Saturday 26 June 2010

எரிக் சொல்ஹெய்ம் சொல்வதும் சொல்லாமல் விட்டதும்


இலங்கையில் சமாதான(?) பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் காணாமற் போன இருவர் மீண்டும் உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் யசூசி அகாஷி இவர் இருவாரங்களுக்கு முன்னர் இலங்கை சென்று தானும் ஒரு ஹெகேலிய ரம்புக்வேலபோல் பேசிவிட்டுச் சென்றார். அடுத்தவர் நோர்வேயின் அமைச்சர் எரிம் சொல்ஹெய்ம். இருவரும் இலங்கையில் சமாதானம் ஏற்படுத்த தாங்கள் முயல்வது போல் காட்டிக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்வதாக அறிவித்த பின்னர் இவர்களும் மௌனித்துக் கொண்டனர். போர் முடிந்தபின்னர் தமிழர்களின் அவலங்கள் பற்றியோ அவர்களுக்கு இழைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகள் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதில்லை. இவர்கள் இருவரும் இலங்கையில் சமாதானம் ஏற்படுத்துவதைத் தவிர வேறு ஏதோ நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் செயற்பட்டிருக்கிறார்கள்.

2009 மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் ஒரு வெளிநாட்டு முக்கிய பிரமுகரை உழங்கு வானொலியில் அழைத்துச் சென்று முள்ளிவாய்க்காலுக்குள் ஒரு சிறு பிரதேசத்தில் மூன்று இலட்சம் மக்கள் அகப்பட்டுத் தவிப்பதைக் காட்டி இச்சிறு பிரதேசத்துக்குள்தான் இந்த விடுதலைப் புலிகள் எஞ்சியுள்ளனர் என்று காட்டினார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் அப்படியே குண்டுகளைப் போட்டு அத்தனைபேரையும் அழித்தொழிக்கும்படி கூறினாராம். அந்தப் பிரமுகர் ஜப்பானின் யசூசு அகாசி என்று நம்பப்படுகிறது.

பலகாலமாக மௌனமாக இருந்த எரிக் சொல்ஹெய்ம் இப்போது திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அவர் உதித்த திருவாசகம்:
  • 2009 மே மாதம் 17-ம் திகதி விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் எஸ். புலித்தேவன் மற்றும், சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தேன். இதன் போது அவர்கள் சரணடையப் போவதாக என்னிடம் அறிவித்தனர். இதே கோரிக்கையை அவர்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஐநா சபை ஆகியவற்றிடமும் விடுத்திருந்தனர். விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்தேன்.எங்களுடன் மாத்திரமல்ல, செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, ஐ.நா. போன்ற பல தரப்புகளுடனும் அவர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகே சரணடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் இவை நடந்த சில மணித்தியாலங்களில் அவர்கள் கொல்லப்பட்டதாக அறிந்தேன்.
  • என்னைப் பற்றி இலங்கை ஊடகங்கள் அப்பட்டமான பொய் செய்திகள் பரப்பின.
  • புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே போருக்கான பசி வேண்டாம். போருக்கு பன்னாட்டு ஆதரவு கிடையாது.
  • தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்ற பரந்த ஆதரவு உலகெங்கும் உண்டு.

எரிக் சொல்ஹெய்ம் சொல்லாமல் விட்டது:
  • இலங்கையில் சிங்களவர்கள் அவர்களுடன் நான் பழகியதன் அடிப்படையில் அவர்கள் எப்போதும் தமிழர்களுக்கு உரிமை வழங்கப்போவதில்லை
  • அரசு சார்பான எவருடன் பேசினேன் என்பதைக் கூறவில்லை.
  • சரணடையும் பேச்சு வார்த்தையில் எரிக் சொஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சதீஸ் நம்பியார், கனிமொழி, ஜகத் கஸ்பர், இந்திய வெளியுறவுத்துறையினர், பாலித கொஹென்ன ஆகியோர் சம்பந்தப்பட்டிருந்தனர்.
இந்தியாவின் வெளியுறவுச் செயலர் தமிழீழ விடுதலைப் புலிகளை வேரோடு அழிப்பேன் என்று கூறியிருந்தார். இந்தியாவை ஆளும் குடும்பத்தின் நேக்கமும் அதுவே என்பது பகிரங்கப்படுத்தப் பட்ட உண்மை. அதற்கு அவர்களை சரணடையச் சொல்லிவிட்டு கொன்று குவிப்பதுதான் ஒரே வழி. இதை இலங்கையும் இந்தியாவும் ஒன்று சேர்ந்து செய்ததா? இறுதியில் படுகாயமடைந்திருந்தவர்களை கடைசியாக யார் புலிகள் யார் பொதுமக்கள் என்ற நிலையில் அனைவரையும் உயிருடன் புதைத்தனரா? செஞ்சிலுவைச் சங்கத்தால் காயமடைந்தவர்கள் என்று சொல்லி கொண்டு வந்தவர்களை இந்தியாவில் இருந்து வந்த மருத்துவர்கள் உரிய சிகிச்சைகள் வழங்காமல் கைகால்களைத் துண்டித்து அவர்களை நிரந்தர முடமாக்கினார்களா? அவர்களின் உடலுறுப்புக்களைத் திருடினரா? இவற்றை யார் சொல்வார்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...