Monday 14 June 2010

பலான கூலி


அந்த ஐந்து நட்சத்திர விடுதி வாசலில் ஒரு மிடுக்கான வாலிபன் புதிய கவர்ச்சியான காருடன் நின்றான். அவனை அங்கு வந்த ஒரு கட்டழகி கண்டாள். இருவருக்கும் பார்த்தவுடன் காதல் வந்து விட்டது. சில நேரம் காதல் வழிய வழியக் கதைத்தனர். ஒருவருக்கு ஒருவரை மிகவும் பிடித்து விட்டது. தன்னை எங்காவது தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் படி அவள் வேண்டினாள். இருவரும் நாலு மைல் தொலைவில் உள்ள தன்னுடைய பாட்டியின் வெறுமையாகக் கிடந்த வீட்டிற்கு அவளை அவன் அழைத்துச் சென்றான். இருவரும் அங்கு உல்லாசமாக இருந்தனர். இறுதியில் அவள் சொன்னாள் நான் உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்லவேண்டும் நான் ஒரு விபச்சாரி. இன்றைய உனது கட்டணம் 50 டொலர்கள் அதைத் தந்துவிடு என்றாள். அவனும் வேண்டா வெறுப்பாக அதைக் கொடுத்து விட்டான். இப்போது அவள் அவனை மீண்டும் நகரத்தில் கொண்டு போய் தன்னை விடும்படி கேட்டாள். அவன் அவளை தன் வாகனத்தில் ஏற்றி நானும் உனக்கு ஒரு உண்மையைச் சொல்லவேண்டும் இது என் சொந்தக் கார் அல்ல. நான் ஒரு வாடகைக் கார் ஓட்டுபவன். இந்த சவாரிக்கான கட்டணம் 75டொலர்கள் என்றான்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...