Monday 21 June 2010

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கும் சிங்கள மந்தி(ரி)



1977-ம் ஆண்டு இலங்கை எங்கும் சில பொய் வதந்திகளைப் பரப்பி தமிழர்களுக்கு எதிரான ஒரு இனக் கொலையை சிங்களப் பேரினவாதிகள் அரங்கேற்றினர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டது. அதை உணர்ந்த அமெரிக்கா தனது கையாளும் தந்தை செல்வநாயகத்தின் மகனுமாகிய பேராசிரியர் ஏ ஜே வில்சனை அமெரிக்கவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்படுத்த முனைந்தது. அதன் ஒரு அம்சமாக எந்தவித அதிகாரமும் இல்லாத மாவட்ட சபை 1981இல்உருவாகியது. ஏ ஜே வில்சனின் ஆலோசனையுடன் உருவான மாவட்ட சபையை அதிகாரமற்றது என்று தமிழர்கள் ஏற்க மறுத்தனர். அமெரிக்கத் தூதுவர் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து அதை இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார்.

சிங்களத் தீவிரவாதிகளும் இந்த மாவட்ட சபை நாட்டைத் துண்டாட உதவும் என்று பலமாக எதிர்த்தனர். இத்தனைக்கும் மத்தியில் மாவட்ட சபைத் தேர்தல் நடந்தது. இந்த மாவட்டசபைத் தேர்தலில் பேரினவாத சிங்களக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிட்டது. அப்போது பிரதம மந்திரியாக இருந்த ஜே ஆர் ஜயவர்தன சிறில் மத்தியூ காமினி திசாநாயக்க ஆகிய இரு மந்திரிகளை பல சிங்களக் காடையர் சகிதம் யாழ்ப்பாணம் அனுப்பி என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ ஒருவரைத்தன்னும் தனது கட்சிக்காக யாழ் மாவட்டத்தில் வெல்ல வைக்க வேண்டும் என்று பணித்ததாகக் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் வந்த சிறில் மத்தியூ யாழ் நூலகம் சென்ற போது அங்கு சிங்கள நூல்கள் இல்லை என்பதை அறிந்து ஆத்திரமடைந்தாராம். மறுநாள் தென் கிழக்காசியாவில் சிறந்த நூல் நிலையமாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை, வீதியோரங்களில், பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ம் ஆண்டு, மே மாதம் 10ம் திகதியன்று, ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம், பேர்லின் நூல் நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள், அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள்.

இந்த நூல் நிலைய எரிப்பிற்கு மஹிந்த ராஜபக்சவின் மந்திரியான சம்பிக்க ரணவக்க இப்போது யாழ்ப்பாணத்தில் வைத்து மன்னிப்புக் கோரியுள்ளார். இவர் சிரில் மத்தியூ காமினி திசாநாயக்க ஆகியோரிலும் பார்க்க படு மோசமான தமிழின விரோதி. 1981இல் சிங்களப் பேரினவாதிகளின் செயலுக்கு இன்று உள்ள சிங்களப் பேரினவாதி மன்னிப்புக் கேட்கிறார்.

இப்பொதுள்ள சிங்களப் பேரினவாதிகள் போரின் போது:
  • குழந்தைகளைக் கொன்றனர்.
  • மருத்துவ மனைகளை குண்டுகள் வீசி அழித்தனர்.
  • போர் முனையில் அகப்பட்ட பல இலட்சம் அப்பாவிப் பொதுமக்களுக்கு பல வாரக் கணக்காக உணவும் தண்ணீரும் மருந்தும் செல்லவிடாமல் தடுத்தனர்.
  • மக்களை உயிரோடு புதைத்தனர்.
  • சரணடைய வந்தவர்களை கொன்றனர். போர் கைதிகளை அடிமைகளாக நடத்துகின்றனர்.
இந்த அட்டூழியங்களுக்கு எப்போது யார் மன்னிப்புக் கேட்பர்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...