஜூலை 9-ம் திகதி ஐநா வெளியிட்ட அறிக்கையின் படி பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க அமைத்த நிபுண்ர்கள் குழு தொடர்பான விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் போர் குற்றம் என்ற சொல் இடம் பெறவில்லை. தமிழர்கள் என்ற சொல்லும் இடம் பெறவில்லை.பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க அமைத்த நிபுண்ர்கள் குழு தொடர்பான சரியான விளக்கத்தையோ அதன் அதிகாரங்களையோ இது வரை தெளிவு படுத்தவில்லை. இந்தக் குழுவைப் பற்றி தேவையான நேரத்தில் தேவையான சந்தர்ப்பவாத வியாக்கியானங்களை கொடுத்து மனித நேய அமைப்புக்களை பான் கீ மூன் ஏமாற்றப் போகிறாரா?

பான் கீ மூன் தான் இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை கூற அமைத்த நிபுணர் குழு 2010 ஜூலை 9-ம் திகதி ஐநா வெளியிட்ட அறிக்கையின் படி போர் குற்றம் தொடர்பாக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டாது என்பது போல் தெரிகிறது. இந்த அறிக்கை பான் கீ மூன் ஏற்கனவே இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை கூற அமைத்த நிபுணர் குழு தொடர்பாக கூறப்பட்ட கருத்துக்களுடன் ஏன் முரண்படுகிறது?

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் விமல் வீரவன்ச உண்ணா விரதத்தை முடித்தது மஹிந்தவிற்கும் பான் கீ மூனிற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...