Monday 21 June 2010

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது


சமாதானத்திற்கான நிதியம் அமைப்பு வெளியிட்டுள்ள தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 177 நாடுகளில் 39 நாடுகள் தோல்வியடைந்த நாடுகளாக குறிக்கப் பட்டுள்ளன. அதில் முதலாம் இடத்தில் சோமாலியா, இரண்டாம் இடத்தில் ஜிம்பாவே, மூன்றாம் இடத்தில் சூடான், நான்காம் இடத்தில் சாட், ஐந்தாம் இடத்தில் கொங்கோ, ஆறாம் இடத்தில் இராக், ஏழாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் எட்டாம் இடத்தில் மத்திய ஆபிரிக்கக் குடியரசு, ஒன்பதாம் இடத்தில் கினியா, பத்தாம் இடத்தில் பாக்கிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

22-ம் இடத்தில் இலங்கை
தோல்வியடைந்த நாடுகள் 39 இல் இலங்கை 22-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை பற்றிக் குறிப்பிடும் சகல ஆய்வாளர்களும் பத்திரிகைகளும் மற்றும் நிறுவனங்களும் முப்பதாண்டு உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டு வந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் தமிழர்கள் 62ஆண்டுகால பயங்கர அடக்கு முறைக்கு உட்பட்டிருப்பதை கவனிக்கத் தவறுகின்றனர்.

பூகோளப் படத்தில் சிவப்பு மயமாககப் பட்ட தோல்வியடைந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. இந்தியா எச்சரிக்கைக் குரிய நாடாகக் காட்டப் பட்டுள்ளது.

பர்மா 13-ம் இடத்திலும், பங்களாதேசம் 18-ம் இடத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியா தோல்வியடந்த 39 நாடுகளுக்குள் அடங்கவில்லை. அது தோல்வியடைந்த 177 நாடுகளின் பட்டியலில் 87-ம் இடத்தில் இருக்கிறது. 177 நாடுகளுக்குள் சிறந்த நாடுகளாக பின்வரும் நாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. அதில் நோர்வே மிகச்சிறந்த நாடாக இடம் பெற்றுள்ளது.
Iceland 165
Canada 166
Austria 167
Luxembourg 168
Netherlands 169
Australia 170
New Zealand 171
Denmark 172
Ireland 173
Switzerland 174
Sweden 175
Finland 176
Norway 177
இவற்றில் எந்த ஒரு வல்லரசு நாடும் இடம் பெறவில்லை. எந்த ஒரு ஆசிய நாடும் இடம்பெறவில்லை.

வல்லரசு நாடுகள்
சீனா 57
இரச்சியா 71
பிரான்ஸ் 158
ஐக்கிய அமெரிக்கா 159
ஐக்கிய இராச்சியம் 161
வல்லரசு நாடுகளில் ஐக்கிய இராச்சியம் சிறந்த இடத்திலும் சீனா மிக மோசமான இடத்திலும் இருக்கிறது. வல்லரசாக வரமுயலும் ஜெர்மனி 157-ம் இடத்திலும் இந்தியா 87-ம் இடத்தில் இருக்கிறது. சீனா இரசியாவிலும் பார்க்க இந்தியா சிறந்த நாடாகக் கணிக்கப்பட்டுள்ளது.

2 comments:

Anonymous said...

இந்தியா வல்லரசானால் உலகத்தில் தமிழனே இருக்க மாட்டான். எல்லோரையும் அழித்து விடுவார்கள். ராஜபக்சவின் பேரன் தமிழ்நாட்டு முதல்வராவான்..

Anonymous said...

மற்ற 21 நாடுகளும் எவ்வளவு மோசமானவையாக இருக்கும்????

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...